BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 26 June 2014

மோடியின் புதிய அரசு ஒரு மாதத்தைக் கடந்தது !!


புதிதாக பொறுப்பேற்ற மோடி தலைமையிலான மத்திய அரசு இன்றோடு ஒரு மாதம் நிறைவடைகிறது . ஒரு மாதம் முடிந்ததையடுத்து , தனது இணையத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் .

அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ள முக்கிய விஷயங்களை கீழ்க் காணலாம் .

கடந்த 67 வருடங்களாக நடந்து வந்த ஆட்சியை எங்களின் ஒரு மாத ஆட்சியுடன் ஒப்பிட முடியாது . ஆனால் கடந்த ஒரு மாதத்தில் எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரும் மக்களின் நலனை கருத்தில் கொண்டே ஒவ்வொரு நொடியும் செயல்பட்டனர் . நாங்கள் எடுத்த ஒவ்வொரு முடிவும் மக்கள் தேசத்தின் நலனுக்காகவே இருந்தது .

முந்தைய அரசு , ஆட்சிக்கு வந்தவுடன் ஹனிமூன் போன்று 100 நாட்கள் செலவளித்தனர் . ஆனால் எங்களுக்கு அது போன்ற ஹனிமூன் காலம் கிடைக்கவில்லை . அவர்களுக்கு 100 நாட்கள் ஹணிமூனில் இருந்தனர் , ஆனால் எங்களுக்கு 100 மணி நேரம் கூட கிடைக்கவில்லை . ஆனால் இது எங்களுக்கு பெரிதாக தெரியவில்லை . தேசத்தின் நலனுக்காக பாடுபடுவதே எனக்கு மனநிறைவு கிடைக்கிறது .

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார் .

மோசடி வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு கோர்ட்டில் ஆஜராக சம்மன்!!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராஜிவ் காந்தியை நேஷ்னல் ஹெரால்ட் வழக்கில் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உள்ளூர் நீதிமன்றம் சம்மன் பிறப்பித்துள்ளது .

இந்த வழக்கை பாஜகவின் தலைவர்களுல் ஒருவரான சுப்பிரமணியன் சாமி தொடுத்து இருந்தார் . இப்போது செயல் இழந்துள்ள தினசரி பத்திரிக்கையான நேஷனல் ஹெரால்ட் என்னும் பத்திரிக்கையின் உரிமத்தை பெற ஏமாற்றி நிதி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்தார் .

இந்த வழக்கில் தொடர்புடையவர்களான சோனியா காந்தி , ராஜிவ் காந்தி , ஆஸ்கர் பெர்ணாண்டஸ் , சாம் பிட்டோர்டா , மோதி லால் வோஹ்ரா , சுமன் டுபே ஆகியோர் ஆகஸ்ட் 7 ஆம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது !!!

நேஷ்னல் ஹெரால்ட் பத்திரிக்கை 1938 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் தொடங்கப்பட்டது . 2008 ஆம் ஆண்டு மூடப்பட்டது .

டிவிட்டரை வாங்க முயன்ற பேஸ்புக் : சோகத்தில் முடிந்தது !!



சமூக வலைதளங்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது டிவிட்டரும் ,பேஸ்புக்கும் தான். இதில் அதிக நபர்கள் பயன்படுத்துவது பேஸ்புக்கை தான், ஆனால் பிரபலங்கள் அதிகம் பயன்படுத்துவது டிவிட்டரை தான். நமது நாட்டு மோடியில் இருந்து ஷகிரா வரை பிரபலங்கள் தங்கள் கருத்துகளை சொல்ல அதிகம் பயன்படுத்துவது டிவிட்டரை தான். இந்த டிவிட்டரை வாங்க பேஸ்புக் முன்வந்தது என்னும் அதிர்ச்சிக்குள்ளான தகவல் வெளிவந்து உள்ளது. பேஸ்புக் நிறுவனம் இப்போது தான் வாட்ஸ் அப்பை வாங்கியது.


டிவிட்டரை வாங்குவதற்காக அதன் உரிமையாளர்களை அணுகி உள்ளார் பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் . அதன் விலை 500 மில்லியன் டாலர் என்று கூறி உள்ளார்கள் .அதிகம் விலை சொன்னால் வாங்க மாட்டார்கள் என்று இவ்வளவு கூறினார்கள். ஆனால் பேஸ்புக் அடுத்த நாலே வங்க ரெடி என்றது . இதனை கண்டு டிவிட்டர் நிறுவனம் அதிர்ச்சியானது. பிறகு இப்போது தான் இது வளர்ந்து வருகிறது என்று கூறி விற்க மறுத்து விட்டார்கள். இந்த தகவலை டிவிட்டர் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டோன் இந்த தகவலை கூறி உள்ளார்.


இணையதளத்தை பயன்படுத்தும் அனைவரையும் தனது கட்டுபாட்டில் வைத்து இருக்க பேஸ்புக் நிறுவனம் முயன்று வருகிறது. ஆனால் இது ஆரோக்கியமானது அல்ல.   

சுகாதார தூதராக நியமனம் செய்யப்பட்டார் பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் !!





பாலிவுட் திரையுலகில் சிறந்த நடிகையாக இருந்தவர் மாதுரி தீட்சித் . இவர் இப்போது மத்திய பிரேதச அரசின் சுகாதார தூதராக நியமனம் செய்யபட்டு உள்ளார். இதனை அந்த மாநில அரசு கூறியது. இவர் ஒரு நடிகையாக மட்டும் இல்லாமல் சுகாதாரத்தை தூய்மையாக வைது இருக்க கண்டிப்பாக உதவுவார் என்று எதிர்பார்க்கலாம்.




இவர் இதற்கு முன்பே என்.டி. டிவி யில் சுற்றுசூழலை பாதுகாப்பது தொடர்பாக ஒரு நிகழ்ச்சியில் இருந்து உள்ளார். அது தான் சுற்றுசூழலை பாதுகாப்பது தொடர்பாக டிவியில் வந்த முதல் நிகழ்ச்சி. இதற்க்கு நல்ல வரவேற்பு இருந்தது. அவருக்கு பிடித்த விலங்கு யானை ,அவற்றை காப்பதற்காக ஒரு அமைப்பில் செயல்பட்டு வந்தார் . 

கத்தி படத்தில் விஜய் இரு வேடம் : வருகிறார் கதிரேசன் ,ஜீவானந்தமாக !!





துப்பாக்கி பட வெற்றிக்கு பிறகு விஜய் ,எ.ஆர்.முருகதாஸ் இணையும் கூட்டணி  'கத்தி' . இந்த படம் மிகுந்த எதிர்பார்புகளுடன் இருக்கிறது. ஏனென்றால் முன்பு அவர்கள் இணைந்த துப்பாக்கி திரைப்படம் மிக பெரிய வெற்றி படம் ஆனது. இதில் விஜய்க்கு இரு வேடங்கள் என்று கூறப்பட்டு வந்தது . ஆனால் அது உண்மையா என்று தெரியாமலே இருந்து வந்தது. இன்று முருகதாஸ் அதனை உறுதி செய்தார். விஜய் இரு வேடங்களில் நடிக்கிறார் . அந்த கதாபத்திரங்களின் பெயர்கள் கதிரேசன் மற்றும் சுசீந்திரன் ஆகும். இது கேங்ஸ்டர் கதை இல்லை என்றும் கூறி உள்ளார். அது மட்டுமல்லாமல்  அந்த இரு வேடங்கள் அப்பா மகன் வேடங்கள் இல்லை என்றும் கூறினார்.




அழகிய தமிழ் மகன் படத்திற்கு பிறகு விஜய் இந்த படத்தில் இரு வேடங்களிள் நடிக்கிறார். இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

வருகிறது கூகுளின் குறைந்த விலை ஸ்மார்ட் போன் : பயத்தில் மற்ற கம்பெனிகள் !!




கூகுள் நிறுவனம் குறைந்த விலை ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்ய்ய உள்ளது . இந்த போன்கள் 5 அங்குலத்திற்கு சிறிது கம்மியாக இருக்கும். இவை ஆண்டிராய்டு தளத்தில் இயங்க கூடியவை . இதன் விலை 6000 ரூபாயாக இருக்கலாம் . இந்த போன்கள்  இந்த ஆண்டு இறுதியில் வர காத்து கொண்டு இருக்கிறது. இவர்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகளை குறி வைத்து இதனை அறிமுக படுத்த இருக்கிறார்கள்.


இந்த செய்தி பல நிறுவனங்களுக்கு பீதியை கிள்ப்பி உள்ளது. ஏனென்றால் கூகுல் நிறுவந்த்தின் தாயரிப்புகள் எல்லாமே தரமானவையாக இருக்கும். அதுவும் இல்லாமல் இது குறைந்த விலையில் இருப்பதால் அனைவரையும் கவர கூடியதாக இருக்கும்.



ஹார்லிக்ஸ் மாமா நடிகர் தற்கொலை, தூக்கில் தொங்கிய பரிதாபம்


ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் நடித்ததால் புகழடைந்த டிவி நடிகர் பாலமுரளி மோகன்(வயது 54)  தூக்கில் தொங்கி தற்கொலை  செய்து கொண்டார், இவர் தற்போது தென்றல், வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். பாய்ஸ் உட்பட சில படங்களிலும் நடித்துள்ளார்.

‘‘வாளைப்பழ தோல் வழுக்கி வாலிபர் உயிர் ஊஷல்’’, ‘‘தேர்தலில் ஆச்சியை பிடிப்பது யார்ர்ர்ர்ர்ர்’’  நினைவிருக்கின்றதா இந்த காமெடிகளைம், இந்த டிவி இண்டெர்வியூ காமெடியில் விவேக்குடன் நடித்தவருக்கு தான் இந்த பரிதாப முடிவு

சென்னை புரசைவாக்கத்தில் வசித்து வரும் இவர் நேற்று 10 மணிக்கு படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்து தன் படுக்கை அறைக்கு சென்று படுத்துள்ளார், காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அவரது குடும்பத்தினர் வேப்பேரி போலீசில் புகார் செய்தனர். இதை அடுத்து காவல்துறையினர் கதவை உடைத்துக்கொண்டு பார்த்ததில்  அங்கு மின் விசிறியில் பாலமுரளி மோகன் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார். அவர் தற்கொலைக்கான காரணம் இன்னும்  தெரியவில்லை. இவருக்கு ஒரு மனைவியும், மகனும் உள்ளனர்.

பேரறிவாளன் உள்ளீட்ட7 பேரின் விடுதலை குறித்த வழக்கு ஜூலை 7 ஆம் தேதி விசாரனை !!


ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் எனக் கருதப்பட்டு கைதான முருகன் , சாந்தன் , பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது சுப்ரீம் கோர்ட் . கருணை மனுவை பரிசீலிக்க நீண்ட காலம் எடுத்துக் கொண்டதாக அப்போதைய தலைமை நீதிபதி சதாசீவம் , அவர்கள் அதிக காலம் சிறையில் இருந்து விட்டதால் அவர்களை விடுதலை செய்வது குறித்த முடிவை தமிழக அரசு எடுக்கலாம் என்று தெரிவித்தார் .


இதற்காக தமிழக அமைச்சரவையைக் கூட்டிய தமிழக முதல்வர் ஜெயலலிதா , முருகன் , சாந்தன் , பேரறிவாளன் மட்டும் இல்லாமல் , இவர்களைப் போல அதிக காலமாக சிறையில் இருக்கும் மற்ற 4 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார் .

தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்தது . இதனால் ஏழு பேரின் விடுதலைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது .

இந்த வழக்கை ஜூலை 7 ஆம் தேதி ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்குழு விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது . 

ஐ.சி.சி அமைப்பின் தலைவராக என்.சீனிவாசன் நியமிக்கப்பட்டார் !!!



இந்தியாவின் என்.சீனிவாசன் ஐ.சி.சி எனப்படும் உலக கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இன்று நியமிக்கப்பட்டார் . இந்திய கிரிக்கெட் அமைப்பான பி.சி.சி.ஐ அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து உச்ச நீதிமன்றத்தால் நீக்கப்பட்டு இருந்த இவர் , இந்த வார இறுதியில் ஐ.சி.சி அமைப்பின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார் . 

பி.சி.சி.ஐ அமைப்பு இந்தியா சார்பாக என்.சீனிவாசன் பெயரை முன்மொழிந்தது . இந்த முன்மொழிதலை 52 பேர் கொண்ட ஆணையம் ஏற்று கொண்டதால் இன்று அதிகாரப்பூர்வமாக ஐ.சி.சி அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார் .

அவர் அளித்த பேட்டியில் , " இந்த பதவிக்கு தேர்வு பெற்றதை ஒரு மதிப்பாக கருதுகிறேன் . கிரிக்கெட்டின் தூண்களை பலமாக்கவும் , அடிதளத்தை பலமாக்கவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் . கிரிக்கெட் தன்னுடைய புகழை உயர்த்தவும் , அதை தக்க வைத்துக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்துவேன் " என்றார் .


பின்னாடி கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மெக்டோனல்ட்ஃஸிற்குள் நுழைந்த நபர் !!

நியுயார்க் நகரில் உள்ள மெக்டோன்ல்டஸ் ஒன்றில் , பின்னாடி கத்தியால் குத்தப்பட்ட நபர் ஒருவர் உள்ளே நுழைந்தார் . இதனால் அந்த இடத்தில் பதற்றம் ஏற்பட்டது . அங்கே இருந்தவர்கள் அவர் கீழே விழாமல் பிடித்து போலிஸ் மற்றும் மருத்துவமனைக்கு செய்தியை தெரிவித்தனர் .

போலிசார் விசாரணையில் ஒரு கும்பலிடம் பேசிக் கொண்டு இருந்த அந்த நபர் , தீடீரென வாக்குவாதம் ஆனதால் கத்தியால் குத்தப்பட்டதாக தெரிவித்தனர் .


கத்தியால் குத்தப் பட்ட நபர் உள்ளே வருகையில் அதை பலர் புகைப்படம் எடுத்தனர் .

தர்மபுரியில் 144 தடை !!


இளவரசன்,திவ்யா இந்த இரு பெயர்களையும் நாம் ஒருபோதும் மறக்க முடியாது !!

சென்ற வருடம் ஜூலை 4 ஆம் தேதி , இளவரசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் . அவரின் நினைவு தினம் இன்று .

அவரது நினைவு தினத்தை அனுசரிக்க பல்வேறு அமைப்புகள் திட்டமிட்டு இருந்தனர் . இந்நிலையில் ஊர்வலம் நடத்த போலிசாரிடம் அனுமதி கோரி இருந்தனர் . ஆனால் கலவரம் எதுவும் ஏற்பட்டு விடக் கூடாது என போலிசார் தர்மபுரியில் நேற்று இரவு முதல் 144 தடையை விதித்துள்ளது .

இந்த முறை இந்தியா கண்டிப்பாக கால்பந்து உலக கோப்பையை வெல்லுமாம் சொல்லுகின்றனர் , டில்லி மக்கள் !!!!

உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் முதல் ரவுண்டு முடிந்து , இரண்டாம் ரவுண்டு தொடங்கும் நிலையில் இருக்கிறது . இந்நிலையில் கால்பந்து அதிகம் பார்க்கப் படாத இந்தியாவிலும் இப்போது கால்பந்து மோகம் கூடியுள்ளது .

டில்லி மக்களின் கால்பந்து அறிவை சோதிக்கும் வகையில் , அவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது . அந்த கேள்விக்கு அவர்கள் அளித்த பதில் பல பேருக்கு சிரிப்பையும் பல பேருக்கு வியப்பையும் உண்டாக்கியது .

இந்தியா உலக கோப்பை போட்டிகளில் விளையாட தகுதி பெறவில்லை என்பதை அறியாமல் அவர்கள் அளித்த பதில்கள் சிரிப்பை வர வைத்தது .

கேள்வி :-  இந்த முறை இந்தியா உலக கோப்பையை வெல்லுமா ??

பதில்கள்

ஒரு 20 வயது இளைஞன் : ஆமா , இதுதான் நமக்கு முதல் முறை . அவர்கள் பெரிய அணியுடன் மோத உள்ளனர் . இது ஆரம்ப நிலை தான் .

ஒரு இளம்பெண் : இந்தியாவில் ஏகப்பட்ட கால்பந்து வீரர்கள் உள்ளனர் . இந்தியா கண்டிப்பாக வெல்லும் .

இன்னொருவர்  : இந்தியா நினைத்தால் எந்த மாற்றத்தயும் உலகில் கண்டிப்பாக கொண்டு வர முடியும் . இதனால் கோப்பை நமக்கு தான்

இன்னொருவர் : நாம் தான் மண்ணின் மைந்தர்கள் . இப்போழுதே கோப்பையை வென்றது போல் உணர்கிறேன் .


17 வயது பெண்ணை திருமணம் செய்தார் வேகப்புயல் அக்தர் !!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் . அதிக தூரத்தில் இருந்து ஓடி வந்து அதிவேகமாக பந்து வீசுவதில் வல்லவர் . இவருக்கு 39 வயது ஆகிறது . இவரை அனைவரும் ராவல்பிண்டி எஸ்பிரஸ் என்று அழைப்பர் .

இவர் புதன் கிழமை ருபாப் கான் என்னும் 17 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார் . இந்த திருமணத்தை எந்தவொரு பிரம்மாண்டமும் இல்லாமல் அமைதியாக நடத்தி முடித்தனர் .

சென்ற மாதம் 17 வயது பெண்ணை திருமணம் செய்ய போகிறார் என்ற செய்தி வந்தவுடன் பல சர்ச்சைகள் கிழம்பியது . ஆனால் இதை அனைத்தையும் தனது டிவிட்டர் பக்கத்தில் மறுத்தார் .

ஆனால் இப்போது அதே பெண்ணை மணந்துள்ளார் . இந்த திருமண செய்தியை மணப் பெண்ணின் தந்தையும் உறுதி செய்துள்ளார் .

ஹனிமூன் போட்டோக்களுக்கு ஆபாச கமெண்ட் - அதிர்ச்சியில் அமலா பால்


தங்களுடைய மகிழ்ச்சிகளையும் துக்கங்களையும் பகிர்ந்து கொள்ளும் இடமாக ஃபேஸ்புக் உள்ளது, நடிகை அமலாபால் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்த போது அந்த திருமண போட்டோக்களை உடனுக்குடன் ஃபேஸ்புக்கில் அப்டேட் செய்தார், பல இணையதளங்களும், செய்தி பத்திரிக்கைகளும் அந்த படங்களுடன் தான் அவர்களின் திருமண செய்தியை  வழங்கினார்கள்.


அமலாபாலும் விஜய்யும் திருமணம் முடிந்து மாலத்தீவிற்கு ஹனிமூன் கொண்டாட சென்றனர், அப்போது அமலாபால் விஜய்யுடன் மாலத்தீவில் மகிழ்ச்சியுடன் பல படங்களை எடுத்து அவைகளை தனது ஃபேஸ்புக் அக்கவுண்ட்டில் பகிர்ந்து கொண்டார், சந்தோஷமான அந்த படங்களுக்கு பலர் மகிழ்ச்சியாக வாழ்த்துகளும் லைக்கும் தெரிவித்தனர்.


ஆனால் நடிகைகள் என்றாலே கீழ்த்தரமானவர்களாக கருதும் சிலர் மிக ஆபாசமாக அந்த போட்டோக்களுக்கு கமெண்ட் எழுத இதனால் அதிர்ச்சியடைந்த அமலாபால் தனது ஹனிமூன் படங்களை ஃபேஸ்புக்கிலிருந்து நீக்கிவிட்டார், மேலும் சந்தோஷமானவைகளை பகிர்ந்தால் வாழ்த்து சொல்லவேண்டும், ஆனால் இப்படி மனம் புண்படும் படி கமெண்ட் எழுதுகிறீர்களே என்று வேதனை தெரிவித்துள்ளார்.

ஒரு நடிகை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக இருந்தால் இப்படித்தான் கேவலமாக கமெண்ட் அடிக்கும் வக்கிர எண்ணம் இவர்களுக்கு எப்படி வந்தது? இது குறித்து உங்கள் கருத்துகளை எழுதுங்கள்

முதல் முறையாக சென்னை வருகிறார் மோடி !!


ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.ஸ்.எல்.வி சி 23 ராக்கெட் இந்த மாதம் 30 ஆம் தேதி அன்று ஏவப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மோடி கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வருகின்றன.

இதற்காக அவர் 29 அன்று தில்லியில் இருந்து கிளம்பி சென்னை வருகிறார். பிறகு அங்கு இருந்து தனி விமானம் மூலம் ஸ்ரீஹரிகோட்டவிற்கு செல்கிறார். அந்த ராக்கெட் சரியாக 9.23 மணிக்கு செல்கிறது , அதன் பிறகு தனி விமானம் மூலம் 11 மணிக்கு சென்னைக்கு திரும்புகிறார் மோடி. அங்கு உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில்   இருந்து டெல்லிக்கு செல்கிறார். பிரதமர் ஆன பின் மோடி முதல் முறையாக சென்னைக்கு வருவதால் அங்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


இன்று முதல் 'அம்மா மருந்தகங்கள்' தொடக்கம் !!






அம்மா உணவகம், அம்மா தண்ணீர், அம்மா உப்பு என மக்களுக்கு தேவையான பொருட்களை மலிவு விலையில்  வழங்கி வருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா . இவரது அனைது திட்டங்களுக்கும் மக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது. அந்த வரிசையில் இன்று முதல் இணைய போவது அம்மா மருந்தகம் ஆகும். இந்த திட்டத்தை இன்று முதல் அமலுக்கு கொண்டு வருகிறார் அம்மா . எல்லா மருந்து கடைகளிளும் விற்கப்படும் மருந்துகள் 14 சதவீத லாபத்தில் விற்கப்படும் , ஆனால் இங்கு விற்கப்படுபவை 4 சதவீத லாபத்தில் விற்கப்படும். மக்களின் அன்றாட தேவைகளிள் ஒன்றாக மாறிவிட்டது மருந்து. அதனை மலிவு விலையில் வழங்குவது என்பது சிறந்த திட்டமே. இதற்காக அரசு 20 கோடி ருபாய் ஒதுக்கீடு செய்து உள்ளது. புதிதாக 100 மருந்தகங்கள் வருடின்றன அவற்றுள் 20 மருந்தகங்கள் சென்னையில் வருகிறது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media