BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 30 October 2013

தேவர் குருபூஜை - அமைச்சர்களின் கார் மீது கல் வீசித் தாக்குதல், சென்னையிலும் களைகட்டிய தேவர் பூஜை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை - அமைச்சர்களின் கார் மீது கல் வீசித் தாக்குதல், சென்னையிலும் களைகட்டிய தேவர் பூஜை

இன்று பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குரு பூஜை நடைபெற்றது, முந்தைய காலங்களில் அதிமுக அரசு என்பது முக்குலத்தோர் சமூகத்திற்கு இணக்கமான அரசாகவும், முக்குலத்தோர் சமூகம் அரசில் அதிகார மையம்மாகவும் செயல்பட்டு வந்தது. முதல்வர் ஜெயலலிதாவை முக்குலத்தோர் சமூகத்தில் பலரும் தமது சொந்த சகோதரியை போல ஆதரித்து வந்தனர்.

முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த உடன்பிறவா சகோதரி சசிகலா குடும்பத்தினரின்  லாபி அதிமுகவில் செல்வாக்கிழந்தனர்,  சென்ற ஆண்டு தேவர் ஜெயந்தியின் போது முக்குலத்தோர் - தலித் மக்களிடையே நடந்த கலவரத்தில் முக்குலத்தோர்கள் பலரும் கொல்லப்பட்டனர். இதையடுத்து முக்குலத்தோருக்கு அதிமுக விற்குமான இடைவெளி அதிகரித்தது, இந்த ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவுக்கு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது. 144 தடையுத்தரவும் போட்டிருந்தது.

இந்நிலையில் இன்று அமைச்சர் செல்லூர் கே. ராஜு, அமைச்சர்  சுந்தரராஜனும் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு காரில் சென்றுள்ளார். அவர்கள் சென்ற காரை மறித்து 144 தடை உத்தரவை போட்டுவிட்டு எதற்காக அஞ்சலி செலுத்த வந்தீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் அமைச்சர்களின் கார் மீது கற்கள் மற்றும் கம்புகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் அமைச்சர்களை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

வழக்கமாக தென் மாவட்டங்களிலும் பசும்பொன்னிலும் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழா இந்த ஆண்டு சென்னை, சேலம், என்று வடமாவட்டங்களிலும் புதுக்கோட்டை, திருச்சி உட்பட பல மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்றது, பல இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல கிராமங்களில் ஒரு இலட்சம் முதல் ஒன்றரை இலட்சம் ரூபாய் வரை இந்த விழாக்களுக்கு செலவழித்துள்ளனர்.

சென்னையில் நந்தனத்தில் உள்ள‌ தேவர் சிலையில் முதல்வர் ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உட்பட பல திமுக, அதிமுக பிரமுகர்கள் மாலை அணிவித்தனர், அது மட்டுமின்றி சென்னையில் முன்பெப்போதும் இல்லாதவகையில் இந்த ஆண்டு நந்தனம் தேவர் சிலைக்கு முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் பேரணியாக வந்தனர்.

தங்களுடைய செல்வாக்கை அரசுக்கும் அரசியல் கட்சிகளுக்கும்  காட்ட வேண்டும் என்ற எண்ணம் முக்குலத்தோர் சமூக மக்களிடம் உள்ளது என்பதே இம்முறை எப்போதும் இல்லாத அளவில் பல்வேறு இடங்களில் தேவர் குருபூஜை கொண்டாடப்பட்டது காண்பிக்கின்றது.

சவுதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி இளம்பெண்கள் அரைநிர்வாண போராட்டம் [video]

சவுதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி இளம்பெண்கள் அரைநிர்வாண போராட்டம்

 உலகிலேயே பெண்கள் கார் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள ஒரே நாடு சவுதி அரேபியா. சில நாட்களுக்கு முன் தடையை மீறி கார் ஓட்டியதற்காக 10 சவுதி அரேபிய பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடையை நீக்கும்படியும் நேற்று பெண்ணிய அமைப்பைச் சேர்ந்த நான்கு இளம்பெண்கள் பெர்லினில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் முன்பு கூடினர்.

பெண்களை கார் ஓட்ட அனுமதிக்க வேண்டும் என்று கோஷங்கள் இட்டபடியே தூதரகம் அருகில் வந்த அவர்கள் திடீரென தங்கள் மேலாடையை நீக்கி, அரைநிர்வாணமாக ஆக்ரோஷ கோஷங்கள் இட்டனர். அவர்க‌ளுடைய உடலில் பெண்களுக்கு எதிரான தடைகளை தகர்க்கும்படியான கோஷங்கள் பெயிண்ட்டில் எழுதப்பட்டிருந்தது. சவுதி அரேபிய தூதரகம்  முன்பு சிறிதுநேரம் கோஷங்கள் போட்டபின் அவர்கள் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டனர்.

இரட்டை இலையும், உதயசூரியனும் - அரசு காசில் வெறித்தனமாக விளம்பரம் செய்யும் அதிமுக, திமுக‌


திமுக அரசு கொண்டு வந்த காப்பீட்டு திட்டத்திற்கு "கலைஞர் காப்பீட்டு திட்டம்" என்று பெயர் சூட்டினார்கள், "கலைஞர் வீட்டு வசதி திட்டம்" என்ற ஒரு திட்டம், கலைஞர் என்ற பெயரில் இன்னும் பல திட்டங்களை கொண்டு வந்தார்கள் திமுக ஆட்சியில், பொங்கலுக்கு அளிக்கப்பட்ட பையில் உதயசூரியன் சின்னத்தை வரைந்து வைத்திருந்தார்கள், இதை விமர்சித்த போது சூரியன் இல்லாமல் பொங்கலா என்றார்கள், பொங்கலுக்கு வரையப்படும் படங்களில் முழு சூரியன் வரைவதே வழக்கம், உதயசூரியன் வரைவது வழக்கமல்ல.

ஜெயலலிதாவின் தலைமையில் அதிமுக ஆட்சி வந்தது, உடனடியாக எல்லா திட்டங்களும் "அம்மா" என்று ஆரம்பிக்கப்படுகின்றன, அம்மா கிராமவளர்ச்சி திட்டம், அம்மா மலிவு விலை சிற்றுண்டி உணவகம், அம்மா குடிநீர் திட்டம் என எல்லாம் அம்மா மயம், அது மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் இரட்டை இலை சின்னத்தை பொறித்துள்ளார்கள்.

இவர்கள் ஆரம்பிக்கும் திட்டம் எதுவும் அவர்களின் சொந்த காசிலோ அல்லது அவர்களின் கட்சி காசிலோ அல்ல, அனைத்தும் மக்களின் வரிப்பணத்தில் அரசின் சார்பில் ஆரம்பிக்கப்படும் திட்டங்கள், இதில் தொடர்ந்து இவர்களின் பட்டப்பெயர்களையும் இவர்கள் கட்சி சின்னத்தையும் விளம்பரப்படுத்துவது இவர்களின் விளம்பர வெறியை காண்பிக்கின்றது.

ஸ்மால் பஸ்களில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டிருக்கிறது என்று திமுக எதிர்ப்பு தெரிவிப்பதும், பொங்கல் பைகளில் உதயசூரியன் வரைந்துள்ளது என அதிமுக எதிர்ப்பு தெரிவித்ததும் மக்களை மறதியாளர்கள் என்று நினைத்து தானோ?

# அனைத்திற்கும் தங்கள் பெயரை சூட்டிக்கொண்டவர்கள் கலைஞர் டாஸ்மாக் என்றோ, அம்மா டாஸ்மாக் என்றோ ஏன் பெயர் வைக்கவில்லை?

மைக்ரோசாஃப்டின் உயர் பதவியில் இந்தியன்..!


உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இலவச இணையவழி தொலைத்தொடர்பு சேவையான "ஸ்கைப்"பின் துணைத்தலைவராக இந்தியாவின் சண்டிகரைச் சேர்ந்த குருதீப்சிங் பால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மைக்ரோகாஃப்ட் தெரிவித்துள்ளது.டெல்லியிலுள்ள பிட்ஸ் பிலானியில் இஞ்சினியரிங் முடித்த குருதீப்சிங், 1990ல் மைக்ரோசாஃப்ட்டில் ஒரு சாதரண பொறியாளராக சேர்ந்தவர்..!
20 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை தன்வசம் வைத்திருக்கும் குருதீப்தான் மைக்ரோசாஃப்ட்டின் துணைத்தலைவராக பதவிபெறும் முதல் இந்தியர்..!

# சிங் இஸ் கிங்..!

உயர்கிறது டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை..!

டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டரின் விலையை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட "கிரித் பரிக்" கமிட்டி, பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்பமொய்லியிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி, டீசலின் விலையை லிட்டருக்கு ரூ.5ம், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ250ம் மண்ணெண்ணயின் விலையை லிட்டருக்கு ரூ.4ம் உயர்த்த அறிவுறுத்தியுள்ளது..!
மேலும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை வருடத்திற்கு 9 லிருந்து 6ஆக குறைக்கவும் யோசனை தெரிவித்துள்ளது.
5 மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் மே2014ல் வர இருக்கும் நாடளுமன்ர தேர்தலை கருத்தில் கொண்டு விலையேற்றம் பற்றி அரசு மறுபரிசீலனை செய்யும் எனத்தெரிகிறது..!

#என்னா ப்ளானிங்கு..! 


 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media