BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 12 July 2014

போனை விற்க போகிறீர்களா ?? உங்களின் அந்தரங்க போட்டோக்களை நீங்கள் அழித்து இருந்தாலும் அதை மீண்டும் எடுக்க முடியும் !! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் .


இப்போது எல்லாம் சிலர் மாதத்திற்கு ஒருமுறை மொபைல் போனை மாற்றுவதை தங்கள் வேலையாக கொண்டுள்ளனர் . புதிய மொபைல் வந்தவுடன் , அனைவரும் தங்களுடைய பழைய மொபைலை விற்றுவிடுவது இயல்பு . விற்கும் முன் நாம் எடுத்த போட்டோ , நமது மெசெஜ் என அனைத்தையும் அழித்துவிட்டு பேக்டரி ரிசெட் செய்துவிட்டு தான் விற்போம் . ஆனால் இப்போது நடந்து முடிந்த ஒரு ஆய்வில் , போனில் போட்டோக்களை அழித்து இருந்தாலும் அதனை மீண்டும் எளிதாக எடுத்து விடலாம் என்று நிரூபித்துள்ளனர் .

இந்த ஆய்வை பிரபல அண்டி வைரஸ் நிறுவனமான அவாஸ்ட் நிறுவனம் நடத்தியது . அவர்கள் இ-பே நிறுவனத்திடம் இருந்து இரண்டாம் தரமாக 20 போன்களை வாங்கிக் கொண்டனர் . அந்த போனில் இருந்து அவர்கள் 40,000 போட்டோக்கள் , 750 இ-மெயில்கள் , 250 காண்டக்ட்ஸ்கள் ஆகியவை எளிதாக மீட்டெடுத்தனர் . அவற்றுள் கிடைத்த போட்டோக்கள் அந்த போனை பயன்படுத்தியவர்களின் அந்தரங்க போட்டோக்களாக இருந்தது .


எனவே அடுத்த முறை உங்கள் போனை விற்கும் போது ஒருமுறை இருமுறை யோசித்து பாருங்கள் . மெமரி கார்ட்டை ஒருபோதும் விற்காதீர்கள் . மெமரி கார்ட் உங்களுக்கு தேவை இல்லாததாக இருந்தால் அவற்றை உடைத்து தூக்கி எறியுங்கள் . போனில் போட்டோக்களை சேவ் செய்வதை நிறுத்துங்கள் . முடிந்த வரை மெமரி கார்டில் பதிவு செய்யுங்கள் .  சிறந்த பாதுகாப்பு உங்கள் அந்தரங்களை போட்டோ எடுப்பதை நிறுத்துங்கள் .  

மக்களவையில் மோடிக்கு புதிய பதவி




பாராளுமன்றத்தில் மோடிக்கு புதிய பதவி தரப்பட்டு உள்ளது.  பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். துணை தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இங்கு தலைமை கொறடாவாக வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

மாநிலங்களவையில் பாரதிய ஜனதாவின் குழு தலைவராக அருண் ஜெட்லி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இங்கு தலைமை கொறடாவாக பிரகாஷ் ஜவடேகரும் ,துணை கொறடாவாக சந்தோஷ் பங்வாரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள்.

ஐபோன் வைத்து இருந்தால் நமது தேசத்தின் பாதுகாப்புக்கு ஆபத்தாம்

ஐபோன் வைத்து இருந்தால் நமது தேசத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று புது தகவலை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளது சீனா. இந்த ஐபோனை பயன்படுத்துவோர்களை அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று எளிதல் டிராக் செய்து விடலாம் என்று கூறி உள்ளார்கள். இதற்கு முக்கிய காரணம் அதில் உள்ள பிரிக்வன்ட் லோகேஷன்ஸ் என்னும் வசதி தான். அதன் மூலம் எல்லா டேட்டாக்களையும் நாம் கைப்பற்றிவிட முடியும் .



இந்த வசதி ஐஓஎஸ் 7 இயங்குதளத்தில் மட்டுமே உள்ளது. இவை 2013 மாடல்களில் இருந்து வர தொடங்கி உள்ளது. சீனாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து ஆப்பிள் நிறுவனம் இன்னும் எந்த தகவலும் கூறவில்லை.

ஏற்கனவே எல்லா நாடுகளையும் உளவு பார்த்து வரும் அமெரிக்காவிற்கு இந்த புது டெக்னாலஜி வேறு உதவியாக இருக்கும்.

ஒரு நாள் போட்டிகளில் அதிவேக சதங்கள் , டி காக் புதிய சாதனை

ஒரு நாள் போட்டிகளில் வேகமாக 5 சதங்கள் அடித்தவர் என்னும் புதிய சாதனையை படைத்து உள்ளார் தென் ஆப்பிரிக்க வீரர் குவின் டன் டி காக். இவர் 19 ஒரு நாள் போட்டிகளில் இந்த சாதனையை பெற்று உள்ளார். இலங்கைக்கு எதிரான போட்டியில் 127 பந்துகளில் 128 ரன்கள் எடுத்தார். இவருக்கு இப்போது தான் 21 வயது ஆகிறது.

இதற்கு முன் இந்த சாதனை இலங்கை வீரர் உபுல் தரங்கா வசம் இருந்தது. அவர் 28 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இந்த சாதனை பெற்று இருந்தார். இப்போது இலங்கைக்கு எதிரான போட்டியிலையே இந்த சாதனை முறியடிக்கப்பட்டது.  இந்திய வீரர் ஷிகர் தவானும் 28 போட்டிகளில் 5 சதங்களை பெற்று இருந்தார்.

இளம் வீரரான அவருக்கு இன்னும் பல சாதனைகள் காத்து இருக்கிறது.



வீட்டிற்குள் நுழைந்த குடிகாரனை அடித்த , அப்பாவின் செயலிற்காக மகளை கற்பழிக்க உத்தரவிட்ட பெரியவர் !!



இந்தியாவில் கிழக்கு போகோரா மாவட்டத்தில் தந்தை குடித்து விட்டு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்தவரை அடித்ததால் , அவருடைய மகளை கற்பழிக்கும் படி ஊர்ப் பெரியவர் தண்டனை கொடுத்துள்ளார் . இவர் எல்லாம் ஊர்ப் பெரியவரா ??



ஒரு நாள் இரவில் குடிகாரன் குடித்துவிட்டு தன்னுடைய பக்கத்து வீட்டிற்குள் புகுந்து  அங்கு இருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றான் . இதனைக் கண்ட அந்த பெண்ணின் கணவன் அவனை அடித்து துரத்தி விட்டார் . அவன் இதனை அந்த ஊர்ப் பெரியவர்களிடம் சென்று தெரிவித்தான் . 

அந்த கணவரின் நடவடிக்கைக்கு தண்டனை கொடுக்கும் விதமாக அவருடைய பத்து வயது மகளை கற்பழிக்க உத்தரவிட்டார் அந்த பெரியவர் . ஊர் மக்கள் முன்னிலையில் அந்த சிறுமியை இழுத்துச் சென்று அந்த சிறுமியை பாலியல் வன்முறை செய்தான் அந்த குடிகாரன் . ஊர் மக்கள் தங்களுக்கும் இந்த நிலைமை வந்து விடுமோ என்ற பயத்தில் இந்த கோர சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர் .

ரத்த வெள்ளத்தில் கடந்த அந்த சிறுமியை அவரின் அப்பா மற்றும் அம்மா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் . காவல்துறையிடம் பூகார் ஒன்றை கொடுத்துள்ளனர் . காவல் துறையினர் அந்த பெரியவரையும் அந்த குடிகாரனையும் கைது செய்துள்ளனர் . 

இந்த சம்பவத்தை எழுதும் பொதே நெஞ்சில் ஒரு தடுமாற்றம் ஏற்படுகிறது . அந்த பத்து வயது சிறுமிக்கு என்ன தெரிந்து இருக்கும் . நம்மை பாலியல் கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள் என்பது தான் விளங்குமா . தன்னுடைய மனைவியை சீண்டினால் எந்த ஆண் தான் பார்த்துக் கொண்டு இருப்பான் . சீண்டிய குடிகாரனை விட்டுவிட்டு , மீண்டும் அவனுக்கே அந்த கணவனை பழிவாங்கும் அதிகாரம் கொடுக்க அந்த பெரியவர் யார் ?? ச்சீ .. இவரெல்லாம் பெரியவரா .  

பாலா படத்தில் நடிகை ஆகும் " சூப்பர் சிங்கர் " பிரகதி !!



தன்னுடைய அழகிய குரலில் நம் மனதை கவர்ந்தவர் சுப்பர் சிங்கர் பிரகதி . இவர் பாலாவின் படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையில் தன்னுடைய முதல் பாட்டை பாடி சினிமாவிற்குள் நுழைந்தார் . இப்போது இயக்குநர் பாலாவின் படத்தில் நடிக்க இருக்கிறார் .


பாலா இயக்கத்தில் சசி குமார் நடிக்கும் படம் தாரை தப்பட்டை . இதில் சசிகுமார் ஒரு நாதஸ்வர கலைஞராக வருகிறார் . அதில் சசிகுமாரின் தங்கை ஒரு நாட்டுப்புற பாடகி . அந்த தங்கை வேடத்தில் தான் பிரகதி நடிக்க இருக்கிறார் . இதை இவர் தன்னுடைய இணைய பக்கத்தில் தெரிவித்து இருந்தார் .


வாழ்த்துக்கள் பிரகதி !! ஆனால் பாலா அவர்களின் படத்தில் நடிப்பது அவ்வளவு எளிது அல்ல என்பதை பிரகதி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் .


நடிகருடன் செல்பி எடுக்க மேலாடை இல்லாமல் ஓடி வந்த பெண் !!



ஹாலிவுட்டின் பிரபல நடிகர் வில் ஸ்மித் . இவர் முதலில் பாடுவதில் தொடங்கி பின்னர் நடிக்க ஆரம்பித்தார் . இவருக்கு ரசிகர்கள் ஏராளம் .



இவர் தனது விடுமுறையை கழிக்க இபிசா நதிக் கரைக்கு வந்தார் . அப்போது தீடிரென அவருடைய ரசிகர்கள் அவருடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொள்ள அவரை சூழ்ந்தனர் . அதில் ஒரு பெண் மேலாடை எதுவும் அணியவில்லை . இதனை எல்லாம் பொருட்படுத்தாத இவர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார் . பின்னர் போட்டோ எப்படி இருக்கிறது என்றும் பார்த்தார் .


ரசிகராக இருக்கலாம் அதற்காக அவருடைய ஞாபகத்தில் மேலாடை கூட அணியாமலா போவது ??

1,300 தமிழ் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்தது கேரள அரசு !!


கேரளாவின் தமிழர்கள் அதிகம் வாழும் இடங்களில் பணிபுரியும் , 1300 தமிழ் ஆசிரியர்களை கேரள அரசு பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது .

கேரளாவின் தேக்கடி உள்ளீட்ட பகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர் . எனவே  அங்குள்ள தமிழ் பிள்ளைகள் தமிழை கற்கும் வண்ணம் 1300 தமிழ் ஆசிரியர்களை   இங்குள்ள தமிழ் மக்களின் கோரிக்கையின் படி கேரள அரசு நியமித்தது . இப்போது திடீரென அங்கு இருக்கும் அனைத்து தமிழ் ஆசிரியர்களும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது .

தீடிரென்று இந்த அறிவிப்பு வெளியானதால் அங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர் . இதனால் அந்த 1300 ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி உள்ளது . அந்த ஆசிரியர்களின் எதிர்காலத்தை சிறிதும் ஆராயாமல் , முடிவு எடுத்துள்ள கேரள அரசின் இந்த முடிவு கடும் கண்டனத்துக்குரியது .

தமிழக அரசு கேரளாவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உடனடியாக குரல் கொடுக்க வேண்டும் என்றும் , தமிழக அரசு கேரள அரசுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்த முயற்சி செய்ய வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது .

இந்தியாவில் வருகிறது உலகின் உயரமான இரயில்வே பாலம் !!



உலகின் உயரமான் இரயில்வே பாலத்தைக் கட்ட ஹிமாலயாஸில் இந்திய பொறியாளர்கள் முயற்சித்து வருகின்றனர் . இந்த பாலம் ஈபிள் டவரை விட 35 மீட்டர் உயரமானதாக இருக்கும் . இந்த பாலத்தின் கட்டிட பணிகள் 2016 க்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .

ஆர்ச் போன்று அமைப்பு உடைய இந்த பாலம் செனாப் நதி மீது கட்ட உள்ளனர் . இந்த பாலம் வடக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பகுதிகளை இணைக்க பயன்படும் . இந்த பாலம் கட்டி முடிக்கப்படும் போது 359 மீட்டே உயரத்தில் இருக்கும் . இதன் மூலம் இதுவரை உயரமான இரயில்வே பாலமாக இருக்கும் சீனாவின் பெய்பாஞ்சியாங்க் பாலத்தின் சாதனையை முறியடித்து விடும் .



2002 இல் தொடங்கப்பட்ட இந்த திட்டம் , அதிக காற்றின் காரணமாகவும் பாதுகாப்பு கருதியும் 2008 ஆம் ஆண்டில் நிறுத்திவைக்கப்பட்டது . பின்னர் 2010 ஆம் ஆண்டில் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டது . இந்த திட்டத்தை முடிக்க 92 மில்லியன் டாலர்கள் செலவாகும் என கணித்துள்ளனர் .


ஜெர்மணி உலக கோப்பையை வெல்லும் என 20 ஆண்டுகளாக விஸ்கி பாட்டிலுடன் காத்து இருக்கும் இந்திய ரசிகர் !!!


கால்பந்து  உலக கோப்பை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது . இறுதிப் போட்டியில் ஜெர்மணியும் அர்ஜெண்டினாவும் மோத உள்ளனர் . இந்த போட்டிக்காக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர் .

ஆனால் இந்திய ரசிகர் ஒருவரோ கடந்த 20 ஆண்டுகளாக ஜெர்மணி கோப்பையை வெல்லும் என காத்து இருக்கிறார் .

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் போரோ என்பவர் 53 வயது வர்த்தகர் . இவர் 1994 ஆம் ஆண்டு உலக கோப்பையை வெல்லும் என ஒரு விஸ்கி பாட்டில் வாங்கினார் . ஆனால் அந்த தொடரில் காலிறுதிப் போட்டியில் பல்கேரியா அணியுடன் தோல்வியைச் சந்தித்து தொடரில் இருந்து வெளியேறியது . இதனால் மிகுந்த வேதனை அடைந்த அவர் அந்த விஸ்கி பாட்டிலை அவரது வீட்டு தோட்டத்தில் புதைத்து வைத்தார் . மீண்டுல் உலக கோப்பையை ஜெர்மணி வென்றால் தான் அதனை எடுக்க வேண்டும் என்று நினைத்தார் .


இப்போது அவர் கூறுகையில் , " 20 ஆண்டுகளுக்குப் பின் இப்போதைய ஜெர்மணி அணியின் ஆட்டம் என்னை அந்த விஸ்கி பாட்டிலை வெளியே எடுக்க வைத்துள்ளது . ஆனால் நண்பர்கள் அதை ஏலத்தில் விடுமாறு கூறுகின்றனர் " என்றார் .



இவர் 2002 ஆம் ஆண்டு ஜெர்மணி பைனலில் தோற்றதில் இருந்து குடிப்பதை நிறுத்தி விட்டார் .

இவர் இந்த ஆண்டில் அந்த விஸ்கி பாட்டிலை குடிப்பாரா ?? பொறுத்து இருந்து பார்ப்போம் .

ரோனால்டோவை போல் மெஸ்ஸிக்கு தனி திட்டம் வைத்து இருக்கும் ஜெர்மனி





உலக கோப்பை இறுதி போட்டி நாளை நடக்க உள்ளது. இதில் ஜெர்மனி அணியும், அர்ஜென்டினா அணியும் மோத உள்ளன. இரு அணிகளுமே சம பலம் வாய்ந்த அணிகள். யார் வெற்றி பெறுவார் என்று கணிப்பதே கடினம். ஜெர்மனி ஆரம்பம் முதலே வலுவான அணியாக உள்ளது. அர்ஜெண்டினா அணி ஒவ்வொரு ஆட்டமாக தனது ஆட்டத்திறனை மேம்படுத்தி கொண்டே வருகிறது. இவர்கள் இருவரும் இறுதி ஆட்டத்தில் மோதுவது இது 3 வது முறை , இதற்கு முன் 1986 இல் அர்ஜெண்டினாவும், 1990 இல் ஜெர்மனியும் வென்றன .

இந்த இறுதி போட்டியில் ஜெர்மனி அணி மெஸ்ஸிக்கு என தனி ரகசிய திட்டம் வைத்து உள்ளார்கள். நெதர்லாந்து அப்படி செயல்பட்டதால் தான் மெஸ்ஸியால் கோல் அடிக்க முடியவில்லை. ஜெர்மனி அணி இதற்கு முன் லீக் ஆட்டத்தில் ரோனால்டோவிற்கு எதிராக தனி திட்டம் உருவாக்கி அதனை செயல்படுத்தி வெற்றியும் கண்டார்கள். அதே போல் இந்த திட்டம் வெற்றி பெறுமா என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

யார் வெற்றி பெற்றாலும் ரசிகர்களுக்கு இந்த ஆட்டம் விருந்தாக அமையும்.

எலி பிடிப்பதில் மெகா ஊழல் : பெருச்சாளிக்கு 10 ஆயிரம், சிறிய எலிக்கு 5 ஆயிரம்





பெங்களுர் மாநகராட்சியில் எலி பிடிப்பதில் ஒரு ஊழல் நடந்து உள்ளது. அந்த மாநகராட்சியில் உள்ள மல்லேஸ்வரம் என்னும் பகுதியில் உள்ள மாசு கட்டுபாடு வாரியத்தின் கிளை அலுவலக கட்டிடம் உள்ளது. இது 2 ஆண்டுகளாக பயன் இல்லாமல் இருந்தது. அதனால் இதனை த்டுப்பூசி, போலியொ சொட்டு மருந்து போடுவது, சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு பயன்படுத்தி வந்தார்கள். அங்கே எலி தொல்லைகள் அதிகமாக இருந்தது. அங்கு வந்த குழ்ந்தைகளை கடித்தது, மருந்துகளை சேதப்படுத்தியது. என்வே அதனை பிடிப்பதற்கு மாநகராட்சி உத்தரவிட்டது.

இது வரை எத்தனை எலிகள் பிடிக்கப்பட்டு உள்ளது என அந்த பகுதியின் கவுன்சிலர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டார். அதில் 3 மாதத்தில் 20 எலிகள் பிடிக்கப்பட்டு உள்ளதாகவும். அதற்காக 20 இலட்சம் செலவு ஆனதாகவும் கூறி உள்ளார்கள். அதாவது ஒரு எலியை பிடிப்பதற்கு 10 ஆயிரம் ஆகி உள்ளது. அந்த மாநகராட்சியில் உள்ள அனைத்து எலிகளையும் பிடிப்பதற்கே 20 இலட்சம் தான் செலவு ஆகி உள்ளது.

எலி பிடிப்பதில் கூட ஊழல் செய்யும் அதிகாரிகளே யு ஆர் கிரேட் !!

போதையில் ஆடையில்லாமல் நடு ரோட்டில் யோகா செய்த பெண் கைது !!



அமெரிக்கா நாட்டின் ப்ளோரிடா மகாணாத்தைச் சார்ந்தவர் , மைகேல் கெர்னாக் என்னும் பெண்மனி . இவருடைய வயது 51 .

இவர் ரோட்டில் சென்று கொண்டு இருக்கும் போது , தீடிரென தனது ஆடையைக் கழட்டி கீழே போட்டுவிட்டு யோகா செய்ய தொடங்கினார் . யோகா செய்து கொண்டே தனது ஆடைகளை  கழட்டினார் .

இதனால் அங்கே போலிசார் வந்து அவரை கைது செய்தனர் . அவருடைய காரை ஆராய்ந்து பார்த்ததில் அதில் ஹெராயின் போதை ஊசியும் மற்ற போதைப் பொருட்களும் இருந்தனர் .

யோகா பயிற்சி நல்லது தான் , அதற்காக நடு ரோட்டில் ஆடையில்லாமலா செய்வது .

ஏ.ஆர்.ரகுமான் தயாரிப்பாளராக புது அவதாரம் எடுக்கிறார்





இந்தியாவிலையே சிறந்த இசையமைப்பாளர் யார் என்று இப்போது உள்ள தலைமுறையினரிடம் கேட்டால் அவர்களில் பெரும்பாலானோர் கூறும் பதில் ஏ.ஆர்.ரகுமான் ஆகும். அந்த அளவிற்கு தனது இசையின் மூலம் ரசிகர்களை கட்டி போட்டு உள்ளார். இவரிடம் உள்ள சிறப்பு இவர் இசையமைக்கும் பாடல்கள் இவரது சொந்த இசையாக இருக்கும் ,மற்ற மொழி இசையை தழுவி இருக்காது. ஆஸ்கர் விருது வாங்கி ஒரு இந்தியனாலும் ஆஸ்கர் விருது வாங்க முடியும் என்று இந்தியாவின் பெருமையை உலகிற்கு நிருபித்தார். அவர் இப்போது புதிதாக எடுத்து இருக்கும் அவதாரம் தயாரிப்பாளராக.

இந்தி படம் ஒன்றை அவர் தயாரிக்க உள்ளார். இந்த தகவலை அவர் உறுதி படுத்தி உள்ளார். ஆனால் அவரது முழு கவனம் இசையில் இருந்து திரும்பி விடாது என்றார். தான் ஊரில் இல்லாத நேரத்தில் அந்த தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து கொள்ள ஒரு சிறந்த குழுவை அமைத்து உள்ளதாக கூறி உள்ளார்.  மணிரத்னம், டேனி பாயல் போன்றவர்களோடு பணியாற்றியது அவரது இந்த பணிக்கு உதவியாக இருக்கும் என்று கூறி உள்ளார்.

பல எதிர்ப்புகளுக்கு இடையே அமித் ஷாவின் சர்ச்சைக்குரிய வக்கீல் சுப்ரிம் கோர்ட் நீதிபதி ஆகிறார் !!


கடந்த சில நாட்களுக்கு முன் பாஜக தலைவர் பொறுப்பு அமித் ஷா விற்கு வழங்கப்பட்டது , இப்போது அவருடைய வழக்கறிஞர் உதய் லலித் சுப்ரிம் கோர்ட் நீதிபதி ஆகிறார் . நான்கு பேர் கொண்ட பட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றுள்ளது .

உதய் லலித் அமித் ஷா சார்பாக துளசிராம் பிரஜாபதி மற்றும் சோஹ்ராபுதின் ஷெய்க் ஆகியோரின் போலி எண்கவுண்டர் வழக்கில் அமித் ஷா சார்பாக வாதாடினார் . இதே சமயம் அவரை எதிர்த்து வாதாடிய கோபால் சுப்பிரமணியன் சர்ச்சைக்குரிய முறையில் . இந்த நிதிபதி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார் . இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவின் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா , தன்னுடைய அனுமதி இல்லாமல் கோபால் சுப்பிரமணியன் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறி பரபரப்பு ஏற்படுத்தினார் .

இந்த உதய் லலித் பற்றி நாம் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியவை !!

* மாநில அரசுக்கு ஆதரவாக பினாயக் சென்னை எதிர்த்து ஆஜரானார் .

* சல்மான் கான் மான் வேட்டை வழக்கில் அவருக்கு ஆதரவாக  ஆஜரானார் .

* பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் ஊழல் வழக்கில் அவர் சார்பாக  ஆஜரானார் .

* முன்னால் கிரிக்கெட் வீரர் மற்றும் பாஜக உறுப்பினர் நவரோஜித் சிங் சித்து ஆட்கொலை வழக்கில் அவர் சார்பாக ஆஜரானார் .

* கருப்பு பண புகழ் ஹாசன் அலி சார்பாகவும் ஆஜரானார் .

* இவர் 2ஜி வழக்கிலும் சிறப்பு அரசு வழக்கறிஞராக  ஆஜரானார் .

* மேலும் ஜெனரல் வி.கே சிங் , தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பாகவும் ஆஜரானார் .

* மேலும் வழக்கறிஞராக இருந்து நீதிபதியாக உயர்த்தப்பட்ட ஆறாவது வழக்கறிஞராக இவர் இருப்பார் . 
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media