BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 22 April 2014

பொறுப்பற்ற அறிக்கைகளை ஆதரவாளர்கள் தவிர்க்க வேண்டும் என கனிவோடு கேட்டுக்கொள்வதாக டிவிட்டரில் கூறும் மோடி


மோடியை எதிர்த்து விமர்சிப்பவர்களுக்கு தேர்தலுக்குப் பிறகு இந்தியாவில் இடமில்லை என்றும், அவர்கள் பாகிஸ்தானுக்குத்தான் செல்ல வேண்டும் என்று பீகாரின் நவாடா தொகுதி வேட்பாளர் கிரிராஜ் சிங் கூறியிருந்தார். இதே போல், விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீண் டோகாடியா, முஸ்லீம்கள் இந்துக்கள் வாழும் பகுதியில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டும் என கூறியிருந்தார். இந்த இரு கருத்துகளும், அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், மோடி தனது ட்விட்டர் வலைபக்கத்தில், "பொறுப்பற்ற அறிக்கைகளை ஆதரவாளர்கள் தவிர்க்க வேண்டும் என கனிவோடு கேட்டுக்கொள்வதாக" குறிப்பிட்டுள்ளார். மேலும், அத்தகைய வாக்குமூலங்களை தான் ஒரு போதும் ஆதரித்ததில்லை எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார். பாஜக நல்லாட்சி, வளர்ச்சி ஆகியனவற்றை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் கட்சியின் நலம்விரும்பிகள் பெயரில் வெளியாகும் இத்தகைய அறிக்கைகளால் பிரச்சாரம் திசை திரும்புவதாக மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மத வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா மீது எப்.ஐ.ஆர். பதிவு

குஜராத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் உள்ள வீட்டை முஸ்லிம் வியாபாரி ஒருவர் வாங்கியுள்ளார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் அமைப்பினர் கடந்த சனிக்கிழமை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா பங்கேற்றார். அப்போது, அந்த வீட்டை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும்படியும், பஜ்ரங் தளம் அமைப்பின் பலகையை தொங்கவிடுமாறும் தொகாடியா அறிவுறுத்தினார் என்று கூறப்படுகிறது.

"இந்த வீட்டை வாங்கி, குடியேறியுள்ள முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த நபர், அடுத்த 48 மணி நேரத்திற்குள் காலி செய்ய வேண்டும். அதற்கு மறுத்தால், கற்கள், டயர்கள், தக்காளிகளுடன் அவரின் அலுவலகத்தை முற்றுகையிடுங்கள். அதில் தவறேதும் இல்லை. ராஜீவ் காந்தியை கொன்றவர்களே தூக்கிலிடப்படாமல் உள்ளனர். எனவே, வீட்டை காலி செய்ய வைப்பதால் தொடரப்படும் வழக்கைப்பற்றி பயப்பட வேண்டாம். வழக்கு நீண்ட நாள்களுக்கு நடைபெறும். " இவ்வாறு பிரவீண் தொகாடியா பேசினார். அந்த வீட்டை போராட்டக்காரர்கள் தாக்கக்கூடும் என்பதால், ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மத வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா மீது குஜராத் மாநிலம் பாவ்நகர் போலீஸார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்

144 தடை உத்தரவு குறித்து செய்தியாளர்களிடம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு தினமான 24-ம் தேதி காலை 6 மணி வரை 36 மணி நேரத்துக்கு தடை உத்தரவு அமலில் இருக்கும்.

இந்த 36 மணி நேரத்துக்கு, 5 பேருக்கு மேல் கும்பலாக சேர்ந்து செல்லக்கூடாது. வீடு, வீடாக வாக்கு சேகரிக்கச் செல்வது தடுக்கப்படும். அதேவேளையில், திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கு இது பொருந்தாது.

இன்று முதல் 3 நாட்களுக்கு மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி ஹோட்டல், பார், பொது இடங்களில் மது விற்பனை செய்தால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு, 22-ம் தேதி மாலை 6 மணியில் இருந்து தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிடக்கூடாது.

இந்தத் தேர்தலையொட்டி, பணப் பட்டுவாடாவைத் தடுப்பதற்காக ஏற்கெனவே 2,000 நிலை கண்காணிப்புக் குழுக்கள் உள்ளன. தற்போது, மண்டல அளவில் மேலும் 5,000 குழுக்கள் அமைத்து கண்காணித்து வருகிறோம்.

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை நிலை ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் உள்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.

வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சாவடி சீட்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பொதுத்துறை நிறுவன அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், தபால் அலுவலக கணக்குப் புத்தகம், பான் கார்டு, ஆதார் அட்டை, பென்ஷன் ஆவணம், தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை, 100 நாள் திட்ட அடையாள அட்டை போன்ற 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம்" என்றார் பிரவீண் குமார்.

கைப்பேசி கதிர்வீச்சுக்கும் , கேன்சருக்கும் சம்பந்தமில்லை !!

புகழ்பெற்ற கேன்சர் நிபணரும் புலிட்சர் விருது பெற்ற சித்தார்த் முகர்ஜி அளித்த பேட்டியில் , ஆய்வின முடிவுப்படி கைப்பேசி கதிர்வீச்சுக்கும் , கேன்சருக்கும் சம்பந்தமில்லை என்பது தெளிவாக விளங்குகிறது . மக்கள் இந்த கதிர்வீச்சு தீமை பயக்கும் என அஞ்சுகின்றனர் . மற்ற நாடுகளில் வெளியிடப்படும் கதிர்வீச்சின் அளவை விட இந்தியாவில் பத்தில் ஒரு பங்கே அரசால் அனுமதிக்கப்படுகிறது என்று கூறினார் .

சித்தார்த் முகர்ஜி 2010 ஆம் ஆண்டில் தன்னுடைய தி எம்பயர் ஆப் ஆல் மால்தீவ்ஸ் என்னும் புத்தகத்திற்காக புலிட்சர் விருது வென்றார் . இப்போது இவர் தன்னுடைய இன்னொரு புத்தகத்தை எழுதி வருகிறார் .

மோடி இந்தியாவின் வரலாற்றில் சிறந்த பிரதமராக இருப்பார்- சத்தீஸ்கர் முதல்வர் ரமன் சிங் .

சத்தீஸ்கர் முதல்வர் ரமன் சிங் அளித்த பேட்டியில் பாஜக கட்சியினுள் சண்டையில்லை . மோடி தான் எங்கள் பிரதம வேட்பாளர் . எல்லா கணிப்பு பாஜக கூட்டணி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மோடி பிரதமர் ஆவதை தெளிவாக காட்டுகிறது . காங்கிரஸ் பற்றிய உண்மை அனைத்து மக்களுக்கும் தெரிந்து விட்டதால் மக்கள் பாஜக விற்கு தான் வாக்களிப்பில் . அவ்வாறு மோடி பிரதமரானால் மோடி இந்தியாவின் வரலாற்றில் சிறந்த பிரதமராக இருப்பார் . மோடியின் தலைமையில் இந்தியா தன் வல்லமையை உணரும் , தனது இழந்த பெருமையை மீட்டு உலக அரங்கில் தன் பெயரை நிலைநாட்டும் என்றார் .

சிவகார்த்திகேயன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்!



சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் கூறியிருப்பது:

"நான் தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்தில், மாநில அளவிலான போட்டிகளிலும் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளிலும் பல பரிசுகளை பெற்றுள்ளேன். தற்போது குத்துச்சண்டை பயிற்சி குழு நடத்தி வருகிறேன்.

சமீபத்தில் திரைக்கு வந்துள்ள ’மான் கராத்தே’ படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் குத்துச்சண்டையை இழிவுபடுத்தும் வகையில் நிறைய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அந்த காட்சிகள் நீக்கப்பட வேண்டும். தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்திடம் உரிய அனுமதியும், ஆலோசனையும் பெற்று, குத்துச்சண்டை தொடர்பான காட்சிகளை எடுத்திருக்கலாம். ஆலோசனை எதுவும் பெறவில்லை. உரிய அனுமதியும் பெற வில்லை. இது சட்டத்திற்கு புறம்பான செயல்.

எனவே ’மான் கராத்தே’ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குநர் திருக்குமரன், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். ’மான் கராத்தே’ படத்தை தடை செய்யவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று அம்மனுவில் கூறியிருந்தார்.

இம்மனு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

இன்று முதல் 3 நாட்களுக்கு மதுபானம் விற்றால் 6 மாதம் சிறை


சென்னை தலைமை செயலகத்தில், பத்திரிக்கை நிருபர்களை சந்தித்த தமிழக தேர்த‌ல் தலைமை அதிகாரி பிரவீண் குமார் கூறியதாவது:

தேர்தலையொட்டி 22-ம் தேதி (இன்று) காலை 10 மணி முதல் 24-ம் தேதி நள்ளிரவு வரை 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் ஹோட்டல்களில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் தனியார் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்கள், கடைகள், பொது இடங்களில் யாராவது மது விற்பனை செய்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.

வாக்குப்பதிவு நாளான 24-ம் தேதி அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதையும் மீறி, விடுமுறை அளிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.

ஏதாவது தனியார் நிறுவனம் விடுமுறை அளிக்காவிட்டால் அதுகுறித்து 1950 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். அந்தப் பகுதி தேர்தல் அதிகாரி சம்பந்தப்பட்ட நிறுவனத்தை ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கை அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பார்வையற்றோர் வாக்களிக்க வரும்போது அவருடன் துணைக்கு வருபவர் வாக்குச்சாவடிக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார். சிறையில் இருப்பவர்களில், தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மட்டும் தபால் ஓட்டு போட முடியும். மற்றவர்கள் ஓட்டு போட முடியாது. முப்படையினர், தேர்தல் பணியில் ஈடுபடும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வெளிமாநிலத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் தமிழக போலீஸார், தூதரக அதிகாரிகள் ஆகியோர் தபாலில் வாக்களிக்கலாம். 22-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் யாரும் கருத்துக்கணிப்பு வெளியிடக்கூடாது.

18 வயதில் கொலை செய்து விட்டு, வீட்டை விட்டு ஓடி வந்தவர் மோடி: வேணி பிரசாத் வர்மா 


 நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் அமைப்பின் மிகப்பெரிய அடியாள் எனக் கூறியதற்காக வேணி பிரசாத் வர்மா மீது ஏற்கெனவே வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் லக்னௌவில் பிரச்சாரம் செய்த வேணி பிரசாத், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 18 வயதில் கொலையைச் செய்து விட்டு வீட்டை விட்டு ஓடி வந்து விட்டார் எனத் தெரிவித்தார்.

இதற்கு பாஜக கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் இது தொடர்பாகக் கூறுகையில், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் மிகக் கீழ்த்தரமாகப் போய்விட்டது. ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்தின் போதும் வேணி பிரசாத் வர்மா தொடர்ந்து தவறிழைத்து வருகிறார். மோடி பற்றிய அவரின் குற்றச்சாட்டு கண்டிக்கத்தக்கது; முற்றிலும் அடிப்படையற்றது. வேணி பிரசாத்தின் இந்தக் கூற்றை காங்கிரஸ் ஆதரிக்கிறதா என அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக காங்கிரஸின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

ரூ.1 சம்பளம் வாங்கிய ஜெ.விற்கு ரூ.5000 கோடி சொத்து எப்படி? அதற்கு பெயர் சம்பளம் அல்ல கிம்பளம்- கருணாநிதி


திருவள்ளூர் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, ஆவடியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட கருணாநிதி பேசியதாவது:

நாடு நலிவுற்று இருக்கும்போது, நாட்டை விட உடம்பு என்ன முக்கியமா? எனது உடம்புக்கு மருத்துவர்கள் கொடுக்கும் மருந்தை விட உங்களை காணும் போது கிடைக்கின்ற மருந்தே நல்ல மருந்து. நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காண மக்களுக்கு கிடைத் திருக்கும் ஒரே வாய்ப்பு இந்தத் தேர்தல்.

காலால் நடந்து, கைககளால் தவழ்ந்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்றவர்கள், அமைச்சர்களான பின் அதைப் பற்றி சிந்திப்பதே இல்லை. மக்களுக்கும் அதிகாரத்திற்கும் உள்ள தொடர்பை எளிதில் மறந்துவிடுகின்றனர். அவர்களை மாற்றும் வாய்ப்பை இந்த தேர்தல் மூலம் மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்.

இந்தியா சுதந்திரம் பெற்றால் தேனாறு ஓடும் என்றும் பாலாறு பெருகும் என்றும் சொல்லப்பட்ட காலம் எல்லாம் பொய்த்துப் போனது. இங்கே தேன் ஓடவில்லை. இருந்த பாலாறும் காய்ந்துவிட்டது. இப்போது, இந்தியாவை ஆளப் போவது யார் என்ற கேள்விக்கு நாம் தான் விடை காண வேண்டும்.

நாம் தேர்ந்தெடுக்கும் ஆள் நல்லவரா, நடுநிலையானவரா என்பதைப் பார்க்க வேண்டும். அண்ணா சொன்னதுதான் சேது சமுத்திரத் திட்டம் என்பதுகூட தெரியாமல், கட்சித் தலைவர்கள் உள்ளனர். ஒரு ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறுகிறார் முதல்வர் ஜெயலலிதா. பெங்களூரில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில், அவர் சேர்த்த சொத்துக்களின் மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி என அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு ரூபாய் சம்பளத்தில் அவர் வேலை பார்ப்பது உண்மைதானா? அதற்கு பெயர் சம்பளம் அல்ல கிம்பளம். ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய அவருக்கு எங்கிருந்து 5 ஆயிரம் கோடி பணம் வந்தது? ஊரை ஏமாற்றுகிற ஒருவர் நமக்கு முதலமைச்சராக கிடைத்திருக்கிறார். இதுபோன்ற ஒரு அநியாயம் மீண்டும் நடைபெறக் கூடாது.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media