BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 4 August 2013

ஜிம்பாப்வே அதிபர் தேர்தலில் ராபர்ட் முகாபே 7வது முறையாக வென்றதாக அறிவிப்பு.

ஜிம்பாப்வே அதிபர் தேர்தலில் ராபர்ட் முகாபே 7வது முறையாக வென்றதாக அறிவிப்பு.

கடந்த 33 ஆண்டுகளாக ஜிம்பாப்வே ஆண்டு வரும் ராபர்ட் முகாபே சமீபத்தில் நடந்த தேர்தலில் மீண்டும் வென்றதாக ஜிம்பாப்வே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, இதன் மூலம் 89 வயதான ராபர்ட் முகாபே மீண்டும் 5 ஆண்டுகளுக்கு ஆளும் வாய்ப்புள்ளது, ஆனால் இந்த முடிவுகளை ஏற்க மறுப்பதாக எதிர்கட்சி அறிவித்துள்ளது, இதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

# எங்க ஊரிலும் 90வயசு தாத்தா ஒருவர் இருக்கிறார்

தெலுங்கானாவின் முதல் முதலமைச்சர் ஒரு தலித் ஆக இருப்பார் - சந்திரசேகர ராவ் மேலும் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்

தெலுங்கானாவின் முதல் முதலமைச்சர் ஒரு தலித் ஆக இருப்பார் - சந்திரசேகர ராவ் மேலும் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்

தெலுங்கானா மாநிலம் உருவாக்கத்திற்கு சமீப காலங்களில் முக்கிய காரணமாக இருப்பவர் டிஆர்எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் நடத்திய போராட்டங்கள், இன்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேசிஆர் என்கிற சந்திரசேகர ராவ் தான் முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்றும் தனது கட்சி தேர்தலில் வென்றால் ஒரு தலித்தை முதல்வர் ஆக்குவோம் என்றார், மேலும் தெலுங்கானாவில் பிசி, எஸ்சி மைனாரிட்டிகள் அனைவரும் 85% ஆக உள்ளார்கள் என்று குறிப்பிட்ட கேசிஆர் கல்வி வேலை வாய்ப்புகளில் 12% இடஒதுக்கீடு மைனாரிட்டிகளுக்கு  வழங்கப்படும் என்றும் அது தெலுங்கானாவில் அவர்களின் மக்கள் தொகை அளவு என்றும் குறிப்பிட்டார்.

காங்கிரஸூடன் தனது கட்சியை இணைப்பது தொடர்பான எந்த கேள்விக்கும் பதிலளிக்க மறுத்த கேசிஆர் தெலுங்கானா மாநில பிரிப்பு சட்டம் பாராளுமன்றத்தில் வெற்றி பெறுமா என்று சந்தேகத்தை எழுப்பினார், பெண்கள் மசோதா போல இதை முடக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறினார்.

# டிரான்ஸ்போர்ட் மினிஸ்டர் கிடைக்கலைன்னு தானே நீங்கள் நாயுடு கட்சியிலிருந்து விலகி டிஆர்எஸ் கட்சி ஆரம்பித்தவர் பேசுறாருங்க.

ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் பந்துவீச்சில் முதலிடம் பிடித்தார் ரவீந்திர ஜடேஜா

ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் பந்துவீச்சில் முதலிடம் பிடித்தார் ரவீந்திர ஜடேஜா

ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் பேட்டிங்கில் டாப்பில் வருவார்கள் ஆனால் பொதுவாக பவுலிங்கில் பின் தங்கியே இருப்பார்கள் இந்திய அணி வீரர்கள், ஐசிசி தரவரிசையில் பந்துவீச்சில் 733 புள்ளிகளுடன் முதலிடத்தை மேற்கிந்திய தீவுகள் அணி சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேனுடன் பகிர்ந்துள்ளார். 1996ம் ஆண்டு அனில் கும்ப்ளேவுக்குப் பின் ஜடேஜா இந்த இடத்தை பிடித்துள்ளார்.

இந்த ஆண்டின் அனைத்து தொடர்களிலும் சிறப்பாக பந்துவீசினார், ஜிம்பாப்வே தொடரில் அதிக விக்கெட்கள் கிடைக்கவில்லையென்றாலும் ஜடேஜா சிறப்பாக கண்ட்ரோலாக பந்து வீசி அதிக ரன்கள் கொடுக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

# வாழ்த்துவோம் ரவீந்திர ஜடேஜாவை

ஐஏஎஸ் அதிகாரி துர்கா சஸ்பெண்ட், , உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக வாக்களிப்போம் என மிரட்டல்


ஐஏஎஸ் அதிகாரி துர்கா சஸ்பெண்ட் குறித்து சோனியா பிரதமருக்கு எழுதிய கடிதம் குறித்து சமாஜ்வாடி கட்சி அதிருப்தி, உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக வாக்களிப்போம் என மிரட்டல்

உத்திரபிரதேசத்தில் மணல் மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுத்ததால் பழிவாங்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி துர்கா சக்தி நாக்பால் மீது அதிகார துஷ்பிரயோக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து உறுதி செய்யுமாறு பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம் எழுதினார். இது மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாகும் என்று கண்டனம் செய்த சமாஜ்வாடி கட்சி இப்படி செய்தால் நாங்கள் உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக வாக்களிப்போம் என்று சமாஜ்வாடி கட்சித்தலைவர்களி ஒருவரான நரேஷ் அகர்வால் மிரட்டியுள்ளார்.

சமாஜ்வாடி கட்சிக்கு 22 எம்பிகள் உள்ளனர், மைனாரிட்டி காங்கிரஸ் அரசுக்கு இந்த எம்பிகளின் ஆதரவு உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற முக்கியமான தேவையாக உள்ளது.

# கரெக்டு கரெக்டு மெரட்டு மெரட்டு

சேரன் மகள் காதல் விவகாரம். அடுத்தடுத்த திருப்பங்கள், காதல் என்ற பெயரில் பணம் பறிக்க முயற்சி என சேரன் பேட்டி, பாமக ராமதாஸ் சேரனுக்கு ஆதரவு, சேரனின் மகளின் காதலர் சந்த்ரு கைது?

சேரன் மகள் காதல் விவகாரம். அடுத்தடுத்த திருப்பங்கள், காதல் என்ற பெயரில் பணம் பறிக்க முயற்சி என  சேரன் பேட்டி, பாமக ராமதாஸ் சேரனுக்கு ஆதரவு, சேரனின் மகளின் காதலர் சந்த்ரு கைது கைது செய்ய வாய்ப்பு.

சேரனின் மகள் தாமினியை டான்சர் சந்துரு திட்டமிட்டு காதலித்ததாகவும் இயக்குனர் சேரனின் படத்தில் சந்த்ருவை ஹீரோவாக நடிக்க வைக்க தன் மகள் மூலமாக சந்த்ரு வற்புறுத்தியதாகவும் இயக்குனர் சேரன் பேட்டி அளித்துள்ளார்.

சேரன் தன் மனைவியை பத்திரிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி பேசிய போது தான் சாதாரண குடும்பத்திலிருந்தே வந்ததாகவும் தன் மனைவியை காதல் திருமணம் செய்திருப்பதாகவும் தாங்கள் காதலுக்கு எதிரி அல்ல என்றும் தொடக்கத்தில் தன் மகள் சந்த்ருவை காதலிப்பதாக கூறிய போது மூன்றாண்டுகள் காத்திருங்கள், படித்து முடித்த பின் நாங்களே திருமணம் செய்து வைக்கிறோம் என்றோம் சந்த்ருவை பற்றி விசாரித்த போது சந்த்ருவுக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு உள்ளது என்று தெரிந்தது. சில நாட்களுக்கு முன் மகளுக்கு ஹை பிளட் பிரஷர் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்த்திருந்தோம், அப்போது சந்த்ரு தன் மகளை மிரட்டுவதாக தெரிந்தது இது குறித்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இயக்குனர் எழில் படத்தில் சந்த்ருவை ஹீரோவாக நடிக்க வைக்க தாமினி தன்னிடம் வற்புறுத்தியதாகவும் தாமினியை பயன்படுத்தி திரை உலகில் ஒரு இடத்தை பிடிக்கவும் சொத்துக்களை கைப்பற்றவும் திட்டமிட்டதாக சந்த்ரு மீது புகார் வாசித்தார். மேலும் தன் மகள் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரத்தில் சந்த்ரு பல பெண்களுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததாகவும் மூன்று பெண்கள் சந்த்ரு மீது புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

என் மூத்த மகளிடமும் ‘‘ஐ லவ் யூ’’ என்று பேஸ்புக்கில் கூறியுள்ளான். 7, 8 பெண்களுடன் அவன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்க தயார். நடத்தைகள் மோசம், பொருளாதாரத்திலும் திருப்தி இல்லை. பெண்களுடன் தகாத தொடர்பு. இதையெல்லாம் பார்த்த பிறகு ஒரு அப்பனால் எப்படி மகளை கட்டிக் கொடுக்க முடியும். அதுமட்டு மல்ல என் மகளிடம் உன் அப்பா படத்தில் நான் கதாநாயகனாக நடிக்க ஏற்பாடு செய் என்று கூறியுள்ளான்.

இது குறித்து கூறிய அவரது பெண்ணோ தன் தந்தை நிறைய வெள்ளை பேப்பர்களில் கையெழுத்து வாங்கியதாகவும் அதை வைத்து புகார் அளித்திருக்கலாம் என்றார்.

 டாக்டர் ராமதாஸ் ஒரு தகப்பனாக சேரனின் உணர்வுகள் புரிகின்றது, சேரனை ஆதரிக்கிறோம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார், மேலும் இது அப்பட்டமான ஒரு நாடக காதல் என்றும் சேரனின் மகள் மேஜர் என்றாலும் அந்த பெண்ணை பெண்ணின் விருபத்துக்காக காதலனுடன் அனுப்பாமல் கவுன்சிலிங் கொடுத்து காப்பகத்துக்கு அனுப்பியிருக்கும் மாநகர காவல்துறை பொறுப்புடன் செயல்பட்டுள்ளதாகவும் இது போன்ற பொறுப்புடன் தர்மபுரியில் திவ்யாவிற்கும் செய்திருந்தால் திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டிருந்திருக்க மாட்டார் என்றும் கூறினார்.

21 வயதுக்கு முன் திருமணம் செய்பவர்கள் பெற்றோர் ஒப்புதல் வேண்டும் என்பதை சட்டமாக்க வேண்டும் என்று கோருகிறார் ராமதாஸ்.

இந்நிலையில் சேரனின் மகளை காதலிக்கும் சந்த்ரு மீது எஃப் ஐ ஆர் போடப்பட்டு கைது செய்யப்படும் நிலை காணப்பட்டது, கைது மேலும் பல சச்சரவுகளை உருவாக்கும் நிலையில் உள்ளதால் கைது தள்ளிப்போடப்பட்டுள்ளது, நாளை சமரசம் ஏற்படவில்லையென்றால் கைதாக வாய்ப்புள்ளது

ஹேப்பி ஃப்ரெண்ட்ஷிப் டே - திமுக தலைவர் கருணாநிதி டைம்லைன் அப்டேட்

இன்று உலகெங்கும் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.. 1958ல் முதன்முதலாக அறிவிக்கப்பட்ட இந்த நாள் தென் அமெரிக்கா நாடுகளிலும் குறிப்பாக பாராகுவே நாடுகளில் அதற்கு முன்பே பல காலமாக கொண்டாடப்படுகிறது.

1930ல் ஹால் மாக் க்ரீட்டிங் கார்டு கம்பெனியால் ஆரம்பிக்கப்பட்டு பரப்பப்பட்ட இது நண்பர்களுக்குள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சோஷியல் நெர்வொர்க்கிங் உள்ள இக்காலத்தில் இன்று ஃபேஸ்புக் முழுவதும் நட்பு ஸ்டேட்டஸ்களால் நிரம்பி வழியும் இதற்கு திமுக தலைவர் கருணாநிதி  மட்டும் விதிவிலக்கா என்ன? அவரும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவரது நீண்ட கால நண்பர் அன்பழகனை சந்தித்த படத்தை போட்டுள்ளார்.

# # குத்துனவன் நண்பனா இருந்தா வெளிய சொல்லக்கூடாது, ஹேப்பி ஃபிரெண்ட்ஷிப் டே

சத்தம் போட்டு சாய்பாபா கோவிலில் 12 பவுன் நகையை ஆட்டைய போட்ட திருடர்கள்

சத்தம் போட்டு சாய்பாபா கோவிலில் 12 பவுன் நகையை ஆட்டைய போட்ட திருடர்கள்

சென்னை தாம்பரம் கெளரிவாக்கத்தில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவார்கள், வெள்ளியன்று ஒருவர் கோவிலில் மொபைல் போனில் சத்தமாக பேசியுள்ளார், இதனால் சில பக்தர்கள் வாக்குவாதம் செய்ய கூட்டத்தின் மொத்த கவனமும் அதில் போன நேரத்தில் சாய்பாபா சிலையில் 12 பவுன் நகையை திருடிக்கொண்டு ஓடிவிட்டார்கள், இதில் 3 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களின் அடையாளம் தெரியவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

# என்னா டெக்னிக்கா திருடறானுங்கப்பா, புதுசு புதுசா, தினுசு தினுசா திருடறானுங்கய்யா!

அடுத்த தலைநகர் வாய்ப்பு விஜயவாடாவில் எகிறும் ரியல் எஸ்டேட்

அடுத்த தலைநகர் வாய்ப்பு விஜயவாடாவில் எகிறும் ரியல் எஸ்டேட்

தெலுங்கான பிரிப்பு உறுதியாகியுள்ள நிலையில் 10 ஆண்டுகள் மட்டும் ஹைதராபாத் இரண்டு மாநிலங்களுக்கும் தலைநகராக இருக்கும், பின் சீமாந்திரா தனக்கென ஒரு தலைநகரை தேடிக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் ஹைதராபாத்துக்கு அடுத்த படியாக விசாகபட்டினமும் விஜயவாடாவும் தலைநகருக்கான போட்டியில் உள்ளன.

விசாகபட்டினம் இரண்டாவது பெரிய நகராக இருந்தாலும் விஜயவாடா கடலோர ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ளது புவியல் ரீதியாகவும், அம்மாநிலத்தில் உள்ள தொழில் முதலீடுகள், உள்கட்டமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் மையமாக இருப்பதும் அதிக அளவிலான என்.ஆர்.ஐக்கள் முதலீடு உள்ளதாலும் விஜயவாடா தலைநகராக வாய்ப்பு அதிகமாக உள்ளது.

சீமாந்திர மக்கள் ஹைதராபாத் விவகாரத்தில் தாங்கள் தோற்பதாக உணர்கிறார்கள். மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவரும் உழைப்பையும், பணத்தையும் ஹைதராபாத்தில் முதலீடு செய்துள்ள நிலையில் ஹைதராபாத்தை எப்படி தெலுங்கானாவுக்கு மட்டும் விட்டுத்தரமுடியும் என்கிறார்கள்.

விஜயவாடாவுக்கு அடுத்த தலைநகருக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளா நிலையில் விஜயவாடாவில் ரியல் எஸ்டேட் மார்க்கெட் கடந்த சில நாட்களில் ராக்கெட் வேகத்தில் எகிறுகின்றது.

தெலுங்கான பிரிப்புக்கு, சீமாந்திரா காங்கிரஸ் தலைவர்கள் ஓகே ஆனால்

தெலுங்கானாவை ஆந்திரமாநிலத்திலிருந்து பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திர பகுதியான சீமாந்திரா  காங்கிரஸ் தலைவர்கள் தெலுங்கான பிரிப்புக்கு சம்மத்தித்துள்ளனர், ஆனால் ஹைதராபாத்தை நிரந்தரமாக யூனியன் பிரதேசமாகவும் சீமாந்திரா, தெலுங்கான என இரு மாநிலங்களுக்குமான தலைநகரமாகவும் கொள்ள வேண்டும் என்பதற்கு ஒத்துக்கொண்டால் தெலுங்கான பிரிப்புக்கு சம்மதம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்கள்.

அனைவரும் ராஜினாமா செய்வது என்பது மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி வர தான் வகை செய்யும் ஆனால் பதவியில் இருந்து கொண்டே போராடுவோம் என்கிறார் மாநில முதல்வர் கிரன்குமார் ரெட்டி.

# இத்தனை வருசமா அரசியல்வாதிகள், பணக்காரர்கள், நடிகர்கள் எல்லாம் எவ்வளவோ முதலீடு ஹைதராபாத் ரியல் எஸ்டேட்டில்  போட்டிருக்கோம், திடீர்னு விட சொன்னா விடமுடியுமா? அப்படி தானே கிரன்குமார் ரெட்டி சார்

ஜிம்பாப்வேயை வென்றது இந்தியா 5-0 என்று தொடர் வெற்றி

கடைசி ஒரு நாள் போட்டியிலும் ஜிம்பாப்வேயை வென்றது இந்தியா  5-0 என்று தொடர் வெற்றி

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் ஜிம்பாப்வேவை பேட்டிங் செய்ய பணித்தது, ஜிம்பாப்வே அணி 39.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 163 ரன்களை மட்டுமே எடுத்து. பின்பு பேட் செய்த இந்திய அணி 34.0 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 167 ரன்கள் அடித்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

விராட் கோலி தலைமையில் இந்த தொடரை முழுவதுமாக வென்று ஜிம்பாப்வேவை வாஷ் அவுட் ஆக்கியது கேப்டனாக கோலியை நிலை நிறுத்தும் வாய்ப்புள்ளது, இது குறித்து கோலி கூறுகையில் முதல் இரண்டு ஆட்டங்கள் ஜிம்பாப்வே அணி கடும் போட்டியை தந்தது, ஆனால் கடைசி மூன்று ஆட்டங்களும் அணியினரின் உழைப்பால் இந்திய அணியின் கை ஓங்கி இருந்தது என்றார்.

ஆறு விக்கெட்களை வீழ்த்திய அமித் மிஷ்ரா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

# புள்ள பூச்சியை போட்டு இந்த அடி அடிச்சிட்டிங்களே!

காதல் பஞ்சாயத்து - இயக்குனர் சேரன் மகள் தாமினி அரசு காப்பகத்துக்கு அனுப்பப்பட்டார்

காதல் பஞ்சாயத்து - இயக்குனர் சேரன் மகள் தாமினி அரசு காப்பகத்துக்கு அனுப்பப்பட்டார்.

இரண்டு நாட்களாக தமிழகத்தின் முரட்டு காதலை காண்பித்த பருத்திவீரன் அமீர், காதலித்தவர்கள் அவர்களாக பிரிந்தாலே தூக்குடா அவங்களை என்று காதலை வளர்த்த நாடோடிகள் படம் தந்த சமுத்திரகனி, நான் இப்போ என்ன செய்ய என்று பஞ்சாயத்துக்கு வந்த சீமான் என கோலிவுட்டின் அனைத்து காதல் இயக்குனர்களும் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் சேரன் வீட்டு காதல் பஞ்சாயத்தில் சொம்பை தூக்கிக்கொண்டு வந்து பஞ்சாயத்து செய்த போதும் சேரன் மகள் தாமினி, தான் தந்தை சேரனுடன் செல்ல விரும்பவில்லை என்றும் தான் மேஜர் என்பதால் காதலன் சந்துருவுடன் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டார்.


மேஜர் ஆன பெண் வேறு யாரேனும் இப்படி கேட்டிருந்தால் காதலனுடன் அனுப்பி வைக்கும் காவல்துறையோ சேரன் மகள் தாமினியின் கோரிக்கையை மறுத்து அவரை அரசு காப்பகத்திற்கு அனுப்பியுள்ளது.

இந்த காதலை எதிர்க்கும் சேரன் ஆரம்பத்திலிருந்தே பத்திரிக்கைகளிடமும் மற்றவர்களிடமும் தான் சாதி பார்க்கவில்லை, ஏழை பணக்காரன் பார்க்கவில்லை ஆனால் பையன் கேரக்டர் சரியில்லை என்று கூறுகிறார், ஆனால் தாமினி தரப்பு சொல்வது என்னவென்றால் தங்கள் காதலை சேரன் ஒத்துக்கொள்ளாமல் இருப்பதற்கு பணம் அந்தஸ்த்து வித்தியாசம் முக்கிய காரணம் என்கிறார். பணம் இருந்தா அவன் நல்லவன் ஆயிரம் தப்பு தெரிஞ்சி பண்ணாலும், பணம் இல்லைனா அவன் கெட்டவன் ஒரு தப்பு தெரியாம பண்ணாலும்,, எப்போ இந்த விதி மாறுமோ  என்று கூறுகிறார் தாமினி.

நவம்பர் மாதம் 2011ல் வெளிப்படையாக தாமினி-சந்த்ரு காதல் தெரிய ஆரம்பித்தது சில நாட்களுக்கு முன் சந்த்ருவை கோடம்பாக்கம் பெட்ரோல் பங்க் அருகில் ஓடவிட்டு தட்டியதால் பெரிதாகி தற்போது வெடித்துள்ளது.

இந்நிலையில் சந்த்ரு மீது வேறு பெண்கள் யாரேனும் விரைவில் ஏதேனும் புகார் அளிக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

# படம் காட்டும் காதல் இயக்குனர்கள் எல்லாம் நிஜத்தில் காதலுக்கு வில்லன்கள் தான் போல‌
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media