டெல்லியில் நேற்று முன் தினம், டென்மார்க் பெண் ஒருவர், சுற்றுலாவிற்கு வந்திருந்த போது, நகரின் மையபகுதியிலேயே, ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். இது போன்ற குற்றங்களை தடுக்க, புகார் அளிக்கும் படி மக்களிடம் ஆம் ஆத்மி அரசு கேட்டு கொண்டதன் பேரில், நகரின் மைய பகுதிகளிலேயே, விபச்சாரம் நடப்பதாகவும், போதை பொருட்கள் விற்க படுவதாகவும் மக்களிடம் இருந்து புகார்கள் வந்தது. இதை அடுத்து, டெல்லி சட்டத்துறை அமைச்சர் சோம்நாத் பார்தி நேற்று நள்ளிரவு அதிரடியாக நேரில் சென்று, போலீஸார் எவ்வாறு பணி புரிகின்றனர் என்று ஆய்வு செய்தார்.
இது பற்றி சோம்நாத் பார்தி பேசும் போது, டெல்லி போலீஸார் மத்திய அரசின் கட்டுபாட்டில் இருப்பதால், நான் சொல்வதையோ, மக்கள் கொடுக்கும் புகார்களையோ மதிப்பு கொடுத்து கேட்பதில்லை, என தெரிவித்தார்.
இந்நிலையில், டெல்லி போலீஸார் குற்றங்களுக்கு வளை கொடுத்து செல்கிறார்கள். அவர்கள் அதை ஒடுக்க கடுமையாக இருப்பதில்லை என்று கூறி, பலாத்கார சம்பவங்கள் நடக்க பொறுப்பான போலீஸார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி போலீசாரை எச்சரித்திருக்கிறார்.
இது பற்றி சோம்நாத் பார்தி பேசும் போது, டெல்லி போலீஸார் மத்திய அரசின் கட்டுபாட்டில் இருப்பதால், நான் சொல்வதையோ, மக்கள் கொடுக்கும் புகார்களையோ மதிப்பு கொடுத்து கேட்பதில்லை, என தெரிவித்தார்.
இந்நிலையில், டெல்லி போலீஸார் குற்றங்களுக்கு வளை கொடுத்து செல்கிறார்கள். அவர்கள் அதை ஒடுக்க கடுமையாக இருப்பதில்லை என்று கூறி, பலாத்கார சம்பவங்கள் நடக்க பொறுப்பான போலீஸார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி போலீசாரை எச்சரித்திருக்கிறார்.