BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 12 November 2014

தமிழர் பண்பாடு : மெட்டி அணிவது ஏன்?


பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணியவேண்டும். ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்

பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்

சுத்தமான தேனை கண்டறிய எளிய வழிமுறை



ஒன்று : கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம்.

இரண்டு : எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம்.

மூன்று : ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம்.

நான்கு : பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது!

இந்த நான்கு முறையுமே நல்ல தேனைக் கண்டுபிடிக்க நடைமுறைக்கு ஒத்துவரவில்ல என்றால், தூய தேனைக் கண்டுபிடிக்க இன்னுமொரு சோதனை முறை உண்டு:

1. நல்ல மணலில் ஓரிரு சொட்டு தேனைச் சொட்டவும்.
2. ஒரு நிமிடம் காத்திருக்கவும்.
3. குனிந்து தேனை வாயால் ஊதவும்.

தேன் மட்டும் உருண்டோடினால் அது தூய தேனாம்.மணலின் உள்ளே இறங்கி விடுவது போலி/கலப்படம் என்றறிக!

தேன் மகிமை : உடல் மெலிந்தவர்கள் தேனில் பேரீச்சம்பழத்தை ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் சதை பிடிக்கும். அல்சர் நோய் குணமாக தினமும் சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டி தேனைச் சாப்பிட்டு வர வேண்டும். அரை அவுன்ஸ் தேனுடன் அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்த சுத்தியும், ரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத்தளர்ச்சியும் நீங்கி விடும்.என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புபவர்கள் தினமும் தேனை அருந்த வேண்டும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடலாம்.

தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி குணமாகும்.தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பிக்கலாம். தேனும், வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும். ஊளைச்சதை குறையும். உடல் உறுதி அடையும்.சூடான நீரில் ஒரு தேக்கரண்டி இஞ்சிச்சாறு, எலுமிச்சைச் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்தீர்களானால் நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், தும்மல் போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கும் மருந்து ரெடி. அடிக்கடி சளி பிடித்தால் இளஞ்சூடான பாலில் சிறிது மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினமும் பருகி வர நல்ல பலன் தெரியும். உடல் மெலிந்தவர்கள் தினமும் பாலில் தேன் கலந்து சாப்பிட்டு வர உடல்வாகு சீராகும்.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று முதல் மழை பெய்யும்



வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் புதன்கிழமை முதல் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்தார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியவுடன் உருவான சில காற்றழுத்த தாழ்வு நிலைகளால் தொடர் மழை பெய்தது. அதன் பிறகு சில நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவியது. இந்த நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வங்கக் கடலில் உருவாகியுள்ளதால், மழை தொடர வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியது: தென்கிழக்கு வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த தாழ்வு நிலை தமிழகம் நோக்கி நகர வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக புதன்கிழமை முதலே தமிழகத்தில் மழை தொடங்கும். இந்த மழை மேலும் சில நாள்களுக்கு தொடரும் என்றார் அவர்.வானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுவையில் ஆங்காங்கே புதன்கிழமை கனமழை பெய்யும். சென்னையை பொருத்தவரையில் வானம் மேக மூட்டமாக இருக்கும். மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை பெய்யும்.இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கோத்தகிரியில் 80 மி.மீ. மழையும், உடுமலைபேட்டையில் 60 மி.மீ. மழையும் பெய்துள்ளது. குன்னூர் (50 மி.மீ.), சிவகிரி, ஒரத்தநாடு, மன்னார்குடி, போடி (30 மி.மீ.), தென்காசி, கொடைக்கானல், கேட்டி (20 மி.மீ.), பெரியகுளம், சாத்தான்குளம், பொள்ளாச்சி, ஆத்தூர், பவானி, செங்கோட்டை, வால்பாறை (10 மி.மீ.) ஆகிய பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

ஜப்பானில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியிருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் டோக்கியோ நகரில் கட்டடங்கள் குலுங்கின. இருப்பினும் உயிரிழப்பு, சேத மதிப்பு குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.

குடும்ப நல அறுவைச் சிகிச்சை : 11 பெண்கள் சாவு




In yet another case of alleged negligence at government-run health camps, eight women have died and 50 others hospitalized after botched up sterilization surgeries in Takhatpur, Bilaspur. According to reports, Janaki Bai (30), the first casualty in the case, had undergone sterilization at the health camp on Saturday and she fell ill soon after. Her condition deteriorated badly within 24 hours of the surgery and she was taken to Bilaspur district hospital where she succumbed on Monday morning.Five of the other 50 women admitted to the hospital also succumbed to their ailments late on Monday evening. All the victims had similar symptoms, vomiting and acute pain in abdomen, and 50 of them are presently under treatment at various health centres, 30 reportedto be in critical condition.Four health officials, including chief medical health officer of Bilaspur, have been suspended.

சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் அரசு ஏற்பாடு செய்திருந்த குடும்ப நல முகாமில், அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 11 பெண்கள் உயிரிழந்தனர். 49 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பிலாஸ்பூர் சுகாதாரத் துறை அதிகாரி உள்பட 4 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்து பிலாஸ்பூர் மாவட்ட ஆட்சியர் சித்தார்த் கோமல் பர்தேசி, செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பிலாஸ்பூர் மாவட்டம், பெந்தாரி கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், சத்தீஸ்கர் மாநில அரசு சார்பில் கடந்த சனிக்கிழமை குடும்ப நல அறுவைச் சிகிச்சை முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அந்த முகாமில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 83 பெண்கள் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டனர். அதன்பிறகு, அவர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு சனிக்கிழமை இரவு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அடுத்த சில மணி நேரத்தில் பெரும்பாலான பெண்களுக்கு வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதால், அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பிலாஸ்பூர் மாவட்ட மருத்துவமனை, அப்போலோ மருத்துவமனை ஆகியவற்றில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்றவர்களில் திங்கள்கிழமை 2 பேரும், செவ்வாய்க்கிழமை 9 பேரும் உயிரிழந்தனர். இறந்தவர்கள் அனைவரும் 32 வயதுக்கு உள்பட்டவர்கள். மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர்.இதுதொடர்பாக சுகாதாரத் துறை இணை இயக்குநர் அமர்சிங், செய்தியாளர்களிடம் கூறுகையில், "அறுவைச் சிகிச்சையின்போது அதிக ரத்த இழப்பு அல்லது நச்சுத் தொற்று காரணமாக, பெண்கள் இறந்திருக்கலாம்; பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்' என்றார்.ரமண் சிங் நேரில் ஆய்வு: இந்நிலையில், சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங், செவ்வாய்க்கிழமை மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் பெண்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media