BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 17 May 2013

கும்புடு குருசாமி ஆன தலைமைச் செயலர் ஷீலா IAS



ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்று இரண்டு வருடம் நிறைவு பெற்றதற்கு முதல்வருக்கு வாழ்த்துக்களை கூறினார் தமிழக அரசின் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்.

#மிஸ்டர் ஓபிஎஸ் குட் ட்ரெயினிங்

ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங், நெத்திலி மீன்கள் மட்டும் தான் கைதா? சுறா மீன்கள் சிக்குமா?

ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக ஸ்ரீசாந்த் உட்பட 3 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், இந்நிலையில் இன்று அணி உரிமையாளர் ஷாருக்கான்னும் போலிசால்
விசாரிக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்தன, ஆனால் இதை உறுதி செய்ய இயலவில்லை. ஐபிஎல் முழுக்க சூதாட்டம் நடத்தப்படுவதாக கடும் புகார்கள் ஆரம்பத்திலிருந்தே எழுந்தன, ஐபிஎல் அணிகள் அதன் உரிமையாளர்கள் மீது பணம், ஹவாலா மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள், அணிகளை வாங்க பணம் எப்படி வந்தது என்பதில் ஆரம்பித்து பல்வேறு முறைகேடுகளின் முக்கிய இடமாக ஐபிஎல் ஆட்டங்கள் உள்ளன.

சென்னையில் 8 கேலரிகள் பாதுகாப்பற்றவை என்று அறிவித்தும் கூட ரசிகர்களின் உயிரைப்பற்றிய எந்த கவலையுமின்றி உச்சநீதிமன்றம் வரை சென்று அனுமதி வாங்கி போட்டிகள் நடத்தின. சில நாட்களுக்கு முன் ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் 30 இலட்சம் ரூபாயை இழந்த எம்பிஏ பட்டதாரி சொந்தக்காரர் மகனை கடத்தி பணம் கேட்டு மிரட்டி பின் போலிசில் சிக்கிவிடுவோம் என்று சிறுவனை கொலை செய்தார்.

காசு பணம் துட்டு மணி மணி என்று போய்க்கொண்டுள்ளது ஐபிஎல் இதில் சில லோக்கல் புக்கிகள், ஸ்ரீசாந்த் போன்ற ஆட்டக்காரர்கள் கைது செய்யப்பட உண்மையில் ஐபிஎல்லில் எல்லா சட்ட விரோத நடவடிக்கைகளையும் ஆட்டிவைக்கும் சுறாக்கள் தப்பிவிடுகின்றன.

இனி ஈழ அகதிகள் ஆஸ்திரேலியாவுக்கும் போக முடியாதா? சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் சட்டம் இயற்றப்பட்டது.

இனி ஈழ அகதிகள் ஆஸ்திரேலியாவுக்கும் போக முடியாதா? சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் சட்டம் இயற்றப்பட்டது.

உயிரை கையில் பிடித்துக்கொண்டு தப்பித்தால் போதுமென்று கப்பலில் கூட பயணப்பட பயப்படும் கடலில் படகிலேயே பல ஆயிரம் கிமீ பயணப்பட்டு ஆஸ்திரேலியா சென்று சேர்ந்து கொண்டிருந்த ஈழ அகதிகள் உட்பட பல நாட்டு அகதிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக படகுமூலம் நுழைபவர்களுக்கு தங்க இடமளிக்காத வகையில் பிரதமர் ஜூலியா கில்லர்ட் தலைமையிலான அரசின் பாராளுமன்றத்தில் இம்மாதிரியான சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு ஈழ அகதிகளுக்கு அடுத்தபடியாக ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து அதிக அகதிகள் குடியேறுகின்றனர்.

ஜெயலலிதா அரசின் இரண்டு ஆண்டுகால ஆட்சி சாதனையா? வேதனையா?

திமுக மற்றும் கருணாநிதி குடும்பத்தின் ஆட்சியை கண்டு வெதும்பியிருந்த தமிழக மக்கள் தங்கள் வாக்கு என்னும் ஆயுதத்தை மே 13, 2011
ல் பயன்படுத்த படுதோல்வி அடைந்தது திமுக, அதிமுக பெரும் வெற்றி பெற்று மே 16, 2011ல் ஆட்சியில் அமர்ந்தார் ஜெயலலிதா.

இரண்டாண்டுகால ஜெயலலிதா ஆட்சி சாதனையா? வேதனையா?

சமச்சீர்கல்வி குழப்பம், நூலகமாற்றம், தலைமை செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றியது என்பதில் ஆரம்பித்து தொடக்கத்தில் தன் ஈகோவுக்காக பல அதிருப்திகளோடு ஆரம்பித்த ஜெயலலிதா அரசு மின்வெட்டை சரி செய்யாதது என மக்களின் அதிருப்தியில் சென்றிருந்தது. ஆனாலும் மக்களுக்கு திமுக மீதிருந்த அலர்ஜி கொஞ்சம் கூட மாறவே இல்லை. இந்நிலையில் ஒரு ரூபாய் இட்லி அம்மா மெஸ், அம்மா திட்டம் என்று சில செயல்கள் மக்களிடம் வரவேற்பு பெற்றன.

சசி குடும்பங்களின் கொட்டம் அடங்கியது.

சன் குடும்ப டிவிகள் தவிர வேறு எதுவுமே செயல்பட முடியாமல் இருந்த நிலையில் இன்று புதியதலைமுறை, விஜய் டிவி, தந்தி டிவி, சத்யம் டிவி என பல சேனல்களும் கலக்கலாக செயல்பட ஊடக கருணாநிதி குடும்பத்தில் ஊடக சாம்ராஜ்யம் நிச்சயமாக முறியடிக்கப்பட்டுள்ளதன் பின்புலம் ஜெயலலிதா அரசே.

சமீபத்தில் நடந்த மரக்காணம் கலவரம், தர்மபுரிகலவரம் அதைத்தொடர்ந்து பாமகவினர் மீது நடத்தப்படும் கடும் நடவடிக்கைகள் பாமகவினருக்கும் வன்னியர் சமுதாய மக்களிடமும் ஜெயலலிதா மீதான அதிருப்தி ஏற்பட்டாலும் பிற சமூக மக்கள் இந்த நடவடிக்கைகளை ஆதரிக்கின்றனர்.

திமுக காலத்தில் மத்தியதர வர்கத்திற்கு பெரும் பிரச்சினையாக இருந்த நில அபகரிப்பு தற்போது குறைந்திருந்தாலும் தற்போதும் அது வேறு சிலரால் நடது கொண்டு தான் உள்ளது.

டாஸ்மாக் சாதனை வேதனை விற்பனையாக தொடர்கிறது.

காங்கிரஸ் கொடியை கிழித்தால் அடித்து விரட்டுங்கள் - கார்த்திக் சிதம்பரம் டெரர் பேச்சு.

காங்கிரஸ் முன்னாள் எம்பி அடைக்கலராஜ் படத்திறப்பு விழாவில் பேசிய கார்த்திக் சிதம்பரம்

காங்கிரஸ்காரர்கள் இனி திருச்சி ஃபார்முலாவைப் பின்பற்ற வேண்டும். திருச்சியில் காங்கிரஸ் கொடிகளை அகற்றியவர்களை அடித்து விரட்டிய பிறகு, தமிழகத்தில் எங்கேயும் ஒருவர்கூட காங்கிரஸ் கொடி, பேனர்கள் கிழிக்கவில்லை. பதிலடி கொடுத்ததால், எதிரிகள் அடங்கிவிட்டனர். இனி எங்காவது காங்கிரஸ் கொடியை அவமானப்படுத்தினால், திருச்சி பாணியில் அடித்து விரட்டுங்கள். பயப்பட வேண்டாம் என்று பேசியுள்ளார்.

#வன்முறையை தூண்டும் விதமாக பேசினால் அந்த கட்சியை தடை செய்வார்களாமே அம்மா, காங்கிரஸை தடை செய்யலாமே
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media