BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 22 May 2013

திமுக கூட்டணியில் பாமக வருவதற்கான வாய்ப்பு இல்லை : திருமாவளவன்


திமுக கூட்டணியில் பாமக வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் மேலும் குறிப்பிட்டதாவது மரக்காணம் கலவரத்திலும் முதல்-அமைச்சரை கலைஞர் கண்டித்தது பிரச்சினையின் அடிப்படையில்தானே தவிர தேர்தல் அடிப்ப டையில் அல்ல. தேர்தலை மனதில் வைத்து பா.ம.க. இப்படிப்பட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என முதல்- அமைச்சர் கூறியுள்ளார்.

மரக்காணம் கலவரத்தில் தி.மு.க.விற்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே எந்த பிரச்சினையும் எழவில்லை. எங்கள் உறவில் எந்த கசப்பும் உருவாகவில்லை. உரசலோ, விரிசலோ ஏற்படவில்லை. இந்த பிரச்சினையை தேர்தல் அரசியலாக யாரும் கருதவில்லை.

#டக்ளஸ் அண்ணே, கடை ஓனரை சொல்ல சொல்லுங்க‌

ஊழலை பற்றி பேச பாஜக-க்கு அருகதை இல்லை: நாசா என்கிற நாராயணசாமி

இன்று புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த 15 நாள் ஸ்பெசலிட் அமைச்சர் நாசா என்கிற நாராயணசாமி பாஜக இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல் ஆகியவற்றில் காங்கிரஸ் அரசு சிக்கித் திணருவதாக கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசும் போது பாரதிய ஜனதா கட்சிக்கு ஊழலை பற்றி பேசு அருகதை இல்லை என தெரிவித்தார்.

#ஊழல்ல எங்க எக்ஸ்பீரியன்ஸ் என்ன, எங்க சாதனை என்ன, கிட்ட நெருங்க முடியுமா மற்றவர்களால், ஊழல் பற்றி பேச இவர்களுக்கு என்ன தகுதி இருக்கு சுண்டக்கா பசங்க அப்படிதான் நாசா சார்.

கீழ்பாக்கம் துப்பாக்கி விஜய்கர் கைது செய்யப்பட்டார், அவரது வீட்டில் போலிஸ் சோதனை நடைபெறுகிறது

சென்னை கீழ்பாக்கத்தில் இருக்கும் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் விஜயகர் என்ற நபர் மிரட்டலில் ஈடுபட்டுள்ளதால், அந்த குடியிருப்பு வாசிகள் பீதியில் உறைந்துள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த விஜயகர் என்ற நபர் இன்று காலை 10 மணியளவில் சாலைக்கு வந்து துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்து அவரது வீட்டுக்குள் மீண்டும் புகுந்து கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு தொடர்ந்து மிரட்டலில் ஈடுபட்டுள்ளார். தன்னைத் தானே சுட்டுக் கொல்வேன் என மிரட்டியதைத் தொடர்ந்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

ஐபிஎல் சூதாட்டத்தில் ஆரம்பித்து சினிமா வரை ஏகப்பட்ட பிரச்சினைகளை பற்றி கூறிவருகிறார், ஆனால் கடந்த 3 மாதமாக வாடகையை தரவில்லையாம்.

இது அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளிலும் நேரடி கவரேஜ்ஜாக வெளியாகிறது



கீழ்பாக்கம் துப்பாக்கி விஜய்கர் கைது செய்யப்பட்டார், அவரது வீட்டில் போலிஸ் சோதனை நடைபெறுகிறது

காலை 10 மணியிலிருந்து ஒரு துப்பாக்கியை வைத்துக்கொண்டு அலப்பறை செய்து கொண்டிருந்த விஜய்கர் கைது செய்யபட்டார். காலையிலிருந்து எல்லோரையும் டரியல் ஆக்கிய விஜய்கர் ஒரு முறை குளித்து வேறு சட்டை மாற்றியுள்ளார்.

#கீழ்பாக்கம் கேஸ்ங்கறது சரியாத்தான் இருக்கிறது.

#இவனுங்க கையில் எல்லாம் துப்பாக்கி எப்படி கிடைத்தது.

இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவரான எம்.கோபாலகிருஷ்ணனுக்கு சிபிஐ நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை



இந்தியன் வங்கி தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனை நினைவிருக்கிறதா? அவருடையை பதவியின் இறுதி காலத்தில் தமிழக பத்திரிக்கைகளில் இந்தியன் வங்கி தலைவர் கோபாலகிருஷ்ணன் கோபாலகிருஷ்ணன் என்று புகழ்ந்து தள்ளின, பல பள்ளிகளின் விழாக்கள் சமூக நல கிளப்புகள் விழாக்கள் தலைமையேற்பு என ஒரு சில மாதங்கள் எங்கும் கோபாலகிருஷ்ணன் மயம் தான். ஓய்வு பெறும் நேரத்திலேயே அவர் மீது பல குற்றச்சாட்டுகள் கிளம்பின, அதிலும் மறைந்த தலைவர் மூப்பனார் அவர்களின் ரெக்கமண்டேஷனில் கொடுத்த பல கடன்கள் திரும்பி வரவில்லை என்று பல குற்றச்சாட்டுகள் கிளம்பின.

ஓய்வு பெற்ற ப்பின் இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக எம்.கோபாலகிருஷ்ணன் பதவி வகித்த போது பல நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதில் முறைகேடாக செயல்பட்டார் என்பது புகார். அவர் மீது மொத்தம் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் அவர் விடுதலையானார்.

இந்த வழக்குகளில் ஒன்று அகிலம் கட்டுமான நிறுவனத்துக்கு ரூ1.75 கோடி கடன் கொடுத்தது. 1998ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் கோபாலகிருஷ்ணன், இந்தியன் வங்கி முன்னாள் மண்டல மேலாளர் சண்முகசுந்தரம், கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த தனசிங், ஆனந்த் பிள்ளை ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை சி.பி.ஐ முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்விமாலதி இந்த வழக்கை விசாரித்து

எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தன்சிங்குக்கு 2 ஆண்டு சிறறத் தண்டனையும் ரூ.1.75 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆனந்தப்பிள்ளை இறந்து விட்டதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

#கோபாலகிருஷ்ணனிடம் விழாக்களில் பரிசு வாங்கிய மாணவர்கள் இப்போது என்ன நினைப்பார்கள்?

Indian Bank charman M.Gopalakrishnan convicted and sentenced by chennai CBI court for one year jail
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media