BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 16 September 2014

தன்னுடைய கால்பந்து அணிக்கு ஆதரவு அளிக்கும்படி தனது ரசிகர்களை கேட்டுக் கொண்ட கங்குலி !!



முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி தனது கால்பந்து அணியான அத்லெடிகோ டி கொல்கத்தா அணிக்கு ஆதரவு அளிக்கும் படி தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தார் .

வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி இந்திய கால்பந்து லீக்கான ஐ.எஸ்.எல் தொடங்க உள்ளது . அந்த லீக்கில் அத்லெடிகோ டி கொல்கத்தா என்னும் அணியை கங்குலி வாங்கியுள்ளார் . அவர் கால்பந்தை விட்டு விட்டு கிரிக்கெட் ஆட வந்தார் . ஆனால் இன்னும் தன்னிடம் திறமை குறையவில்லை என்பதை மைதானத்தில் மூன்று கோல்கள் அடித்து நிருபீத்தார் . அவர் முயற்சி செய்த 5 ஷாட்களில் மூன்றை கோல் ஆக்கினார் .

அப்போது அவர் அளித்த பேட்டியில் , " நீங்கள் ஈஸ்ட் பெங்காள் , மோகன் பகான் உள்ளீட்ட கிளப்களின் போட்டிக்கு அதிக அளவில் திரண்டு வருவீர்கள் . அது போல அத்லெடிகோ டி கொல்கத்தா அணிக்கும் உங்கள் ஆதரவை அளியுங்கள் . போட்டிக்கு வாருங்கள் , ஒரு நல்ல கால்பந்து போட்டியை நீங்கள் பார்க்கலாம் . எல்லா அணியும் சமமாகவே இருக்கிறது . ஐ.பி.எல் போட்டிகள் போன்று இதுவும் வெற்றி பெறும் " என்று எதிர்பார்ப்பதாக கூறினார் .


" மோடி அரசின் தேனிலவு காலம் முடிந்து விட்டது " சொல்லுகிறது காங்கிரஸ் !!



இடை தேர்தல் முடிவுகள் பாஜக கட்சி எதிர்பார்த்த அளவு வெல்ல முடியவில்லை . இதை தனக்கு சாதகமாக்கி கொண்ட காங்கிரஸ் , இது மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஒரு நல்ல சகுனம் என்றும் , காவி சக்திகளுக்கு ஒரு அலாரம் அடித்து விட்டது எனவும் கூறினர் .

காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் , " மக்களுடன் மோடி அரசு அனுபவித்து வந்த தேனிலவு காலம் முடிவடைந்து விட்டது . ஆட்சிக்கு வந்த 100 நாட்களிலே மோடி அரசு மக்களின் எதிர்ப்பு அலையை சந்திக்க தொடங்கி விட்டனர் . மோடி அரசு மற்றும் பாஜகவின் செயல்கள் மக்களுக்கு பிடிக்கவில்லை . மோடி அமைதியாக இருக்கும் வேளையில் மோடியின் அமைச்சர்கள் மற்றும் அவரது கட்சியினர் முனைவாக்க அரசியலை மேற்கொள்கின்றனர் . இது மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஒரு நல்ல காலத்தை கொடுத்துள்ளது  " என்றார் .

அவர் உத்தர பிரதேசத்தில் பாஜக கட்சியால் 11 தொகுதிகளில் வெறும் 3 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்ததை சுட்டிக்காட்டி இவ்வாறு கூறினார் .


ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக சுப்பிரமணியன் சுவாமி மீது அவதூறு வழக்கு பதிவு செய்த தமிழக முதல்வர் !!



டிவிட்டரில் தன்னைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பியதாக சுப்பிரமணியன் சுவாமி மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார் .

கடந்த வெள்ளிக் கிழமை அன்று சமூக வலை தளமான டிவிட்டரில் சுப்பிரமணியன் சுவாமி தமிழக அரசு தீலிபனின் நினைவு தினத்தை அனுசரிக்க அனுமதி அளித்ததை டிவிட்டரில் பதிவு செய்து இருந்தார் . இதனையடுத்து முதல்வருக்கு எதிராக அவதுறாக செய்தி பரப்புவதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது .

அவர் போட்ட அந்த பதிவு 181 தடவை ரிடிவிட் செய்யப்பட்டு இருந்தது . மேலும் சுப்பிரமணியன் சுவாமி மீது முதல்வர் இந்த வாரத்தில் பதிவு செய்யும் மூன்றாவது அவதூறு வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது .

மீண்டும் சாதித்தது சியோமி !!3.4 விநாடிகளில் 40,000 மொபைல்களை விற்றது ..



சியோமி நிறுவனத்தின் இரண்டாவது மொபைல் ரெட்மி - 1 எஸ் . சியோமி நிறுவனத்தில் முதல் மொபைல் ஆன எம்.ஐ -3 இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . அதனை தொடர்ந்து வந்த ரெட்மி - 1 எஸ் மொபைலும் மக்களால் அதிகம் விரும்பப்பட்டது . இன்று மூன்றாம் சுற்று விற்பனைக்கு வந்த இந்த மொபைல் 3.4 விநாடியில் 40,000 மொபைல்களை புக்கிங் செய்தனர் .

சியோமி நிறுவனம் இந்திய மக்களின் எதிர்பார்ப்பை நன்றாக அறிந்து கொண்டுள்ளது . மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளையும் கொடுப்பது மட்டும் இல்லாமல் , மக்களால் வாங்கும் வகையில் குறைந்த விலையில் மொபைல் போன்களை விற்கிறது . இப்போது விற்பனை ஆன ரெட்மி- 1 எஸ் மொபைலும் பல வசதிகளை கொண்டுள்ளது .

இதன் தொடுதிரை 4.7 இன்ச் அளவு கொண்டது . கேமரா 8 எம்.பி  பிளாஷ் உடன் . 1 ஜிபி ராம் , மற்றும் 8 ஜிபி இன்டர்நெல் ஸ்டோரெஜ் . 1.6 ஜிகா ஹெர்ட்ஸ் பிராசசர் வசதி .

இந்த மொபைல் பிளிப்கார்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது .

ஈராக்கில் சீரமைப்பு பணிகளை செய்திட 2 இலட்சம் இந்தியர்கள் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளனர் !!



டில்லியில் உள்ள ஷியா நிறுவனம் ஒன்று ஈராக்கில் போர் நடந்த பகுதிகளில் மறு சீரமைப்பு பணிகள் செய்திட இந்தியாவில் மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர் . அந்த நிறுவனத்தின் அந்த அழைப்பை அடுத்து 2 இலட்சம் மக்கள் தொண்டு செய்ய தயாரக இருப்பதாக அந்த நிறுவனத்திற்கு கையெழுத்திட்டுள்ளனர் .

அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஒருவர் கூறுகையில் , " 2 இலட்சம் மக்களிடம் இருந்து மருத்துவர்கள் , செவிலியர்கள் , பொறியாளர்கள் என 6,000 பேரை தேர்ந்தெடுத்து அனுப்ப உள்ளோம் . அவர்கள் அங்கே மறு சீரமைப்பு பணிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள் " என்றார் .

அந்த நிறுவனம் முதலில் 6 பேர் கொண்ட குழுவை ஈராக்கிற்கு அனுப்பி அங்கே உள்ள நிலமையை ஆராய முடிவு செய்துள்ளனர் . பின்னர் இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 6,000 மக்கள் அனுப்பப்படுவர் .

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

"எக்ஸ்ட்ரா செக்ஸ்" க்கு ஆசைப்படும் இந்தியப் பெண்கள் - புரட்டி போடும் கருத்துக்கணிப்பு முடிவுகள்
http://www.satrumun.net/2014/09/indian-women-want-extra.html

தீபிகா படுகோனின் மார்புகள் ஷாருக் கானின் 8 பேக்கை போல் முக்கியமானவை
http://www.satrumun.net/2014/09/deepika-padukones-breast-are-more.html

பாதியில் வெளியேறிய அர்னால்ட்! : 'ஐ' ஆடியோ பங்ஷனை சொதப்பிய ஆர்வக்கோளாறு நடிகர்!
http://goo.gl/lx3AtC

ஓய்ந்தது மோடி அலை, இடைத்தேர்தலில் பல இடங்களில் தோல்வியை தழுவிய பாஜக‌
http://www.satrumun.net/2014/09/modi-wave-gone-bjp-lost-many-places-in.html

இனிமேல் யுடியூபை ஆப்லைனிலும் பார்க்கலாம் !!
http://www.satrumun.net/2014/09/now-you-can-use-youtube-offline.html

உலக நாயகன் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
http://www.satrumun.net/2014/09/kamalhaasan-admitted-in-hospital.html

ரஜினியின் பொறுமை, அர்னால்ட்டின் வருத்தம், விக்ரமின் சாகஸம் : 'ஐ' ஆடியோ பங்ஷன் ஃபுல் அப்டேட்ஸ்!!
http://goo.gl/U65fhT

கத்தி படத்தின் புதிய ஸ்டில்கள் வெளிவந்துள்ளது
http://www.satrumun.net/2014/09/latest-stills-of-kaththi-movie.html

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு மீண்டும் ஒத்தி வைப்பு
http://www.satrumun.net/2014/09/judgment-postponed-in-jayalalitha-case.html

நித்தியானந்தாவுக்கு மீண்டும் ஆண்மை பரிசோதனை நடந்தது
http://www.satrumun.net/2014/09/nithyaanantha-undergoes-test.html

அனைவரும் விமானத்தில் பயணம் செய்வதற்காக ஸ்பைஸ் ஜெட்டின் புதிய ஆஃபர்
http://www.satrumun.net/2014/09/new-offer-from-spice-jet.html

குழந்தைகளை வளர்க்கும் முறை, இதை படித்தாவது நாம் குழந்தைகளை இப்படி வளர்ப்போமா?
http://www.satrumun.net/2014/09/blog-post_769.html

6000 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மாபெரும் சுனாமி வருவதற்கான வாய்ப்பு
http://www.satrumun.net/2014/09/6000.html

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நூல்கள் சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்கம்
http://www.satrumun.net/2014/09/blog-post_72.html

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை நெருங்கியது
http://www.satrumun.net/2014/09/blog-post_60.html

ஈழத் தமிழர்கள் சிங்களம் கற்க வேண்டும், இந்தியை துணை தூதர் அறிவுரை
http://www.satrumun.net/2014/09/blog-post_87.html

இந்தியா–வியட்னாம் இடையே ஒப்பந்தம்: ஆயுத கொள்முதலுக்கு இந்தியா ரூ.600 கோடி கடனுதவி
http://www.satrumun.net/2014/09/600.html

சேது சமுத்திர திட்டத்துக்காக ராமர் பாலத்தை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை: நிதின் கட்காரி
http://www.satrumun.net/2014/09/blog-post_56.html

உள்ளாட்சி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி பாஜக வழக்கு
http://www.satrumun.net/2014/09/blog-post_77.html

ஷங்கர் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த அர்னால்டு
http://www.satrumun.net/2014/09/arnold-wants-to-act-in-shankar-movie.html

தனுஷிற்காக மேடை ஏறி விருதை வாங்கிய சிம்பு !!
http://www.satrumun.net/2014/09/simbu-getting-award-for-dhanush.html

ஒரு கார் நம்பரை 8.5 லட்சம் கொடுத்து வாங்கிய பணக்காரர்
http://www.satrumun.net/2014/09/industrialists-paid-85-lakhs-for-number.html

ஜம்மு காஷ்மீர் வெள்ளத்தில் இருந்து உயிர் பிழைத்த இந்திய கிரிக்கெட் வீரர்
http://www.satrumun.net/2014/09/cricketer-escapes-from-flood.html

"எக்ஸ்ட்ரா செக்ஸ்" க்கு ஆசைப்படும் இந்தியப் பெண்கள் - புரட்டி போடும் கருத்துக்கணிப்பு முடிவுகள்


பொதுவாக இந்திய பெண்கள் செக்ஸ்சில் அதிக ஈடுபாடு இல்லாதவர்கள், கணவனுக்காக மட்டும் தான் செக்ஸ் உறவு கொள்கிறார்கள், பிள்ளை பேறுக்காக மட்டும் தான் செக்ஸில் ஈடுபடுகிறார்கள் என்று நம்பப்படுவது உண்டு, ஆனால் இந்த நம்பிக்கையெல்லாம் தகர்க்கும் விதமாக சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன.

பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான சி. நீல்சன் மற்றும் இந்தியா டுடே இதழ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் இந்தியப் பெண்கள் செக்ஸ் ஈடுபாட்டில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் என்று தெரியவந்துள்ளது.  இந்திய பெண்களின் செக்ஸ் ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில் இங்கிலாந்து பெண்களுக்கோ செக்ஸை விட கம்ப்யூட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் மூழ்கி கிடப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக உள்ளார்கள்

இந்திய பெண்களில் 70 சதவீதத்தினர் செக்ஸ் என்பது மிகவும் அவசியமானது என்று கருத்து தெரிவித்துள்ளார்கள், புது புது இடங்களில் வெவ்வேறு சூழ்நிலைகளில் செக்ஸ் உறவை அனுபவிக்க விரும்புவதாக 67 சதவீதத்தினர் குறிப்பிட்டுள்ளனர். வெவ்வேறு நிலைகளில் உறவு மேற்கொள்ள வேண்டும் என 20 சதவீதம் பெண்களும், புதிய வகை முன் விளையாட்டுகளில் 24 சதவீதம் பெண்களும் ஆர்வமுடன் உள்ளார்கள்.

57 சதவீத பெண்கள் செக்ஸ் உறவில் மகிழ்ச்சியே முக்கியமானது என்றும் தாங்களும் தங்களது ஜோடியும் இருக்க வேண்டும் என  விரும்புவதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்திலோ நிலைமை தலை கீழ், செக்ஸ் உறவு கொள்வதை விட விடிய விடிய கம்யூட்டர் கேம்ஸ் ஆடுவதிலும் ஃபேஸ்புக், டிவிட்டரில் நேரம் செலவிடுவதையுமே பெண்கள் விடும்புகின்றனர்விரும்புவதாக தெரிவித்துள்ளனர் இங்கிலாந்து பெண்கள்.

தீபிகா படுகோனின் மார்புகள் ஷாருக் கானின் 8 பேக்கை போல் முக்கியமானவை





டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் டிவிட்டர் கணக்கில் இருந்து "தீபிகா படுக்கோனின் கிளிவேஜ் ஷோ" என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஒரு கட்டுரைக்கு இணைப்பு கொடுத்திருந்தது, (தற்போது இந்த டிவிட் நீக்கப்பட்டுவிட்டது) இந்த டிவிட்டை பார்த்த தீபிகா படுகோன் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார், "ஆமாம் நான் பெண், அதனால் மார்பகங்கள் இருக்கின்றன, அதனால் கிளிவேஜ் இருக்கிறது, இதனால் உங்களுக்கென்ன பிரச்சினை"  என்று டிவிட் செய்தார்,

அதைத்தொடர்ந்து "பெண்ணுக்கு மரியாதை கொடுப்பது எப்படி என்பது தெரியாமல், பெண்ணுரிமை குறித்து  பேசாதீர்கள்" என்றும்  கூறினார், "இந்தியாவின் முன்னணி நியூஸ் பத்திரிக்கைக்கு இது தான் நியூஸ் ஆ?" என்றும் குறிப்பிட்டுள்ளார், டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற முன்னணி பத்திரிக்கையை கண்டு அச்சப்படாமல் வெளுத்து வாங்கிய தீபிகா படுக்கோனின் செயலை பலரும் பாராட்டியுள்ளார்கள் .

இந்நிலையில் இந்தியாவில் நடக்கும் பொது பிரச்சனை மற்றும் செக்ஸ் குறித்த கட்டுரைகளை எழுதும் சோபா டி, இந்த விவகாரத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இன்றைய உலகில் இது ஒரு சாதாரண விஷயம். இன்று உள்ள கேமராக்களுக்கு எல்லாம் இவை மட்டும் தெரிகிறது. இதனை ஏன் தீபிகா படுகோன் புரிந்து கொள்ளவில்லை என்று தெரியவில்லை.அவருக்கு நல்ல உடல் உள்ளது. அதனை அவரது ரசிகர்கள் பல்வேறு விதமாக பார்த்து ரசித்துள்ளார்கள்.  படத்தில் மட்டும் தனது உடலை படு கவர்ச்சியாக காட்டும் தீபிகா இதனை மட்டும் ஏன் எதிர்க்கிறார்.

இது ஒரு முக்கியமான செய்தியா என்று தீபிகா கேட்டுள்ளார். ஆமாம் ஷாருக் கானின் 8 பேக்கை போல இதுவும் முக்கியமானது தான் என்று கூறியுள்ளார். 

ஓய்ந்தது மோடி அலை, இடைத்தேர்தலில் பல இடங்களில் தோல்வியை தழுவிய பாஜக‌


நூறு நாளில் சலித்து போன மோடி மோகம், ஏற்கனவே வெற்றிபெற்ற பல இடங்களை இந்த இடைத்தேர்தலில் இழந்தது பாஜக நாடு முழுதும் நடைபெற்ற 32 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காலையில் இருந்தே பாஜக பல இடங்களில் பி தங்கியிருந்தது. கடைசியாக கிடைத்த முடிவுகளின் படி பாஜக தான் ஏற்கனவே வெற்றிபெற்றிருந்த 13 தொகுதிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் உத்திரபிரதேசத்தில் பெரும் வெற்றி பெற்றிருந்த பாஜக தற்போது 7 இடங்களை இழந்து வெறும் 3 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. குஜராத்திலும் இதற்கு முன்பு வெற்றி பெற்றிருந்த 3 இடங்களை காங்கிரசிடம் இழந்துள்ளது.

ஆளுங்கட்சியாக உள்ள ராஜஸ்தானில் கூட 75% இடங்களை காங்கிரசிடம் இழந்துள்ளது பாஜக, அசைக்க முடியாத குஜராத்திலும் 3 இடங்களை இழந்துள்ளது.


இது மோடியின் மீதான மோகம் நூறு நாளில் மக்களுக்கு சலித்துப்போனதையே காட்டுகிறது. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட்டில் எழுதுங்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்




மலையாளத்தில் வெற்றி பெற்ற திரிஷ்யம் என்னும் படம் தமிழில் பாபநாசம் என்னும் பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனும் கவுதமியும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. இதில் கமல் நடித்து வருகிறார். இந்நிலையில் சாப்பிட்ட உணவு அவருக்கு ஒத்துக்காததால் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அதனால் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் அவரது உடல் நிலை சரியானது.

அனைவரும் விமானத்தில் பயணம் செய்வதற்காக ஸ்பைஸ் ஜெட்டின் புதிய ஆஃபர்




ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் புதிய ஆஃபர் ஒன்றை வெளியிட்டு உள்ளது. இது புத்தாண்டுக்கு முந்தைய சிறப்பு விற்பனை என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் விமானத்தில் ரூ. 699 இருந்தால் போதும். நாமும் பயணம் செய்யலாம். இந்த தொகையில் வரி உள்ளிட்டவைகள் சேர்க்கப்பட வில்லை. இதனை செப்டம்பர் 18 ஆம் தேதி இரவு வரை பதிவு செய்து கொள்ளலாம். அடுத்த ஆண்டு ஜனவரி 16 முதல் அக்டோபர் 24 வரை செய்யும் பயணங்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த டிக்கெட்டை ரத்து செய்தால் பணம் திரும்ப கிடைக்காது.

கத்தி படத்தின் புதிய ஸ்டில்கள் வெளிவந்துள்ளது

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் கத்தி. இந்த படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளது. இந்த படத்தின் இசை இந்த மாதம் 18 ஆம் தேதி அன்று வெளிவருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புதிய ஸ்டில்கள் வெளிவந்துள்ளது.







ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு மீண்டும் ஒத்தி வைப்பு


19 ஆண்டுகளாக நடந்து வந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் செப்டம்பர் 20ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது, இந்நிலையில் நேற்று விடுதலைப்புலிகளாலும் காவிரி முல்லைப்பெரியாறு பிரச்சினைகளாலும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி தீர்ப்பு வழங்கும் இடத்தை பரப்பன அக்ரஹாரத்துக்கு மாற்ற வேண்டும் என்று முதல்வர் தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் செப்டம்பர் 20ம் தேதி வழங்க வேண்டிய தீர்ப்பை 27ம் தேதிக்கு மாற்றி இடத்தையும் மாற்றி உத்தரவிட்டுள்ளார்கள், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

# தீர்ப்பா? வரும் ஆனா வராது!

மோடி மோகம் முடிந்தது, இடைத்தேர்தல்களில் தோல்வியை நோக்கி பாஜக, குஜராத்தில் தோல்வி முகம்

மோடி மீதான மோகம் முடிந்தது, இடைத்தேர்தல்களில் தோல்வியை நோக்கி பாஜக, குஜராத்தில் கூட தோல்வி முகம்

நாடு முழுதும் நடைபெற்ற 32 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பல இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது, குஜராத்தில் நடைபெற்ற 9 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்ந்தலில் காங்கிரஸ் 5ல் முன்னிலை வகிக்கின்றது, பாஜக 4ல் மட்டுமே முன்னிலை வகிக்கின்றது.

பீகார், உத்திர பிரதேசத்திலும் முன்பு பாஜக வென்ற தொகுதிகளில் தற்போது பின்னடைந்துள்ளது

தற்போதைய முன்னணி நிலவரம்

குழந்தைகளை வளர்க்கும் முறை

சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய மூன்று வயது குழந்தை, பிரிஜ்ஜிலிருந்து இரண்டு லிட்டர் கோக் பாட்டிலை எடுக்க முயன்ற போது, கை தவறி, கீழே விழுந்து, அதிலிருந்த கோக் முழுவதும் கொட்டி விட்டது. நண்பரின் மனைவி, தன் குழந்தையை கண்டித்து அடிக்கப் போகிறார் என்று நினைத்து, நான் பயந்து கொண்டிருந்தேன்; ஆனால், நடந்ததோ வேறு...

"பளுவை தூக்கறதுக்கு அப்படி தான் முயற்சி பண்ணணும். கொட்டினது பரவாயில்லை. அதில கொஞ்ச நேரம் உன் இஷ்டத்துக்கு விளையாடிக்கோ...' என்றார். குழந்தையும் அதில் கைகளை அலசி விளையாட ஆரம்பித்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, "இதை கொட்டினது யாரோ, அவங்க தான் துடைக்கணும். இந்த சின்ன டவலால கவனமா துடைச்சுடு...' என்று, குழந்தையிடம் டவலை கொடுத்தாள். தன்னிடம் முழுப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்ட பெருமை முகத்தில் ததும்ப, அந்த குழந்தை தரையை சுத்தமாக துடைத்து, பெருமிதத்துடன் அம்மாவைப் பார்த்தது. அதோடு, "இதே பாட்டில்ல குழாயிலிருந்து முழுதும் தண்ணி பிடிச்சு, கொட்டாம பிரிஜ்ஜில கொண்டு வைக்க இப்ப பழகிக்கோ...' என்று சொல்லி, குழந்தையை குழாயின் அருகில் அழைத்துப் போனார்.

அந்த தாயை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன்.

"குழந்தைகளை வளர்க்கும் முறைகளை விளக்கும் ஒரு புத்தகத்தில் படித்ததை, நான் நடைமுறையில் பயன்படுத்துகிறேன். இந்த முறைகளை பின்பற்றுவதால், குழந்தை, தான் செய்த தவறை உணர்கிறது. தவறு செய்தால், துடைப்பது போன்ற தண்டனையை தான் அனுபவிக்க வேண்டும் என்று மென்மையாக குழந்தையை உணர வைக்க முடிகிறது. மீண்டும், அதே தவறை செய்யாமலிருக்க, பெற்றோராகிய நாம் தான் குழந்தையை பழக்க வேண்டும். அதற்கு தான் குழாயில் தண்ணீர் பிடித்து பழகச் சொன்னேன்...' என்று, அவர் விளக்கிய போது, ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகள் வளர்ப்பில் இம்மாதிரி மென்மையான முறைகளை பின்பற்றலாமே என்று தோன்றியது. புத்தகங்களை படித்தால் மட்டும் போதாது... படிக்கும் நல்ல விஷயங்களை, தக்க தருணத்தில் நடைமுறைப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும் என்ற உண்மை புரிந்தது.

6000 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மாபெரும் சுனாமி வருவதற்கான வாய்ப்பு

பனிமலைகள் உருகுவதால் உலகுக்கு ஏற்படப்போகும் ஆபத்து. புவி வெப்பமயமாதலினால் பனிபாளங்கள் பனிமலைகள் உருகி வருகின்றன. பனிக்கட்டிகள் உருகும் போது கடலில் கலக்கும் கடல் நீர் மட்டம் உயரும். ஆனால் மலைகள் பள்ளத்தாக்குகளின் நிலை மாறும். புவி வெப்பமயமாதலினால் கடல் நீர் சூட்டினால் வட கோளார்த்ததிலும் ஆர்டிக் அண்டார்டிக் பகுதியிலும் பனி மலைகளை உருக்குகிறது சொல்லப்போனால் பனிமலைகளை ஸ்வாக செய்து வருகிறது வெப்பமான கடல்நீர். (மேல் புற வெப்பத்தை விடவும் கடலின் சூடு பனியை அதிகமாக உருக்குகிறதாம்) அமெரிக்க புவியியல் புள்ளிவிவர துறையில் பணியாற்றிய இயற்பியலாளர் ராபர்ட் வுட்வேர்ட் 1888 ல் முதல் முதலில் பனிமலைகள் உருகினால் கடல் மட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று தியரியை வெளியிட்டார். அவருக்குப் பின் 100 வருடங்கள் கழித்து வில்லியம் ஃபரேல் மற்றும் ஜேம்ஸ் கிளார்க் இதுபற்றிய மேலும் பல தகவல்களை வெளியிட்டனர். வடகோளார்த்ததில் பனி மலைகள் உருகினால் கடல் மட்டம் பரவலாக உயரும் வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் அதே சமயத்தில் வட கடல் பகுதிகளில் கடல் மட்டம் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கருத்து தெரிவித்தனர், கடைசி பனிக்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை கருத்தில் இவர்களின் ஆய்வு இருந்தது. அப்போதைக்கு இப்போது டெக்னாலஜி வளர்ச்சி கண்டுள்ளது கடலின் மாற்றங்கள் தினமும் கண்காணிக்கப்படுகிறது. ”டைட் கேஜ் (tide gauge)” டேட்டா பராமரிக்கப்படுகிறது. இந்த டேட்டவின் படி புவியில் நூற்றுகணக்கான இடங்களில் கடல் மட்டத்தின் அளவு மெல்ல மெல்ல உயர்ந்து வருவதை உறுதி செய்கிறார்கள். ஆனால் பெரும் நிலப்பரப்புகளில் இந்த மாற்றத்தை உணர்வது சற்று கடினமே....

(கிரீன்லாந்தில்) பனி அதிகமாக உருகாத வரை கடல் மட்டம் நீர் இழுவிசை காரணமாக மேலேயே இருக்கும். சுத்தமாக உருகிவிட்டால் இழுவிசை இல்லாமல் கடல் நீர் உள்வாங்கிவிடும். இந்த படம் கடல் மட்டத்தை பற்றி விளக்குகிறது. அதோடு பனிமலை உருகுவதால் ஏற்படும் நில மாற்றத்தையும் விளக்குகிறது. கடல் நீர் மட்டம் உயர்ந்தால் ஏற்படும் மாற்றங்கள் : முதல் கட்டமாக, கடல் மட்டம் உயரும் போது கடல் நீர் முகத்துவாரங்களின் ஊடாக பயணித்து நன்நீரை உவர்ப்பு நீராக மாற்றும். கடலோர நீர் நிலைகளின் உப்பின் அளவு அதிகரிக்கும். 16000 வருடங்களுக்கு முன் பனி உருகியதால் தான் பல தீவுகள் கடலினுள் மூழ்கியதாக நம்பப்படுகிறது. கிரீன்லாந்தில் உள்ள பனிமலைகள் அணைத்தும் உருகினால் அப்பகுதியில் கடல் மட்டம் 100 மீட்டர்கள் கீழிரங்கும் (உள்வாங்கும்). காற்றின் வேகம் மற்றும் திசைகளில் மாற்றம் பெரும். அதோடு கூட பெரும் புயல்கள் சுனாமி ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. தாழ்வான பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் உண்டு. கடல் நீரோட்டங்கள் மாறிவிடும் (மொத்தத்தில் கடல் நகரும்.) அதனால் உலக அளவில் வெப்ப சலனம் ஏற்பட்டு தட்பவெப்ப நிலையில் மாற்றங்கள் ஏற்படும். (கடல் நீரோட்டங்கள் தான் பூமியின் தட்பவெப்ப நிலையை நிர்ணயிக்கும் பெரிய காரணி) 1990 ஆண்டின் மத்தியத்தில் இருந்து பசிபிக் பெருங்கடல் ஆண்டிற்கு ஒரு சென்டி மீட்டர் உயருவதாக ஹாவாய் பல்கலைகழக ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்னொரு கோணம் கீரீன்லாந்தில் பனிமலைகள் உருகுவதால் அழுத்தக்குறைவு ஏற்பட்டு புவியின் அச்சில் (சாய்மானம்) மாற்றம் ஏற்படும். இது அண்டார்டிக் பகுதியில் ஏற்பட்டாலும் தான். (*பூமி பம்பரம் போல சற்று சாய்ந்தபடி சுழலுவது தெரிந்தது தானே) ஆகவே மரங்களையும் இயற்கையையும் அழிக்க அழிக்க அழிவு இயற்கைக்கு அல்ல, நமக்கு தான் நண்பர்களே....

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நூல்கள் சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்கம்

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், பல்கலைக்கழக 34 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிப்புத் துறையில் 50 சதச் சிறப்புத் தள்ளுபடி நூல்கள் விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது. இந்த விழாவுக்குத் தலைமை வகித்த பல்கலைக்கழகப் பதிவாளர் சே. கணேஷ்ராம் பேசியது: பதிப்புத் துறையில் 450-க்கும் அதிகமான நுல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிவியல், வாழ்வியல் களஞ்சியம் மிகவும் சிறப்பு வாய்ந்தவை என்றார் அவர். துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் செ. சுப்பிரமணியன் பேசியது:

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் அண்ணா பிறந்த நாள், தமிழ்ப் புத்தாண்டு நாளில் என இரு முறை சிறப்பு தள்ளுபடி விற்பனையில் நூல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இப்போது தொடங்கப்பட்டுள்ள 50 சதத் சிறப்புத் தள்ளுபடி விற்பனை அக். 14-ம் தேதி வரை தொடரும். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் சுப்பிரமணியன். நிதி அலுவலர் ஆ.மீ. பார்த்திபன் வாழ்த்துரையாற்றினார். முன்னதாக, பதிப்புத் துறைத் துணை இயக்குநர் பா. ஜெயக்குமார் வரவேற்றார். பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் இரா. முரளி நன்றி கூறினார்.
 
 தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத் துறையில் திங்கள்கிழமை தொடங்கப்பட்ட 50 சதச் சிறப்புத் தள்ளுபடி விற்பனை நிகழ்ச்சியில் நூல்களைப் பார்வையிட்ட பதிவாளர் சே. கணேஷ்ராம், துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் செ. சுப்பிரமணியன் உள்ளிட்டோர்.

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை நெருங்கியது

பெங்களூர் பீனியாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தரைகட்டுப்பாட்டு மையத்தில் இஸ்ரோ அறிவியல் செயலாளர் கோட்டேஷ்வர ராவ், திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

‘‘செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ‘மங்கள்யான்’ விண்கலம் கடந்த ஆண்டு நவம்பர் 5-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இது தனது மொத்த பயண தூரத்தில் 98 சதவீதத்தை கடந்து உள்ளது. இந்த விண்கலம் தற்போது செவ்வாய் கிரகத்தை நெருங்கியுள்ளது. விண்கலம் செலுத்தப்பட்ட பின் 6 முறை அதன் உயரம் படிப்படியாக உயர்த்தப்பட்டது. விண்ணில் இதுவரை 3 முறை திருத்தம் செய்யப்பட்டு விண்கலம் சரியான பாதையில் செலுத்தப்பட்டு உள்ளது. மீண்டும் வருகிற 22-ந் தேதி கடைசியாக ஒரு சிறிய திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். அதைத்தொடர்ந்து இந்த விண்கலம் 24-ந் தேதி காலை 7.30 மணிக்கு செவ்வாய் கிரகத்தின் நீள்சுற்றுவட்டப்பாதையை அடையும்.

செவ்வாய் கிரகத்தின் வான்வெளி கோளப்பாதையில் மங்கள்யான் விண்கலமானது செவ்வாய் கிரகத்துக்கு 515 கிலோ மீட்டர் அருகிலும், 80 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலும் இருக்கும் வகையில் நிலை நிறுத்தப்படும். அதைத்தொடர்ந்து மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து சுற்றிவந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ளும். அந்த விண்கலத்தில் இருந்து ஆய்வு தகவல்கள் பெங்களூர், அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் பெறப்படும். எங்களின் இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தால் செவ்வாய் கிரகத்திற்கு முதல் முயற்சியிலேயே விண்கலம் அனுப்பி வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். கடந்த காலங்களில் வேறு நாடுகளின் முதல் முயற்சி எதனால் தோல்வியில் முடிந்தது என்பதையும் நாங்கள் ஆய்வு செய்து பார்த்தோம்.

வேறு நாடுகள் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியுள்ள விண்கலங்களால் நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இதனால் விண்கலங்களுக்கு இடையே எந்த மோதலும் நடைபெற வாய்ப்பு இல்லை. செவ்வாய் கிரகத்தை விண்கலம் அடைந்ததும் அன்றைய தினமே புகைப்படம் எடுத்து அனுப்பும். அது எந்த அளவுக்கு தெளிவாக இருக்கும் என்று தெரியாது. அங்கிருந்து பூமிக்கு தகவல் வர 12½ நிமிடங்கள் ஆகும். விண்கலம் ஆரோக்கியமாக உள்ளது. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த விண்கலம் 6 மாதம் வரை ஆய்வுகளை மேற்கொள்ளும்.’’ இவ்வாறு கோட்டேஷ்வர ராவ், மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் தெரிவித்தனர்.

திட்ட துணை இயக்குனர் பிச்சைமணி கூறுகையில், ‘‘மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை நெருங்கும்போது அதன் வேகம் குறைக்கப்படும். செவ்வாய் கிரகத்தை பின்நோக்கி செல்லுமாறு அதன் வேகம் குறைக்கப்படும். இதில் 5 ஆய்வு கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. மீத்தேன், காற்று மண்டலம், வெப்பம், தாதுக்கள் போன்றவற்றை இந்த கண்டறியும் கருவிகள் உள்ளன. மேலும் ஒரு வண்ண கேமராவும் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த விண்கலம் மொத்தம் 685 மில்லியன் அதாவது 68½ கோடி கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடைகிறது. பூமி சுற்றி வருவதால் விண்கலம் இலக்கை அடைந்ததும் பூமிக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் இடையேயான தூரம் 224 மில்லியன் கிலோ மீட்டராக குறைந்துவிடும்’’ என்றார். பேட்டியின்போது மங்கள்யான் திட்ட இயக்குனர் அருணன் மற்றும் விஞ்ஞானிகள் சங்கர் மாடசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மங்கள்யான் விண்கலத்தின் திட்ட மதிப்பீடு ரூ.450 கோடி ஆகும். இந்த விண்கலம் விண்வெளியில் இதுவரை 315 நாட்கள் பயணம் செய்துள்ளது. இன்னும் 9 நாட்களில் செவ்வாய் கிரகத்தின் கோளப்பாதையை வெற்றிகரமாக சென்று அடைய இருக்கிறது.

ஈழத் தமிழர்கள் சிங்களம் கற்க வேண்டும்

இலங்கை யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் நேற்று இந்தி திவாஸ் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் துணை தூதர் எஸ்.டி.மூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும் போது, இந்திய மக்கள் அனைவரும் நாட்டின் இணைப்பு மொழியான இந்தியை கற்று வருகிறார்கள். குறைந்தது 50 சதவீதம் பேர் இந்தி கற்று இருக்கிறார்கள். அதே போல இலங்கையில் வாழும் வடமாகன தமிழ் மக்களும் இலங்கையின் முக்கிய மொழியான சிங்களத்தை கற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

துணை தூதரின் இந்த பேச்சு இலங்கை ஈழதமிழர்கள் மத்தியில் சர்ச்சயை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா–வியட்னாம் இடையே ஒப்பந்தம்: ஆயுத கொள்முதலுக்கு இந்தியா ரூ.600 கோடி கடனுதவி

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 4 நாள் சுற்றுப் பயணமாக தெற்கு ஆசிய நாடான வியட்னாமிற்கு நேற்று முன்தினம் சென்றார். நேற்று தலைநகர் ஹனோயில் அவர் ஜனாதிபதி டிரவுங் டாங் சாங்கை சந்தித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார். குறிப்பாக இரு நாடுகளும் பொருளாதார துறையில் ஒன்றாக இணைந்து செயலாற்றுவது குறித்து பேசப்பட்டது.

முன்னதாக, உயர் மட்ட அளவிலான அதிகாரிகள் குழுவினர் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார, ராணுவம், பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைத்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இறுதி செய்தனர்.

1. இந்தியாவின் ஓ.என்.ஜி.சி. விதேஷ் நிறுவனமும், வியட்னாமின் பெட்ரோ வியட்னாம் நிறுவனமும் தென் சீனக் கடல் பகுதியில் எண்ணெய் துரப்பண பணிகளை கூட்டாக இணைந்து மேற்கொள்வது. கடல்வழிப் பாதையில் பாதுகாப்பு, கடற்கொள்ளையர்களை விரட்டியடித்தல், கடலில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் உதவுதல் போன்றவை இதில் முக்கிய அம்சங்களாகும்.

2. இந்தியாவில் இருந்து ஆயுதங்கள் கொள்முதலுக்காக வியட்னாம் நாட்டுக்கு 600 கோடி ரூபாயை இந்தியா கடனுதவியாக அளிப்பது.

3. இரு நாடுகளுக்கும் இடையே ஆகாய வழித் தொடர்பை ஏற்படுத்தும் விதமாக நேரடி விமான சேவையை வருகிற நவம்பர் மாதம் 5–ந்தேதி தொடங்குவது.

4. விலங்குகளின் நலத்தை பராமரிப்பது.

5. பான்காசியஸ் மீன்வளத்தை இந்தியாவில் பெருக்கும் வகையில் பண்ணைகள் அமைக்க ஒத்துழைத்தல்.

6. இளைஞர் விவகாரம் மற்றும் அவர்களை திறனை மேம்படுத்துதல்.

7. பொதுவான விஷயங்களில் இரு நாடுகளும் பரஸ்பர உதவி அளித்தல் மற்றும் கூட்டாக இணைந்து செயல்படுதல்.

மேற்கண்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தான பிறகு இரு நாடுகளின் சார்பிலும் ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் கொள்கை ரீதியான விஷயங்களில் மிக நெருக்கமாக இணைந்து செயல்படுவது என இரு நாடுகளின் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைத்து பணியாற்றுவது இந்த ஒப்பந்தங்களில் முக்கியத் தூண் போன்றதாகும். இந்த ஒப்பந்தம் இரு தலைவர்களுக்கும் மிகவும் திருப்தி அளிப்பதாக அமைந்து இருந்தது. மேலும், சர்வதேச சட்ட விதி முறைகளின்படி கிழக்கு கடல் மற்றும் தென் சீனக் கடல் வழிகளில் தாமதமற்ற சுதந்திரமான கடல் பயணத்திற்கான நடவடிக்கைகளில் கூட்டாக செயல்பட இரு நாடுகளின் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். வியட்னாமின் ஆயுத கொள்முதலுக்காக 600 கோடி ரூபாய் அளவிற்கு இந்தியா கடனுதவி அளித்திருப்பது, இரு நாடுகளின் உறவிலும் புதிய அணுகுமுறைகளுக்கான வழிகளைத் திறந்து விட்டிருக்கிறது.

2020–ம் ஆண்டுக்குள் இரு நாடுகளின் வர்த்தக உறவை 90 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிப்பது எனவும் இதற்கான வாய்ப்புகளாக சுற்றுலா, ஆடைகள், ஜவுளிகள், மருந்து, விவசாய துறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். ஆசியாவின் அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சி, செழிப்பிற்கு இரு நாடுகளும் இணைந்து ஒருங்கிணைந்து பங்காற்றுவது என இரு தலைவர்களும் விருப்பமும், உறுதியும் தெரிவித்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. 
இதன்பிறகு பிரணாப் முகர்ஜியும், டிரவுங் டாங் சாங்கும் இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். அதன் விவரம் வருமாறு:–

சேது சமுத்திர திட்டத்துக்காக ராமர் பாலத்தை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை: நிதின் கட்காரி


இந்தியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சென்னை, தூத்துக்குடி, விசாகப்பட்டினம், பாரதீப் உள்ளிட்ட துறைமுகங்களுக்கு செல்வதற்காக மேற்கு கடற்பகுதியில் இருந்து வரும் கப்பல்கள், தற்போது மொத்த இலங்கைத்தீவையும் சுற்றி வர வேண்டியுள்ளது. இதனால் அதிக எரிபொருள் செலவும், நேர விரயமும் ஏற்படுகிறது. எனவே இதை தடுப்பதற்காக பாக் நீரிணை பகுதியில் சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்தில் கடலை ஆழப்படுத்தி பெரிய கப்பல்கள் செல்ல வழி ஏற்படுத்துவதற்கும், இந்த பகுதிகளில் மீன்பிடி மற்றும் வர்த்தக துறைமுகங்களை ஏற்படுத்தவும் சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.

ஆனால் இந்த திட்டத்துக்காக கடலுக்கு அடியில் உள்ள ராமர் பாலத்தை இடிக்கக்கூடாது என ஏராளமான இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. மேலும் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனினும் மத்தியில் புதிதாக பதவியேற்ற பா.ஜனதா அரசு, ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்றுப்பாதையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி பாராளுமன்றத்தில் அறிக்கையும் தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் மத்திய அரசு பதவியேற்று 100 நாள் முடிவடைந்ததை தொடர்ந்து மத்திய மந்திரி நிதின் கட்காரி நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்து மதத்தின் முக்கியத்துவம் கருதி, போக்குவரத்து மற்றும் கட்டமைப்பு துறைகளில் மாற்று வழிகள் குறித்து ஆலோசிப்பதற்காக நிறுவனம் (ரைட்ஸ்) ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. அதன்படி நாங்கள் சேது சமுத்திர திட்டத்தை ‘ரைட்ஸ்’ நிறுவனத்திடம் ஒப்படைத்தோம். இந்த திட்டம் தொடர்பாக அந்த நிறுவனம் அளித்துள்ள மாற்று வழிகள் அனைத்தும் பரிசீலனைக்காக மத்திய மந்திரிசபைக்கு ஒரு மாத காலத்துக்குள் அனுப்பிவைப்போம். சேது சமுத்திர திட்டத்துக்காக ராமர் பாலத்தை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை.

மேலும் தேசிய நீர்வழிகளை மேம்படுத்துவதற்காக ‘ஜல்மார்க் யோஜனா’ என்ற திட்டத்தை எதிர்காலத்தில் செயல்படுத்த மத்திய அரசு அரசு திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு
நிதின் கட்காரி கூறினார். 

உள்ளாட்சி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி பாஜக வழக்கு

சென்னை ஐகோர்ட்டில், பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலக செயலாளர் கே.சர்வோத்தமன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் மொத்தம் 281 பதவிகளுக்கு வருகிற 18-ந் தேதி இடைத்தேர்தல் நடத்துவதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் 28-ந் தேதி உத்தரவிட்டது. இந்த இடைத்தேர்தல் நடவடிக்கை அனைத்தும் சட்டவிரோதமாகவும், நேர்மையற்ற முறையிலும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும் நடைபெறுகிறது.

மொத்தம் 281 பதவிக்கு நடைபெறும் தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பில் 122 பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில், பல வேட்பாளர்களை வேட்புமனுவைக் கூட தாக்கல் செய்ய முடியாத அளவுக்கு ஆளும் கட்சியினர் மிரட்டி, தடுத்து விட்டனர். அதையும் மீறி வேட்புமனுவை தாக்கல் செய்த எங்கள் கட்சியின் வேட்பாளர்களின் கையெழுத்தை போலியாக போட்டு, வேட்பாளர்களுக்கு தெரியாமலேயே வேட்புமனுவை திரும்ப பெற வைத்துள்ளனர்.

எங்கள் கட்சியை சேர்ந்த 122 வேட்பாளர்களில் வெறும் 83 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மட்டுமே தேர்தல் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள வேட்பாளர்கள் ஆளும் கட்சியினரால் மிரட்டப்பட்டு வாபஸ் பெற வைக்கப்பட்டுள்ளனர்.

இதுசம்பந்தமாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளான கலெக்டர்கள், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, உள்ளாட்சி இடைத்தேர்தலை நடத்துவதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையருக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும். மேலும், செப்டம்பர் 18-ந் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதாக கடந்த ஆகஸ்டு 28-ந் தேதி மாநில தேர்தல் ஆணையர் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யவேண்டும். அந்த அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடந்தது




பெங்களூர் அருகே பிடதியில் உள்ள தியான பீடத்தில் நித்யானந்தா சாமியார் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது கற்பழிப்பு புகார்கள் இருந்தது. நித்யானந்தாவிடம் பல கட்ட விசாரணைகள் நடைபெற்ற பிறகு அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 8 ஆம் தேதி அன்று பெங்களூர் விக்டோரியா ஆஸ்பத்திரியில் நித்யானந்தா சாமியாருக்கு 7 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் 5 மணிநேரம் ஆண்மை பரிசோதனை நடத்தினார்கள். இது தொடர்பான அறிக்கை சிபிசிஐடி போலிஸாரிடம் வழங்கப்பட்டுள்ளது. 

ஷங்கர் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த அர்னால்டு




ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஐ'. இந்த படத்தை ஷங்கர் சுமார் 2 வருடங்களாக இயக்கி வருகிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருத்தினராக ஹாலிவுட் நாயகன் அர்னால்டு கலந்து கொண்டார். ஐ படத்தின் பாடலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

இதில் பேசிய ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, தான் இங்கு ஐ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு மட்டும் வரவில்லை, ஷங்கரின் படத்தில் நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கேட்டும் வந்துள்ளதாக கூறினார். எப்போது ஷங்கர் தன்னை வைத்து படம் இயக்குவார் , அதற்காக தான் காத்து இருப்பதாகவும் கூறினார். அதுமட்டுமில்லாமல் சென்னை மக்களின் அன்பு தன்னை நெகிழ வைத்துள்ளதாகவும் கூறினார். அதனால் சென்னைக்கு மீண்டும் வருவேன் என்று கூறினார்.

தனுஷிற்காக மேடை ஏறி விருதை வாங்கிய சிம்பு !!



ஒருகாலத்தில் எலியும் பூனையுமாக சண்டை போட்டு கொண்டு இருந்த தனுஷ் மற்றும் சிம்பு , இப்போது நிஜ வாழ்க்கையில் சிறந்த நண்பர்களாக மாறி வருகின்றனர் . ஆனால் தொழில் வாழ்க்கையில் அவர்கள் இருவருக்கும் இடையே போட்டி இருந்து கொண்டு தான் இருக்கிறது .

இவர்களின் நட்பு சிமா விருது கொடுக்கும் நிகழ்ச்சியில் மீண்டும் வெளிப்பட்டது . இந்த நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் தனுஷினால் கலந்து கொள்ள இயலவில்லை . இந்த நிகழ்ச்சியில் சிறந்த நடிகர் விருது தனுஷ் அவர்களுக்கு மரியான் படத்தில் நடித்ததற்காக கொடுக்கப்பட்டது . ஆனால் அதை பெற்று கொள்ள தனுஷ் இல்லாததால் , சிம்பு மேடை ஏறி அதனை பெற்று கொண்டார் .

பின்னர் டிவிட்டரில் சிம்புவிற்கு நன்றி கூறி தனுஷ் டிவிட் செய்தார் .

மோடி அலை வலுவிழந்துவிட்டதா இல்லையா ?? தேர்தல் முடிவுகள் இன்று !!



மூன்று மக்களவை தொகுதிகளிலும் , 33 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது . கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி இந்த தேர்தல் நடைபெற்றது .

பிரதமர் மோடி அவர்கள் இரண்டு தொகுதிகளில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதால் , ஒன்றை ராஜினாமா செய்தார் . அப்படி ராஜினாமா செய்த வததோரா தொகுதியிலும் தேர்தல் நடந்தது . மேலும் இரண்டு தொகுதிகளான மனிப்பூரி மற்றும் மேதக் ஆகிய தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது .

இந்த இடைத் தேர்தல்கள் மோடி அரசின் மேல் மக்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதை காண்பித்து விடும் . மேலும் இந்த தேர்தலின் வெற்றி பாஜகவிற்கு அடுத்த மாதம்  ஹரியானா மற்றும் மஹாராஷ்ட்ரா மாநிலங்களில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு ஊக்கமாக இருக்கும் .

மேலும் குஜராத்தில் 12 ஆண்டுகளுக்கு பின் மோடி போட்டி போடாமல் இருந்த முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது .

கார் நம்பரை 8.5 லட்சம் கொடுத்து வாங்கிய பணக்காரர்




சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவனத்தை நடத்தி வருபவர்  மிட்டல் . இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் எப்போதும் தனக்கென ஒரு இடத்தை வைத்து இருப்பார். இவர் சமீபத்தில் தனக்கு காருக்கு தேவையான நம்பரை 8.5 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார். வண்டிகளுக்கு உரிய பேன்ஸி நம்பர் என்றாலே எப்போதும் விலை அதிகமாக தான் இருக்கும். சண்டிகரில் 0001 என்னும் நம்பர் ஏலத்துக்கு விடப்பட்டது. இதனை மிட்டல் 8.5 லட்சத்துக்கு ஏலத்துக்கு எடுத்தார்.

ஜம்மு காஷ்மீர் வெள்ளத்தில் இருந்து உயிர் பிழைத்த இந்திய கிரிக்கெட் வீரர்





ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு மிக பெரிய வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதில் சுமார் 1.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்று அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வெள்ளத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் பெர்வேஸ் ரசூல் மாட்டி கொண்டு இருந்தார் என்பது தெரியவந்துள்ளது. இந்திய அணிக்கு ஜம்மு காஷ்மீர்  மாநிலத்தில் இருந்து விளையாடிய முதல் வீரர் என்னும் பெருமயை பெற்று இருந்தார். இவரது வீட்டுக்கு வெள்ளம் வந்த போது இவர் முதல் காரியமாக தனது கிரிக்கெட் பைகளை பத்திரப்படுத்தி உள்ளார். தரைதளம் முழுவதும் தண்ணீராக இருந்ததால் 11 நாட்கள் முதல் தளத்தில் இருந்து உள்ளார்கள். அங்கே எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தது. இப்போது தான் அங்கு தொலைதொடர்பு நெட்வொர்க் கிடைக்க தொடங்கி உள்ளது.

இனிமேல் யுடியூபை ஆப்லைனிலும் பார்க்கலாம் !!



திங்கட்கிழமை அன்று கூகுள் நிறுவனம் தனது யு டியுப் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக யு டியுப் இணையதளம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆப் லைனிலும் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது .

இதன் மூலம் யுடியுப் அப்ளிகேஷனை பயன்படுத்தும் ஆண்ட்ராய்ட் மொபைல் வாடிக்கையாளர்கள் யுடியுப் வீடியோக்களை வைபி அல்லது டேட்டா இணைப்பு இருக்கும் போது ஸ்டோர் செய்து வைத்து கொண்டு பிறகு கண்டு ரசிக்கலாம் .

இந்தியாவில் தற்போது டேட்டா இணைப்பின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது . எனவே இந்த வசதி யுடியுப் பயன்படுத்தும் பல வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் .

செப்டம்பர் 24 ஆம் தேதி மார்ஸ் கிரகத்திற்குள் நுழைந்து சாதனை செய்ய இருக்கிறது இந்தியா !!



இந்தியாவில் 450 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட செயற்கைகோளான மார்ஸ் ஆர்பிட்டர் மிஸன் கடந்த வருடம் நவம்பர் 13 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது . இந்த செயற்கைகோள் 666 மில்லியன் கிமீ கடந்த பின் செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் செப்டம்பர் 24 ஆம் தேதி நுழைய இருக்கிறது .

இந்த செவ்வாய் கிரகத்திற்குள் நுழையும் நிகழ்வை செவ்வாய் கிரகத்தில் இருந்து 423 கிமீ தொலைவில் இருக்கும் போது தொடங்குவர் .

இந்த நிகழ்வு வெற்றிகரமாக நிகழ்ந்து விட்டால் , இந்த உலகில் தன்னுடைய முதல் முயற்சியிலேயே செவ்வாய கிரகத்திற்குள் வெற்றிகரமாக செயற்கைகோள் அனுப்பிய முதல் நாடு என்ற பெருமை வரும் . மேலும் ஆசியாவில் செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைகோள் அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவிற்கு வரும் .


 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media