BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 25 August 2014

உலகின் மோசமான விளையாட்டாக கால்பந்து இருக்கிறது




உலகம் முழுவதும் இன்று அதிக நபர்களால் பார்க்கப்படும் விளையாட்டு என்றால் அது கால்பந்து தான். நம் இந்தியர்கள் அனைவரும் கிரிக்கெட்டுக்கு அடிமை, ஆனால் இந்த உலகமே கால்பந்துக்கு அடிமை. கிரிக்கெட் இன்று ஜெண்டில்மென்ஸ் கேம் என்பதில் இருந்து சற்றி மாறி வருகிறது. கால்பந்தின் நிலையோ படுமோசம்.

ஒரு கால்பந்து போட்டி நடந்தால் அதில் சண்டைகள் இல்லாமல் இருப்பது இல்லை. கால்பந்து வீரர்கள் தங்களுக்குள்ளே அடித்து கொள்கிறார்கள். ஒரே நாட்டுக்காக விளையாடுபவர்கள் கூட கிளப் என்று வரும் போது மாறி விடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் கால்பந்தில் விதிகள் முழுமையாக பின்பற்றப்படுவதில்லை. ஒரு பந்தை கார்னரில் இருந்து ஒரு வீரர் அடிக்கிறார் என்றால் அந்த பந்தை தொட விடாமல் அந்த அணியின் வீரர்களை எதிர் அணி வீரர்கள் பிடித்து கொள்கிறார்கள். ஆனால் இதனை போட்டிகளின் போது நடுவர் கண்டிப்பது இல்லை. பந்தை எடுத்து வரும் போது வேண்டும் என்றே தடுக்கி விடுகிறார்கல். சில முறை மட்டுமே நடுவரால் தண்டிக்கப்படுகிறார்கள்.

எனவே கால்பந்தின் விதிகளில் சில அதிரடி மாற்றங்கள் இருக்க வேண்டும். அனைவரும் நேர்மையாக விளையாட வேண்டும். சில வீரர்கள் மோசமாக எதிர் அணி வீரர்களை கடித்து வைக்கிறார். அவரை போன்ற வீரர்களை விளையாடுவதற்கே அனுமதிக்க கூடாது. 

ஐஸ் பக்கெட் சாலஞ்சுக்கு குட்பை அடுத்து வருகிறது ரைஸ் பக்கெட் சாலஞ்




இன்று உலகம் முழுவதும் வரும் ஒரு செய்தி ஏ.எல்.எஸ். ஐஸ் பக்கெட் சாலஞ். இது ஏ.எல்.எஸ் என்னும் அமைப்பு நடத்தும் விழிப்புணர்வு சாலஞ் ஆகும். இது ஏ.எல்.எஸ். என்னும் நோயை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு ஆகும். இதில் பங்கேற்பவர் ஒரு பக்கெட்டில்  ஐஸ் வாட்டரை எடுத்துக் கொண்டு அதனை அவர் மீது ஊத்தி கொள்ள வேண்டும். அதன் பின்பு அவருக்கு தெரிந்த மூன்று பேரை கைக்காட்ட வேண்டும். அவர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் இது போல செய்ய வேண்டும். இதனை செய்ய தவறுபவர்கள் ஏ.எல்.எஸ். அமைப்புக்கு 100 டாலர் உதவியாக வழங்க வேண்டும். இதன் மூலம் இந்த நோயை பற்றி உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களும் தெரிந்து கொள்வார்கள்.

இதனை போல் இந்தியாவில் ரைஸ் பக்கெட் சாலஞ் என புதிதாக ஒன்றை தொடங்கி உள்ளார்கள். இது என்னவென்றால் ஒருவர், ஒரு பக்கெட் முழுவதும் அரிசியால் நிரப்பி அதனை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் ஒரு நபருக்கு தர வேண்டும் அல்லது 100 ரூபாய் பணத்தை கஷ்டப்படும் ஒருவருக்கு தர வேண்டும். அந்த போட்டோவை பேஸ்புக்கில் பதிவு செய்து, #ரைஸ் பக்கெட் சாலஞ் என ட்ரென்ட் செய்ய வேண்டும். இது விளம்பர நோக்குடன் செய்யப்படுவது அல்ல . உணவு இல்லாமல் கஷ்டப்படுபவர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக செய்யப்பட்டு வருகிறது. 

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun Special news

மூட் ஏறினால் வெளிப்படையாக தெரியும் வகையில் மாறும் புதிய ஆடை !!

மோடியின் முதல் தோல்வி, மோடியை வீழ்த்திய எதிரிகளின் கூட்டணி தந்திரம்

பலான நடிகை சன்னி லியோனின் ஐஸ்பக்கெட் சேலஞ்ச் [வீடியோ]

ஐஸ் பக்கெட் சேலஞ்சிற்காக 2000 லிட்டர் குளிர்ந்த நீரை தன் மீது ஊற்றிக் கொண்ட டிவி நடிகை ( படங்களுடன்) !!

பேஸ்புக் நம்மை ஏமாற்றி வருகிறது, ஆதாரங்களுடன் அம்பலம், கடந்த சில மாதங்களாகவே இது நடைபெறுகிறது

உலகின் டெரர் செல்பி யூடியூபில் பிரபலமாகி வருகிறது

என்னை தூக்குறதா இருந்தாலும் அதை நான்தான் முடிவு பண்ணுவேன்! - பஞ்ச் கொடுத்த அல்லி ராஜா! குழம்பிப்போன விஜய், முருகதாஸ்!

பீச்சில் பிகினி இனி கிடையாது , பேஸ்கினி தானாம் [படங்களுடன்]

சார்ஜில் இருந்த ஐபோன் மீது தூங்கிய பெண்ணுக்கு மார்பில் பலத்த காயம்

சியோமி நிறுவனத்தின் புதிய மொபைல் ஆகஸ்ட் 26 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் ஆகிறது

அழகிப் போட்டிக்காக மகளின் எடையைக் குறைக்க புழுவை உணவாக கொடுத்த தாய் !!

அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது தர சொல்லி மோடிக்கு கருணாநிதி கடிதம்

ஐஸ் பக்கெட் சேலஞ்சிற்கு அடுத்து கேன்சர் நோய்க்காக வந்துவிட்டது புஷ் அப் சேலஞ்ச் !!

ஸ்பூனினால் உணவு அருந்துவதை விட கையினால் சாப்பிடுவதே நல்லது , ஏன் ??

விராத் கோலியை திருமணம் செய்து கொள்ள போவது இல்லை - அனுஷ்கா ஷர்மா மனம் திறந்தார்

இந்தியாவில் போலிசுக்கு தகவல் கொடுத்ததாக கூறி 16 வயது சிறுமியை அவரின் பெற்றோர்கள் முன் சுட்டுக் கொன்ற கொடூரம்

மோட்டோ ஜி மொபைலின் கடைசி விற்பனை இதுதான் - சொல்லுகிறது பிளிப்கார்ட் !! விரைவில் ஆர்டர் செய்யுங்கள் .

உலகின் மிக மோசமான மனிதர்கள் பட்டியல் வெளிவந்தது




உலகின் மோசமான நபர்களின் பட்டியலை  www.rankers.com  என்னும் இணையதளம் வெளியிட்டுள்ளது. இது மிகவும் பிரபலாமான இணையதளம் ஆகும். அதனால் இதில் வெளியாகி இருக்கும் பட்டியல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

இந்த  பட்டியலில் முதல் இடத்தில் சர்வாதிகாரி ஸ்டாலின், 2 வது இடத்தில் சர்வாதிகாரி ஹிட்லர் , 3வது இடத்தில் போல்பாட், 4 வது இடத்தில் இடி அமீன், 5 வது இடத்தில் பின்லேடன் ஆகியோர் உள்ளனர்.

இலங்கை அதிபர் ராஜபக்சே 8 வது இடத்தில், 10 வது இடத்தில் சுப்பிரமணிய சுவாமி, 11 வது இடத்தில் சோனியா காந்தி, 12 வது இடத்தில் சதாம் உசேன், 13 வது இடத்தில் கருணாநிதி,  22 வது இடத்தில் கனிமொழி, 38 வது இடத்தில் ராஜீவ் காந்தி, 50 வது இடத்தில் தயாநிதி மாறனும் உள்ளார்கள்.  தமிழக முதல்வர் ஜெயலலிதா 60 வது இடத்திலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி 61 வது இடத்திலும், கலாநிதி மாறன் 77 வது இடத்திலும், ராகுல்காந்தி 79 வது இடத்திலும்,  நித்தியானந்தா 94 வது இடத்திலும் உள்ளனர்.

இந்த முழு பட்டியலை பார்ப்பதற்கு  
http://www.ranker.com/crowdranked-list/the-all-time-worst-people-in-history?page=1&format=GRID.


சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்து அடுத்த கட்டத்துக்கு செல்கிறது




கடந்த மாதம் சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் உயிரிழந்தனர். இதற்கு முக்கிய காரணம் அந்த கட்டிடம் கட்டுவதில் பல ஊழல்கள் நடந்துள்ளது என ஒரு குற்றச்சாட்டு இருந்தது. இது தொடர்பாக விசாரிக்க ஜெயலலிதா ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தார். இந்த ஆணையத்துக்கு ஒய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமை தாங்கினார்.

இந்த வழக்கு தொடர்பாக அனைத்து தகவல்களை சேகரித்த அவர் அதனை ஒரு அறிக்கையாக அமைத்து முதல்வரிடம் இன்று தந்தார்.

சார்ஜில் இருந்து போன் மீது தூங்கிய பெண்ணுக்கு மார்பில் பலத்த காயம்





மொபைல் போனை யாரும் சார்ஜில் இருக்கும் போது பயன்படுத்தாதீர்கள் என பல விழிப்புணர்வு விளம்பரங்கள் வந்தாலும் யாரும் அதனை கேட்பதாக இல்லை. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு இளம்பெண்  தூங்கும் போது தனது ஐபோனுக்கு சார்ஜ் போட்டு தனது அருகில் வைத்து தூங்கி உள்ளார். தூக்க கலக்கத்தில் அந்த போனின் மீது படுத்து உறங்கியுள்ளார். போன் சார்ஜில் இருந்ததால் அது அதிக வெப்பம் ஆகியுள்ளது.

இதனால் அவரது மார்பகத்தில் காயமாகியுள்ளது. போன் அதிக வெப்பம் ஆனதே அவரது மார்பகத்தில் காயம் ஏற்பட்டதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. அவரது மார்பகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரது குழந்தைக்கு தாய்பால் கொடுக்க முடியாத நிலையில் உள்ளார். இந்த செய்தியை பார்த்து விட்டாவது அனைவரும் சார்ஜில் இருக்கும் மொபைலை பயன்படுத்தாமல் இருக்கலாம்.

உலகின் டெரர் செல்பி யூடியூபில் பிரபலமாகி வருகிறது




ஒரு நான்கு மாடி கட்டிடத்தில் ஏறி நின்று கீழே பார்த்தாலே சிலருக்கு தலை சுற்றும். ஆனால் இங்கு மூன்று பேர் 1135 உயரக் கட்டிடத்தில் இருந்து செல்பி எடுத்துள்ளார்கள். இது தான் ஹாங்காங்கின் 5 வது உயர்ந்த கட்டிடமான தி சென்டர் ஸ்கை ஸ்கராப்பர் கட்டிடத்தில் இருந்து எடுத்தது. இந்த உயரமான கட்டிடத்துக்கு சென்ற இந்த மூன்று பேரும், வாழை பழம் சாப்பிடுவதை போல் ஒரு செல்பி எடுத்துள்ளார்கள். இது இப்போது உலகின் டெரர் செல்பியாக மாறி வருகிறது. இவர்கள் செய்த இந்த சாதனை வீடியோவை யூடியூபில் வெளியிட்டு உள்ளார்கள். இதனை பலரும் பார்த்து ரசித்து வருகிறார்கள்.

மோடி தனது முதல் தோல்வியை பெற்றார்




பீகார் மாநிலத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைதேர்தல் நடந்தது. அதற்கு முன் நடந்த லோக் சபா தேர்தலில் மோடி அலையினால் பாஜக 40 தொகுதிகளில் 31 தொகுதிகளை கைபற்றியது. எனவே இனி மோடியை எதிர்க்க வேண்டுமானால் எதிரிகள் இருவரும் கைகோர்த்தால் தான் சரியாகும் என முடிவு எடுத்தார்கள், அங்கு எதிரிகளாக இருந்த முன்னாள் முதல்வர்கள் நிதிஷ் குமாரும் , லாலு பிரசாத் யாதவும். இவர்களுடன் காங்கிரஸும் சேர்ந்து கொண்டது.

இது பாஜகவுக்கு மிக பெரிய போட்டியை உருவாக்கியது. தேர்தலுக்கு முன் இருந்த மோடி அலை மோடி பதவிக்கு வந்த பின்பும் இருக்குமா என்பதை நிருபிக்கும் தேர்தலாக இது பார்க்கப்பட்டது. ஆனால் அதில் மோடி தோல்வியடைந்து விட்டார். 10 தொகுதிகளில் 4 தொகுதிகளில் தான் பாஜக வெற்றி பெற்றது. மீதி 6 தொகுதிகளில் நிதிஷ் - லாலு கூட்டணி வெற்றி பெற்றது. இது மோடி பெற்று இருக்கும் முதல் தோல்வியாக கருதப்படுகிறது. 

மோட்டோ ஜி மொபைலின் கடைசி விற்பனை இதுதான் - சொல்லுகிறது பிளிப்கார்ட் !! விரைவில் ஆர்டர் செய்யுங்கள் .



செப்டம்பர் 4 ஆம் தேதி மோட்டோரோலா நிறுவனம் தன்னுடைய மோட்டோ ஜி - 2 மொபைலை அறிமுகம் செய்ய உள்ளது . இதனால் மோட்டோ ஜி மொபைலின் விற்பனையை முடித்துக் கொள்ள இருப்பதாக தெரிகிறது .

மோட்டோ ஜி மொபைலை நாம் பிளிப்கார்ட்டில் மட்டுமே வாங்க முடியும் . பிளிப்கார்ட் இணையதளத்தில் கடைசி ஸ்டாக் என்ற பெயரில் மோட்டோ ஜி - 16 ஜிபி மொபைல் 11,999 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது .

ஆனால் இந்த மொபைலுக்கு போட்டியிட்டு வாங்காமல் இதற்கு அடுத்த மொபைல் எவ்வாறு இருக்கிறது என்று பார்த்து அதை வாங்க முயற்சிக்கலாம் .

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media