BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 8 August 2014

பணத்துக்கும் , நிர்வாண வீடியோவுக்கும் ஆசைப்பட்டு இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானிடம் விற்ற ராணுவ வீரன்




இந்திய ராணுவத்தில் இருப்பவர் படன் குமார் பொடார் . இவர் இந்தியாவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் கடந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் இந்தியாவின் ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானை சேர்ந்த வேவு பார்க்கும் பெண்ணிடம் விற்று விட்டார். இதற்கு கைம்மாறாக அந்த பெண் இவருக்கு பணமும் , அந்த பெண்ணின் நிர்வாண வீடியோவையும் கொடுத்து உள்ளார்.

இவர் மேற்கு வங்க மாவட்டம் மல்டா மாவட்டத்தை சேர்ந்தவர் .அந்த பெண்ணின் பெயர் அனுஷ்கா அகர்வால். அந்த பெண் தன்னை  ஒரு எம்.எஸ்ஸி மாணவி என பொடாரிடம் அறிமுகம் ஆகி உள்ளார். இவர்கள் இருவரும் பேஸ்புக்கில் நண்பர்கள் ஆகி உள்ளார்கள். அனுஷ்காவின் தந்தை ஒரு என்.ஜி.ஒ. வை நடத்தி வருவதாகவும், அதற்கு இந்திய ராணுவத்தை பற்றி ஒரு சர்வே எடுத்து தருவதற்கு 10 ஆயிரத்தை பொடாரிடம் மாத சம்பளமாக வழங்கி உள்ளார்கள்.

மானம் கெட்ட அந்த ராணுவ வீரனும் இந்த வேலைகளை செய்து உள்ளான். அனுஷ்காவுடன் நெருங்கி பழக ஆரம்பித்தான். இந்திய ராணுவத்தில் உள்ள முக்கியமான 50 ஆபிஸர்களின் நம்பரை வாங்கியுள்ளாள். யாரும் கண்டுபிடித்து விடாமல் இருக்க பிராக்சியில் ஈ-மெயில்களை அனுப்ப பொடாருக்கு அனுஷ்கா கத்துக்கொடுத்து உள்ளார். அனுஷ்காவின் கட்டளை படி தனது கம்யூட்டரில் ட்ரொஜான் வைரஸை அப்லோட் செய்து உள்ளார். இதன் மூலம் அந்த கம்யூட்டரை அனுஷ்காவால் நேரடியாக இயக்க முடியும்.

இந்திய ராணுவத்தை பற்றிய சில முக்கியமான போட்டோக்களை அனுஷகாவுக்கு பொடார் அனுப்பி உள்ளார், பதிலுக்கு அவள் தனது நிர்வாண போட்டோக்களை அனுப்பி உள்ளார். இதன் மூலம் நமது பல முக்கியமான ரகசியங்கள் பாகிஸ்தானுக்கு சென்று உள்ளது. இப்போது பொடாரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

தென் கொரிய துறைமுகத்தில் அநாதையாக கடந்த இந்தியாவின் ஏவுகணை - இந்தியாவின் ஏவுகனை திட்டங்களுக்கு ஏற்பட்ட களங்கம் .



கடந்த பத்து மாதங்களுக்கு முன் , தென் கொரியாவில் நடைபெற்ற சர்வதேச விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சியில் இந்தியாவில் புதிதாக உருவாக்கப்பட்ட பரப்பு விட்டு பரப்பு தாக்கும் ஏவுகணையான பிரகதி அந்த கண்காட்சியில் வைக்கப்பட்டது .

ஆனால் அந்த ஏவுகணை கண்காட்சி முடிந்து திரும்பி வரும்போது , பாதுகாப்பில் ஏற்பட்ட ஒட்டையால் அந்த துறை முகத்திலையே பாதுகாப்பு இல்லாமல் ஒரு மாத காலம் அநாதையாக கிடந்தது .

இந்த ஏவுகணை 60-170 கிமீ சென்று தாக்கும் திறன் கொண்டது . இந்த பிரகதி அதிக சக்தி வாய்ந்த ஏவுகணை . தரைப் படைகளை எளிதாக தாக்கும் வல்லமை உடையது . போர்க்களத்தில் அருகே உள்ள தரை இலக்குகளை துல்லியமாக சென்று தாக்க வல்லது . பகல் மற்றும் இரவு என எந்த நேரத்திலும் செலுத்தி தாக்கும் திறன் வாய்ந்தது . இது பாகிஸ்தானின் ஏவுகணைக்கு போட்டியாக உருவாக்கப்பட்டது .  மேலும் இந்த ஏவுகணை ரேடாரின் கண்களில் இருந்து தப்பும் தொழில்நுட்பம் கொண்டது .

இந்த ஏவுகணை பாதுகாப்பில் நடந்த குறைப்பாடு மீது நமது அரசு விசாரனை நடத்த வேண்டும் . மேலும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் .

தோனி பற்றின் உலகின் சிறந்த வீரர்களின் புகழாரம்




இந்திய அணி கேப்டன் தோனியை பற்றி மற்ற வீரர்கள் கூறிய சில வார்த்தைகளை பார்ப்போம்.

சச்சின் : தான் விளையாடியதில் சிறந்த கேப்டன் என்றால் அது தோனி தான்.

சவுரவ் கங்குலி : நான் பார்த்ததில் சிறந்த கேப்டன் என்றால் அது தோனி தான்.

சுனில் கவாஸ்கர் : 2019 உலக கோப்பை வரை தோனி இந்தியாவை வழிநடத்தி செல்ல வேண்டும். 

கேரி கிரிஸ்டன் : தோனி தனது அணியில் இருக்க வேண்டும்  போர் செய்யவும் தயார் என்றார்.

ஸ்டீவ் வாஹ் : நான் ஒரு அணியை தேர்வு செய்ய நினைத்தால் அதில் சச்சின் தொடக்க ஆட்டகாரராகவும், தோனி கேப்டனாகவும் இருப்பார். 

மைக் ஹசி : தோனியின் தலைமையில் விளையாடுவது எனக்கு கிடைத்த பரிசு.

எச்சரிக்கை - " பேஸ்புக் கலரை மாற்றுங்கள் " என்பதை கிளிக் செய்யாதீர்கள் !! அது உங்கள் பாஸ்வேர்டை ஹேக் செய்திடும் - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்



கடந்த சில நாட்களாக பேஸ்புக்கில் , பேஸ்புக் கலரை மாற்றுங்கள் என்று இரு லிங் அனைத்து கமெண்ட்டிலும் பரவலாக காணப்பட்டது . இது பயனாளர்களின் பாஸ்வேர்டை திருட பயன்படுத்தப் படும் வைரஸ் என்று பிரபல இணையதளம் அறிவித்துள்ளது. இந்த் வைரஸ் இதுவரை 10,000 த்துக்கும் மேற்பட்ட பயனாளர்களை தாக்கி உள்ளது .

இந்த வைரஸ் முதலில் பேஸ்புக் தளத்தால் நீக்கப்பட்டது . ஆனால் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது . நீங்கள் கணினியில் இந்த லிங்கை அழுத்தினால் , கலரை மாற்ற வீடியோ ஒன்று ஓடத் தொடங்கும் . அந்த வீடியோ பார்க்கும் நேரத்தில் உங்கள் பாஸ்வேர்ட் செய்யப்பட்டு விடும் . உங்களின் நண்பர்கள் பட்டியலும் அவர்களுக்கு கிடைத்து விடும் . நீங்கள் வீடியோவை பார்க்காமல் சென்றால் உங்களை ஒரு அப்ளிகேஷன் ஒன்றை டவுன்லோட் செய்திட வலியுறுத்தும் . அதன் மூலம் உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும் .

நீங்கள் அண்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தினால் , " உங்கள் மொபைலில் வைரஸ் இருக்கிறது , அதை கிளின் செய்ய இந்த அப்ளிகேஷன் டவுன்லோட் செய்யுங்கள் " என்று வந்தால் அதுவும் வைரஸ் தான் .

தப்பிக்க என்ன வழி ??

இது போன்ற அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து இருந்தால் உடனடியாக அன்-இன்ஸ்டால் செய்து விடுங்கள் . மேலும் உங்கள் பேஸ்புக் பாஸ்வேர்டை மாற்றி விடுங்கள் .

அதிக எதிர்பார்ப்புகளுடன் இருந்த அஞ்சான் பட டிரெய்லர் வெளிவந்தது




சூர்யா, சம்ந்தா நடிப்பில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வெளிவர இருக்கும் படம் அஞ்சான். இந்த படத்தை லிங்குசாமி இயக்கியுள்ளார். இந்த படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் உள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வந்து விட்டன. இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளிவந்தது.
அதனை பார்ப்பதற்கு

http://www.youtube.com/watch?v=N9fwL7DyEJk


" மோட்டோ இ " க்கு போட்டியாக அட்டகாசமான வசதிகளுடன் அசுஸ் நிறுவனத்தின் ஜென்போன்-4 !! விலை 5,999 மட்டுமே ..



" மோட்டோ இ " என்னும் மொபைல் 6,999 ரூபாயில் நல்ல வசதிகளுடன் வெளியானது . இதனால் இந்த மொபைலை பல மக்கள் விரும்பி வாங்குகின்றனர் . பலர் இவ்வளவு குறைந்த விலையில் , இவ்வளவு அம்சங்களா என வியந்தனர் . ஆனால் இதை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் 5,999 ரூபாய்க்கு ஒரு மொபைலை வெளியிட்டுள்ளது அசுஸ் நிறுவனம் .



இந்த மொபைலின் பெயர் ஜென்போன் - 4 . இந்த சிரியஸில் மேலும் இரண்டு மொபைல்கள் உள்ளது ( ஜென்போன் - 5 , ஜென்போன் - 6 )



ஜென்போன் - 4 வசதிகள்

4 இன்ச் திரை கொண்டது . ஒரு ஜிபி ராம் . 1.2 ஜிகா ஹெர்ட்ஸ் பிராசசர் . அவர்கள் 8 ஜிபி மெமரியைக் கொடுக்கிறார்கள் . மேலும் 64 ஜிபி வரை நீட்டித்துக் கொள்ளலாம் . 5 எம் கேமரா உள்ளது . முன் கேமரா சாதாரண விஜியே கேமரா . மோட்டோ இ மொபைலில் முன் கேமரா கிடையாது .

இரண்டு மொபைல்களிலும் கிட்டத்தட்ட ஒரே வசதிகள் இருப்பதால் எந்த மொபைலை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது வாங்குபவர்களின் விருப்பம் தான் . 

மகளை கற்பழித்து , 4 மாத கர்ப்பிணி ஆக்கி, கொலை செய்த கொடூர தந்தை




குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் புருஸ்வெல்ட், இவருக்கு 48 வயது ஆகிறது. இவர் ஒரு ராணுவ வீரர். இவருக்கு திருமணமாகி ஷெர்லி ஜாஸ்மின் என்று 17 வயது பெண் உள்ளது. இவரது மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். புரூஸ்வெல்ட் ராணுவத்தில் இருப்பதால் ஷெர்லி தனது அத்தை வீட்டில் தங்கி படித்து வந்தார். பின்னர் புரூஸ்வெல்ட் ராணுவ வேலையை விட்டுவிட்டு சொந்த ஊர் திரும்பியதும் ஐடா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்தார். அவர்களுக்கு குழந்தை இல்லாததால், ஷெர்லி ஜாஸ்மினை தன்னுடன் அழைத்து வந்து படிக்கவைத்தார்.

அவர் பிளஸ்-1 முடித்து பிளஸ்-2 வகுப்பு செல்ல இருந்த நிலையில் ஷெர்லி ஜாஸ்மின் 29-5-2010 அன்று அவரது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 6½ பவுன் நகைகள், ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. இதுதொடர்பாக புரூஸ்வெல்ட் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்தன. ஷெர்லி சாகும் போது 4 மாதம் கர்ப்பமாக இருந்து உள்ளார். எனவே இது திருடும் போது நடந்த கொலை இல்லை என போலீஸுக்கு தோன்றியது.

அவர்கள் பார்வை புரூஸ்வெல்ட் பக்கம் திரும்பியது. அவரை விசாரித்ததில் அவர் குற்றத்தை ஒப்பு கொண்டார். அவர் தான் தனது மகளை பல முறை அனுபவித்து உள்ளார். அதனால் ஷெர்லி கர்ப்பமாகி உள்ளார். அதனை கலைப்பதற்கு முயற்சி செய்து உள்ளார். அது முடியாததால் ஷெர்லியை கொன்று விட்டு, திருடன் ஒருவன் கொலை செய்தது போல் செட்அப் செய்து விட்டார். ஷெர்லியின் வயிற்றில் இருந்த கருவுக்கு அவரது தந்தை தான் காரணம் என டி.என்.ஏ. டெஸ்டில் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. புரூஸ்வெல்ட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 27 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதமும் விதித்து, இந்த தண்டனைகளை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு எழுதப்பட்டு உள்ளது.

வாட்ஸ்அப் அப்ளிகேஷனால் எஸ்.எம்.எஸ் அடிவாங்கியதால் , வாட்ஸ்அப் பயன்பாட்டை தடுக்க வழிகளை மேற்கொள்ள உள்ளது டிராய் அமைப்பு !!



இப்போது அனைவரிடமும் ஒரு ஆண்ட்ராய்ட் மொபைல் உள்ளது . அந்த மொபைலில் அனைவரும் வாட்ஸ்அப் என்னும் இலவச அப்ளிகேஷனை பயன்படுத்துகின்றனர் . இதன் மூலம் இலவசமாக செய்தி அனுப்ப முடியும் . வாட்ஸ் அப் வருகையால் , ஒரு சில ஆண்டுகளாக உலகை ஆண்டு வந்த எஸ்.எம்.எஸ் பெரும் அடி வாங்கியது . வாட்ஸ் அப் எந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறது என்பதற்கான உதாரணம் :

முந்தி எஸ்.எம்.எஸ் இலவசமாக அனுப்ப எஸ்.எம்.எஸ் பேக் போட வேண்டும் . ஆனால் இப்போ வாட்ஸ்அப் பிற்கு மட்டும் தனியே  வாட்ஸ்அப் பேக் என்று தனியே ஒன்று வந்துள்ளது . பலர் எஸ்.எம்.எஸ் என்று ஒன்று இருப்பதை மறந்து விட்டனர் .

எனவே வாட்ஸ்அப் , வி சாட் , வைபர் போன்ற அப்ளிகேஷன்களால் மொபைல் நிறுவனங்களுக்கு பலத்த அடி விழுந்துள்ளது . இப்போது அடுத்தவர்க்கு கால் செய்வதைக் கூட சிலர் நிறுத்திவிட்டனர் . எனவே இந்த இழப்பை ஈடுசெய்ய தொலைதொடர்பை கவனித்து வரும் டிராய் புதிய வழி ஒன்றை கண்டு பிடித்துள்ளது .

அதன் மூலம்  வாட்ஸ்அப் , வைபர் போன்ற அப்ளிகேஷன் உருவாக்கிய நிறுவனம் மொபைல் நிறுவனங்களிடம் கனெக்டிவிட்டி சார்ஜ் ஒன்றை வழங்கிட வேண்டும் . மேலும் கிடைக்கும் வருவாயை அரசிற்கு ஒரு பங்கு அளிக்க வேண்டும் .

அதிவேக சதம் அடித்து சாதனை புரிந்த போதும் , அணியால் வெல்ல முடியவில்லை




கரிபியன் பிரிமீயர் லீக்கில் அதிவேக சதத்தை ஆண்டிகுவா ஹாபில்ஸ் அணியின் சாமுவல்ஸ் அடித்தார். அவர் 50 பந்துகளில் சதம் அடித்தார் . இது புதிய சாதனை ஆகும். அவர் தனிநபராக சாதனை செய்த போதும் அணியால் வெல்ல முடியவில்லை. அவர் கயானா வாரியர்ஸ் அணிக்கு எதிராக இந்த சாதனையை செய்தார். முதலில் விளையாடிய வாரியர்ஸ் அணி 20 ஒவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆண்டிகுவா அணி 20 ஒவர்களில் 3  விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 

இந்திய கிரிக்கெட் அணியை கலாய்த்து வந்த ஜோக்ஸ் போட்டோக்கள்


இந்திய அணி இங்கிலாந்தில் மோசமாக ஆடி வருகிறது. அதனை கலாய்த்து நேற்று பேஸ்புக்கில் வந்த போட்டோக்கள் இங்கு உள்ளன.
















சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட மகளை 10 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்த பெற்றோர்கள் !!



நாம் அனைவராலும் எளிதில் மறக்க முடியாத சம்பவம் 2004 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமி . அந்த சம்பவத்தில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் . பலர் தங்களுடைய குடும்பத்தை தொலைத்த சோகத்தில் இருந்தனர் . அதே போல தனது மகளை இழந்து விட்டதாக நினைத்த பெற்றோர்க்கு பத்து ஆண்டுகளுக்கு பின் தன்னுடைய மகள் கிடைத்த அதிசயம் இந்தோனேஷியாவில் நடந்து உள்ளது .

ஜமாலியா என்பவரின் மகள் ஜன்னா . இவர்கள் 2004 ஆம் ஆண்டு சுனாமி வந்த போது சுமத்ரா தீவின் மேற்கு பகுதிகளில் வசித்து வந்தனர் . அந்த தீவில் வசித்த பல ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர் . ஆனால் ஜமாலியா மற்றும் அவரது கணவர் தப்பித்தனர் . தங்களுடைய மகள் ஜமாலியா மற்றும் அவர்களின் மகன் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டனர் . பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவர்கள் இறந்து விட்டனர் எனக் கருதி மிகவும் வருந்தினர் .

ஆனால் ஜமாலியாவின் சகோதரர் ஒரு கிராமத்தில் ஜன்னா போன்ற தோற்றமுடைய சிறுமி ஒருவரைப் பார்த்தார் . பின்னர் அவரை அழைத்து விசாரித்ததில் அவர் தான் ஜன்னா என்பது உறுதியானது . சுனாமி அடித்த அவரை ஒரு மீனவர் காப்பாற்றி வளர்த்துள்ளார் . இதனால் ஜன்னாவின் பெற்றோர் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

ஜன்னா மகிழ்ச்சியாக தன் பெற்றோருடன் சென்றார் .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media