BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 14 August 2014

உங்களுக்கு பிடிக்காவிட்டால் படத்தை பார்க்காதீர்கள் , அமீர் கானின் பிகே படத்திற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு



அமீர் கானின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட " பிகே " படத்தின் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது . இந்த போஸ்டரில் அமீர்கான் நிர்வாணமாக இருப்பது போல் வெளியானது . இதனால் பல சர்ச்சைகளை இந்த போஸ்டர் கிளப்பியது . இதனை எதிர்த்து , நீதிமன்றத்தில் ஒரு என்.ஜி.ஓ வழக்கு பதிவு செய்தனர் . இந்த போஸ்டர் சிலரின் மத உணர்வை புண்படுத்தும் என வழக்கு பதிவு செய்தனர் .


இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கிய இந்தியாவின் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா கூறுகையில் , " உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் படத்தை பார்க்காதீர்கள் . இங்கு மதத்தை கொண்டு வராதீர்கள் . இது எல்லாம் ஒரு பொழுதுபோக்குக்காக எடுக்கப்பட்டது . இதனை நீங்கள் எதிர்த்தால் மற்றவர்களின் சுதந்திரம் பாதிக்கப்படும் . இதை நீங்கள் மறைக்க வேண்டும் என்றால் , இணையத்தில் எல்லாம் இருக்கிறது , அவை எல்லாத்தையும் மறைப்பீர்களா ? " என்றார் .

அமீர் கானின் இந்த படம் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி வெளிவர இருக்கிறது .

நோட்ஸ் எதுவும் இல்லாமல் சுதந்திர தின உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி !! சுதந்திர தின உரையின் மேலும் பல சிறப்பம்சங்கள் .



மோடி பிரதமராக பதவியேற்ற பின் தன்னுடைய முதல் சுதந்திர தின உரையை நாளை செங்கோட்டையில் நிறைவேற்ற உள்ளார் . இந்த உரைக்கு இப்போழுதே எதிர்பார்ப்புகள் அதிகரிக்க தொடங்கி விட்டது .

அந்த உரையின் சில சிறப்பம்சங்களைக் கீழ்க் காணலாம் :

தனது முதல் உரையை , கையில் எந்த ஒரு நோட்ஸ் எதுவும் எடுக்காமல் பேச உள்ளார் . சில முக்கிய புள்ளிகளை மட்டும் வைத்து பேச உள்ளார் . இந்த உரை 45 நிமிடங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .  ஒரு பிரதமர் எந்த பேப்பரும் இல்லாமல் பேசுவது  இது தான் முதல் முறை .

ஒரு வேளை மழை பெய்தால் , யாரும் குடை வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் . மழையில் அப்படியே தன் உரையை தொடருவதாக கூறி உள்ளார் .

அவர் தனக்கு எந்த பாதுகாப்பு கவசமும் தேவை இல்லை என்று கூறிய போதும் பாதுகாப்பு அதிகாரிகள் அதற்கு மறுத்து விட்டனர் .

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun Special news


லவ் லேண்ட் என்னும் செக்ஸ் தீம் பார்க்குகள் தென்கொரியா மற்றும் சீனாவில்
http://www.satrumun.net/2013/06/love-land-sex-theme-parks-in-south.html

இனிமேல் வாட்ஸ்அப் , பேஸ்புக் மூலம் நண்பர்களுக்கு பணம் அனுப்பலாம் .
http://www.satrumun.net/2014/08/now-you-can-send-money-through-social-media.html

2 வயது மகளுக்கு ஒரு மாதத்திற்கு 6 கோடி ரூபாய் செலவழிக்கும் நடிகை
http://www.satrumun.net/2014/08/actress-spend-1-million-dollar-for-her.html

சூட்கேஸில் நிர்வாணமாக ஒரு பெண்ணின் உடல் இருந்ததால் பரபரப்பு
http://www.satrumun.net/2014/08/blog-post_55.html

‘கத்தி’ தயாரிப்பாளருக்கு எதிரான ஆதாரங்கள் : மாணவர்களிடம் ‘போக்கு’ காட்டும் ஏ.ஆர்.முருகதாஸ்!
http://goo.gl/QNlK2C

டிவிட்டரில் உள்ள 271 மில்லியன் பயனாளர்களில் 21 மில்லியன் அக்கௌண்ட் சும்மாவாம்
http://www.satrumun.net/2014/08/most-accounts-in-twitter-are-created-bu-bots.html

அமீர்கான் அம்மணமாக நடிப்பதற்கு இன்னொரு அம்மண நடிகர் ஆதரவு
http://www.satrumun.net/2014/08/ameekhan-acting-nude-in-movie-pk.html

விமானம் 5000 அடி திடீரென கீழே இறங்கியது , ஒரு விமானி தூங்கினார், இன்னொருவர் டேப்லட்டில் பிஸி, எந்த ஏர்லைன்ஸ் தெரியுமா?
http://www.satrumun.net/2014/08/5000.html

நட்சத்திர பதிவர் வா.மணிகண்டனும் மசால்தோசை 38 ரூபாயும்
http://www.satrumun.net/2014/08/satrumun-star-vaa-manikandan.html

2 இலட்சம் லைக்குகளை (200K Likes) பெற்றது சற்றுமுன் செய்திகள் பக்கம்.
http://www.satrumun.net/2014/08/satrumunnet-facebook-page-reaches-2.html

விவசாயியை அடித்து சிறுநீரை குடிக்கச் சொல்லி துன்புறுத்திய போலிஸ்
http://www.satrumun.net/2014/08/police-brutal-attack-on-farmer.html

சூப்பர் ஸ்டாருடன் நடிக்க மறுத்து விட்ட த்ரிஷா
http://www.satrumun.net/2014/08/blog-post_22.html

கேன்சரால் பாதிக்கப்பட்ட ரசிகருடன் ஒரு மணி நேரம் பேசிய ராகுல் டிராவிட்
http://www.satrumun.net/2014/08/blog-post_14.html

முதன் முதலில் இந்தியாவில் தூக்கிலிடப்பட போகும் பெண் குற்றவாளிகள்
http://www.satrumun.net/2014/08/siste-will-be-hanged-for-killing-13-children.html

40 வயதிலும் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்ற இரு குழந்தைகளின் தாய் !!
http://www.satrumun.net/2014/08/40-year-old-mom-wins-gold-in-running.html

2 வயது மகளுக்கு ஒரு மாதத்திற்கு 6 கோடி ரூபாய் செலவழிக்கும் நடிகை



ஹாங்காங்கை சேர்ந்த நடிகை ஷெட்லி யுயாங் அளித்த பேட்டியில் தனது இரண்டரை வயது மகள் ப்ளே குரூப்பில் டிராயிங், ஆங்கிலம் மற்றும் பேலட் பாடங்கள் கற்றுக்கொள்கிறார் என்றார், மேலும் தனது மகளுக்கு டிராயிங் மற்றும் பேலட்டில் ஆர்வம் இல்லையென்றும் அதன் மீதான ஆர்வத்தை அவர் பெண்ணுக்கு தான் வளர்க்க உதவ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் ஓய்வு நேரங்களில் தன் மகளை நீச்சலுக்கு அழைத்து போவதாகவும் மிகுந்த சுட்டியாக உள்ள தன் குழந்தை வீட்டில் விடுமுறை நாட்களில் தான் பள்ளிக்கு போக வேண்டுமென்று கூறுவதாகவும் பேட்டியளித்தார்.

கடைசியாக தான் தன் குழந்தைக்காக மாதம் தோறும் ஒரு மில்லியன் டாலர் (5 கோடி ரூபாய்) செலவழிப்பதாக கூறினார்.

Shirley Yeung spends nearly a million dollars on daughter monthly

அமீர்கான் அம்மணமாக நடிப்பதற்கு நடிகர் சித்தார்த் ஆதரவு


பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரானா அமீர்கான் தற்போது நடித்து கொண்டிருக்கும் "பிகே" படத்தின்  டீசர் வெளியாகியது, அமீர்கான் நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தது பரபரப்பை கிளப்பியது. இதற்கு பல்வேறு தரப்பில் கடுமையான விமர்சனம் கிளம்பியது.

இந்நிலையில் அமீர்கானுக்கு ஆதரவாக நிர்வாணமாக நடிப்பது ஒரு கலை. அதை தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது என்று நடிகர் சித்தார்த் அமீர்கானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார், மேலும், ஒரு படத்தின் போஸ்டரைப் பார்ததே அது ஆபாசமான படம் என்று சித்தரித்து விடக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

அதோடு, இதையெல்லாம் ஆபாசம் என்று சொன்னால், ஒலிம்பிக்கில் நீச்சல் உடையில் நீந்துகிறார்கள்  அதைப்பார்த்துவிட்டு சிறுவர்கள் டிரஸ்ஸை கழற்றி போட்டு விட்டு ஓடுவது இல்லையே அதனால் அமீர்கான் இந்தமாதிரி போஸ் கொடுத்திருப்பதால் சமுதாயத்துக்கு எந்த பாதிப்பும் வராது என்றும் மேலும் கலைஞர்களுக்கும், கதாசிரியர்களுக்கும் எப்போதும் கருத்து சுதந்திரம் கொடுக்க வேண்டும் அப்போதுதான் நல்ல படைப்புகள் வெளிவரும். இப்படி எடுத்ததற்கெல்லாம் தடை, வழக்கு என்று போட்டுக்கொண்டிருந்தால் நல்ல படங்கள் வருவது குறைந்து விடும் என்று சித்தார்த் கூறியுள்ளார்.

நடிகர் சித்தார்த் தனது முதல்படமான பாய்ஸ்சில் நிர்வாணமாக சாலையில் ஓடுவது போல நடித்திருப்பார்

நட்சத்திர பதிவர் வா.மணிகண்டனும் மசால்தோசை 38 ரூபாயும்


சற்றுமுன் செய்திகள் பக்கத்தின் இன்றைய நட்சத்திர பதிவர்

சற்றுமுன் செய்திகள் பக்கம் 2 இலட்சம் லைக்குகள் பெற்றிருந்ததை அறிவித்த பதிவில் தினம் ஒரு நட்சத்திர பதிவர் பற்றிய குறிப்புகளை வெளியிடுவதாக குறிப்பிட்டிருந்தோம், முதல் நட்சத்திமாக வா.மணிகண்டன் பற்றிய குறிப்புகள் இங்கே.

வா.மணிகண்டன் நமது பக்கத்திற்கு புதியவர் அல்ல, ஏற்கனவே இவரின் லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் என்ற சிறுகதைகள் தொகுப்பை வெளியிட்டிருந்ததை நமது பக்கத்தில் வெளியிட்டிருந்தோம்.

வா.மணிகண்டன் ஒரு முறை நகருக்கு வெளியே இருக்கும் ஒரு சிறிய லாட்ஜில் இரண்டு நாட்களுக்கு அறை எடுத்து தங்கியிருந்தார், போன், டிவி என எந்த விதமான தொடர்புகளும் இல்லாமல் அவரை யாருமோ, அவர் யாரையுமோ தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு தன்னை சுருக்கிக்கொண்டு சாப்பாட்டை கூட நேராக அவர் அறைக்கே வரவைத்து தனிமையில் இருந்துள்ளார்.

எழுத்தாளர்கள் பல நேரங்களில் செய்யும் செயல்களை நாம் கிறுக்கத்தனமாக மதிப்பிடுவோம், ஆனால் அது அவர்களுக்கு பெரிய அனுபவமாக அமையும், அதை எழுத்தில் வடிப்பார்கள். வா.மணிகண்டனும் அது போலத்தான், தன் அனுபவங்களை நேர்மையான எளிமையான எழுத்துக்களில் வடிக்கின்றார்.

பல ஆண்டுகளாக வலைப்பதிவில் எழுதி வருபவர், தற்போது ஃபேஸ்புக்கிலும் எழுதிவருகிறார்.

கொங்கு நாட்டில் கரட்டடிபாளையம்( கோபிச்செட்டிபாளையம் அருகில்) பிறந்து வளர்ந்த இவர் ஹைதராபாத்தில் எம்.டெக் படித்து தற்போது பெங்களூருவில் மென்பொருள் துறையில் பணி செய்கிறார்.

கண்ணாடியில் நகரும் வெயில், என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி  என்ற இரு கவிதை புத்தகங்கள், சைபர் சாத்தான்கள் என்ற சைபர் க்ரைம் பற்றிய புத்தகம் ஆகியவைகளை எழுதியுள்ளார்.

சென்ற புத்தக சந்தையின் போது லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் என்ற  சிறுகதைகள் தொகுப்பை வெளியிட்டிருந்தார், பல பிரபலமான வளர்ந்த எழுத்தாளர்களின் புத்தகங்களை விட பரபரப்பாக விற்பனையானது இந்த புத்தகம்.

தற்போது ‘மசால் தோசை 38 ரூபாய்’ என்ற தலைப்பில் அடுத்த புத்தகத்தை வெளியிட தயாராகி வருகிறார்.

ஒரு நண்பனாக, ஆதரவாக நம் அருகில் அமர்ந்து யாரேனும் தங்கள் அனுபவங்களை எளிய மொழியில் பேச வேண்டும் என்று ஆசைப்பட்டால் வா.மணிகண்டனின் எழுத்துகளை படியுங்கள், அவரும் தினமும் தனது வலைப்பதிவிலும் ஃபேஸ்புக்கிலும் எழுதி வருகிறார். அவருடைய ஃபேஸ்புக் கணக்கில் நண்பராக / ஃபாலோயராக இணைந்து கொள்ளுங்கள்

வா.மணிகண்டன் ஃபேஸ்புக் : https://www.facebook.com/vaa.manikandan
நிசப்தம் இணையதளம் : http://www.nisaptham.com/

உங்களுக்கு பிடித்த பதிவரை நட்சத்திரமாக பதிவு செய்ய விரும்பினால் குறிப்புகளை எழுதி satrumun.net(at)gmail.com க்கு அனுப்புங்கள்

40 வயதிலும் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்ற இரு குழந்தைகளின் தாய் !!



10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார் , 40 வயதான ஜோ பாவே . இவர் பிரிட்டேனைச் சேர்ந்தவர் . இதில் தங்கம் வென்றதன் மூலம் யுரோப்பியன் சாம்பியன்ஷிப் போட்டியில் , அதிக வயதில் தங்கம் வென்ற பெண் என்ற சாதனையை செய்தார் .


இவருக்கு ஜக்கப் என்ற 4 வயது பையனும் , எமிலி என்னும் 11 மாத குழந்தையும் உள்ளார்கள் .

இது குறித்து அவர் கூறுகையில் , " இதை என்னால் நம்ப முடியவில்லை , நான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை . பல ஆண்டுகளாக நான் வெற்றி பெற முயற்சித்து வந்தாலும் , 40 வயதில் தான் வெல்ல முடிந்தது . இது எனக்கு சிரிப்பை வரவைக்கிறது . இப்போது தான் நான் அதை எப்படி முடிக்க வேண்டும் என்று கற்றுள்ளேன் " என்றார் .


இனிமேல் வாட்ஸ்அப் , பேஸ்புக் மூலம் நண்பர்களுக்கு பணம் அனுப்பலாம் .



ஆக்ஸிஜன் எனப்படும் மொபைல் வழி பேமண்ட்களை செய்திடும் அப்ளிகேஷன் மூலம் இனி சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பணத்தினை அனுப்பலாம் . இந்த வசதியை கடந்த புதங்கிழமை வெளியிட்ட அப்டேட் மூலம் கொண்டு வந்துள்ளனர் .

இந்த அப்ளிகேஷன் மூலம் 5,000 ரூபாய் வரை பரிவர்தனை செய்யலாம் . இதன் மூலம் மொபைல் ரிசார்ஜ் , பில் கட்டும் வசதி , ஆன்லைனில் ஷாப்பிங் போன்றவற்றை செய்து கொள்ளலாம் . இனிமேல் பேஸ்புக் , கூகுள் + , வாட்ஸ்அப் , டிவிட்டர் ஆகிய சமூக வலைதளங்கள் மூலம் நண்பர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கு இல்லாமல் பணத்தை அனுப்பலாம் .

இதில் இன்னொரு சிறப்பு வசதி என்னவென்றால் , இந்த ஆக்ஸிஜiன் அப்ளிகேஷன் இல்லாதவர்களுக்கும் நீங்கள் பணத்தை அனுப்பலாம் .

டிவிட்டரில் உள்ள 271 மில்லியன் பயனாளர்களில் 21 மில்லியன் அக்கௌண்ட் சும்மாவாம் !!!



டிவிட்டர் தன்னுடைய பயனாளர்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது . அந்த அறிக்கையின்படி டிவிட்டரில் 270 மில்லியன் அடிக்கடி லாகின் செய்து பயன்படுத்தி வருகின்றனர் . அந்த 270 மில்லியனில் 23 மில்லியன் அக்கௌண்ட்கள் பாட் எனப்படும் பேக் அக்கொண்ட் .

பாட் என்றால் என்ன ??

பாட் என்பது தானாகவே டிவிட் செய்திடும் வகையில் எழுதப்பட்ட ஒரு ப்ரோகிரம் .

21 மில்லியன் அக்கொண்ட்கள் இந்த பாட் என்பதால் இயக்கப்பட்டு வருகிறது . அதாவது இந்த அக்கௌண்டக்குள் யாரும் லாகின் செய்து உள்ளே சென்று டிவிட் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை . பிரோகிரம் எதற்கு எழுதப்பட்டு இருக்கிறதோ அதற்கேற்ற வகையில் அதுவே டிவிட் செய்து கொள்ளும் .

எடுத்துக்காட்டாக பிக் பென் என்னும் அக்கௌண்ட் இருக்கும் . அது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அந்த மணிக்கு ஏற்றவாறு பாங் , பாங் என டிவிட் செய்து கொள்ளும் .

21 மில்லியன் என்பது 8.5 சதவீதம் ஆகும் .



விவசாயியை அடித்து சிறுநீரை குடிக்கச் சொல்லி துன்புறுத்திய போலிஸ் !!



உத்தரபிரதேச மாநிலத்தின் லலித்பூர் என்னும் மாவட்டத்தில் , போலிஸ் ஒருவரின் பேச்சைக் கேட்காததால் , விவசாயியை அடித்து துன்புறுத்தியதோடு நிறுத்தாமல் அவரை சிறுநீரைக் குடிக்கச் சொல்லியும் துன்புறுத்தி உள்ளனர் .

கன்சிராம் என்பவரை அவரது ஊர்மக்கள் சிலர் அவரின் சொந்த நிலத்தில் விவசாயம் செய்யவிடாமல் தடுத்து வந்தனர் . இதனை அடுத்து இது குறித்து போலிஸிடம் பூகார் கொடுத்தார் . ஆனால் காவலரோ அவரை மீண்டும் நிலத்தில் விவசாயம் செய்யக் கூடாது என்றே கூறினார் .

ஆனால் எப்படி தன் நிலத்திற்கான அனுமதியை இவர்கள் மறுக்கலாம் என்று வாக்குவாதத்தில் இறங்கினார் . இதனால் அங்கே இருந்த விஜய் சிங் என்னும் போலிஸ் அவரை அடித்து சிறுநீரைக் குடிக்க மிரட்டினார் . மேலும் இரவு முழுவதும் முட்டி போட வைத்தார் .

இந்த செய்தி வேகமாக பரவியது . இந்த செய்தி உத்தரபிரதேச முதல்வர் காதுக்கு போகவே அவர் , கொடுர செயலில் ஈடுபட்ட இரு போலிஸை வேலையை விட்டு நீக்கினார் 

13 குழந்தைகளை கொன்ற சகோதரிகளுக்கு தூக்கு தண்டனை !!



மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ரேனுகா ஷிண்டே மற்றும் சீமா காவிட் ஆகிய இருவரும் எந்நேரத்திலும் தூக்கில் இடப்படலாம் என அவர்கள் குடும்பத்தினருக்கு செய்தி வந்துள்ளது . இவர்களின் கருணை மனு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் நிராகரித்தப் பின் இந்த செய்தி வெளிவந்துள்ளது .

சகோதரிகள் இருவரும் 1990 முதல் 1996 ஆண்டுக்குள் 13 குழந்தைகளை கடத்தியுள்ளனர் . அவர்கள் இருவரும் 13 பேரைக் கடத்தி அவர்களை பிச்சை எடுக்க வைத்து , பின்பு அவர்கள்  வளர்ந்த பின்னர் தலையில் அடித்து கொன்றுள்ளனர் .

இவர்களுக்கு 2001 ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது .


2 இலட்சம் லைக்குகளை (200K Likes) பெற்றது சற்றுமுன் செய்திகள் பக்கம்.

நன்றி! நன்றி!! நன்றி!!

2  இலட்சம் லைக்குகளை (200K Likes) பெற்றது சற்றுமுன் செய்திகள் பக்கம்.

சற்றுமுன் செய்திகள்  2 இலட்சம் ஃபாலோயர்களையும் பெற்றதற்கு முழு முதற் காரணமான வாசகர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம், இந்த நாளில் சில புதிய முயற்சிகளை தொடங்க உள்ளோம், அதற்கு உங்கள் ஆதரவை அளிக்கவும். அந்த விவரங்கள் கீழே.

16 டிசம்பர் 2012ல்  "சற்றுமுன் செய்திகள்" ஃபேஸ்புக் பக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதை முதலில் லைக் செய்து ஃபாலோயர் ஆனவர் திரு சத்ய சீலன்(Sathya Seelan) முதன் முதலில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து இணைந்த அவருக்கு இந்த நேரத்தில் அவருக்கு ஒரு ஸ்பெசல் நன்றியை தெரிவிக்கின்றோம்.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள் சற்றுமுன் செய்திகள் பக்கம் 1 இலட்சம் லைக்குகளை பெற்றது, முதல் ஒரு இலட்சம் லைக்குகளை பெற்றது. 8 மாதங்களில் முதல் ஒரு இலட்சம் வாசகர்களையும் அடுத்த 12 மாதங்களில் அடுத்த ஒரு இலட்சம் ஃபாலோயர்களையும் பெற்றது. ஃபேஸ்புக்கில் செய்யப்பட்ட பல மாற்றங்களினால் சற்றுமுன் செய்திகள் பக்கத்தின் பல போஸ்ட்டுகள் நிறைய பேரை சென்றடையவில்லை, ஒரு ஃபேஸ்புக் பக்கத்தின் போஸ்ட்கள் உங்களுக்கு வரவேண்டுமெனில் அந்த பக்கத்தின் போஸ்ட்களில் லைக், கமெண்ட் அல்லது ஷேர் செய்தால் மட்டுமே தொடர்ந்து ஃபேஸ்புக் டைம்லைனில் இந்த பக்கங்கள் காண்பிக்கப்படும், இல்லையென்றால் சிறிது நாட்களில் அந்த பக்கங்களில் போஸ்ட்களை காண்பிக்காது. எனவே சற்றுமுன் செய்திகளின் போஸ்ட்களை படிப்பது மட்டுமின்றி அவ்வப்போது லைக், கமெண்ட், ஷேர் செய்யுங்கள்.

சற்றுமுன் செய்திகள் எப்போதும் குரல் அற்றவர்களின் குரலாக உள்ளது, டிவி, பிரஸ் மீடியாக்க்கள் தொடக்கத்தில் மாணவர்களின் ஈழத்தமிழர் ஆதரவு போராட்டத்திற்கு கவரேஜ் கொடுக்காமல் அலட்சிய படுத்திய போது இணைய ஊடகமே அவர்களின் போராட்டத்தை உலகுக்கு சொன்னது. மாணவர்களின் கல்வி உதவிக்கான கோரிக்கைகள் உட்பட பல்வேறு சமூக நலன் சார்ந்த செய்திகளை வெளியிட்டுள்ளோம்.

அச்சு, டிவி மற்றும் அனைத்து ஊடகங்களும் ஒருவழிப்பாதையாகவே உள்ளன, செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கும் செய்தியை வாசகர்களுக்கு சென்று சேரும், ஆனால் குடிமக்களின் செய்திகள் மக்களிடம் பரவுவது எப்படி? இணைய ஊடகங்களில் கமெண்ட் பாக்ஸ் குடிமக்கள் தங்கள் கருத்துகளை சொல்ல உதவுகிறது, ஆனால் இது மட்டும் போதாது.

குடிமக்கள் ஊடகம்

ஊடகங்கள் ஒருவழிப்பாதையாக இல்லாமல் இருவழிப்பாதையாக குடிமக்கள் ஊடகமாக இணைய ஊடகங்கள் திகழ வேண்டும் என்ற நோக்கில் "சற்றுமுன் செய்திகள்" என்ற குழுமத்தை உருவாக்கியுள்ளோம், https://www.facebook.com/Satrumun#!/groups/satrumun/ இதில் அனைவரும் இணைந்து உங்கள் செய்திகளை கருத்துகளை பகிருங்கள், அந்த செய்திகளை நாங்கள் சற்றுமுன்.நெட் இணையதளத்திலும், சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிருகிறோம்.

நட்சத்திர பதிவர்

ஃபேஸ்புக்கில் பதிவிடும் பலர் சிறந்த சமூக அக்கறையுடனும், தமிழ், வரலாறு, அறிவியல், நகைச்சுவை, கலை என பல்வேறு பரிமாணங்களில் சிறந்து விளங்குகிறார்கள், இவர்களை பற்றிய அறிமுகத்தை பல இலட்சம் பேர் படிக்கும் சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்திலும் இணையதளத்திலும் அளிக்கலாம் என உள்ளோம், இதற்கு உங்களின் பங்களிப்பை வேண்டுகிறோம், நீங்கள் விரும்பும் ஒரு பதிவர் பற்றிய குறிப்பை அவரது ஃபேஸ்புக்/வலைப்பதிவு ஐடி உடன் எங்களுக்கு அனுப்பவும், நாங்கள் அதை பக்கத்திலும், இணையதளத்திலும் வெளியிடுவோம்.

தினம் ஒரு தளம்

தமிழில் பல சிறந்த தளங்கள் லாப நோக்கின்றி பல ஆண்டுகளாக தனி நபர்களின் சொந்த முயற்சியால் நடத்தப்பட்டு வருகின்றன, இவைகள் குறித்த குறிப்புகளை எங்களுக்கு அனுப்பினால் அதையும் நம் பக்கத்திலும், இணைய தளத்திலும் வெளியிடுவோம்.

விளம்பரம்

சற்றுமுன்.நெட் இணைய தளம் ஒரு நாளைக்கு பல இலட்சம் பேர் பார்வையிடும் இணையதளமாக உள்ளது, மேலும் சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தையும் இலட்சக்கணக்கானோர் படிக்கின்றனர். இதில் விளம்பரம் செய்து வந்தால் சற்றுமுன் செய்திகள் நிறுவனமும் விளம்பரதாரர்களும் பயன் அடையலாம். சற்றுமுன் செய்திகள் நிறுவனம் மேலும் பல முயற்சிகளை மேற்கொள்ள இந்த விளம்பரங்கள் உதவும்.


மீண்டும் அனைவருக்கும் நன்றி கூறுகிறோம்.

சற்றுமுன் செய்திகள் எப்போதும் குரலற்றவர்களின் குரலாகவும், உண்மையின் பக்கம் இருப்போம் என்றும் இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் நண்பர்களுக்கும் நமது சற்றுமுன் செய்திகள் பக்கத்தை ஷேர் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

இணையதளம் http://www.satrumun.net/
எங்கள் மின்னஞ்சல் முகவரி satrumun.net(at)gmail.com

எங்களை பற்றிய உங்கள் கருத்துகளையும், விமர்சனங்களையும் தெரிவிக்கவும், நாங்கள் எந்த விதத்தில் செயல்படலாம் என்ற உங்கள் அறிவுரைகளையும் கமெண்ட்டில்/ ஈமெயிலில் தெரிவிக்கவும். 

விமானி தூங்கியதாக் விமானம் 5000 அடி கீழே இறங்கியது




ஜெட் ஏர்வேக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று மும்பையில் இருந்து பிரசெல்ஸ் சென்றது. விமானம் அங்காரா வான்பகுதியில் சென்றபோது சுமார் 5000 அடி விரைவாக கிழே இறங்கியுள்ளது. இது தொடர்பாக பதில் அளிக்க விமானபோக்குவரத்து இயக்குநகரம் இரண்டு விமானிகளுக்கும் சம்மன் அனுப்பியது. அதற்கு விமானி தூங்கி விட்டதாகவும், பெண் விமானி டேப்லெட்டில் பிசியாக இருந்ததாகவும் பொருப்பற்ற பதில் கூறியுள்ளார்கள். இது குறித்து நடவடிக்கை எடுக்க கூறியுள்ளது.

சூட்கேஸில் நிர்வாணமாக ஒரு பெண்ணின் உடல் இருந்தது





இந்தோனிஷாயாவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஒரு தம்பதியினர் தங்கி இருந்தனர். அவர்கள் அறையை காலி செய்யும் போது ஒரு பெரிய சூட்கேஸை கொண்டு வந்தனர்.  அப்போது அவர்கள் ஓட்டல் நிர்வாகத்தினர்களிடம் இந்த சூட்கேஸில் விலைமதிப்புள்ள பொருட்கள் இருப்பதாகவும், இதை சிறிது நேரம் கவனமாக பார்த்துக்கொள்ளும்படியும், தாங்கள் சில நிமிடங்களில் மீண்டும் வந்து இந்த சூட்கேஸை எடுத்துக்கொண்டு செல்வதாகவும் கூறிவிட்டு சென்றனர்.

ஆனால் பல மணிநேரம் ஆகியும் அந்த தம்பதிகள் திரும்பாததால் சந்தேகம் அடைந்த ஓட்டல் நிர்வாகத்தினர் சூட்கேஸின் கவரை பிரித்து பார்த்தபோது அதன்மேல் ரத்தக்கறை இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.அதனை திறந்து பார்த்த போது 60 வயது மிக்க ஒரு பெண்ணின் பிணம் நிர்வாணமாக இருந்தது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

சூப்பர் ஸ்டாருடன் நடிக்க மறுத்து விட்ட த்ரிஷா




சூப்பர் ஸ்டார் நடித்து வரும் லிங்கா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுமாறு த்ரிஷாவிடம்  இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார் என தகவல்கள் வருகின்றன. ஆனால் இந்த தகவல்  பொய்யானது என அவர் கூறுகிறார். சூப்பர் ஸ்டாருடன் நடிப்பது பல ஹீரோயின்களின் கனவாக இருக்கும் போது , த்ரிஷா அந்த வாய்ப்பை மறுத்து இருப்பது பரபரப்பாகி உள்ளது. 

கேன்சரால் பாதிக்கப்பட்ட ரசிகருடன் ஒரு மணி நேரம் பேசிய ராகுல் டிராவிட்




ராகுல் டிராவிட்டின் தீவிர ரசிகர் ஒருவர் கேன்சர்  நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் உயிர் போகும் நிலையில் உள்ளார். இந்நிலையில் டிராவிட் அவரை சந்தித்தால் நன்றாக இருக்கும் என அவரது உறவினர்  ஒருவர் டிராட்டுக்கு மெயில் அனுப்பி இருந்தார். டிராவிட் பதில் அனுப்புவார் என யாரும் நம்பவில்லை. யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில் டிராவிட் அவரை ஸ்கைப் மூலம் சந்தித்து ஒரு மணி நேரம் அவருடன் பேசினார். 
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media