BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 25 January 2014

மேற்கு வங்கத்தில் 6 வயது சிறுமி பலாத்காரம்

மேற்கு வங்கத்தில், பஞ்சாயத்து தலைவர் கட்டளையின் பேரில், உயர் சாதி பையனை காதலித்ததற்காக, 12 பேரால் ஒரு பெண் கற்பழிக்க பட்டிருப்பது, மாநிலத்தையே உலுக்கி இருக்கிற இந்நிலையில், 55 வயது ஆசாமி ஒருவர், 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறார்.

பிஸ்துடா சிங் என்பவர், 6 வயது சிறுமி ஒருவரை தனியாக இருக்கும் போது, பேசி ஏமாற்றி தனியாக அழைத்து சென்று, பலாத்காரம் செய்து இருக்கிறார். பின்னர், வீட்டிற்கு அழுது கொண்டே வந்த சிறுமி, தன் பெற்றோரிடம் நடந்த விவரத்தை கூறினார். இது பற்றி சிறுமியின் பெற்றோர், காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பிஸ்துபடா சிங் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.





மோடியை டீ விற்கச் சொல்லும் அய்யர், சோனியா காந்தியை அவர் முன்பு செய்த ஓட்டல் பணியாளர் வேலையை செய்ய சொல்வாரா?

மணி சங்கர் அய்யர், தனது பேச்சை கட்டுப் படுத்தாவிட்டால், பா.ஜ.க வினரின் நேரடி தாக்குதலுக்கு ஆளாக கூடும் என்று பாஜக துணை தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். மோடியை தேநீர் விற்க சொல்லும் அய்யர், சோனியாவை, அவர் முன்பு இங்கிலாந்தில் ஓட்டல் பணியாளராக செய்த பணியை திரும்ப செய்ய சொல்வாரா? எனவும் அவர் கேட்டார்.

மேலும், சந்திப்பில் அவர் கூறியதாவது:

சோனியா காந்தி, 1965ம் ஆண்டு, இங்கிலாந்தில் உள்ள ஒரு கிரேக்க ஓட்டலில், பண தேவைகளுக்காக, பணியாளராக பணிபுரிந்தார். அவரை ஏன் அந்த பணியாளர் வேலையை செய்ய அய்யர் சொல்லவில்லை என்று ராஜா கேள்வி எழுப்பினார்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், காங்கிரஸ் பத்து ஆண்டுகளாக நடத்திய ஆட்சியினால், இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளும் பின்னடைவை சந்தித்து இருக்கின்றன. மோடிக்கு பொருளாதாரம் தெரியவில்லை என்று கூறுவது தவறு. அவர் ஆட்சி செய்யும் குஜராத்தை, சீனாவுடன் தான் ஒப்பிட வேண்டும் என்று உலக நாடுகளே ஒப்பு கொண்டுள்ளன.

திறமையான பிரதமர் இருந்திருந்தால் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்யாது.

பொருளாளர் பதவியில் இருந்து கொண்டு ஏன் கட்சி தலைவர் போல் ஸ்டாலின் செயல்பட வேண்டும்?

தி.மு.க வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி, பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசும் போது, கருணாநிதியை தவிர வேறு யாரையும், கட்சி தலைவராக கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என்று கூறினார்.

மேலும் பேசிய அவர் கூறியதாவது:
மு.க. ஸ்டாலின் பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்பவர். அவரை ஒரு போதும் தலைவராக ஏற்க முடியாது. தி.மு.க வில் தலைவரும், பொது செயலாளரும், ஸ்டாலின் சொல்வதை தான் கேட்கிறார்கள். ஸ்டாலினுக்கு கட்சியில் பொருளாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் பொருளாளர் போல் செயல் படாமல், கட்சி தலைவர் போல் செயல் படுகிறார். மீண்டும் கட்சி தலைவரை சந்திக்க திட்டம் எதுவும் இல்லை. நான் எந்த தவறும் செய்யாத நிலையில் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? நான் எந்த விளக்க கடிதமும் கட்சிக்கு அனுப்ப போவதில்லை.

இந்திய அரசியல் அமைப்பு, முதல் அமைச்சர் தர்ணா செய்வதற்கு தடை விதிக்கவில்லை



இந்திய அரசியல் அமைப்பு, முதல் அமைச்சர் தர்ணா செய்வதற்கு தடை விதிக்கவில்லை என்று டெல்லி முதல் அமைச்சர் கேஜ்ரிவால் கூறுகிறார். 

 கேஜ்ரிவால், ரயில் பவனில் நடத்திய தர்ணாவிற்காக பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார்.  அவர் மீது, டெல்லி போலீசார், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியது. உச்ச நீதிமன்றம், விதிக்கப்பட்ட 144 தடையை மீறி, சட்ட விரோதமாக கேஜ்ரிவால் மற்றும் அவர் ஆதரவாளர்கள் கூடி தர்ணா நடத்தியதை சாடி உள்ளது. இதைப் பற்றி பேசும் போது கேஜ்ரிவால், "நான் இந்திய அரசியல் அமைப்பை படித்தேன். அதில், முதல் அமைச்சர் தர்ணா நடத்த கூடாது என்று எங்கும் இல்லை." என்று கூறினார். மேலும், "எங்களது ஆம் ஆத்மி கட்சியை பற்றி தவறாக எழுதுவதற்கும், மக்களிடயே எங்களது புகழை கெடுப்பதற்கும், ஊடகங்கள் பணம் வாங்குகின்றனர். " என்றும் அவர் கூறினார்.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media