ஆண்டவனும் சரியில்லை, இப்போ ஆள்பவனும் சரியில்லை எகிப்தில் மீண்டும் வெடித்த மக்கள் புரட்சி
2011ம் ஆண்டு எகிப்தில் சர்வாதிகாரி ஹோசினி முபாரக்கை எதிர்த்து மக்கள் போராட்டம் நடைபெற்றது, தெக்ரிக் மைதானத்தில் கூடிய பொதுமக்கள் முபாரக் பதவி விலகும் வரை போராட்டத்தை விலக்கவில்லை. அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பல சலுகைகள் சம்பள உயர்வுகளை அறிவித்தும் மக்கள் அதை ஏற்கவில்லை.இதைத் தொடர்ந்து முபாரக் பதவி விலகினார். அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் மீது கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, கடந்த ஆண்டு முதன்முறையாக ஜனநாயக முறையில் அதிபர் தேர்தல் நடந்தது. மக்கள் ஓட்டு போட்டு முகமது முர்சியை அதிபராக தேர்ந்தெடுத்தனர். அவரது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர் பதவி விலக கோரியும், பொதுமக்கள் மீண்டும் போராட தொடங்கினர். கடந்த ஒரு வாரமாக தலைநகர் கெய்ரோ மற்றும் அலெக் சாண்டிரா நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. அதில் ஒரு அமெரிக்க மாணவர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர்.
புதிய அதிபராக முகமது முர்சி பதவி ஏற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. இந்தநிலையில் அவர் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் நேற்று கண்டன பேரணி நடத்தினர். அதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
அலெக்சாண்டிராவில் சுமார் 2 லட்சம் பேர் தெருக்களில் திரண்டனர். அங்கும் சகோதரத்துவ கட்சி அலுவலகங்களுக்கு தீவைக்கப்பட்டது. இதற்கிடையே, அதிபர் மாளிகையை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். எனவே, ராணுவத்தினரும் அதிபர் முர்சியின் சகோதரத்துவ கட்சியை சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேரும் காவலாக நிற்கின்றனர்.
Egypt protest against Mohamed Morsi after one year of his government, lacks of people in cairo's streets
2011ம் ஆண்டு எகிப்தில் சர்வாதிகாரி ஹோசினி முபாரக்கை எதிர்த்து மக்கள் போராட்டம் நடைபெற்றது, தெக்ரிக் மைதானத்தில் கூடிய பொதுமக்கள் முபாரக் பதவி விலகும் வரை போராட்டத்தை விலக்கவில்லை. அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பல சலுகைகள் சம்பள உயர்வுகளை அறிவித்தும் மக்கள் அதை ஏற்கவில்லை.இதைத் தொடர்ந்து முபாரக் பதவி விலகினார். அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் மீது கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, கடந்த ஆண்டு முதன்முறையாக ஜனநாயக முறையில் அதிபர் தேர்தல் நடந்தது. மக்கள் ஓட்டு போட்டு முகமது முர்சியை அதிபராக தேர்ந்தெடுத்தனர். அவரது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர் பதவி விலக கோரியும், பொதுமக்கள் மீண்டும் போராட தொடங்கினர். கடந்த ஒரு வாரமாக தலைநகர் கெய்ரோ மற்றும் அலெக் சாண்டிரா நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. அதில் ஒரு அமெரிக்க மாணவர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.ஏராளமானவர்கள்
புதிய அதிபராக முகமது முர்சி பதவி ஏற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. இந்தநிலையில் அவர் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் நேற்று கண்டன பேரணி நடத்தினர். அதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
அலெக்சாண்டிராவில் சுமார் 2 லட்சம் பேர் தெருக்களில் திரண்டனர். அங்கும் சகோதரத்துவ கட்சி அலுவலகங்களுக்கு தீவைக்கப்பட்டது. இதற்கிடையே, அதிபர் மாளிகையை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். எனவே, ராணுவத்தினரும் அதிபர் முர்சியின் சகோதரத்துவ கட்சியை சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேரும் காவலாக நிற்கின்றனர்.
Egypt protest against Mohamed Morsi after one year of his government, lacks of people in cairo's streets