BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 11 July 2014

விரைவில் மோடி - ஓபாமா சந்திப்பு நடைபெற உள்ளது !!


இன்று அமெரிக்க அதிபர் ஓபாமா இந்திய பிரதமர் மோடியை அமெரிக்காவிற்கு வருகை தருமாறு கேட்டார் . அந்த சந்திப்பிற்கு மோடியும் ஒப்புதல் அளித்துள்ளார் .

மோடிக்கு அழைப்பு விடுத்த ஓபாமா , மேலும் அவருடன் இணைந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த தான் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார் . இதனையடுத்து அழைப்புக்கு நன்றி தெவிரித்த மோடி , இந்த சந்திப்பு இரு நாடுகளுக்குமான உறவில் ஒரு புது உத்வேகத்தை பிறப்பிக்கும் என்றார் .

ஓபாமாவின் இந்த கடிதத்தை மாநில துணை செயலாளர்  வில்லியம் பர்ன்ஸ் என்பவர் மோடியிடம் அளித்தார் .

இந்த சந்திப்பு வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கிறது .

ரஜினியின் பெயரை பச்சை குத்தி கொண்ட அவரது மகள்


ரஜினி நடித்து தற்போது வெளிவந்து வெற்றி பெற்ற படம் கோச்சடையான். இந்த படத்தை இயக்கியவர் அவரது மகள் சவுந்தர்யா . முதல் படமே வெற்றி பெற்றது. அடுத்த படம் குறித்து அவர் எந்த தகவலும் கூறவில்லை. இந்நிலையில் தனது தாய் தந்தையின் பெயர்களை தனது கைகளில் பச்சை குத்தி உள்ளார்.



தனது தாய் தந்தை மீது அவர் கொண்டுள்ள அளவு கடந்த பாசத்தை வெளிப்படுத்தவே இவ்வாறு செய்ததாக கூறினார்.

பச்சை குத்தினால் தான் பாசம் இருக்கிறது என்றில்லை , ஆனால் தங்கள் பொழுதுபோக்கு காதலர்களின் பெயர்களை பச்சை குத்துவதற்கு இது எவ்வளவோ மேல்.

3 ஆண்டுகள் பிணத்துடன் வாழ்க்கை நடத்தி வந்த பெண்





அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வாழ்ந்து வந்தார்கள் சாவா ஸ்ட்ரின்னும் அவரது தாயாரான சூசி ரோசெந்தாலும். மகளுக்கு 28 வயதும், தாய்க்கு 61 வயதும் இருந்தது. அந்த தாயார் கடந்த 2011 ஆண்டு அன்று இறந்து விட்டார். அவரது தாயார் மீது உள்ள பாசத்தினால் அவரை புதக்கவோ எரிக்கவோ அவரது மகளுக்கு மனம் வரவில்லை. அதனால் பிணத்தை வீட்டிலையே வைத்து விட்டார்.


 அவர் உயிருடன் இருப்பது போல கற்பனை செய்து கொண்டார். அவருக்கு உணவு வைப்பது , அவருடன் படுத்து உறங்க்குவது என 3 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். ஆனால் பிண நாற்றம் அதிகம் வந்ததால் அருகில் உள்ளவர்கள் போலிஸில் புகார் கொடுத்து விட்டார்கள். போலிஸார் அங்கு வந்து பார்த்த போது பிணம் அழுகிய நிலையில் இருந்தது. அவர்கள் பிணத்தை அப்புறப்படுத்தி விட்டு அவரது மகளை மனநல மருத்துவமனையில் சேர்த்து உள்ளார்கள்.

மோடியின் சம்பளம் எவ்வளவு ?? : பிரதமராக அவர் அனுபவிக்கும் சலுகைகள்





உலகிலேயே அதிக வேலை பளு உள்ள பிரதமர்கள் என்று அது இந்திய பிரதமர்கள் தான். அதற்கு முக்கிய காரணம் நம் நாட்டின் மக்கள் தொகை.அப்படிபட்டவர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்னென்ன சலுகைகளை பெறுகிறார் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா.

இந்திய பிரதமருக்கு அடிப்படை சம்பளமாக 50 ஆயிரமும்,செலவினங்கள் படி மாதம் 3 ஆயிரமும், தினசரி படி 2 ஆயிரம் என மாதத்திற்கு 62 ஆயிரமும், தொகுதி மற்றும் அலுவலக படியாக 45 ஆயிரமும் என மொத்தம் ரூ. 1 இலட்சத்து 60 ஆயிரம் மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. இது தான் மோடியின் தற்போதைய ஒரு மாத சம்பளம். இது மட்டும் அல்லாமல் பல சலுகைகள் உள்ளன.

பிரதமருக்கு என தனியாக 5 பி.எம்.டபிள்.யூ கார்கள் உள்ளன. இவை குண்டு துளைக்காத, பெட்ரோல் டேங் வெடிக்காத ,எந்த வாயுவும் தாக்காத கார் ஆகும். பிரதமரை பாதுகாப்பதற்கு என்றே எப்போதும் அவருடன் தனி பாதுகாப்பு படை உடன் இருக்கும் . பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்கு என தனி விமானம் உள்ளது. இதில் அவருக்கு என தனி படுக்கையறை, அலுவலக அறை, தொலைபேசி இருக்கும்.

பிரதமர் ஒய்வு பெற்ற பின் 20000 ஆயிரம் ஒய்வூதியமாக வழங்கப்படும். அவருக்கு என வாழ்நாள் முழுவதும் டெல்லியில் தனி வீடு வழங்கப்படும்.அந்த வீட்டுக்கு வாடகை,மின்சாரம், குடிநீர் என எந்த கட்டணமும் விதிக்கப்பட மாட்டாது.

இத்தனை சலுகைகளை பெறுபவர் நாட்டுக்காக எப்படி உழைக்க வேண்டும். ஆனால் அவர்களே இந்த சுகங்களை மட்டும் அனுபவித்து விட்டு சென்று விடுகிறார்கள்.

 மோடி புதியவரா அல்லது அவர்களை போல் தானா என்று  பொருத்து இருந்து
பார்ப்போம்.

செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று விஜய்யின் கத்தி பட இசை வெளியீட்டு விழா

இளைய தளபதி விஜய் தற்போது நடித்து வரும் படம் கத்தி. இதில் சம்ந்தா நாயகியாக நடிக்கிறார். துப்பாக்கி படத்திற்கு பிறகு விஜய்-முருகதாஸ் என்னும் வெற்றி கூட்டணி இந்த படத்தில் மீண்டும் இணைந்து உள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்டு லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளின் போது வந்து பெரும் ஆதரவை பெற்றது. இந்த படம் விஜய் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளுடன் உள்ளது.



இந்த படம் தீபாவளிக்கு ரீலிஸ் ஆகும் என்று தகவல்கள் வருகின்றன. இந்த படத்தின் இசை வெளீயிட்டு விழா குறித்து தகவல்கள் வந்து உள்ளது. அது செப்டம்பர் 20 ஆம் தேதி லண்டனில் நடைபெற உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன . இதற்காக மொத்த யூனிட்டும் 20 ஆம் தேதி அன்று லண்டன் செல்ல உள்ளார்கள்.

இசை வெளியீட்டு விழாவின் போது அனைத்து பாடல்களும் லைவ்வாக காட்டப்படும். 

தென்னிந்தியாவின் முதல் டெஸ்ட் டியூப் பேபி தாயானார்

தென்னிந்தியாவின் முதல் சோதனை குழாய் குழந்தை என்னும் பெருமையை பெற்றவர் கமலா ரத்தினம். பெண்களுக்கான சிறப்பு மருத்துவரான கமலா செல்வராஜ் என்பவர் 1990 ஆம் ஆண்டு குழந்தையில்லாமல் கஷ்டப்பட்ட ஒருவரை செயற்கை முறையில் கரித்தரிக்க செய்தார். அந்த முறையில் உருவான இவர் , சாதாரண பெண்களை போல் வளர்ந்தார். அவருக்கு திருமணமும் நடந்தது. அவரும் கருவுற்றார். அவருக்கு இப்போது குழந்தையும் பிறந்து உள்ளது.



இவர் தனது 24 வது வயதில் 2.8கிலோ எடை உள்ள அழகிய பெண் குழந்தைக்கு தாயாகி உள்ளார். இந்த குழந்தை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டது. இந்த குழந்தைக்கும் அதே மருத்துவரான கமலா செல்வராஜே பிரசவம் பார்த்தார்.

பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான கோவை "போத்தீஸ்" கட்டிடம், மூடக்கோரி போராடும் ஃபேஸ்புக் பதிவாளர் சாங்கிய ரிஷி

பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான கோவை "போத்தீஸ்" கட்டிடம், மூடக்கோரி போராடும் ஃபேஸ்புக் பதிவாளர் சாங்கிய ரிஷி

ஒரு அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 61 பேரை பலி கொடுத்தோம், ஆனால் இந்த கட்டிடம் பாதுகாப்பாக இல்லை என்று மாநகராட்சி நோட்டிஸ் ஒட்டியும் கோவையில் "போத்தீஸ்" நிறுவனம் கடை நடத்தி வருகிறது, லாபவெறி எத்தனை பேரை பலிவாங்க காத்திருக்கிறதோ? இது தொடர்பாக ஃபேஸ்புக் பதிவாளர் சாங்கிய ரிஷி எழுதிய பதிவும் அதைத்தொடர்ந்து போத்தீஸ் கடையை மூட கோரி போராட மக்களை திரட்டவும் செய்துள்ளார், ஆனால் மெயின்ஸ்ட்ரீம் மீடியாக்கள் இதை கண்டு கொள்ளவில்லை, இது குறித்து அவர் எழுதிய பதிவு கீழே.

கோவை காந்திபுரத்தில் கிராஸ் கட் ரோட்டில் அமைந்துள்ள போத்தீஸ் என்ற பிரமாண்டமான கடைக்கு சென்றிருக்கிறீர்களா? செல்வதாக உத்தேசம் இருக்கிறதா? இந்த செய்தி உங்களுக்கு தான்.

குறிப்பிட்ட இந்தக் கட்டிடம் லீமாஸ் என்ற பெயரில் செயல்பட்டு வந்தது.(லாட்டரி அதிபர் மார்ட்டின் அவர்களின் மனைவி லீமா ரோஸ்). பின்பு கோவை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து முறையான விதிகள் பின்பற்றப் படவில்லை என்று, அந்தக் கட்டிடத்தை சீல் செய்தனர். பிறகு மேல் இரண்டு மாடிகள் இடிக்கப் பட்டது. மாநகராட்சி முடிவை எதிர்த்து இவர்கள் உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவும் பெற்றனர். வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. (எந்த மாற்றமும் செய்யப் படக் கூடாது என்ற உத்தரவு இருந்தும் இவர்கள் உள்ளே மாற்றங்களை செய்திருப்பதாக தி ஹிந்து குறிப்பிடுகிறது)

இந்த நிலையில் இவர்கள் கட்டிடத்தை போத்தீசுக்கு வாடகைக்கு விடுகின்றனர். சொல்லவா வேண்டும்? ஸ்ரீதேவிக்கு அருகில், கிராஸ் கட்டில் இவ்வளவு பெரிய இடம் கிடைத்தால் கசக்குமா? விதிமீறலாவது மண்ணாவது? சிவ கார்த்திகேயனுக்கு கொட்டிக் கொடுத்து விளம்பரத்தில் நடிக்க வைத்தால் மக்கள் வந்து குவியப் போகிறார்கள். கடையை பிரமாண்டமாய் அழகுபடுத்தி வியாபாரத்தை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பொதுமக்களுக்கு இந்தக் கட்டிடத்தில் பாதுகாப்பு இல்லை. நூறு சதவிகித விதிமீறல் இந்தக் கட்டிடத்தில் உள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் , கடையின் சுவற்றிலேயே பெரிய நோட்டீஸ் அடித்து ஒட்டி இருக்கிறார்கள். நம் மக்களுக்கு அதைப் பற்றி பிரச்சினையே இல்லை.
ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு?

பணம் இருந்தால் மக்களை முட்டாள் ஆக்கி விட முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரிய கோடீஸ்வரப் பெரு முதலாளிகள். ஆனால் கோவை மக்கள் அப்படி அல்ல.

இப்போது தான் சில மாதங்கள் முன்பு , அவினாசி ரோட்டில் விதிகளை மீறிய கட்டிடத்தில் நடந்த தீ விபத்தில் உயிர்களைப் பலி கொடுத்தோம். இனி மீண்டும் அந்தத் தவறு நடக்கக் கூடாது.

எங்கள் பாதுகாப்பை நாங்களே பார்த்துக் கொள்வோம். விதிமீறல் கட்டிடத்தை தன் லாப நோக்குக்காக , பொதுமக்கள் புழங்கும் கட்டிடமாக பெரிய வியாபாரத்தை நிகழ்த்தி கோவை மக்களை மதிக்காமல் நடந்து கொள்ளும் இந்த போத்தீசுக்கு கோவை மக்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரம், இதற்காக பொதுவில் கோவை மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் எதிர் பார்க்கிறோம்.

அனைத்து மக்களும் இதில் எங்களோடு உறுதுணையாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

சாங்கிய ரிஷியின் போராட்டத்தை ஆதரிப்போம், இந்த தகவலை ஷேர் செய்யுங்கள்.

பட்ஜெட் : எது விலை குறையுது ?? எது விலை ஏறுது ??


மேற்று பத்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது . இந்த பட்ஜெட்டில் வரிவிலக்கின் மூலம் எந்த பொருட்கள் விலை குறைகிறது என்றும் எந்த பொருட்களின் விலை ஏறுகிறது என்றும் பார்க்கலாம் .


விலை குறையும் பொருட்கள் :


மைக்ரோ இன்சுரன்ஸ் பாலிசி

காலணிகள்

சோப்பு

ஆர்.ஓ. நீர் சுத்திகரிப்பு யூனிட்டுகள்

 எல்.இ.டி. விளக்குகள், எல்.இ.டி. விளக்கு பொருத்தும் பட்டிகள்

 ஸ்போர்ட்ஸ் உறைகள்

 பிராண்டட் பெட்ரோல்

 எச்.ஐ.வி / எய்ட்ஸ் மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள்

 டி.டி.டி பூச்சிக்கொல்லி மருந்துகள்

மொபைல் போன்கள் 

கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் 

பிளாஸ்டிக் பொருட்கள் 


விலை ஏறும் பொருட்கள் :

சிகரெட் 

குளிர்பானங்கள் 

எவர்சில்வர் பொருட்கள் 

எக்ஸ் ரே இயந்திரம் 

விளம்பர கட்டணம் 

இறக்குமதி செய்யப்படு இரும்பு பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப சாதனங்கள் . 



ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கிளாமர் வேடத்தின் மூலம் ரீ என்ட்ரி தருகிறார் ஐஸ்வர்யா ராய்


உலக அழகி ஐஸ்வர்யா ராய் சினிமாவில் நடித்து கொண்டு இருந்த போது தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்து இருந்தார். பின்பு இவர் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மகன் , நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மூன்று ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பிறகு இவர் சினிமாவில் நடிக்காமல் ஒரு சில விளம்பர படங்களில் மட்டும் நடித்து வந்தார். 5 வருட இடைவேளிக்கு பிறகு மீண்டும் அவர் நடிக்க வருகிறார்.



இவர் சஞ்சய் குப்தா இயக்கும் ஜாஸ்பா என்னும் படத்தின் மூலம் திரும்பி வருகிறார். இதில் நாயகனாக ஜான் ஆப்ரகாம் நடிக்க உள்ளார். இது கேங்ஸ்டர் பற்றிய கதை ஆகும். அதனால் ஐஸ்வர்யா ராய் கிளாமர் வேடத்தில் நடிக்க உள்ளார். இதற்காக 8 கிலோ எடையை குறைக்க உள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளிவர உள்ளது.

மார்க் குறைவான மாணவர்களும் இனி கல்விக் கடன் பெறலாம் - சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு !!



12 ஆம் வகுப்பில் , இனி 60% குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களும் தங்களுடைய உயர் கல்விக்காக வங்கிகளிடம் கடன் பெறலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது .

ரவி என்பவரின் மகன் 12 ஆம் வகுப்பில் 59 சதவீத மதிப்பெண்கள் எடுத்து இருந்தார் . அவர் ஐ.ஓ.பி வங்கியில் வங்கிக் கடன் கேட்டு இருந்தார் . 60 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண்கள் இருந்ததால் ,  ஐ.ஓ.பி வங்கி கடன் தர மறுத்தது . இதனால் ரவி உயர்நீதிமன்றத்தில் ரவி மனுதாக்கல் செய்தார் . நீதிமன்றம் கடன் வழங்கலாம் என உத்தரவிட்டது ,இதனை எதிர்த்து  ஐ.ஓ.பி வங்கி மேல் முறையீடு செய்தது .

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் , " பின் தங்கிய சமூகத்தை சேர்ந்தவர்களும் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் மத்திய அரசு , தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடன் வழங்க்ம் திட்டத்தை அறிமுகம் செய்தத்து . அரசின் இந்த திட்டத்தைக் கருத்தில் கொண்டு வங்கிகள் முடிவெடுக்க வேண்டும் .

இதனால் 60 சதவீதத்துக்கு அதிகமாக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு மட்டும் கல்விக் கடன் வழங்குவோம் என்று வங்கிகள் முடிவு செய்யக் கூடாது " என்று தீர்ப்பு வழங்கியது .

மோடியின் புதிய திட்டம் "கணினிமய இந்தியா"




மோடி அரசின் முதல் பட்ஜெட்டில் பாராட்டப்பட வேண்டிய ஒரு திட்டம் "கணினிமய இந்தியா" . இந்த திட்டம் கணினி உள்ளவர்கள் மற்றும் கணினி இல்லாதவர்கள் இடையே உள்ள இடைவேளியை குறைப்பதற்கு ஆகும். இந்த திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களும் பிரான்ட்பான்ட் மூலம் இணைக்கப்பட்டு இன்டெர்னெட் சேவை வழங்கப்படும். இதற்காக கிராம்ப்புற இணையம் மற்றும் தொழில்நுட்ப இயக்கம் என்று ஒன்றை தொடங்க உள்ளார்கள் .இதற்காக ஆரம்ப கட்ட நிதியாக 500 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.


அனைவரும் இணையம் கிடைப்பது என்பது நல்ல திட்டம் தான் . ஆனால் அது பயனுள்ளதாக இருக்க வேண்டும். ஏனென்றால் இன்று இணையத்தால் எத்தனை பேர் முன்னேறி வருகிறார்களே அத்தனை நவர்கள் வாழ்க்கையில் வீணாகி வருகிறார்கள். எனவே அரசு இணையத்தில் சில கட்டுபாடுகளை விதிக்க வேண்டும் .யாருக்கும் பயப்படாமல் சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்போது தான் இந்த திட்டம் உண்மையான் வெற்றி பெறும்.

"கணினிமயம்" என்று நினைத்து உள்ளே போனால் எல்லாம் "கன்னிமயமாக " இருக்கிறது.

அம்மா சொன்னதால் , முதல் இருக்கையில் அமர்ந்து பட்ஜெட் தாக்கலை கவனித்த ராகுல் காந்தி !!!



நேற்று மோடி அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது . பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்ட் போது , பின்னாடி இருக்கையில் அமர்ந்து இருந்தார் ராகுல் காந்தி . அப்போது அருண் ஜெட்லி 5 நிமிட இடைவேளை கேட்டார் . சபாநாயகரும் அதற்கு ஓப்புக் கொண்டார் . அந்த நேரத்தில் , அனைவரும் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டனர் .

அந்த சமயம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி , தன்னுடைய மகன் மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தியை தன்னுடன் வந்து முதல் இருக்கையில் அமரும் படி கேட்டுக் கொண்டார் . இதனால் மீண்டும் பட்ஜெட் தாக்கல் தொடங்கும் போது , ராகுல் முதல் இருக்கையில் காணப்பட்டார் .

பட்ஜெட் குறித்த முக்கிய குறிப்புகளை தீவிரமாக எடுத்தார் . ஏற்கப்னவே ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் தூங்கிய காட்சி இணையத்தில் வெளிவந்து , மிக வேகமாக பரவிக் கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .

சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு 200 கோடி Vs பெண்கள் பாதுகாப்பிற்கு 150 கோடி


நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில் , நாட்டின் ஒருமைப்பாட்டின் விதமாக அமையவுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இரும்பு மனிதருக்கான இந்த சிலை மோடியின் குஜராத் மாநிலத்தில் அமைய உள்ளது. இந்த சிலை உலகிலே உயரமான சிலை என்னும் பெருமையை பெற உள்ளது. இதன் உயரம் 182 அடி ஆகும். இந்த சிலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்த போது அந்த விழாவிற்கு முன்னிலை வகித்தவர் மோடி.



ஆனால் பெண்கள் பாதுகாப்பிற்கு என ஒதுக்கப்பட்டு உள்ளது வெறும் 150 கோடி தான். தினம் தினம் நாம் பத்திரிக்கைகளிலும் செய்திகளிளும் பார்க்கும் செய்தி பெண்கள் கற்பழிப்பு என்பது தான். இதற்கு முக்கியத்துவம் தராமல் எதற்காக ஒரு சிலைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று விமர்சனம் எழுந்து உள்ளது. உலகிலேயே உயரமான சிலை அமைப்பது என்பது பாராட்ட வேண்டிய செயல் தான் ஆனால் அதனை விட நாம் மானுட வளர்ச்சியில் பின் தங்கி இருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு அதற்கு முன்னுரிமை கொடுத்து இருக்க வேண்டும்.

முடிந்து விட்டது என்று நினைத்த ஹாரிபாட்டர் திரும்பவும் வருகிறது !!



ஹாரிபாட்டர் , இந்த பெயரை தெரியாத மக்களை இந்த உலகத்தில் காண்பது அரிது . படிப்பவர்கள் , பார்ப்பவர்கள் என அனைவரையும் ஒரு மேஜிக் பள்ளிக்கு அழைத்து சென்று அந்த பள்ளியில் படிக்கும் ஒரு அனுபவத்தைக் கொடுத்தது . இதனை ஏழு தொடர்களாக ஜெ.கே.ரொவ்லிங் எழுதினார் . கடைசியாக 2007 ஆம் ஆண்டு வெளியானது . பின்னர் ஹாரிபாட்டர் தொடரை நிறுத்தப் போவதாக அறிவித்தார் .

ஆனால் எல்லாரையும் ஆச்சர்ய படுத்தும் விதமாக , நேற்று ஜெ.கே.ரொவ்லிங் தன்னுடய இணைய பக்கத்தில் ஒரு கதையை வெளியிட்டார் , அதிகமான மக்கள் இதனை பார்த்ததால் சிறிது நேரம் அந்த இணையதளம் முடங்கியது .

அன்று வெளியான கதையில் , ஹாரி பாட்டர் ஒரு 34 வயது இளைஞனாக வருகிறார் . அவருடன் அவரின் நண்பர்கர்ளான ரான் மற்றும் ஹெர்மாயினியும் தங்களுடைய பழைய பள்ளியில் , நடக்கும் குயுடிச் போட்டியின் இறுதிப் போட்டியைக் காண வருகின்றனர் . இவ்வாறு கதை நகருகிறது .

முடிந்து விட்டது என்று நினைத்து கொண்டு இருந்த போது திடீரென வெளியானதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் . 
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media