மெட்ராஸ் கஃபே படத்திற்கு எதிர்ப்பு, தமிழகத்துக்கு எதிராக முழங்க போகும் வட இந்திய, ஆங்கில ஊடகங்கள்
பாக்கிஸ்தான் எல்லையில் அத்துமீறினாலோ, பாக்கிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகள் ஏதேனும் இந்திய நகரங்களில் தாக்குதல் நடத்தினாலோ, கார்கிலில் பாக்கிஸ்தான் நுழைந்து ஆக்கிரமித்தாலோ உடனடியாக பாக்கிஸ்தானுடன் விளையாடும் கிரிக்கெட் விளையாட்டை தடை செய்வதில் ஆரம்பித்து அனைத்து பேச்சுவார்த்தைகள், போக்குவரத்து மற்றும் அரசு உறவுகள் என அத்தனையும் தடைபோட கோருவதும் அதுவே தேசபக்தி என்று பிரச்சாரம் செய்யும் வட இந்திய, ஆங்கில ஊடகங்கள் சிங்கள அரசாங்கத்துக்கும், இந்திய அரசாங்கத்தின் தமிழர் விரோத செயல்பாடுகளை ஆதரித்தும் வருகின்றன.
இனவெறி பிடித்த இலங்கை அரசின் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் சென்னையில் 20-20 ஐபிஎல் விளையாட தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட உடன் வட இந்திய ஊடகங்கள் தமிழகத்தையும் முதல்வரையும் கடும் விமர்சனம் செய்தன பாக்கிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட கூடாது என்று சொன்ன ஊடகங்கள் எல்லாம் விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என்று அறிவுரை கூறினர்.
தற்போது மெட்ராஸ் கஃபே என்ற பெயரில் முழுக்க ஒரு பக்க சார்பாக ஈழத்தமிழர் போராளிகளை, அதன் தலைவரை கொச்சை படுத்தியும் காசி ஆனந்தன் மற்றும் வைகோ போன்றவர்களை நேரடியாக கொச்சை படுத்தியும் படம் எடுத்து அதை துணிச்சலாக தமிழகத்திலே போட்டும் காட்டியுள்ளது மட்டுமின்றி படத்தை தமிழகத்தில் வெளியிடுவோம் என்று கூறியுள்ளனர்.
படம் தமிழகத்தில் எவ்வளவு எதிர்ப்பையும், வெறுப்பையும் சம்பாதிக்கிறதோ, அரசு படத்தை வெளியிடாமல் தடை போடுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு தமிழகம் தவிர்த்த இந்தியாவில் படம் ஹிட் ஆகும், பல்வேறு பிரச்சினைகளில் தமிழர்களின் மனநிலையும் தமிழகம் தவிர்த்த பிற இந்தியாவின் மனநிலையிலும் பெருத்த வேறுபாடு உள்ளது.
படத்திற்கு தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்புக்கு நாளையிலிருந்து வட இந்திய ஊடகங்கள் ஒப்பாரி வைக்க ஆரம்பிக்கும், தமிழர்களை மொழி வெறிபிடித்தவர்கள் என்றும், கருத்து சுதந்திரம் இல்லை என்றும் கிண்டல் செய்தும் அனைத்திற்கும் மேலாக நாளையிலிருந்து ஈழத்தமிழர் விடுதலைக்காக போராடிய பிரபாகரனையும் புலிகள் அமைப்பையும் தீவிரவாதிகளாக சித்தரித்தும் விவாதங்களை நடத்தும், ஓயாமல் செய்தி வாசிக்கும்.
இம்முறை பதவியேற்றதிலிருந்து ஜெயலலிதா அரசு கூடங்குளம் உட்பட பல பிரச்சினைகளிலும் தமிழர்களின் உணர்வை மதிப்பது போல போக்கு காண்பித்துவிட்டு உணர்வுகளை மழுங்கடித்து போராட்டங்களை நசுக்க பார்க்கும், அதை போலவே இம்முறையும் சிம்பிளாக தமிழர்கள் உணர்வை மதிப்பது போல காண்பித்துக்கொண்டு டேம் 999 க்கு தடைவிதித்தது போல படத்துக்கு தடைவிதித்து விட்டு போய்விட வாய்ப்புள்ளது.
தமிழகம் தவிர்த்து இந்தியாவில் தான் இப்படி என்றால் தமிழகத்திலேயே ஞானி, அ.மார்க்ஸ் போன்ற புலியெதிர்ப்பு அறிவுஜீவிகள் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் என்னென்ன கூத்து கட்டப்போகிறார்களோ.
எப்படியோ மெட்ராஸ் கஃபே படம் தமிழகத்தில் தடையே செய்யப்பட்டாலும் தமிழர்களின் மீதான காழ்ப்புணர்வினால் தமிழகம் தவிர்த்த இந்தியாவில் ஹிட் ஆகி வசூலை வாரி குவிக்க போகிறது.
# இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஜான் ஆபிரஹாம்
பாக்கிஸ்தான் எல்லையில் அத்துமீறினாலோ, பாக்கிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகள் ஏதேனும் இந்திய நகரங்களில் தாக்குதல் நடத்தினாலோ, கார்கிலில் பாக்கிஸ்தான் நுழைந்து ஆக்கிரமித்தாலோ உடனடியாக பாக்கிஸ்தானுடன் விளையாடும் கிரிக்கெட் விளையாட்டை தடை செய்வதில் ஆரம்பித்து அனைத்து பேச்சுவார்த்தைகள், போக்குவரத்து மற்றும் அரசு உறவுகள் என அத்தனையும் தடைபோட கோருவதும் அதுவே தேசபக்தி என்று பிரச்சாரம் செய்யும் வட இந்திய, ஆங்கில ஊடகங்கள் சிங்கள அரசாங்கத்துக்கும், இந்திய அரசாங்கத்தின் தமிழர் விரோத செயல்பாடுகளை ஆதரித்தும் வருகின்றன.
இனவெறி பிடித்த இலங்கை அரசின் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் சென்னையில் 20-20 ஐபிஎல் விளையாட தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட உடன் வட இந்திய ஊடகங்கள் தமிழகத்தையும் முதல்வரையும் கடும் விமர்சனம் செய்தன பாக்கிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட கூடாது என்று சொன்ன ஊடகங்கள் எல்லாம் விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என்று அறிவுரை கூறினர்.
தற்போது மெட்ராஸ் கஃபே என்ற பெயரில் முழுக்க ஒரு பக்க சார்பாக ஈழத்தமிழர் போராளிகளை, அதன் தலைவரை கொச்சை படுத்தியும் காசி ஆனந்தன் மற்றும் வைகோ போன்றவர்களை நேரடியாக கொச்சை படுத்தியும் படம் எடுத்து அதை துணிச்சலாக தமிழகத்திலே போட்டும் காட்டியுள்ளது மட்டுமின்றி படத்தை தமிழகத்தில் வெளியிடுவோம் என்று கூறியுள்ளனர்.
படம் தமிழகத்தில் எவ்வளவு எதிர்ப்பையும், வெறுப்பையும் சம்பாதிக்கிறதோ, அரசு படத்தை வெளியிடாமல் தடை போடுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு தமிழகம் தவிர்த்த இந்தியாவில் படம் ஹிட் ஆகும், பல்வேறு பிரச்சினைகளில் தமிழர்களின் மனநிலையும் தமிழகம் தவிர்த்த பிற இந்தியாவின் மனநிலையிலும் பெருத்த வேறுபாடு உள்ளது.
படத்திற்கு தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்புக்கு நாளையிலிருந்து வட இந்திய ஊடகங்கள் ஒப்பாரி வைக்க ஆரம்பிக்கும், தமிழர்களை மொழி வெறிபிடித்தவர்கள் என்றும், கருத்து சுதந்திரம் இல்லை என்றும் கிண்டல் செய்தும் அனைத்திற்கும் மேலாக நாளையிலிருந்து ஈழத்தமிழர் விடுதலைக்காக போராடிய பிரபாகரனையும் புலிகள் அமைப்பையும் தீவிரவாதிகளாக சித்தரித்தும் விவாதங்களை நடத்தும், ஓயாமல் செய்தி வாசிக்கும்.
இம்முறை பதவியேற்றதிலிருந்து ஜெயலலிதா அரசு கூடங்குளம் உட்பட பல பிரச்சினைகளிலும் தமிழர்களின் உணர்வை மதிப்பது போல போக்கு காண்பித்துவிட்டு உணர்வுகளை மழுங்கடித்து போராட்டங்களை நசுக்க பார்க்கும், அதை போலவே இம்முறையும் சிம்பிளாக தமிழர்கள் உணர்வை மதிப்பது போல காண்பித்துக்கொண்டு டேம் 999 க்கு தடைவிதித்தது போல படத்துக்கு தடைவிதித்து விட்டு போய்விட வாய்ப்புள்ளது.
தமிழகம் தவிர்த்து இந்தியாவில் தான் இப்படி என்றால் தமிழகத்திலேயே ஞானி, அ.மார்க்ஸ் போன்ற புலியெதிர்ப்பு அறிவுஜீவிகள் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் என்னென்ன கூத்து கட்டப்போகிறார்களோ.
எப்படியோ மெட்ராஸ் கஃபே படம் தமிழகத்தில் தடையே செய்யப்பட்டாலும் தமிழர்களின் மீதான காழ்ப்புணர்வினால் தமிழகம் தவிர்த்த இந்தியாவில் ஹிட் ஆகி வசூலை வாரி குவிக்க போகிறது.
# இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஜான் ஆபிரஹாம்