மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த ஒரு சிறப்பு திருமணம்
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தையடுத்த என்.வேடப்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் -உலகுமுத்து தம்பதியினர் மகன் முத்துப்பாண்டிக்கும் (32),மதுரை தெற்கு பழங்காநத்தத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் - மகேஸ்வரி தம்பதியினர் மகள் முத்துலட்சுமிக்கும்(27) திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி சன்னதியில் வைத்து திருமணம் நடைபெற்றது.
இருவரும் சுமார் 3 அடி உயரம் மட்டுமே உள்ளவர்கள். முத்துலட்சுமி 9 வரையிலும், முத்துப்பாண்டி 7 வரையிலும் படித்துள்ளனர்.
இவர்களுக்கு புதூர் ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், வேடப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ஆவுடையப்பன், மதிமுக மாநில விவசாய அணி துணை செயலர் அ.வரதராஜன் ஆகியோர் முன்னிலையில் இத்திருமணம் நடந்தது.
#நாமும் ஒரு லைக் போட்டு இந்த தம்பதிகளை வாழ்த்துவோம்
நன்றி நெல்லை ஆன்லைன்.காம்