BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 3 July 2014

டில்லியில் புதிய தேர்தல் வேண்டி ஆம் ஆத்மி கட்சியினர் ஜனாதிபதியை சந்தித்தனர் !!



டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்த பின் 49 நாட்கள் ஆட்சிக்கு பின் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர் . இவ்வளவு நாட்கள் டில்லியில் முதல்வர் நாற்காலி காலியாகவே இருக்கிறது .

எனவே இன்று அந்த கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் டில்லியில் தேர்தல் புதிதாக நடத்தும் படி , ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளனர் . அவர்கள் ஜனாதிபதிக்கு கொடுத்த அறிக்கையில் , பாஜக அவர்களின் அமைச்சர்களை கடந்த 10 நாட்களாக வாங்க பார்க்கின்றனர் . அதற்காக பணமும் கொடுக்கின்றனர் . அதை வாங்க மறுத்தால் உயிருக்கு மிரட்டல் விடுப்பதாக பூகார் ஒன்றை அந்த அறிக்கையில் கொடுத்துள்ளனர் .

மேலும் இப்போது பெட்ரோல் , டீசல் விலையேற்றம் , மற்றும் ஊழலை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால் , பாஜக வின் மவுசு மக்களிடம் குறைந்து இருக்கும் என கருதி தேர்தலை இப்போது நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கின்றனர் ஆம் ஆத்மி கட்சியினர் .

செல்சியா கிளிண்டன் பில் கிளிண்டனின் மகள் இல்லை !!


அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆக இருந்தவர் பில் கிளிண்டன் . இவரின் மனைவி ஹிலாரி கிளிண்டன் . இவர்கள் இருவருக்கும் பிறந்தவராக கருதப்பட்டவர் செல்சியா கிளிண்டன் . 

ஆனால் இது உண்மையில்லை என்று பில் கிளிண்டனுடன் வேலை பார்த்த நிக்கோலஸ் என்பவர் கூறியுள்ளார் . அவர் கூறுகையில் செல்சியா கிளிண்டன் ஹிலாரி கிளிண்டன் மற்றும் ஹப்பல் ஆகிய இருவருக்கும் பிறந்தவர் என்று கூறியுள்ளார் . இதை கிளிண்டனும் ஒரு முறை கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார் . 

உதவி பணியாளரின் இந்த அறிவிப்பு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது .
 

உலகின் கவர்ச்சியான பெண்கள் பட்டியலில் கத்ரினா கைபை முந்தினார் தீபிகா படுங்கோனே !!



எப்.எச்.எம் என்னும் நாளிதழ் 2014இன் கவர்சியான பெண்களின் பட்டியலை வெளியியிட்டது . இந்த பட்டியலில் இந்தியாவின் கத்ரினா கைப்பை முந்தி முதல் முறையாக முதல் இடத்தை பிடித்தார் தீபிகா படுங்கோனே .



இதற்கு முந்தைய மூன்று வருடங்கள் கத்ரினா கைப் தான் முதல் இடம் பிடித்து இருந்தார் . தீபிகா படுங்கோனே இறுதியாக திரையில் வந்தது கோச்சடையான் திரைப்படத்தில் என்பது குறிப்பிடத்தக்கது .

கேம் ஒன்றை வெளியிட்டது இந்தியாவின் விமானப் படை !!



இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு படையாக விளங்கும் விமானப் படை இளைஞர்களிடம் விமானப்படை பற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக " கார்டியன்ஸ் ஆப் ஸ்கைஸ் என்னும் ஒரு புதிய 3டி கேமை வடிவமைத்துள்ளது . மேலும் இளைஞர்களிடம் விமானப் படையில் சேரும் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக இந்த கேமை வெளியிட்டதாக தெரிவித்தனர் .

இந்த கேம் ஆண்ட்ராய்ட் , விண்டோஸ் , ஆப்பிள் என அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது . இந்த கேமில் எதிரிகளை அழிக்கும் போர் விமானத்தை ஓட்டும் நாம் எதிரே வரும் எதிரிகளை அழிக்க வேண்டும் .

இந்த கேமை விளையாடும் இளைஞர்கள் அனைவரும் விமானப் படையில் சேருவதற்கான ஆர்வத்தை தூண்டும் வகையில் வடிவமைத்துள்ளனர் .


அமெரிக்காவின் மோசமான அதிபர் ஒபாமா : அதிர்ச்சி தகவல்




அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபர் என்னும் பெருமையை பெற்றவர் பாரக் ஒபாமா. இவர் முதல் முறையாக அமெரிக்க அதிபராக ஆனது மட்டும் இல்லாமல் இரண்டாவது முறையும் அதிபர் ஆகி சாதனை படைத்தார். அவர் பதவியில் இருக்கும் போது தான் தீவிரவாதி ஒசாமா பின் லேடனை சுட்டு கொல்லப்பட்டார். அமெரிக்காவில் பிறந்தவர்களுக்கு தான் வேலையில் முக்கியத்துவம் என மக்களை கவர்ந்தார். இப்படி பல செய்தும் இப்போது வந்த கருத்து கணிப்பில் அதிர்ச்சிகுரிய தகவல் வந்து உள்ளது.

இரண்டாம் உலக போருக்கு பிறகு அமெரிக்காவின் மோசமான அதிபர் யார் என்று கேட்ட போது ஒபாமா என 33 சதவீதம் பேர் வாக்களித்து முதல் இடத்தில் உள்ளார். 2வது இடத்தில் ஜார்ஜ் புஷ் உள்ளார். சிறந்த அதிபரில் இவர் 8 சதவீத வாக்குகள் பெற்று 4 வது இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் சிறந்த அதிபர் என்னும் பெருமையை ரோனால்டு ரீகன் பெற்றார்.


டிவிட்டர்,பேஸ்புக்கில் அதிக பேரின் ஆதரவை கொண்ட ஒபாமாவால் தனது சொந்த நாட்டு மக்களின் ஆதரவை பெற முடியவில்லை.

வந்த 2 வது நாளே பேஸ்புக்கில் இருந்து விலகினார் தல அஜித்




ஜுலை 1 ஆம் தேதி அன்று தல ரசிகர்கள் எல்லாம் சந்தோஷத்தில் இருந்தார்கள் , ஏனென்றால் தல அஜித் பேஸ்புக் வந்து விட்டார் என்பதால். ஆனால் தல வந்து 2 நாட்கள் கூட முழுவதாக முடியாத நிலையில் அஜித் பேஸ்புக்கை விட்டு விலகி விட்டதாக தகவல் வந்து உள்ளது. இது குறித்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வரவில்லை.

இன்று காலையில் இருந்து அஜித் பக்கத்தில் இருந்த வெரிஃபைடு குறியீடை காணவில்லை. அது இருந்தால் தான் அந்த நபரின் உண்மையான் பக்கம் ஆகும். இது அவருக்கு வேண்டாதவர்கள் செய்த வேலையா அல்லது தானால் ரசிகர்கள் இங்கு அடித்து கொள்ள கூடாது என தானாக விலகி விட்டாரா என்று தெரியவில்லை.

தலயின் பதிலுக்காக அவரது ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள்.

ஹர்பஜன் சிங் பிறந்த நாள் அன்று அவரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்




இந்திய அணிக்கு தனது சுழற்பந்து வீச்சின் மூலம் பெருமை தேடி தந்தவர் ஹர்பஜன் சிங் . அவருக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு நமது வாழ்த்துக்கள்.

அவர் இப்போது அணியில் இல்லை என்றாலும் அவர் சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. இந்திய அணிக்காக 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 413 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். 229 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 259 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார்.இந்திய அணிக்கு முதல் ஹாட்ரிக்கை எடுத்தவர் இவர் தான். அதனை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்தார். இவரும் கும்பளேவும் சேர்ந்து இந்தியாவின் பவுலிங் நாயகன்களாக ஜொலித்தார்கள்.

அனைவரும் இவரை செல்லமாக பாஜி என்று அழைப்பார்கள். இவர் சிறிது ஆக்ரோஷமான வீரர். எளிதில் கோபம் ஆகி விடுவார். ஐபிஎல் போட்டிகளின் போது ஸ்ரீசாந்த் பண்ண சேட்டையில் கோபமாகி அவரை அடுத்து விட்டார். அப்போது அவருக்கு சில போட்டிகளில் தடை விதிக்கப்பட்டது.

டி20 உலக கோப்பை, 2011 உலக கோப்பை வென்ற அணிகளில் இவர் இடம்பெற்று இருந்தார் என்பது இவரது சிறப்பு.

ஜெர்மனி கால்பந்து அணியில் 7 பேருக்கு காய்ச்சல் பரவியது

இந்த உலக கோப்பையை வெல்ல கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்படுவது ஜெர்மனி அணி. கோல் கீப்பர், பின்கள வீரர்கள், நடுகள வீரர்கள் ,முன்கள வீரர்கள் என அனைவரையும் சிறந்த வீரர்களாக கொண்ட அணி ஜெர்மனி. அந்த அணிக்கு புதிய சிக்கல் வந்து உள்ளது. கடந்த ஆட்டத்தின் போது அந்த அணியின் பின்கள வீரர் ஹம்மல்ஸ் விளையாடவில்லை . காய்ச்சல் காரணமாக அவர் விளையாடவில்லை. அவருக்கு வந்த காய்ச்சல் அந்த அணியின் 7 வீரர்களுக்கு பரவி உள்ளதாக தகவல் வந்து உள்ளது. அவர்களின் பெயர்கள் தெரிவிக்கப்படவில்லை.

ஹம்மல்ஸ் குணமடைந்து வருவதாக தெரிவித்து உள்ளார். அந்த அணியின் பொடல்ஸ்கியும் குணமடைந்து வருகிறார். அவர்கள் குணமடைந்து முழு உடல் தகுதியுடன் விளையாடுபார்கள் என இறைவனை வேண்டுவோம்.


ஒருவரை தோற்கடிக்க நினைத்தாலும் அவர்கள் முழு தகுதியுடன் இருக்கும் போது அதனை செய்தாலே , முழு வெற்றியும் நமக்கு வரும்.


வருகிறது இந்தியாவின் அதிவேக ரயில்

இப்போது இந்தியாவில் இருக்கும் ரயில்கள் எல்லாம் ஆங்கிலேயர் நம்மை ஆண்ட போது வாங்கியதாகும். அவர்களை தூக்கி எரிந்து விட்டோம் ஆனால் அவர்கள் தந்த ரயில்கள் மட்டும் இன்னும் அப்படியே இருக்கின்றன. சிறு நாடுகள் கூட இன்று அதிவேக புல்லட் ரயில்கள் வைத்து உள்ளன. ஆனால் 120 கோடி மக்கள் தொகை நம் நாட்டில் அவை இல்லை. மிகவும் கேவலமான விஷயம். அந்த கவலையை போக்கும் விதமாக வருகிறது இந்தியாவின் அதிவேக ரயில் .



முதல் ரயில் டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு வருகிறது . இது மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும். டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு செல்ல 120 நிமிடங்கள் ஆகும் . ஆனால் இதில் சென்றாலும் 30 நிமிடங்கள் தான் ஆகும்.
இதற்கான ரயில் பாதை அமைப்பதற்கு மட்டும் 15 கோடி ஆகியது,

புதிய அரசு விவேகத்துடன் செயல்பட்டால் நாம் எங்கும் வேகமாக செல்லலாம்.

இடிந்து விழுந்த கட்டிடம் : அதிர்ச்சி தரும் புது செய்திகள்

கடந்த 28 ஆம் தேதி அன்று மவுலிவாக்கத்தில் உள்ள ஒரு 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது . இதில் 72 பேர் சிக்கி இருக்க கூடும் என்னும் தகவல்கள் வந்தன. ஆனால் இப்போது அதிர்ச்சிக்குரிய புது தகவல்கள் வந்து உள்ளது.
இன்றைய தகவல் படி 60 பேர் பலியாகி உள்ளார்கள், 27 பேர் காப்பாற்றபட்டு உள்ளார்கள் . இதனை சேர்தாலே 80 க்கு மேல் வருகிறது. எனவே இதில் சிக்கி இருப்பவர்கள் எண்ணிக்கை 100 ஐ தாண்டி விடும் என்று கருதப்படுகிறது. இன்னும் தங்கள் உறவினர்களை காணவில்லை என பலர் கூறுவதால் அதில் இன்னும் 30 பேர் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.



மீட்பு பணிகள் இன்னும் 2 நாட்களில் முடிந்து விடும். இங்கு வீடு வாங்கியவர்களுக்கு அதற்குரிய பணத்தை திரும்பி தருவதாக இதனை கட்டிய நிறுவனத்தின் உரிமையாளர் கூறியுள்ளார். இந்த விபத்தில் சிக்கியவர்கள் உயிர் பிழைப்போம் என்று நம்பவில்லை என்றார்கள். இந்த விபத்திற்கு காரணம் அந்த கட்டிடம் சரியான இடத்தில் கட்ட படவில்லை என்பது தான். இப்போது இனி அடுத்த கட்டிடங்களை பற்றி விசாரிக்க போகிறார்களாம்.

வருமுன் காப்போம் என்பது மாறி, வந்த பின் சமாளிப்போம் என்று மாறி வருகிறது.

ஐ படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அனிருத் பாடுகிறார்

நண்பன் படத்திற்கு பிறகு கடந்த 2 ஆண்டுகளாக ஷங்கர் இயக்கி வரும் படம் 'ஐ'. இது மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகளை பற்றிய படம் ஆகும். இதில் விக்ரம் நாயகனாகவும், எமி ஜாக்சன் நாயகியாகவும் நடிக்கிறார்கள். சந்தானமும் படத்தில் உள்ளார். ஆஸ்கர் ரவிசந்திரன் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.



இந்த படத்தில் ஒரு பாடலை அனிருத் பாடவுள்ளார். ஏஆர்.ரகுமான் இசையில் அவர் பாட உள்ளதால் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். இதற்காக ஷங்கருக்கும், ரகுமானுக்கும் அவரது டிவிட்டர் இணையதளத்தில் நன்றி தெரிவித்து உள்ளார்.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான், கொலைவெறி நாயகன் அனிருத் கூட்டணியில் அமைய இருக்கும் பாடல் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.

தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லையாம் , அதனால் ஜெயலலிதாவிற்கு பாராட்டாம் !!!

அதிமுக கட்சியின் செயற்குழு அந்த கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 9 தீர்மானங்கள்  நிறைவேற்றபட்டன. இதற்கு அவைதலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார், ஜெயலலிதா முன்னிலை வகித்தார். அதில் தமிழகத்தை இப்போது மின்வெட்டு இல்லா தமிழகமாக மாற்றியதற்கு வாழ்த்து தெரிவிக்கபட்டது. தமிழகத்தில் ஜுன் 1 முதல் மின்வெட்டு இருக்காது தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்து இருந்தார். ஆனால் அந்த ஜுன் 1 எப்போது வருமோ என மக்கள் இன்னும் எதிர்பார்த்து கொண்டே தான் இருக்கிறார்கள்.



தமிழகத்தில் இன்னும் மின்வெட்டு அப்படியே தான் இருக்கிறது. முன்பாவது சொன்ன நேரத்தில் மின்வெட்டு இருக்கும். ஆனால் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு பிறகு எப்போது வருகிறது எப்போது போகிறது என்றே தெரியவில்லை. இந்த நேரத்தில் தமிழகத்தை மின்வெட்டு இல்லா மாநிலமாக மாற்றியதற்கு பாராட்டுகள் என்பது வெட்டி பந்தாவாக தான் தெரிகிறது.

இந்த சினிமா நடிகர்கள்  தான் தேவை  இல்லாமல் தனக்கு தானே விளம்பரம் பண்ணிகிறாங்கனா நீங்களும் ஏன்டா ? (கரகாட்டகாரன் கவுண்டமணி வாய்ஸ்)

அண்டார்ட்டிகாவில் உள்ள மலைக்கு இந்திய விஞ்ஞானியின் பெயர் சூட்டிக் கவுரவம் !!



அமெரிக்கா , அண்டார்ட்டிகாவில் உள்ள ஒரு மலைக்கு இந்திய விஞ்ஞானியின் பெயரை சூட்டி கவுரவப் படுத்தியுள்ளது . அமெரிக்காவின் மின்செட்டோ மகாணத்தில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் அகோரி சின்ஹா . அண்டார்ட்டிகா மலைப் பிரதேசங்களில் வாழும் உயிரினங்கள் குறித்து பல ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார் .

இவர் செய்த பணிகளை கவுரவிக்கு வகையில் இவரது பெயரை அண்டார்ட்டிக்காவின் ஒரு மலைக்கு சூட்டியுள்ளனர் .

தமிழக ஆளுநர் ராஜினாமா செய்ய போகிறார ?? மோடியுடன் சந்திப்பு !!



தமிழகத்தின் ஆளுநராக இருப்பவர் ரோசய்யா . கர்நாடகாவின் ஆளுநர் பதவிக் காலம் முடிவடைந்து விட்டதால் கர்நாடகாவிற்கும் ஆளுநராக கூடுதல் பொறுப்பில் இருக்கிறார் . இவர் செவ்வாய்க் கிழமை மோடியை சந்தித்து பேசினார் . இவர்களது சந்திப்பினால் ரோசய்யா பதவியை ராஜினாமா செய்யப்போவதாக சர்ச்சைகள் கிளம்பியது .

இது பற்றி உள்துறை அமைச்சகம் கூறுகையில் , " ரோசய்யா பிரதமர் அவர்களை நேரில் சந்திக்க பிரதமர் பதவி ஏற்கும் போதே முயற்சி செய்தார் . ஆனால் அன்று முடியவில்லை . இன்று அவராக தான் பிரதமரை சந்தித்தார் . தமிழக முதல்வர் ஆளுநரை மாற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் , உள்துறை அமைச்சகம் ரோசய்யாவை மாற்றும் முயற்சியைக் கைவிட்டு இருந்தது " என்று கூறினார் .

பிரதமருக்குப் பின் ராஜ்நாத் சிங்குடன் சந்திப்பு நடத்தினார் . இப்போது குடியரசு தலைவருடனும் சந்திபு நடத்தப் போவதாக தகவல்கள் வருகிறது .

பாஜக ஆட்சிக்கு வந்தபின் உத்தர பிரதேசம் , சத்தீஷ்கர் , மேற்கு வங்களம் , நாகலாந்து ஆகிய மாநிலங்களின் பதவி வில்கி உள்ள்னர் என்பது குறிப்பிடத்தக்கது .

கருப்பு ரஜினி, கலெக்டர் ரஜினி என இரு வேடங்கள் : லிங்கா ஸ்பெஷல்

ரஜினி இப்போது நடித்து வரும் படம் லிங்கா. இதில் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா என இரண்டு கதாநயகிகள். இந்த படத்தை கே.எஸ் .ரவிக்குமார் இயக்க ,ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. படத்தில் 2 நாயகிகள் இருப்பதால் 2 ரஜினியோ என்னும் எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே எழுந்து உள்ளது.



அது தொடர்பான தகவல்கள் வர தொடங்கி உள்ளன. ஒரு ரஜினி 1940 களில் வருபராகவும், இன்னொரு ரஜினி கலெக்டராகவும் வருவதாக தகவல்கள் வந்து உள்ளன. ரஜினி 2 வேடங்களில் நடித்தால் படம் செம ஹிட் ஆகி விடும் என்பது அவரது ரசிகர்களின் லாஜிக்.அவர் கடைசியாக இரு வேடங்களில் நடித்த கோச்சடையான், எந்திரன்,ஜானி , பில்லா போன்ற படங்கள் ஹிட் ஆகி உள்ளன.

மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளை மூட ஆலோசனை !!



தமிழகம் முழுவதும் சேர்த்து 23 ஆயிரத்து 815 தொடக்கப் பள்ளிகள் இருக்கின்றன . இந்த பள்ளிகளில் மட்டும் 14 இலட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர் . 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் .

அரசு தொடக்கப் பள்ளிகளில் வசதிகள் குறைவாக இருப்பதால் , இந்த பள்ளிகளில் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது . இதனால் 1268 பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . எனவே இந்த பள்ளிகளை மூடிவிட்டு அங்கே உள்ள மாணவர்களை அருகில் இருக்கும் அரசுப் பள்ளிகளை சேர்க்கும் முடிவை ஆலோசித்து வருவதாக தெரிகிறது .

இதனால் கிராமப்புற மாணவர்களின் கல்வியின் நிலமை கேள்விக்குறியாக வாய்ப்பு உள்ளது .

கிளைமாக்ஸை நெருங்குகிறது கட்டிட விபத்து மீட்பு பணி !!

கடந்த சனிக்கிழமை 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் அதில் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணி அன்றில் இருந்து நடபெற்று வருகிறது. நேற்று மட்டும் 15 சடலங்கள் எடுக்கபட்டன. இதுவரை 49 பேர் பலியாகி உள்ளனர் ,27 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். மீட்பு பணி இப்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது .இதுவரை 80 சதவீத கட்டிட கழிவுகள் நீக்க பட்டு விட்டன .இன்னும் 20 சதவீதம் தான் உள்ளன ,அவை 2 நாட்களில் நீக்கப்பட்டு விடும்.



அங்கு துர்நாற்றம் வீசுவதால் அதனை சுற்றி உள்ள இடங்களில் குளோரின் பவுடர் தெளிக்கப்பட்டு உள்ளது.அங்கு மீட்பு பணியில் உள்ளவர்கள்,போலீஸார், பத்திரிக்கையாளர்கள் என அனைவருக்கும் தடுப்பு ஊசி போடப்பட்டு உள்ளது. இந்த மீட்பு பணியில் 1500 பேர் வரை ஈடுபட்டு உள்ளனர்.இதுவரை இறந்தவர்களில் 12 பேர் ஆந்திராவையும்,9 பேர் தமிழகத்தையும், 5 பேர் ஒரிசாவையும் சேர்ந்தவர்கள். 23 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு அடுத்து இந்தியா மீது போர் தொடுக்க திட்டம் !!



இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அண்ட் சிரியா ஐ.எஸ்.ஐ.எஸ் என்னும் கிளர்ச்சிப் படையின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி , இந்தியா உள்ளீட்ட நாடுகளில் முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுவதால் அந்த நாடுகளின் மேல் போர் தொடுக்க இருப்பதாக கூறினார் .

நேற்று ரமலான் வழ்த்து செய்தியை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு .  அந்த வாழ்த்து செய்தியில் , " ரமலான் மாதத்தில் அனைவரும் ஆயுதம் ஏந்தி போராட தயாராக வேண்டும் . இஸ்லாமிகயர்களின் உரிமை இந்தியா , சீனா , பாலஸ்தீனம் , சோமாலியா , எகிப்து , பிலிப்பைன்ஸ் , ஈரான் , துனிசியா , அல்ஜீரியா , பாகிஸ்தான் , இந்தோனேஷியா , துனிசியா ஆகிய நாடுகளில் மறுக்கப்பட்டு வருகிறது . இதனால் இஸ்லாமிய சகோதரரர்கள் ஜிஹாத் நடத்தப்படும் நாளை நோக்கி காத்து இருக்கின்றனர் . உலக அளவில் நமது சகோதரர்கள் தொடர்ந்து இன்னலை சந்தித்து வருகின்றனர் . அதற்கான பதிலை நாம் விரைவில் கூற வேண்டும் " என்று கூறப்பட்டு இருந்தது .

இந்த செய்தியால் ஈராக்கில் இருக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது . இந்த வார தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தனி இஸ்லாமிய நாடு என்னும் தனி நாட்டை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது .

ஜுலை 7 இல் இஞ்ஜினியரிங் கலந்தாய்வு தொடங்குகிறது !!

ஜுன் 27 ஆம் தேதி தொடங்குவதாக இருந்த பி.இ கலந்தாய்வு உச்ச நீதிமன்ற உத்தரவால் மறு தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. அதற்கான் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த கலந்தாய்வு ஜுலை 7 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை 29 நாட்கள் நடைபெறுகிறது. முன்பு 32 நாட்கள் நடைபெறுவதாக இருந்த கலந்தாய்வு இப்போது 29 நாட்களாக குறைந்து உள்ளதால் தினமும் நடக்கும் சுற்றுகளின் எண்ணிக்கை 8 இல் இருந்து 9 ஆக உயர்த்தபட்டு உள்ளது.



இதனால் தினமும் 5500 மாணவர்கள் வரை அழைக்கப்படலாம். முதல் நாள் மட்டும் முதல் சுற்று காலை 10 மணிக்கும் கடைசி சுற்று 7 மணிக்கும் தொடங்கிறது. அதற்கு அடுத்த நாளில் இருந்து காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேதி அறிவிப்பு எஸ்.எம்.எஸ் மூலம் மாணவர்களுக்கு அனுப்பபட்டு வருகிறது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media