BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 4 November 2014

அழகுக்கு அழகு சேர்க்கும் குளியல்பொடி தயாரிப்பது எப்படி?



மூலிகை பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

சோம்பு 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் 100 கிராம்
வெட்டி வேர் 200 கிராம்
அகில் கட்டை 200 கிராம்
சந்தனத் தூள் 300 கிராம்
கார்போக அரிசி 200 கிராம்
தும்மராஷ்டம் 200 கிராம்
விலாமிச்சை 200 கிராம்
கோரைக்கிழங்கு 200 கிராம்
கோஷ்டம் 200 கிராம்
ஏலரிசி 200 கிராம்
பாசிப்பயறு 500 கிராம்

இவைகளை தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும்போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும். இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும். இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.

உணவே மருந்து : சர்க்கரை நோய் உங்களை விட்டு ஒரே மாதத்தில் ஓடிவிடும்



சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும் வரக்கொத்தமல்லி, அரை கிலோ வெந்தயம், கால் கிலோ தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும். இரண்டு தேக்கரண்டி பொடியை இரண்டு குவளை (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு குவளையாக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி நேரம் முன்பாக சாப்பிட்டு வரவும். இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது. ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.

முஹரம்: ஸ்ரீநகரில் இன்று ஊரடங்கு உத்தரவு



முஹரம் பண்டிகையை முன்னிட்டு இன்று காஷ்மீர் பகுதியில் இன்று ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.  பாதுகாப்பு கருதி ஸ்ரீநகர் தெருக்களில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. வணிக நிறுவனங்கள் அலுவலங்கள் இன்று இயங்கவில்லை காஷ்மீரில் சுதந்திரத்திற்கு ஆதரவான எழுச்சி தொடங்கப்பட்ட பின் 1989ம் ஆண்டில் இருந்து முஹரம் ஊரவலங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட இடங்களில் மட்டும் சிறய அளவிலான ஊர்வலங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா ஆலை தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்



காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இயங்கி வந்த நோக்கியா ஆலையில் பணியாற்றி வேலை இழந்தவர்கள் சுமார் 200 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள அங்காளம்மன் கோயில் வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். விருப்ப ஓய்வூதியத் தொகையை நிறுத்திவிட்டு தங்களுக்கு பணி வழங்குமாறு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அமெரிக்காவில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உலக வர்த்தக மையம் மீண்டும் திறப்பு



அமெரிக்காவின் மேன் ஹாட்டன் நகரில் உலக வர்த்தக மையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 11ம் தேதி பயங்கரவாத தாக்குதலால் அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் அழிக்கப்பட்டதால் அங்கு செயல்பட்டு வந்த உலக வர்த்தக மையம் மூடப்பட்டது. 2001ஆம் ஆண்டு முதல் செயல்படாமல் இருந்த உலக வர்த்தக மையம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இலங்கை துறைமுகத்தில் போர்க் கப்பல்கள் வருகை: சீனா விளக்கம்



இலங்கைத் துறைமுகத்தில் சீன நாட்டுக் கடற்படையின் நீர்மூழ்கிப் போர்க் கப்பல்கள் நிறுத்தப்படுவது சாதாரணமான நிகழ்வுதான் என சீனா தெரிவித்துள்ளது. இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் சீனக் கடற்படையின் இரண்டு நீர்மூழ்கிப் போர்க் கப்பல்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ள நிலையில், இது வழக்கமான நிகழ்வுதான் என சீனா விளக்கமளித்துள்ளது.

இதுதொடர்பாக சீனப் பாதுகாப்புப் படை உயரதிகாரி ஒருவர், அந்நாட்டின் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி: பாரசீக வளைகுடா, சொமாலியா கடல் பகுதிகளில் கடற்கொள்ளையர்களைக் கண்காணிக்கும் பணிக்காக இலங்கைத் துறைமுகத்தில் இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கப்பல்களுக்குத் தேவையான எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட காரணங்களுக்காகவே இலங்கைத் துறைமுகத்தில் சீனப் போர்க்கப்பல்கள் நிறுத்தப்படுகின்றன. இது வழக்கமான நிகழ்வுதான் என அவர் தெரிவித்துள்ளார். இந்தியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங் கடந்த செப்டம்பர் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரது வருகையையொட்டி, அப்போதும் இலங்கைத் துறைமுகத்தில் இதுபோல் சீனக் கடற்படைக் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

தில்லி சட்டப்பேரவையைக் கலைக்க முடிவு


"தில்லியில் முடக்கி வைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவையைக் கலைத்து விட்டு தேர்தல் நடத்தலாம்' என்று குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்ப துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் முடிவு செய்துள்ளார். "தில்லியில் ஆட்சி அமைக்க அதிக இடங்கள் பெற்றுள்ள கட்சி என்ற அடிப்படையில் பாஜகவும் அதற்கு அடுத்தபடியாக உள்ள ஆம் ஆத்மி கட்சியும் ஆர்வம் காட்டவில்லை என்பதால், இந்த முடிவை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை' என்று செய்தியாளர்களிடம் நஜீப் ஜங் திங்கள்கிழமை கூறினார். தில்லியில் "ஆம் ஆத்மி' அரசு கடந்த பிப்ரவரி மாதம் ராஜிநாமா செய்ததும் சட்டப்பேரவையை கலைக்காமல் முடக்கி வைத்து, துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் நடவடிக்கை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. இந்த நிலையில், அதிக இடங்கள் பெற்ற கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க நஜீப் ஜங் தெரிவித்த யோசனையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அண்மையில் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, கடைசி வாய்ப்பாக தில்லியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்க நஜீப் ஜங் திட்டமிட்டார். இதன்படி சட்டப்பேரவையில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் திங்கள்கிழமை அவர் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.

இதில், முதலாவதாக பங்கேற்ற தில்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய், சட்டப்பேரவை பாஜக தலைவர் ஜெகதீஷ் முகி ஆகியோர், "தில்லியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பலம் பாஜகவுக்கு இல்லை. ஆட்சி அமைத்த பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க பிற கட்சிகளிடம் பேசி ஆதரவைப் பெறுவதற்கான சூழல் எழவில்லை. ஆகவே, ஆட்சி அமைக்கும் வாய்ப்பை எங்கள் கட்சி ஆராயவில்லை' என்று தெரிவித்தனர்.இதேபோல, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் மணீஷ் சிúஸôடியா ஆகியோரும் நஜீப் ஜங்கை பிற்பகலில் சந்தித்துப் பேசினர். "தில்லியில் சட்டப்பேரவையைக் கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும் என்று தொடக்கம் முதல் ஆம் ஆத்மி கட்சி வலியறுத்தி வருகிறது. இதில், தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம்' என்று அவர்கள் நஜீப் ஜங்கிடம் தெரிவித்தனர். சட்டப்பேரவையில் மூன்றாவது நிலையில் உள்ள கட்சி என்ற அடிப்படையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஹாரூண் யூசுஃப், நஜீப் ஜங்கை சந்தித்து "ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்க காங்கிரஸ் விரும்பவில்லை' என்று தெரிவித்தார்.

இதுகுறித்து திங்கள்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பேசிய துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், "தில்லியில் தற்போதைய உறுப்பினர்கள் பலத்தை வைத்துக் கொண்டு ஆட்சி அமைக்க யாரும் முன்வரவில்லை. இதனால், தில்லி பேரவைக்கு தேர்தல் நடத்துவது மட்டுமே ஒரே வழியாக உள்ளது. இது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அளித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை முடிவு செய்வேன்' என்றார். இதற்கிடையே, கிருஷ்ணாநகர், மாளவியாநகர், துக்ளகாபாத் ஆகிய தொகுதிகளுக்கு வரும் 25-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. இந்தத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நவம்பர் 5 கடைசி நாள், வேட்பு மனு பரிசீலனை நவம்பர் 7, வேட்பு மனுவை திரும்பப் பெற நவம்பர் 10 கடைசி நாள் என்றும் ஆணையம் கூறியுள்ளது. இந்த நிலையில், தில்லி சட்டப்பேரவைக்கு முழுமையாக தேர்தல் நடத்த துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் பரிந்துரை செய்தால், அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வாய்ப்புள்ளதாகத் கூறப்படுகிறது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media