BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 23 June 2014

அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிறார், இடம் தருவாரா மோடி !!



செல்வகணபதி ஊழல் வழக்கு காரணமாக தனது எம்.பி பதவியை இழந்ததால் அதற்கு இடைதேர்தல் வந்தது. முதல் நாள் அன்றே அதிமுக வேட்பாளர் நவனீதகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார் .இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள். இன்று வரை நான்கு சுயேச்சை வேட்பாளர் மட்டுமே மனுதாக்கல் செய்து இருந்தனர்.

கட்சிகளின் சார்பில் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. 4 வேட்பாளர்களில் எல்லா தேர்தலில்களிளும் மனுதாக்கல் செய்யும் பத்மநாபன் அனைவரும் அறிந்தவர். அந்த 4 வேட்பாளர்களின் மனுக்களும் தள்ளுபடி செய்யபட்டது .அதிமுகவிற்கு போதிய எம்.எல்.ஏ.களின் ஆதரவு இருப்பதால் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகி விட்டது. இதன் மூலம் ராஜ்ய சபாவில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிகை 11 ஆகிறது. அதனால் மோடி அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்று அவர்கள் ஆவலுடன் எதிர்பார்கிரார்கள்.


மச்சான்ஸ் நமீதா டான்ஸ் ஆட வராததால் கலவரம் நாற்காலி வீச்சு..


காரைக்காலில் உள்ள ஒரு தனியார் அமைப்பு சார்பில் காரைக்கால் நகராட்சித் மைதானத்தில் நேற்று (ஞாயிறு) மாலை 6 மணிக்கு உங்களில் யார் அடுத்து லாரன்ஸ் என்ற தலைப்பில் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக கடந்த சில‌ மாதங்களாக நமீதாவின் படங்களை போட்டு டிக்கெட்களை விற்பனை செய்திருந்தது. மேலும் நமீதா உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்கும் நடன நிகழ்ச்சி என காரைக்கால் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் விளம்பரம் செய்ததால் இந்த டிக்கெட்கள் நல்ல விலைக்கு விற்று தீர்ந்தன.

ரசிகர்கள் திரளாக நமீதாவின் டான்சை காண டிக்கெட் வாங்கியவர்கள் நமீதா ஆடப்போகும் டான்ஸ்க்காக காத்திருந்தனர், உள்ளூர் கலைஞர்கள் நிகழ்ச்சிகள் நடத்தினாலும் அனைவரும் நமீதாவுக்காக காத்திருந்தனர், ஆனால் நமீதா வரவில்லை என்று நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் கூறியதால் கடும் கோபம் கொண்ட ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர், நாற்காலிகளை தூக்கி வீசி உடைத்தனர், டிக்கெட் காசை திரும்ப கேட்டதற்கு அந்த தனியார் நிறுவனம் காசை கொடுக்கவில்லை, இதில் பல இலட்சம் ரூபாய்களுக்கு மோசடி நடந்திருக்கும் என டிக்கெட் வாங்கியவர்கள் சந்தேகிக்கின்றனர்.

கரண்ட்டு வராததற்கு, கவர்மெண்ட் ஆபிசில் லஞ்சம் வாங்குபவர்களை எதிர்த்து வராத கோபம் நமீதா டான்ஸ் ஆட வரவில்லை என்று வருகிறதென்றால் இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் என்று சொல்ல தோன்றியதென்றால் இந்த செய்திக்கு ஒரு லைக் போடுங்கள்

மோடியை சந்தித்தார் நடிகர் அமீர்கான் !!


பாலிவுட்டின் நட்சத்திர நடிகர் அமீர் கான் டில்லியில் , பிரதமர் மோடியை சந்தித்தார் . பிரதமரின் அலுவலகம் வைத்துள்ள டிவிட்டர் பக்கத்தில் மோடியுடன் நடந்த இந்த சந்திப்பின் போட்டோக்களை வெளியிட்டுள்ளனர் .

ஆனால் சந்திப்பு நடந்த காரணம் எதுவும் பிரதமர் அமைச்சகத்தால்  கொடுக்கப்படவில்லை  ...

மீண்டும் அதிரடிக்கு திரும்பும் தோனி , மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்  மகேந்திர சிங் தோனி

பேட்டிங்கில் மீண்டும் அதிரடிக்கு திரும்ப  போவதாக கூறி உள்ளார்.

காத்திருந்து  அடிக்கும் பாணியை கைவிடபோவதாக  கூறி உள்ளார். அடித்து

ஆடினால் மட்டுமே ரன்கள் என்பதை புரிந்து கொண்டேன் என்றார்.

இங்கிலாந்து எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் தான் கூடுதல் ஆக்ரோஷமாக

விளையாட போவதாக கூறி உள்ளார். தான் இப்போது இருக்கும் நிலையில்

பவுண்டரிகள் மூலம் அதிக ரன்களை சேர்க்க போவதாக கூறி உள்ளார். தான்

சுதந்திரமாக விளையாடும் போது தன்னால் அதிக ரன்களை குவிக்க முடியும்

என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார். தோனியின் இந்த முடிவு அவரது

ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை  ஏர்படுத்தி உள்ளது.

              
தோனி இந்திய அணிக்கு வரும் போது அதிரடி பேட்ஸ்மனாக தான்

வந்தார், பிறகு கேப்டன் ஆன பிறகு தனது பேட்டிங் ஆடும் விதத்தை மாற்றி

கொண்டார்.



ஜுலை 8 இல் ரயில்வே பட்ஜெட் , 10 இல் பொது பட்ஜெட் தாக்கல் !!




நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜுலை 7 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது . ரயில்வே பட்ஜெட் 8 ஆம் தேதியும் பொது பட்ஜெட் 10 ஆம் தேதியும் தாக்கல் செய்யபடுகிறது. இது மோடி அரசின் முதல் பட்ஜெட் ஆகும் அதனால் இதன் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. 9 ஆம் தேதியன்று பொருளாதார ஆய்வரிக்கை தாக்கல் செய்யபடும். நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இதனை தாக்கல் செய்கிறார். இந்த கூட்ட்தொடரில் எஸ்/எடி பிரிவினருக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு மசோதா, டிராய் சீர்திருத்த மசோதா ,செபி மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற திட்டமிட்டு உள்ளது. அதற்கு முன் ரயில் டிக்கெட் விலையை உயர்த்தியதர்காக எதிர் கட்சிகள் அமளியில் ஈடுபட கூடும்.

மோடி அரசின் திட்டங்களை இந்த பட்ஜெட் கூட்டதொடரில் கனித்து விடலாம்.



ஒரு மாத ஆட்சிக்கு பின் மோடியின் நான்கு திட்டங்கள் !!






மோடி இந்திய நாட்டின் பிரதமாராக பதவியேற்று இந்த வாரத்துடன் ஒரு மாதம் முடிகிறது .இந்த ஒரு மாத ஆட்சி நன்றாகவே உள்ளது .ரயில்வேவில் பயணிகளின் பயண கட்டணத்தை உயர்த்தியதற்கு மட்டும் மட்டும் மக்களிடையே எதிர்ப்பு உள்ளது .மற்றபடி மோடியின் செயல்பாடுகளை எல்லா பத்திரிக்கைகளும் புகழ்ந்து வருகின்றன .இப்போது மூன்று திட்டங்களை கையில் வைத்து உள்ளார். அவை ,

1.       இந்திய பொருளாதரத்தை உலக அளவில் உயர்த்துவது
2.       மக்களின் பிரச்சனைகளை விரைந்து தீர்த்து வைப்பது
3.       இந்திய ராணுவத்திற்க்கு உயர் ரக ஆயுதங்களை வழங்குவது.
4.       மத்திய அரசும் மாநில அரசும் நட்புடன் செயல்படுவது.

மக்களின் பிரச்சனைகளை தீர்க்க தனி துறை ஒன்றை அமைப்பது என்கிற 

முடிவில் மோடி இருப்பதாக கூறப்படுகிறது. 29 மாநில அரசுகளையும் 

சந்தித்து அவர்களின் குறைகளை கேட்க இருக்கிறார். இந்திய ராணுவத்தை 

பலபடுத்த உயர் ரக ஆயுதங்களை வாங்க இருக்கிறார். ராணுவ தளபதிகளை

உடனடியாக சந்திக்க இருக்கிறார். ஒரே ரேங்க் ஒரே ஒய்வுதியம் என்கிற 

புதிய திட்டத்தையும் செயல்படுத்த உள்ளார் 

அனைவருக்கும் இலவச இன்டர்நெட் வழங்கும் தைவான் அரசு !!



உலக நாடுகளிள் அனைவருக்கும் இலவச இன்டர்நெட் வசதியை வழங்கிய முதல் நாடு என்ற பெருமையை பெற்று உள்ளது தைவான் அரசு. சுமார் 24 மில்லியன் மக்கள் தொகையை கொண்டது தைவான் நாடு. இவர்கள் அனைவருக்கும் இலவசமாக இன்டெர்நெட் வழங்குவது என்பது எளிதான செயல் அல்ல .இதனை சிறந்த செயல் திட்டம் மூலம் நடைமுறை படுத்தி உள்ளார்கள் .இதற்காக 2011 முதல் உழைக்க தொடங்கினார்கள்.  அந்த நாட்டு மக்கள் தங்கள் மொபைல் நம்பரை மட்டும் கொடுத்து இந்த வசதியை பெற்று கொள்ளலாம் .இதன் வேகம் 1MBPS ஆகும் .

இந்த வசதியை தங்கள் சொந்த நாட்டு மக்களுக்கு மட்டும் தராமல், அவர்கள் நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் இலவசமாக தருகிறார்கள் .இது அந்த நாட்டில் சுற்றுலா வரும் மக்களின் எண்ணிகையை அதிகமாக உயர்த்தி வருகிறது .சுற்றுலா பயணிகள் தங்கள் பாஸ்போட்டை காண்பித்தால் இந்த வசதியை பெற்று கொள்ளலாம் .

இந்தியாவிலும் இது போல பெங்களூரில் மட்டும் இந்த வசதியை எற்படுத்தி உள்ளார்கள். இது போல இலவசமாக தராவிட்டாலும் , குறைந்த விலையில் தருவதற்கான முயற்சியிலாவது நமது அரசு கவனம் செலுத்த வேண்டும்.





சன்னி லியோனை எடை குறைய சொல்லும் இயக்குநர் !!

ஏற்கனவே பாலிவுட் படங்களில் நடிப்பதற்காக தனது உடல் இடையை குறைத்துள்ளார் சன்னி லியோன் .

தனது அடுத்த படமாக பிரபல கோரியோகிராபர் அஹ்மத சல்மானின் தம்பி பாபி இயக்கும் "லிலா" என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார் . இந்த படத்தில் இளவரசியாக நடிக்க உள்ளார் .

இந்த படத்திற்காக மேலும் 5 கிலோ குறைய வேண்டும் என இயக்குநர் கோரிக்கை விடுத்துள்ளார் . இதற்காக அவர் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் .

இவர் ஏற்கனவே பாலிவுட் படங்களில் நடிப்பதற்காக 9 கிலோ குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

மதுவிலக்கை அமல்படுத்த கோரி உண்ணாவிரதம் இருந்த பழ.நெடுமாறன் கைது.



மதுவிலக்கை அமல்படுத்த கோரி உண்ணாவிரதம் இருந்த பழ.நெடுமாறன் கைது.

மதுரை சட்டக்கல்லூரியை சேர்ந்த நந்தினி என்ற மாணவி பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மதுவிலக்கை அமல்படுத்த கோரி சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்து பழநெடுமாறன் உட்பட 7 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுப்பட்ட பழநெடுமாறன் உட்பட 9 பேரை காவல் துறையினர் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்ததாக கைது செய்தனர். 

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை மருத்துவமனையிலேயே பெறலாம் !!


நாம் பிறப்பு , இறப்பு சான்றிதழ்களைப் பெற தாசில்தார் அலுவலகம் செல்வதே வழக்கமாக வைத்து இருந்தோம் . அது சில தொலைதூர இடங்களில் கால தாமதத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது .

இதனால் டில்லியில் ஒரு புதிய ஏற்பாடு செய்துள்ளனர் . இந்த ஏற்பாடு மூலம் டில்லியில் உள்ள மருத்துவமனைகளிலே பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெறலாம் . தாய் மருத்துவமனையை விட்டு டிஸ்சார்ஜ் செய்யும் முன் பிறப்பு சான்றிதழையும் , நெருங்கிய உறவினரிடம் இறப்பு சான்றிதழை ஒப்படைக்க வேண்டும் என டில்லி நகராட்சி ஆணையம் தெரிவித்துள்ளது .

இந்த பணிக்காக ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஒரு சப் ரிஜிஸ்டர் பணி நியமணம் செய்யப்படுவர் .

இயக்குனர் இராம.நாராயணன் சிங்கப்பூரில் காலமானார்


பிரபல இயக்குனர் இராம.நாராயணன் விலங்குகளை வைத்து படமெடுப்பது, பட்ஜெட் படங்கள் எடுப்பதில் புகழ்பெற்றவர், இவரின் மிகக்குறைந்த பட்ஜெட் படங்கள் அதிக அளவில் வசூல்களை அள்ளியுள்ளன.

உலகின் அதிக படங்களை பல மொழிகளில் இயக்கிய சாதனையாளர் இவர்.  சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட இவர் சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று  சிங்கப்பூரில் காலமானார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media