BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 8 January 2014

ஆம் ஆத்மி அலவலகம் தாக்கப்பட்டது



இந்து ரக்ஷா தல் என்ற கட்சியை சேர்ந்த நபர்கள், காசியாபாத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை கற்கள் வீசி, அங்கிருந்த பூத்தொட்டிகளை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதைப் பற்றி கேட்ட போது, "பிரஷாந்த் பூஷன் கஷ்மீர் விவகாரத்தில் தெரிவித்த கருத்துகள் இந்துக்கள் மனதை காயப்படுத்தியுள்ளது, அதனாலே இந்த ஆர்ப்பாட்டம்." என்று இந்து ரக்ஷா தல் கட்சியை சேர்ந்த பிங்கி சௌத்ரி தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஆம் ஆத்மி அலுவலகத்திலும், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து, கேஜ்ரிவாலின் இல்லம் ஒரு கிலோமீட்டர் தொலைவில் தான் இருக்கிறது என்பதால், அங்கும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு தேவையில்லை என்று கூறிய கேஜ்ரிவாலை, அந்த முடிவை மாற்றி கொள்ளும் படி கூறப்போகதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரஷாந்த் பூஷன் கஷ்மீர் விவகாரத்தில் தெரிவித்த கருத்துகள், அவருடைய சொந்த கருத்துகள், ஆம் ஆத்மியின் கருத்துகள் இல்லை என்றும், இந்து ரக்ஷா தல் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு தன் கண்டனத்தை தெரிவிப்பதாகவும், கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

பெற்றெடுத்த குழந்தையை ஜன்னல் வழியாக தூக்கியெறிந்து கொலை செய்த 10ம் வகுப்பு மாணவி


ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த நிசாமாபாத் பகுதியில், பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர், திருமணத்திற்கு முன்பே, கர்ப்பமாகி, ஆண் குழந்தை ஒன்றை பெற்று கொண்டார். இந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாது என்ற பதற்றத்தில், தான் தங்கியிருந்த பள்ளி விடுதியில் உள்ள ஜன்னல் வழியாக அதை தூக்கியெறிந்தார். இதனால் குழந்தை இறந்துவிட்டது.

காவல் துறையினர், அந்த பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண்ணின் கர்ப்பதிற்கு காரணமானவரின் மீதும், கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெற்றிலை பாக்குக்கு 10 ரூபாய் தராததால் ஒருவர் வெட்டி கொலை

பீஹாரில், தீபக் குமார் என்ற ஒருவர், நேற்றிரவு நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு காரணம், அந்த நான்கு பேர் வெற்றிலை பாக்கு வாங்க 10ரூபாய் கேட்டுள்ளனர். ஆனால், தீபக் குமார் அதை கொடுக்க மறுத்ததால், அவரை அந்த இடத்திலேயே கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம், பீஹாரில் உள்ள கத்திஹர் என்ற பகுதியில் நடந்துள்ளது. இதை குறித்து காவல் துறை பேசுகையில், கத்திஹரில் உள்ள எஸ்.பி, " ஒரு பத்து ரூபாய்க்காக ஒருவரை கொலை செய்து உள்ளனர் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது." என்று கூறியுள்ளார். இந்த சம்பவம், அங்கு இருக்கும் மக்களை யும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது, கொலைக்காரர்கள் மேல் தக்க நடவடிக்கை எடுக்க அவர்கள் கேட்டு கொண்டிருக்கின்றனர்

ஏ.ஆர். முருகதாஸ் மீது வழக்கு பதிவு

ஏர்வாய்ஸ் என்ற மும்பையில் உள்ள நிறுவனத்தின் பெயரை, ராஜாராணி என்ற படத்தில் தவறாக பயன்படுத்தியற்தாக, அதன் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது அந்நிறுவனம் வழக்கு பதிவு செய்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் வெளியான ராஜாராணி திரைப்படத்தில், ஜெய் மற்றும் சத்யன் ஏர்வாய்ஸ் நிறுவனத்தில் பணிப்புரிவது போல் காட்டியுள்ளனர். ஏர்வாய்ஸ் சேவை தரத்தில் குறைபாடுகள் உள்ளது போல் சில காட்சிகள் அமைத்து இருப்பதாகவும், அதனால் நிறுவனத்தின் புகழுக்கு பாதிப்பு வரும் என, அந்நிறுவனம், ராஜாராணி தயாரித்த ஃபாக்ஸ் ஸ்டார், தி நெக்ஸ்ட் பிக் ஃபிலிம், மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை அடுத்து அவர்கள் வழக்கில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

மனுதாரரான ஏர்வாய்ஸ், அந்நிறுவனத்தின் பெயரை கெடுப்பது போல் வரும் காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கேட்டு உள்ளனர்.

2015 வரை தோனி தான் கேப்டன்

டெஸ்ட் தொடர், ஒரு நாள் சர்வதேச போட்டி, டி20 என அனைத்து வித கிரிக்கெட்களிலும், தானே கேப்டனாக 2015 வரை தொடர போவதாக கூறுயிருக்கிறார் மஹேந்திர சிங் தோனி.

அடுத்த வருடம் நடைபெறவிருக்கும், உலக கோப்பை போட்டிக்கு ஒரு வருட அவகாசமே இருப்பதனால், புதிதாக வேறு ஒருவர் கேப்டனாக வந்தால், அது அவருக்கு மிக கடினமாக இருக்கும் எனவும், அதனால் 2015 வரை ஒய்வு பெறுவது சரியான முடிவு இல்லை எனவும் தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டில்  டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக தொடர்வது பற்றி, தான் 2013 இறுதியில் முடிவெடுக்க போவதாக கூறியிருந்தார் தோனி. 

முன்பெப்போதும் இருந்ததை விட, தன் உடல் நிலை சரியாக இருப்பதாகவும், தானே மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும், கேப்டனாக தொடர போவதாக அறிவித்து இருக்கிறார் கேப்டன் கூல்.

சேது சமுத்திர திட்டத்தை கைவிட கோரி தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

சேது சமுத்திர திட்டத்தினால் பொருளாதார ரீதியாக எந்த பயனும் இல்லை, மேலும், ராமர் பாலத்திற்கு எந்த சேதமும் வரக்கூடாது, அப்பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்த கோரி, உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது, தமிழக அரசு.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதினால் எந்த பொருளாதார மேம்பாடும் வந்து விடபோவதில்லை என்றும், ராமர் பாலத்திற்கு சேதமே விளைவிக்கும் என்றும், எனவே இத்திட்டத்தை கைவிடகோரி, பச்சோரி குழு பரிந்துரைத்துள்ளது. அதையே தமிழக அரசு ஏற்பதாகவும், மத்தியிலும் இதை ஏற்க வேண்டுமென உச்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது.

மஹாராஷ்டிரா அருகே ரயிலில் தீ விபத்து, 9 பேர் பலி

மஹாராஷ்டிராவில் உள்ள தானே பகுதி அருகே, இன்று அதிகாலை 2.15 அளவில். மும்பை பந்திராவில் இருந்து, டேராடூனுக்கு சென்று கொண்டிருந்த ரயிலில் மூன்று பெட்டிகளில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அதில் பயணம் செய்து கொண்டிருந்த ஒன்பது பேர் சம்பவ இடத்திலே பலியானர்.  மேலும், பலருக்கு பலத்த காயம்.

ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media