BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 4 August 2014

இன்றைய செய்திகள் - Satrumun Special daily News

“ஒரு நாள்” செக்ஸ் உறவு குறித்து ஆண்களும் பெண்களும் நினைப்பது என்ன?

சென்னை மெள‌லிவாக்கம் கட்டிட விபத்து, மு.க.ஸ்டாலின் தொடுத்த வழக்கில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

புரோக்கர் வேலை பார்த்த செக்ஸ் டாக்டர் கைது. நேரில் பெர்ஃபார்மென்ஸ் பார்த்து ஆலோசனை தந்த வக்கிரம்

பி.ஜைனூல் ஆபிதின் சவாலை ஏற்றார் அகோரி, பீஜே தற்கொலை செய்துகொள்ள சூனியம் வைக்கிறேன் என ஒப்பந்தம்


ஜெயலலிதாவை அவமதித்தது தனது அம்மாவை அவமதித்தது போல் இருந்தது - விஜய் பேச்சு 
#உலக நடிப்புடா சாமி

சண்டியர் -  திரை விமர்சனம், ஜிகர்தண்டாவா, சரபமா என்ற ரேசில் கவனிக்கப்படாமல் விடப்பட்ட கவனிக்கப்பட்டிருக்க வேண்டிய படம்

அஜித் – விஜய் – கார்த்தி : ‘மூன்றுமுகம்’ ரீமேக்கில் நடிக்கப் போவது யார்?

குற்றத்தை ஒப்பு கொண்டார் ஆண்டர்சன், தண்டனை வழங்கப்படுமா ??

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த வீரர், அவரை பின்தொடர்ந்து வருகிறார் தோனி

மின்வெட்டால் அல்லாடும் தமிழகத்தில் தில்லான தள்ளுவண்டிக்காரர் - நீங்களும் இது போல முயற்சிக்கலாமே

காமென்வெல்த் போட்டிக்கு சென்று செக்ஸ் புகாரில் சிக்கி கொண்ட இந்தியர்

ஜெயலலிதா பெயர் வைத்த குட்டி யானை மரணம்

“ஒரு நாள்” செக்ஸ் உறவு குறித்து ஆண்களும் பெண்களும் நினைப்பது என்ன?

ஆண் மீது பெண்ணுக்கு நம்பிக்கை வந்து திருமணம் செய்து பின் செக்ஸ் உறவு கொள்வதும், சில நேரங்களில் காதலில் விழுந்த பெண்கள் தன் காதலன் மீது அளவு கடந்த நம்பிக்கையின் பால் காதலனுடன் செக்ஸ் உறவு கொள்கிறார்கள், சிலர் கள்ளக்காதலில் விழுகிறார்கள்.

மேற்கூறிய அனைத்துமே நீண்ட கால செக்ஸ் உறவுகளாகும், ஒரே ஒரு நாள் அல்லது மிகக்குறுகிய கால செக்ஸ் உறவுகள் ஒன் டே செக்ஸ் என்றும், செக்ஸ் வித் ஸ்ட்ரேஞ்சர் என்றும் கூறப்படும்.

இந்த “ஒரு நாள்” மட்டும் கொஞ்சிக் குலாவி உடலுறவு கொள்ளும் குறுகிய கால உறவுகளைக் குறித்து ஆண்களும் பெண்களும் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்த ஆராய்ச்சியில் இறங்கியது டர்காம் பல்கலைக்கழகம்.

இந்த ஒரு நாள் செக்ஸ் உறவை அனுபவத்த‌ பெண்கள் பெரும்பாலும் குற்ற உணர்வில் இருப்பதாகவும், மேலும் இனிமேல் இது போன்ற ஒரு நாள் செக்ஸ் உறவே வேண்டாம் என எல்லாம் முடிந்து மறு நாள் காலையில் தான் அவர்கள் சிந்திப்பதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

ஒரு நாள் செக்ஸ் உறவை அனுபவித்த ஆண்களில் 23% மற்றும் பெண்களில் 58%  விழுக்காட்டினரும் இந்த உறவை அனுபவித்த பின் "அய்யே சீச்சீ" என்று கூறியுள்ளானர்.

சுமார் 1750 பேரைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சி பெண்களின் மன நிலையையும், ஆண்களின் மனநிலையையும் பட்டியலிட்டிருக்கிறது.

பெண்கள் எந்த விதமான ஆண்களை விரும்புகிறார்கள் என்றால் ஆண்கள் 6 பேக் இல்லாமல் கூட இருக்கலாம் ஆனால் நீண்டகால உறவுப் பிணைப்பையும், அன்பு, கரிசனம் மற்றும் தன்னை கவனித்து கொள்ளும் நல்ல துணையையே பெண்கள் விரும்புகின்றனர். பெண்களுக்கு அழகான ஆண்கள் இரண்டாம் பட்சம் தான்.

இதற்கு மாறாக ஆண்கள் "அழகான" பெண்களையே விரும்புவதை ஆய்வு உறுதிசெய்துள்ளது.

இந்த ஒரு நாள் செக்ஸ் உறவுக்கு தாங்கள் பொறுப்பாளி இல்லை என்றும் தாங்கள் ஆண்களால் பயன்படுத்தப்பட்டு விட்டதாகவும், தாங்கள் நினைத்ததை விட மோசமானதாகவே இந்த அனுபவம் இருப்பதாகவும் பல பெண்கள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள், ஆனால் ஆண்களோ இதற்கு நேர்மாறாக தனக்குக் கிடைத்த ஒரு நாள் செக்ஸ் பார்ட்னர் அழகாய் இல்லை என்றே வருத்தம் தெரிவித்தார்களாம்.

மின்வெட்டால் அல்லாடும் தமிழகத்தில் தில்லான தள்ளுவண்டிக்காரர் - நீங்களும் இது போல முயற்சிக்கலாமே

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரில் நிற்கிறது தள்ளுவண்டி ஜூஸ் கடை. இந்த கடையின் மேல்கூரை சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரிக்கும் solar panel-களால் ஆனது. இந்தக் கடையின் உரிமையாளர் ராமதாஸ், தனக்கு வித்தியாசமாக தோன்றிய ஐடியாவை பாண்டிச்சேரியில் உள்ள ஒரு நிறுவனத்தில் சொல்லி செயல்வடிவம் கொடுத்துள்ளார்.

5 அடி அகலம், 10 அடி நீளம் என 50 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் solar panel மூலம் 1000 watts-க்கு உட்பட்ட மிக்ஸி, சிறிய அளவிலான பிரீசர் (Freezer) , மின் விளக்கு போன்ற கடைக்கு தேவையான சாதனங்கள் இயங்குகின்றன.

இதனால் வழக்கமாக வீட்டு மின்சாரத்தை உறிஞ்சி பிறகு கடையில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் தேவையில்லை. டீசலை உறிஞ்சும் ஜெனரேட்டர்களும் தேவையில்லை. சோலார் பேனல்களுக்கு 25 வருடங்கள் கியாரண்டி இருப்பதால், முதல்முறை செலவுசெய்தால் பிறகு 25 வருடங்கள் வரை செலவு செய்யத் தேவையில்லை.

‘மற்ற தள்ளுவண்டி கடைகளில் தினசரி 300 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை மின் சக்திக்கென ஆகும். ஆனால் எனக்கு அந்தப்பிரச்சினை இல்லை. இந்த சோலார் பேனலுடன் கூடிய கடையை வடிவமைக்க ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஆகியது. காலப்போக்கில் நான் போட்ட பணம் வந்துவிடும். சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாத மன நிம்மதியும் எனக்கு கிடைக்கும்’ என்கிறார் ராமதாஸ்.

ஒரு நகரத்தில் உள்ள தள்ளுவண்டி கடைகள் அனைத்தும் இதுபோன்று வடிவமைக்கப்பட்டால், சேமிக்கப்படும் மின்சாரம் மற்றும் டீசலின் அளவு எவ்வளவு இருக்கும் என்று நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. குஜராத்தில் நர்மதா நதியின் மேல் போடப்பட்டுள்ள சோலார் திட்டத்தைப் பார்த்து அதிசயத்திருக்கிறோம். அதைவிட கூடுதலாக பல வாய்ப்புகள் தமிழகத்தில் இருக்கின்றன என்பதற்கு இந்த தள்ளுவண்டி கடை ஒரு உதாரணம்.

# இந்த நல்ல முயற்சியை ஷேர் செய்தால் படிக்கும் யாரேனும் ஒருவர் இதை முயற்சிப்பார்களே!

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்




அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இன்று 53 வது பிறந்த நாள் ஆகும். கறுப்பர் இனத்தில் இருந்து கொண்டு அமெரிக்கா அதிபராக முதல் முறையாக பொறுப்பேற்றவர் இவர் தான். அவரது பிறந்த நாள் அமெரிக்கா முழுவதும் கொண்டாடபட்டு வருகிறது. அவர் தனது பிறந்த நாளை ஒரு வாரத்துக்கு முன்பு இருந்தே கொண்டாடி வருகிறார். தனது நண்பர்களுடன் கோல்ப் விளையாடி தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடங்கினார். 

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்தார், பின்தொடர்ந்து வருகிறார் தோனி




டி 20 கிரிக்கெட்டில் மேற்கிந்திய வீரர் கிறிஸ் கெய்ல் புதிய சாதனை படைத்து உள்ளார். டி 20 போட்டிகளில் அதிக தொடர்ந்து அதிக  இன்னிங்சில் டக் அவுட் ஆகாமல் இருந்தவர் என்னும் சாதனையை படைத்தார். இவர் இதுவரை 90 இன்னிங்சில் டக் அவுட் ஆகாமல் இருந்து உள்ளார். இதற்கு முன் இந்த சாதனை பாகிஸ்தான் வீரர் ஷோயப் மாலிக் வசம் இருந்தது. அவர் 89 இன்னிங்சில் டக் அவுட் ஆகாமல் இருந்து உள்ளார். இந்திய வீரர் தோனி 80 இன்னிங்சில் டக் அவுட் ஆகாமல் இருந்து உள்ளார். விரைவில் இந்த சாதனைய தோனி முறியடிப்பார் என எதிர்பார்க்கலாம். 

ஜெயலலிதா பெயர் வைத்த குட்டி யானை மரணம்




முதுமலை யானைகள் முகாமில் வளர்ந்து வந்த யானை காவேரி இன்று இறந்தது . இதுக்கு 3 வயது ஆகிறது. இதற்கு காவேரி என்று பெயர் வைத்தது நமது முதல்வர் ஜெயலலிதா ஆவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா இந்த பெயரை வைத்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் புலிகள் காப்பகத்தை பார்வையிட சென்ற ஜெயலலிதாவை காவேரி நினைவில் வைத்து இருந்தது. அவருக்கு வரவேற்பு அளித்தது. பின்பு அங்கு அதிகம் கூட்டம் கூடி இருந்ததால் அந்த கூட்டத்தை பார்த்து பயந்து ஜெயலலிதாவை தனது துதிக்கையால் லேசாக இடித்தது.

அந்த யானை இன்று மரணம் அடைந்து விட்டது !!

பி.ஜைனூல் ஆபிதின் சவாலை ஏற்றார் அகோரி, பீஜே தற்கொலை செய்துகொள்ள சூனியம் வைக்கிறேன் என ஒப்பந்தம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மாநிலத்தலைவர் பி.ஜைனூல் ஆபிதின் சூனியம், செய்வினை என்பது உண்மை அல்ல, எனக்கு யாரேனும் சூனியம் வைத்தால் அவர்களுக்கு 50 இலட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தார், அந்த சவாலை ஏற்றுக்கொண்ட திருச்சியை சேர்ந்த அகோரி மணிகண்டன் என்பவர் பி.ஜே வுக்கு சூனியம் வைப்பதாகவும் 48 நாட்களுக்குள் பீஜே சூனியம் செய்வினை உண்மை என்பதை ஒப்புக்கொள்வார் அல்லது தற்கொலை செய்து கொண்டு சாவார்.

இப்படி நடந்தால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அகோரி மணிகண்டனுக்கு ரூபாய் 50 இலட்சம் தரும், இது நடக்கவில்லை என்றால் அகோரி மணிகண்டன் இஸ்லாத்தை ஏற்று சூனியத்தை எதிர்த்து பகிரங்க பிரச்சாரம் செய்வார் என்று ஒப்பந்தம் போட்டு அதை பத்திரமாக பதிவும் செய்துள்ளனர்.

முன்பொரு முறை ஒரு விஞ்ஞானி எனக்கு சூனியம் வையுங்கள், சூனியத்தால் நான் பாதிக்கப்பட்டால் 50 இலட்சம் தருகிறேன் என்று விஜய்டிவி நீயா? நானா? நிகழ்ச்சியில் பகிரங்கமாக சவால் விட்டார், அதை ஏற்று சூனியம் வைக்கிறேன் என்று கூறிய ஒருவர் பிறகு பின்வாங்கி விட்டார், அகோரி மணிகண்டன் சூனியம் வைக்கிறேன் என்று எழுதியே கொடுத்துள்ளார்.

செப்டம்பர் 18ம் தேதி தான் இறுதி நாள், அன்று தான் தெரியும் என்ன நடக்கும் என்று.

சூனியம் உண்மையா? பொய்யா? உங்கள் கருத்துகளையும் அனுபவங்களையும் எழுதுங்கள்

# சபாஷ் சரியான போட்டி



காமென்வெல்த் போட்டிக்கு சென்று செக்ஸ் புகாரில் சிக்கி கொண்ட இந்திய நடுவர்




ஸ்காட்லாந்து தலைநகர் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமென்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் 215 வீரர் வீராங்கனைகள் சென்று உள்ளார்கள். இது 20 வது காமென்வெல்த் போட்டியாகும். இவர்கள் அனைவரும் அங்கு உள்ள விளையாட்டு கிராமத்தில் தங்கி உள்ளார்கள். இந்திய அணியுடன் இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தாவும், அணியில் இணைக்கப்படாத அதிகாரியாக மல்யுத்த நடுவரான வீரேந்தர் மாலிக்கும் சென்றிருந்தனர். இவர்கள் இருவரும் கிளாஸ்கோ நகரில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவரையும் நேற்றும் முன்தினம் ஸ்காட்லாந்து போலீசார் கைது செய்தனர். அவர்கள் செக்ஸ் புகாரில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை இந்தியாவின் விளையாட்டு துறை அமைச்சர் சர்பானந்தா உறுதி செய்தார். இதில் சிக்கியுள்ள வீரேந்திர மாலிக்கை இந்திய மல்யுத்த கழகம் சஸ்பென்ட் செய்து உள்ளது. 

சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்து, மு.க.ஸ்டாலின் தொடுத்த வழக்கில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்


சென்னையில் மெளலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் இறந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்தன, 1 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், "சென்னை மவுலிவாக்கம் 11 மாடி கட்டடப் பணியில் 300 குடும்பங்கள் ஈடுபட்டிருந்ததாக கூறப்படும் நிலையில், 61 பேர் மட்டுமே உயிரிழந்ததாக தமிழக அரசு கூறியுள்ளது. இடிந்து விழுந்த கட்டிடத்தில் தரைதளம் தோண்டப்படவே இல்லை. அப்படி தோண்டிருந்தால் மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டிருக்கும். அதிகாரிகளையும், அமைச்சர்களையும் காப்பாற்றுவதற்காகவே தமிழக அரசு முயற்சி செய்கிறது. எனவே கட்டட விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று திங்கள்கிழமை, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, "மாநில நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகிக்கும் ரகுபதியிடம் இந்த விசாரணையை ஒப்படைக்க வேண்டிய அவசியம் என்ன? இதுவரை அங்கே தீர்க்கப்பட்ட வழக்குகள் எவ்வளவு? நிலுவையில் உள்ள வழக்குகள் எவ்வளவு என்பது குறித்து வரும் 28ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார்கள்

மேலும் மெள‌லிவாக்கம் கட்டிட விபத்து குறித்து விசாரிக்க ரகுபதி அவர்களை தவிர வேறு ஆள் யாருமே கிடைக்கவில்லையா என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  மேலும் இந்த கட்டிட விபத்து குறித்த விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் வரும் 28ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஜெயலலிதாவை அவமதித்தது தனது அம்மாவை அவமதித்தது போல் இருந்தது - விஜய் பேச்சு




இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணையதளமான www.defence.lk என்ற இணையதளத்தில் இந்திய இலங்கை மீனவர் இடையேயான பிரச்னை குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.. குறிப்பாக தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் அத்துமீறி நுழைந்து தாக்கப்படுவது குறித்தும், கைது செய்யப்படுவது குறித்தும் இந்திய பிரதமருக்கு தமிழக முதல் அமைச்சர் கடிதம் எழுதுவது தொடர்பாக மிகவும் இழிவுபடுத்தும் வகையில் விமர்சனங்கள் அந்த கட்டுரையின் முகப்பு பகுதியில் இடம்பெற்றிருந்தது.

நமது பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா எழுதுவது காதல் கடிதங்கள் என அந்த கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தது. இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது , இதனால் அந்த கட்டுரை அந்த இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்த கட்டுரை இலங்கை அரசின் அனுமதி இல்லாமல் வெளியிடப்பட்டு இருந்தது என அவர்கள் தெரிவித்து இருந்தார்கள். இந்த விவகாரத்திற்காக அவர்கள் மோடியிடமும் ஜெயலலிதாவிடமும் மன்னிப்பு கேட்டார்கள்.



இந்த விவகாரத்தில் தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சிகளும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்தார்கள். இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தமிழ் திரையுலகினர் இன்று ஆர்பாட்டம் செய்தனர். இலங்கை அரசு இதில் ஜெயலலிதாவிடம் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்கள்.இந்த போராட்டத்தில்  நடிகர்கள் விஜய், சூர்யா, பிரபு, சிவகுமார், பார்த்திபன், ஸ்ரீகாந்த், பாக்யராஜ், விவேக், ஜீவா, விக்ரம்பிரபு, இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் பேசிய நடிகர் விஜய், "இலங்கைத் தமிழர்களையும், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களையும் காப்பாற்ற முயற்சியெடுக்கும் தமிழக முதல்வரை கேலி செய்யுமாறு இணையதளத்தில் சித்தரித்த இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம். இது ஒட்டுமொத்த தமிழர்களையே இழிவுபடுத்தும் செயல்  ஆகும் என்றார். அது மட்டுமில்லாமல் ஜெயலலிதாவை தவறாக பேசியது தனது தாயை தவறாக பேசியது போல் இருந்ததாக கூறினார். விஜய்யின் இந்த பேச்சு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

கடந்த வாரங்களில் வெளிவந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய விஜய், ஒரு படத்தின் வெற்றியை ரசிகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் அதனை சூழ்நிலைகள் முடிவு செய்ய கூடாது. தலைவா வெற்றி பெற்று இருக்க வேண்டிய படம் ஒரு சிலரால் அது தோல்வியடைந்தது என்று அவர் மறைமுகமாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை குற்றம்சாட்டினார். ஆனால் அதில் இருந்து முற்றிலும் மாறி இப்போது பேசி உள்ளார். இப்போது இவர்கள் நடத்தியுள்ளது வெறும் கண்துடைப்பு நாடகம் தான் என அனைவருக்குமே தெரியும். இவர்கள் நடத்தும் போராட்டத்தால் ஒன்றும் ஆகபோவது இல்லை.

விஜய் திட்டினால் ஒவராக திட்டி விடுகிறார்,
விஜய் புகழ்ந்தால் ஒவராக புகழ்ந்து விடுகிறார்.

குற்றத்தை ஒப்பு கொண்டார் ஆண்டர்சன், தண்டனை வழங்கப்படுமா ??





இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்னுடன் சண்டையில் ஈடுபட்டதால் இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆட்டத்தொகையில் பாதியை அபராதமாக செலுத்த உத்தரவிட்டு உள்ளது. முதல் டெஸ்டின் 2 ஆம் நாள் ஆட்ட இடைவேளியின் போது இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண்டர்சன் கோபமாகி ஜடேஜாவை தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இந்திய அணி ஆண்டர்சன் மீது புகார் அளித்து இருந்தது. பதிலுக்கு இங்கிலாந்து அணி ஜடேஜா மீது புகார் அளித்தது. இது விசாரணையில் இருந்தது . இதில் ஜடேஜாவுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆன்டர்சன் மீதான விசாரணை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.


இந்த விவகாரத்தில் இந்திய கேப்டன் தோனி தனது மனம் திறந்த பேட்டியை அளித்து உள்ளார். இந்த தீர்ப்பு  எங்களை மிகவும் புண்படுத்தி உள்ளது என்றார். இதில் பல உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளன. ஜடேஜா எல்லைக்கோட்டு அருகே சென்று கொண்டு இருக்கும் போது ஆண்டர்சன் ஜடேஜாவை நோக்கி கெட்ட வார்த்தையில் திட்டி உள்ளார். தோனி அவரை சமாதனம் செய்து உள்ளார். எல்லாம் முடிந்து விட்டது என தோனி நினைத்த வேளையில் ஆண்டர்சன் மீண்டும் திட்டி உள்ளார். அது மட்டுமில்லாமல் ஜடேஜாவை தள்ளி விட்டு உள்ளார். இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழும் நிலைக்கு சென்று உள்ளார். இருந்தும் அவர் எதுவும் பேசவில்லை. இது எப்படி ஆக்ரோஷமான நடத்தையாகும். ஜடேஜாவின் மீது எந்த தவறும் இல்லை என்று தோனி கூறி இருந்தார்.

ஜடேஜாவுக்கு அபராதம் வழங்கியது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பான தகவல் கிரிக் இன்போ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. பிசிசிஐ வழக்கறிஞர் ஆண்டர்சன்னை குறுக்கு விசாரணை செய்தார். அப்போது ஜடேஜாவை திட்டியதையும், அவரை கீழே தள்ளியதையும், கிரிக்கெட் விதிமுறையை மீறியதையும் ஆண்டர்சன் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் ஜடேஜாவின் பல்லை உடைத்துவிடுவதாகவும் அவர் மிரட்டியுள்ளார். ஆண்டர்சன் மீதான விசாரணையின்போது அவரை குறுக்கு விசாரணை செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் ஜடேஜாவின் மேல் முறையீட்டு விசாரணையின்போது ஆண்டர்சனை குறுக்கு விசாரணை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் ஆண்டர்சன் மேற்கண்டவாறு கூறினார்” என பிசிசிஐ வழக்குரைஞர் தெரிவித்ததாக கிரிக்.இன்போவில் கூறப்பட்டுள்ளது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media