அழகிரி நேற்று தன் 63வது பிறந்தநாளை ஒட்டி, 63 கிலோ எடை உள்ள கேக் ஒன்றை வெட்டினார். அந்த கேக்கில், ‘‘மலர் பாதையா... முள் படுக்கையா... எதுவாகிலும் அண்ணன் வழியில்...'' என எழுதப்பட்டு இருந்தது.
தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு கொடுத்ததனால், அவர் தனது வீட்டில் இருந்து விழா நடைபெற்ற ராஜா முத்தையா மன்றம்வரை செல்லவே, சுமார் 2 மணி நேரம் ஆனது. பெண்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். திமுக தொண்டர் ஒருவர் அலகு குத்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அழகிரியின் ஆள் உயர கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்யப்பட்டது.
கடந்த பிறந்தநாளின் போது அப்பா கருணாநிதியின் கையால் கேக் ஊட்டி விட்ட காட்சியை போட்டோவாக எடுத்து பெரிய பேனராக வைக்கப்பட்டிருந்தது. முன்னாள் மேற்கு மண்டல தலைவர் ஆர்.எம்.பி.சின்னான் 63 கிலோ எடை கொண்ட ஏலக்காய் மாலை கொண்டு வந்து அழகிரிக்கு அணிவித்தார்.
தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு கொடுத்ததனால், அவர் தனது வீட்டில் இருந்து விழா நடைபெற்ற ராஜா முத்தையா மன்றம்வரை செல்லவே, சுமார் 2 மணி நேரம் ஆனது. பெண்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். திமுக தொண்டர் ஒருவர் அலகு குத்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அழகிரியின் ஆள் உயர கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்யப்பட்டது.

கடந்த பிறந்தநாளின் போது அப்பா கருணாநிதியின் கையால் கேக் ஊட்டி விட்ட காட்சியை போட்டோவாக எடுத்து பெரிய பேனராக வைக்கப்பட்டிருந்தது. முன்னாள் மேற்கு மண்டல தலைவர் ஆர்.எம்.பி.சின்னான் 63 கிலோ எடை கொண்ட ஏலக்காய் மாலை கொண்டு வந்து அழகிரிக்கு அணிவித்தார்.