BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 30 April 2014

திக் விஜய் சிங் காதல் ????



காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் டிவி தொகுப்பாளர் அம்ரிதா ராயுடன் உள்ள தொடர்பை ஒப்புக்கொண்டார் !!!

புதன்கிழமை திக்விஜய் சிங்  மற்றும் அம்ரிதா ராய் சேர்ந்து இருப்பது போன்ற படங்கள் இணையத்தில் வந்தது . அதை இன்று டிவிட்டரில் ஒப்புக்கொண்டார் திக்விஜய் சிங் . டிவிட்டரில் வெளியிட்ட செய்தியில் எங்கள் இருவருக்கும் உள்ள தொடர்பை ஒத்துக்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை . அவர் அவருடைய கணவரின் இருந்து விவகாரத்து பெற உள்ளார் என குறிப்பிட்டு இருந்தார் . இதை ஆமோதித்து அம்ரிதாவும் டிவிட் செய்துள்ளார் .

திக்விஜய் சிங் 67 வயது தனது மனைவியை சென்ற வருடம் இழந்தார் . அம்ரிதா ராய் 43 வயது கணவரிடம் விவாகரத்து கேட்டு உள்ளார் . 

கலிபோர்னியாவில் டிரைவர் இல்லாமல் தானாகேவே இயங்கும் டாக்சிகள் சோதனை ஓட்டம்


டிரைவரே இல்லாமல் தானாகவே இயங்கும் ரோபோ டாக்சிகளை உருவாக்க கூகிள் நிறுவனம் திட்டமிட்டிருந்த‌து. அந்த டாக்சிகள் டிரைவர் இல்லாமல் பயணிகளை ஏற்றிச் சென்று குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடும் திறன் படைத்தவை. அதற்காக காரில் கேமராக்கள், ரேடார்கள் போன்ற  தொழில் நுட்பங்களை தனது சொந்த நிறுவனம் மூலம் கூகுள் பொருத்தியுள்ளது. இந்த கார்களால் சாலை விபத்துகள் மிகவும் குறைவாக இருக்கும். சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது. போக்குவரத்து துறையையே இக்கார்கள் அடியோடு மாற்றிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த கார்கள் தயாரிக்கும் பணிகள் முடிவடைந்து, தற்போது, அமெரிக்காவின் கலிபோர்னியா சாலைகளில் சோதனை ஒட்டம் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக, தானியங்கி தொழில்நுட்பத்தை மட்டும் நம்பாமல், அசம்பாவித சூழ்நிலைகளை கையாள்வதற்கு ஏற்ற வகையில் காரின் முன் இருக்கையில் தேர்ச்சி பெற்ற ஒரு டிரைவரும் அமர்ந்து செல்கிறார்.

வெகு விரைவில், மனிதர்களின் தலையீடே இல்லாமல், முற்றிலும் தானியங்கி தொழில்நுட்பத்தின் மூலம் இந்த கார்கள் இயங்கக் கூடிய சாதனை குறியீட்டை எட்டி விடுவோம் என்று இந்த அதிநவீன கார் தயாரிப்பின் திட்ட இயக்குனர் க்ரிஸ் அர்ம்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2017-ம் ஆண்டுக்குள் அனைத்து வகையான சோதனை கட்டங்களும் நிறைவடைந்து, இந்த டிரைவர் இல்லா கார்கள் தனிப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவைக்கு விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே, "அதிமுக வெற்றி" என பேனர் வைப்பு; அச்சகத்திற்கு சீல், 4 பேர் கைது


காஞ்சிபுரம் காந்தி சாலையில் காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் 1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியிட்டு திங்கள்கிழமை டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டது. அதில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. வாக்கு எண்ணிக்கைக்கு ஏறக்குறைய 20 நாட்கள் உள்ள நிலையில், வெற்றி பேனர் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புகாரின்பேரில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் பானு தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்று 4 பேனர்களை பறிமுதல் செய்தனர். அதை ஏற்றி வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பேனர் வைத்த அதிமுக கவுன்சிலர் பரிமளம் மீது விஷ்ணுகாஞ்சி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய டிஜிட்டல் பேனரை அச்சிட்ட நிறுவனம் காஞ்சிபுரம் மடத்து தெருவில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. செவ்வாய்க்கிழமை அங்கு போலீஸாருடன் சென்ற வட்டாட்சியர் பானு, டிஜிட்டல் பேனர் அச்சிட்ட நிறுவனத்துக்கு சீல் வைத்தார். நிறுவனத்தில் இருந்த உரிமையாளர் கோபிநாத், அவரது உதவியாளர் எத்திராஜ் ஆகியோரை போலீஸாரிடம் ஒப்படைத்தார். பின்னர் டிஜிட்டல் பேனர்களை ஏற்றி வந்த வாகனத்தின் உரிமையாளர் சண்முகம், அந்த வாகனத்தின் ஓட்டுநர் வெங்கடேஷ் உள்பட அவர்கள் 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

கேரள மாநிலத்தின் வழியில், தமிழக அரசும் மதுவிலக்கை துணிச்சலாக நடைமுறைப்படுத்த வேண்டும்: ராமதாஸ்


 மதுவிலக்கை அமல்படுத்த கேரள மாநிலம் வழியில் தமிழக அரசு துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி, மாநிலத்தில் உள்ள 752 மதுக் குடிப்பகங்களில் 418 குடிப்பகங்களை அதிரடியாக மூட வைத்துள்ளார். தாய்மார்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து குடிப்பகங்களை மூட உத்தரவிட்டதற்காக முதல்வர் உம்மன்சாண்டிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரத்தில் தமிழகத்தின் நிலையை நினைத்தால் வேதனையும், வருத்தமும் தான் விஞ்சுகிறது. மதுவால் தமிழகம் எதிர்கொண்ட சீரழிவுகள் ஏராளம்.

சாலை விபத்துக்களின் எண்ணிக்கையில் முதலிடம், சாலை விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் முதலிடம், குடியால் இறந்த கணவர்களால் உருவான இளம் விதவைகளின் எண்ணிக்கையில் முதலிடம் என எத்தனையோ அவமானச் சின்னங்களை தமிழகம் சுமந்து கொண்டிருந்தாலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இலக்கு வைத்து மது விற்பனை செய்வதில் தான் தமிழக ஆட்சியாளர்கள் தீவிரம் காட்டுகின்றனர்.

மது வருமானத்தில் தான் இலவசத் திட்டங்களை செயல்படுத்தி மக்களின் வாக்குகளை வாங்க முடியும் என்ற கீழ்த்தரமான எண்ணம் இதற்கு ஒரு காரணமென்றால், அ.தி.மு.க. ஆண்டாலும், தி.மு.க. ஆண்டாலும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களே மது ஆலைகளை நடத்தி கோடிக்கணக்கில் லாபம் பார்க்கத் துடிப்பது இன்னொரு காரணம் ஆகும்.

கேரள அரசுக்கு கடந்த ஆண்டு வரி மூலம் கிடைத்த மொத்த வருவாய் ரூ.35,542 கோடி. இதில் மது விற்பனை மூலம் கிடைத்த வருவாய் மட்டும் ரூ.9300 கோடி. அதாவது நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகம். மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால் கடும் நிதி நெருக்கடி ஏற்படும் எனத் தெரிந்தும், முழுமையான மதுவிலக்கின் முதல் கட்டமாக குடிப்பகங்களை கேரள அரசு மூடியிருக்கிறது.

ஆனால், தமிழக அரசோ கடந்த ஆண்டு கிடைத்த ரூ. 23,401 கோடி வருவாய் போதாதென்று, நடப்பாண்டில் ரூ.26,292 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்து தெருக்கள் தோறும் கடைகளைத் திறந்து மது விற்பனை செய்து வருகிறது. மக்கள் நலனில் இரு மாநில அரசுகளுக்குமான வித்தியாசம் இதுதான்.

மது விற்று, மக்களை சீரழிப்பதன் மூலம் வருவாய் ஈட்டுவது மன்னிக்க முடியாத பாவம் என்பதை தமிழக அரசு இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும். மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் கேரள அரசு காட்டியதைவிட அதிக துணிச்சலை தமிழக அரசு காட்ட வேண்டும்.

தமிழ்நாட்டில் அடுத்த 6 மாதங்களில் முழுமையான மது விலக்கு ஏற்படுத்தப்படும் என்பதை கொள்கை முடிவாக அறிவித்து, மாதத்திற்கு 20 விழுக்காடு கடைகள் வீதம் மூடுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்."

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

மோடியின் பேச்சு கோபத்தை தூண்டும் வகையில் உள்ளது, கண்டிக்கத்தக்கது- பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் காட்டம்


சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி,"உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தாவூத் இப்ராஹிமுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்காமல், ஊடகங்களில் அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்த வேண்டும். மேலும், அமெரிக்க அரசு பின் லேடனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதா? இந்த அரசு முதிர்ச்சி இல்லாமல் செயல்படுகிறது. நான் பிரதமரானால் பாகிஸ்தானிலிருந்து தாவூத் இப்ராஹிமை இந்தியாவுக்கு கொண்டு வருவேன்" என்று கூறினார்.

இந்நிலையில் இது குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நிசார் அலி கான் கூறுகையில், "மோடி முதலில் தாவூத் எங்கு இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். தொடர்ச்சியாக அவரது பேச்சு கோபத்தை தூண்டும் வகையில் உள்ளது. மோடியின் பேச்சு கண்டிப்புக்குரியதாகவே இருக்கிறது. இந்தியாவின் முக்கிய கட்சியின் பிரதமர் வேட்பாளர் இனியும் ஒருமுறை பாகிஸ்தானை விரோதத்தின் உச்சமாக பாவித்து பேசுவது கண்டிக்கதக்கது. பாகிஸ்தானில் அமைதி நிலவ வேண்டும் என்ற முயற்சியில் நாங்கள் மேற்கொள்ளும் செயல்களை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். பாகிஸ்தான் ஒரு போதும் இம்மாதிரியான கருத்துக்களை வரவேற்காது. பாகிஸ்தான் பலவீனமான நாடும் அல்ல, இத்தகைய அச்சுறுத்தல்கள் எங்களை பயப்படவும் வைக்காது.” என்று தெரிவித்துள்ளார்.

சீரஞ்சீவி வரிசையில் நிற்க தவறியதால் , கண்டித்த இளைஞர் , பணிந்தார் சீரஞ்சீவி


இன்று ஆந்திராவில் ஏழாம் கட்ட தேர்தல் நடந்து வருகிறது . அப்போது  நடிகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சீரஞ்சீவி தனது குடும்பத்துடன் வாக்களிக்க வந்தார் . அப்போது அவர் வரிசையில் நிற்காமல் முன்னே செல்ல முயற்சித்தார்  . அப்போது ராஜ கார்த்திக் என்னும் இளைஞர் அவரை தடுத்து நிறுத்தி , " நீங்கள் அமைச்சர் தான் , மூத்த குடிமகன் இல்லை , எனவே வரிசையில் வரவும் எனக் கூறினார் . இதை அருகில் இருந்து பார்த்த மக்கள் கைத்தட்டி தங்கள் ஆதரவை தெரிவித்தனர் . இதனால் சீரஞ்சீவி பின்னே சென்று வரிசையில் நின்றார் .

சீரஞ்சீவி பின்னே அளித்த பேட்டியில் தான் தன்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என பார்க்க சென்றதாக கூறினார் 

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனுக்கு மாழ்பழம் வழங்கி நூதன போராட்டம்: ஐரோப்பிய யூனியன் தடைக்கு எதிர்ப்பு


இந்தியாவில் இருந்து இறக்கு மதி செய்யப்பட்ட பழங்கள், காய்கறிகள் பெட்டிகளில் பூச்சிகள் இருந்ததாகவும்,  பூச்சிக் கொல்லி மருந்தும் பயன்படுத்தப்பட் டிருந்ததாகவும் ஐரோப்பிய யூனியன் குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து இந்தியாவில் இருந்து அல்போன்ஸா மாம்பழம் இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. வியாழக்கிழமைமுதல் இந்த தடை அமலுக்கு வருகிறது.

இதைக் கண்டித்து பிரிட்டனின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எம்.பி. கெயித் வாஸ் தலைமையில் பிரதமர் டேவிட் கேமரூன் இல்லத்துக்குச் சென்ற இந்திய வியாபாரிகள் 2 பெட்டிகளில் அல்போன்ஸா மாம்பழங்களை வழங்கி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

"அத்வானியின் தொகுதியில் வாக்களிப்பதை மிகப்பெரிய ஆசியாக கருதுகிறேன்" - காந்திநகரில் ஓட்டளித்த மோடி


நாடு முழுவதும் 89 மக்களவைத் தொகுதிகளிலும், தெலங்கானா சட்டமன்றத் தொகுதியிலும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் இன்று காலை 9 மணியளவில் பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி தனது வாக்கை பதிவு செய்தார்.

வாக்களித்தது குறித்து தனது ட்விட்டர் வலைப்பக்கத்தில், "அத்வானியின் தொகுதியில் வாக்களிப்பதை மிகப்பெரிய ஆசியாக கருதுகிறேன்" என பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மோடி பேசியதாவது:

"மத்தியில் பாஜக நிலையான ஆட்சி அமைக்கும். இந்த தேர்தல் நாட்டின் விதியை மாற்றி அமைக்கும். தாய் - மகன் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்துவிட்டது. தேச நலனுக்கு அச்சுறுத்தலாக உள்ள அனைத்து கேடுகளையும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அகற்றும். நான் தேசத்துக்கு உள்ள அச்சுறுத்தலை போக்க நினைக்கிறேன் ஆனால் காங்கிரஸ் கட்சி என்னை அகற்றுவதில் மட்டுமே குறியாக இருக்கிறது. குஜராத் மக்களுக்கு நன்மை செய்துள்ளது போல் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்பதே என் லட்சியம். அதற்காகவே தேர்தலில் வாக்களித்துள்ளேன்" என்றார்.

ரஜினியில் அடுத்த படம் லிங்கா; மே 3-ல் படப்பிடிப்பு தொடங்க திட்டம்


கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்துக்கு 'லிங்கா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகைகள் அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் ஏ. ஆர்.ரஹ்மான். கோச்சடையான்' படம் மே 9-ல் வெளியாகவுள்ள நிலையில், மே 2-ல் லிங்கா படத்துக்கான பூஜையை நடத்தி, மே 3-ல் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

லிங்கா படத்தின் கதை, வசனம் பொறுப்பை பொன். குமரன் ஏற்று இருக்கிறார். பிரியாமணி நடிப்பில் வெளியான 'சாருலதா' படத்தினை இயக்கியவர் பொன். குமரன் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலைப் படையினரால் நரேந்திர மோடிக்கு ஆபத்து

நரேந்திர மோடிக்கு தற்கொலைப் படையினரால் ஆபத்து உள்ளது, அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று விஷ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) தலைவர் அசோக் சிங்கால், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மத்திய உள்துறை அமைப்புகள் நரேந்திர மோடியின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக அரசுக்கு தகவல்கள் அளித்துள்ளன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதுபோல் இந்தத் தாக்குதல் இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்திய முஜாகிதீன், பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ, நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிம் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகள் சதித் திட்டங்களை தீட்டியுள்ளனர். தாவூத் இப்ராகிமை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வருவதாக மோடி அண்மையில் பேசினார். அதன் பிறகு தீவிரவாதிகளின் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளதாகத் தெரிகிறது.

நீண்ட காலமாக நமது நாட்டின் மிகப்பெரிய சவாலாக தீவிரவாதம் உள்ளது. இதை அரசு புரிந்துகொண்டு தீவிரவாத அமைப்புகளை செயலிழக்கச் செய்து அதன் முழு இயக்கத்தையும் கூண்டோடு ஒழிக்க வேண்டும். இதன் முக்கிய தலைவர்கள் மற்றும் தீவிரவாதிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி மோடியின் பாதுகாப்புக்கு வழிவகை செய்ய வேண்டும்.

நரேந்திர மோடி தொடர்ந்து பல ஆண்டுகளாக தீவிரவாதிகள் குறிவைத்துள்ள பட்டியலில் இருந்து வருகிறார். அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த ஆண்டு பாட்னாவில் நடைபெற்ற மோடியின் பிரச்சாரக் கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.

இந்திய முஜாகிதீன் தீவிரவாதக் குழுவின் தலைவர் யாசின் பட்கல், ‘மோடியை கொல்வதற்காக எதையும் செய்வோம். எவ்வளவு வேண்டுமானாலும் கொடுப்போம்’ எனக் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் தீவிரவாதியான மவுலானா மசூத் அசார், ‘மோடி பிரதமரானால் அவரைக் கொல்வோம்’ என அறிவித்து அதற்காக தற்கொலைப் படையினருக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

எனவே இதுகுறித்து நாட்டின் மிகவும் உயரிய அலுவலகமான குடியரசுத் தலைவரிடம் முறையிட்டுள்ளோம். மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் மூலமாக நரேந்திர மோடியின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ப.சிதம்பரத்துக்கு எதிரான தேர்தல் வழக்கு 5 ஆண்டுகளாகியும் முடிவுக்கு வரவில்லை


கடந்த 2009-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பல தொகுதிகளில் வேட்பாளரின் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டன. இதில் ப.சிதம்பரத்துக்கு எதிரான வழக்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ப.சிதம்பரத்தின் 5 ஆண்டுகால மக்களவை உறுப்பினர் பதவியும் விரைவில் முடியப் போகிறது. எனினும் அவரது வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்னும் முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டிருக்கிறது.

2009 தேர்தலில் சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன்தான், இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். தேர்தலில் பல முறைகேடுகளை செய்தே ப.சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளதாகவும், ஆகவே அவரது வெற்றியை செல்லாது என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கண்ணப்பன் கோரியுள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுவரை 140 தடவைக்கும் மேல் விசாரணைக்காக வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் தேர்தல் வழக்கை, 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 86(7)-வது பிரிவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், 5 ஆண்டுகள் முடிந்த பிறகும் பல தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வராமல் உள்ளன.

ப.சிதம்பரத்துக்கு எதிரான தேர்தல் வழக்கு நீண்டு கொண்டே செல்வதற்கான காரணம் குறித்து அவரது தரப்பு வழக்கறிஞர் ஆர்.தனபால் ராஜ் கூறுகையில், ‘‘வழக்கைத் தொடர்ந்த மனுதாரர் தரப்பிலேயே பலமுறை வாய்தா வாங்குவது தாமதத்துக்கு முக்கிய காரணம் என்றார்.

ராஜ கண்ணப்பன் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் ஜி.சரவணகுமாரிடம் கேட்டபோது, “நாங்கள் தேவையற்று வாய்தா வாங்குவதில்லை. எங்கள் மனுவில் கூறியிருந்த குற்றச்சாட்டுகளை நிராகரிக்க வேண்டும் என்று கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை முடியவே 2 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அதன் பிறகுதான் பிரதான மனு மீது விசாரணை தொடங்கியது. ராஜ கண்ணப்பன் 40 தடவைக்கும் மேல் விசாரணையில் ஆஜராகியுள்ளார். ஆகவே, தாமதத்துக்கு நாங்கள்தான் காரணம் என கூறுவது சரியல்ல” என்றார்.

“ஆண்டுக் கணக்கில் வழக்கு நீண்டு கொண்டே செல்வதற்கு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மாறி மாறி வாய்தா வாங்குவதுதான் பிரதான காரணம்” என்கிறார் இந்திய தேர்தல் ஆணையத்துக்காக சென்னை உயர் நீதிமன்ற வழக்குகளில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன்.

இன்று ஏழாம் கட்ட தேர்தல் !!

இன்று நடைபெறும் 7 வது கட்ட வாவாக்குப்பதிவில் ஒன்பது மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது .

ஆந்திராவில் 17 தொகுதிகளிலும் , பீகார் 7 தொகுதிகளிலும் , குஜராத்தில் 26 தொகுதிகளிலும் ,  காஷ்மீரில் ஒரு தொகுதியிலும் , பஞ்சாபின் 13 தொகுதிகளிலும் , உ.பி யில் 14 தொகுதிகளிலும் , மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளிலும் , டாமன் டையூ
மற்றும் தாதர் நகர் ஷாவேலி ஆகிய இடங்களில் தலா ஒரு தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது .

இன்றைய தேர்தலில் பங்குபெறும் விஐபி :

அத்வானி - காந்தி நகர்
சோனியா - ரேபரேலி
மோடி       - வதோதரா
ராஜ்நாத் சிங் - லக்னோ
உமாபாரதி - ஜான்சி
சந்திர சேகர ராவ் - மேடக்


இன்று தெலுங்கானாவில் முதல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media