BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 3 August 2013

இந்திய தூதரக வாயிலில் மனித வெடிகுண்டு தாக்குதல் - ஆப்கானில் 10 பேர் பலி, 20 பேர் காயம்

இந்திய  தூதரக வாயிலில் மனித வெடிகுண்டு தாக்குதல் - ஆப்கானில் 10 பேர் பலி, 20 பேர் காயம்

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஜலால்பாத் என்ற இடத்தில் இன்று காலை 10 மணிக்கு இந்திய தூதரகத்தின் வாயிலில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் பலியானார்கள், 20 பேர் காயமடைந்தனர், இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாருக்கும் பாதிப்பில்லை, பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அருகிலிருந்து மசூதிக்கு வந்தவர்கள், இறந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்.

அமெரிக்கா சில நாட்களுக்கு முன் அல்-கொய்தா தாக்குதல் குறித்து எச்சரித்த உடனே இது நடந்துள்ளது, ஆப்கானிஸ்தானில் இந்திய அரசு இடங்களை குறிவைத்து தாக்குவது முன்பே நடந்துள்ளது.

பெரும் முதலாளிகளின் கோடிக்கணக்கான கடனை தள்ளுபடி செய்யும் அரசு கல்விகடனை ஏன் தள்ளுபடி செய்ய கூடாது? திருமாவளவன் காட்டம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் அக்கடன் தொகையை திருப்பிச் செலுத்தவில்லை என்று பாரத ஸ்டேட் வங்கியினர் அம்மாணவர்களின் புகைப்படங்களை விளம்பரத் தட்டிகளில் அச்சிட்டு பொது இடங்களில் வைத்துள்ளது குறித்து விடுதலை சிறுத்தகைகள் தலைவர் வெளியிட்ட அறிக்கையில் இந்த செயல் மிகவும் அருவறுப்பானதும் கடும் கண்டனத்துக்குரியதுமாகும் என்றார்.

இது அம்மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் செயல் என்றவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது அரசு உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெரும் முதலாளிகள், கோடிக் கணக்கில் வங்கிகளுக்குத் திருப்பிச்செலுத்தாதபோது, அவற்றை வாராக்கடன்களாக அறிவித்து அவற்றை முழுமையாக அல்லது சலுகை அடிப்படையில் தள்ளுபடி செய்யும் இந்திய அரசு மாணவர்களின் கல்விக் கடன்களை ஏன் தள்ளுபடி செய்யக்கூடாது என்று கோரியுள்ளார்.

# சூப்பர் சார், நீங்கள் ஒருவராவது இது குறித்து கண்டனம் தெரிவித்தீரே!

எனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் - இயக்குனர் சேரனின் உருக்கமான பேட்டி, யார் இந்த சந்த்ரு?

எனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் - இயக்குனர் சேரனின் உருக்கமான பேட்டி, யார் இந்த சந்த்ரு?

தான் காதலுக்கு எதிரானவன் அல்ல என்றும், தான் ஏழை பணக்காரன், சாதி மத வித்தியாசம் பார்ப்பவனில்லை என்றும் ஒரு  தந்தையாக எனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என்றும், அதேப்போன்று ஒரு மாமனாராக எனக்கு மருமகனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என நான் எதிர்பார்ப்பதில் என்ன தவறு உள்ளது? நியாயமானதுதானே...? என்றும் மிக உருக்கமாக இன்று பத்திரிக்கையாளர்களிடம் பேசினார் இயக்குனர் சேரன்.

தனது மகள் காதலை முதலில் தான் எதிர்க்கவில்லை என்றும் மகளுக்கு சில வாரங்களுக்கு முன் உடல்நிலை பாதிப்படைந்த போது தனது மகள் சேரனிடம் அவரது காதலர் சந்துரு மிரட்டுவதாக கூறியதாகவும் பிடிக்கவில்லை என்றால் அந்த பையனை விட்டுவிடு என்று கூறினாராம், மேலும் 10 நாட்களுக்கு முன் கமிஷனரிடம் தனது மகள் தாமினியை அவரது காதலன் சந்துரு மிரட்டுவதாக புகார் அளித்ததாகவும் இடையில் தனது மகளை மூளைச்சலவை செய்து தனக்கு எதிராக புகார் அளிக்க வைத்துள்ளதாகவும் இயக்குனர் சேரன் கூறியுள்ளார்.

இயக்குனர் சேரனின் இரண்டாவது மகள் தாமினி தான் சந்துரு என்ற உதவி இயக்குனரை காதலிப்பதாகவும் அவர்கள் காதலை மறுத்த சேரன் சந்துருவை கொலை செய்ய முயன்றதாகவும் நேற்று போலிஸ் கமிஷன‌ர் அலுவலகத்தில் புகார் அளித்தார், சேரன் சில நாட்களுக்கு முன் போலிஸ் கமிஷனரை சந்தித்து விட்டு வந்த போது நிருபர்கள் அவரிடம் கேட்டதற்கு சொந்த விஷயமாக கமிஷனரை சந்தித்ததாகவும் புகார் எதுவும் அளிக்கவில்லை என்றும் கூறியவர் தற்போது சந்துரு மீது புகார் அளித்ததாக கூறியுள்ளார்.

சந்துரு என்பவர் சென்னை சூளை மேட்டில் வசிப்பவர், திரைத்துரையில் உதவி இயக்குனராகவும் டான்சராகவும் உள்ளார், இவர் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனம் ஆடி ஒரு சீசனில் முதல் பரிசை வென்றவர். சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.

சந்துருவின் அப்பா திரைத்துரையில் சில காலம் வேலை பார்த்தவர். இவரது அம்மா பத்மா ஆந்திராவை சேர்ந்தவர். சந்துருவின் அப்பா, அம்மாவும் திரைத்துறையில் இருந்த பழக்கத்தால் கலப்பு மணம் செய்து கொண்டனர். சந்துருவின் அக்கா கவுரி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய அதிமுக சீனிக்கட்டியின் மைத்துனர் முகம்மது இலியாஸை திருமணம் செய்து கொண்டார்.

இதற்கிடையில் நேற்றிலிருந்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் சேரன் மற்றும் சேரனுக்கு ஆதரவாக இயக்குனர்கள் அமீர், பாலா, சமுத்ரகனி உட்பட பல இயக்குனர்களும் காவல்துறையுடன் பஞ்சாயத்தில் ஈடுபட்டுள்ளனர். உரிய நேரத்தில் தானே திருமணம் செய்துவைப்பதாக சேரன் கூறியும் சேரனின் மகளோ பிடிவாதமாக சேரனுடன் செல்ல மறுத்துவிட்டார், சேரனுக்கு பல இயக்குனர்கள் துணையிருந்தாலும் சந்த்ருவுக்கோ யாரும் ஆதரவாக இல்லை, மீடியா உன்னிப்பாக இந்த கேசை கவனித்து வருவது மட்டுமே சந்த்ருவின் ஒரே ஆறுதல்.

சாதிக்கு எதிராகவும் காதலுக்கும் ஆதரவாகவும் படம் எடுப்பது மட்டுமின்றி மைக் கிடைத்தால் போட்டு தாக்கும் அனைத்து டைரக்டர்களும் ஒரு காதலை பிரிக்க ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் பஞ்சாயத்து செய்வதை பார்க்கும் போது உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னியா என்று கேட்க தோன்றுகிறது.

# சேரன் சார் ஒவ்வொரு பெண்ணை பெற்ற தகப்பனுக்கும் இதே எதிர்பார்ப்பு உண்டு என்பது , காதல் புனிதமானது, காதலுக்கு கண்ணில்லை, காதல் சாதி, மதம், ஏழை பணக்காரன் வித்யாசம் பார்க்காது என்று சினிமாவில் காட்டுவதும் நீயா? நானா? போன்ற ஷோக்களில் ஷோ காட்டும் போது ஏன் உங்களை போன்றோர்களுக்கு புரியவில்லை?

தெலுங்கானாவில் அரசு வேலை செய்யும் ஆந்திரர்கள் வேலையை விட்டு ஆந்திரா செல்ல வேண்டும் - சந்திரசேகர ராவ் அறிவிப்பு

தெலுங்கானாவில் அரசு வேலை செய்யும் ஆந்திரர்கள் வேலையை விட்டு ஆந்திரா செல்ல வேண்டும் - சந்திரசேகர ராவ் அறிவிப்பு

தெலுங்கானாவில் அரசு வேலை செய்யும் ஆந்திரர்களில் சட்டத்துக்கு புறம்பாக வேலை பெற்றவர்கள் தெலுங்கானாவை விட்டு வெளியேற வேண்டும் என்று டிஆரெஸ் கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார், 1985ல் பிறப்பிக்கப்பட்ட ஜிஓ 610 என அழைக்கப்படும் அரசு ஆணை தெலுங்கானா பகுதியில் ஆந்திராவின் 59,000 அரசு ஊழியர்கள் உள்ளூர் தெலுங்கானா மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசுவேலையில் உள்ளார்கள் என்று தெரிவித்தது, அதைக்குறிப்பிட்டு சந்திரசேகர ராவ் இந்த அறிவிப்பை முன்னெடுத்துள்ளது.

சந்திரசேகரராவ்வின் இந்த அறிவிப்பு தெலுங்கானா மற்றும் ஆந்திர மக்களுக்கு இடையே பிளவை உண்டாக்கும் செயல் என பலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.

# ராவ் சார், தெலுங்கானா-ஆந்திரா வை சேர்ந்த கணவன் - மனைவி எல்லாம் டைவர்ஸ் வாங்கனும்னு அடுத்து கேட்பிங்களோ?

சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை, அல்கொய்தா தாக்குதல் நடத்த கூடும் என அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்க சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை, அல்கொய்தா தாக்குதல் நடத்த கூடும் என அமெரிக்கா அறிவிப்பு

உலகம் முழுதும் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க பயணிகள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கும் படி அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது, மத்திய கிழக்கு ஆசியா, வட ஆப்ரிக்கா கண்டங்களில் அல்கொய்தா செயல்பட்டு வருவதால் அந்த இடங்களில் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கர்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்கும் படி அமெரிக்கா எச்சரித்துள்ளது.

# அமெரிக்காவிலாவது அமெரிக்கர்கள் அல்கொய்தாவுக்கு பயப்படாமல் இருக்கலாமா சாம் சார்

காரைக்கால் மீனவர்களை தாக்கிய இந்திய கடற்படையினர்

காரைக்கால் மீனவர்களை தாக்கிய இந்திய கடற்படையினர்

வழக்கமாக இலங்கை கடற்படை தான் தமிழக மீனவர்களை தாக்கும், நேற்று காரைக்கால் மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலை சேர்ந்த 45 மீனவர்கள் நேற்று காலை 11 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். திருமலைராயன்பட்டினம் அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இந்திய கடலோர காவல்படையினர் மீனவர்களைத் தாக்கியதாக தெரிகிறது. மேலும், துப்பாக்கி காட்டியும் மிரட்டி உள்ளனர். அதோடு, மீனவர்களின் வலையை இந்திய கடலோர காவல் படையினர் அறுத்து எறிந்துள்ளனர். 

# தமிழ் மீனவர்கள் என்றால் இலங்கை மட்டுமல்ல இந்திய கடற்படையும் தாக்குகிறதென்றால் தமிழர்கள் எல்லாம் இந்தியர்கள் இல்லையா?
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media