BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 1 August 2014

ரொம்ப நல்லவர் நடிகர் சூர்யாவின் அடாவடித்தனம், மிரட்டல் உருட்டலை அடுத்து "சரவணன் என்கிற சூர்யா" பெயரை மாற்றிய இயக்குனர்


"சினேகாவின் காதலர்கள்" என்று ஒரு திரைப்படத்தை இயக்குனர் முத்துராமலிங்கம் புதுமுகங்களை வைத்து எடுத்து வருகிறார், ஆனால் இந்த படத்தின் தலைப்பிற்கு இது வரை நடிகை சினேகா எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, ஆனால் "சரவணன் என்கிற சூர்யா" என்று ஒரு படத்திற்கு பெயர் சூட்டினாலும் சூட்டினார் புதுமுக இயக்குனர் முருகராஜா, அவருக்கு சிக்கல் ஆரம்பித்தது.

நடிகர் சூர்யாவின் உண்மையான பெயர் சரவணனாம், ஊரிலேயே அவர் ஒருவர் தான் சரவணனாம், இவர் ஒருவர் தான் சூர்யாவாம், "சரவணன் என்கிற சூர்யா" படத்திற்கு ‘கில்டு’ அமைப்பு தடை விதித்து, ‘ மேலும் நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது நடிகர் சூர்யாவிடம் இருந்து "நோ அப்ஜெக்ஷன்" சர்ட்டிபிகேட் பெற்று வரும்படி தயாரிப்பாளரிடம் "கில்டு" அமைப்பினர் கூறினார்கள்.

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் நடிகர் சூர்யாவை அணுகியபோது "நோ அப்ஜெக்ஷன்" சர்ட்டிபிகேட் தரமுடியாது என்று சொன்னது மட்டுமின்றி படத்தின் டைட்டிலை மாற்றியே தீர வேண்டும் என்று மறைமுகமாக சொல்லப்பட்டு வந்ததாம்.

இந்நிலையில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் இயக்குனர் முருகராஜா காவல்துறையில் ஒரு மனு அளித்தார், அதில்  "சரவணன் என்கிற சூர்யா", என்ற பெயரில் நான் சினிமா படம் தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடித்து வருகிறேன், இந்த படத்தின் தலைப்பை முறையாக பதிவு செய்துள்ளேன். இந்நிலையில் படத்தின் தலைப்பை மாற்றச் சொல்லி, நடிகர் சூர்யா தரப்பில் இருந்து எனக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது, ஆனால் நான் படத்தின் தலைப்பை மாற்ற மறுத்துவிட்டேன். இதனால் எனக்கு இப்போது கொலை மிரட்டல் வருகிறது. அடியாட்கள் மூலம் எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. படத்தையும் வெளியிட விடாமல் தடுத்துவிட்டனர். நடிகர் சூர்யா தரப்பினரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. உரிய பாதுகாப்பு அளிப்பதோடு, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை, மேலும் நடிகர் சூர்யா ஏன் இதை பெரிது படுத்துகிறார் என்றே தமிழ் திரையுலக பிரபலங்கள் பேச ஆரம்பித்தனர், ஆனால் இயக்குனருக்கு தொடர் நெருக்கடிகளும், சூர்யாவை பகைத்துக்கொண்டு திரையுலகில் இருக்க முடியாத நிலை புதிய இயக்குனருக்கு ஏற்பட்டது,  மேலும் படம் வெளியாவதில் சிக்கல் நீடித்தது, படத்தை எடுத்து முடித்தும் வெளிவர முடியாத நிலையில் சூர்யா போன்ற அரசியல், சினிமா தொடர்புகளுடைய பெரிய இடத்து ஆட்களோடு மோதி நஷ்டப்பட வேண்டாமென்று "சரவணன் என்கிற சூர்யா" வை "போஸ்பாண்டி" என்று மாற்றியுள்ளார், இந்த தலைப்பை தனது அடுத்த படத்துக்காக பதிவு செய்து வைத்திருந்தாராம் இயக்குனர்.

சினேகாவின் காதலர்கள் என்றே படம் வரும்போது "சரவணன் என்கிற சூர்யா" வந்தால் என்னவாம்? ஆனால் இந்த பிரச்சினையில் நடிகர் சூர்யாவும் குறிப்பாக நடிகர் சிவக்குமாரும் நடந்து கொண்ட விதம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளதாம், மேடைக்கு மேடை என் மகன் தூய ஆத்மா, பரமாத்மா என்று பேசும் நடிகர் சிவக்குமார் இந்த சாதாரண படத்தலைப்பிற்கு போய் தன் புஜபல பாராக்கிரம சக்திகளை ஒரு புது இயக்குனரிடம் காண்பித்து முடக்கியது திரை உலகில் நல்லவர்கள் என்று நம்பப்படும் சிவக்குமார், சூர்யா மீது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன. 

பேஸ்புக் அரைமணி நேரம் முடங்கியது !! இந்த சாக்கில் டிவிட்டருக்கு சென்ற பயனாளர்கள் !!



சமூக வலைதளங்களில் முக்கியமான ஒன்றான பேஸ்புக் அரைமணி நேரம் உலகம் முழுவதும் முடங்கி போனது . இந்திய நேரப்படி 9.30 முதல் 10.00 மணி வரை இந்த பாதிப்பு இருந்தது .

பேஸ்புக் முடங்கியவுடன் பயனாளர்கள் அனைவரும் டிவிட்டர் நோக்கி சென்றனர் . எனவே #facebookdown , #nowfacebookisdown போன்ற ஹேஷ் டேக்கள் டிவிட்டரில் ட்ரெண்டிங் ஆனது .

இந்த முடக்கத்திற்கு சர்வரில் கோளாறு ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது . அரை மணி நேரத்தில் வழக்கமான நிலைக்கு திரும்பியது பேஸ்புக் .

இதேப் போன்று ஜூன் 19 ஆம் தேதியும் பேஸ்புக் அரைமணி நேரம் முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது .

வரலாற்றில் இடம் பிடித்தார் விகாஸ் கவுடா




வட்டு எறிதலில் இந்திய வீரர் விகாஸ் கவுடா நேற்று 63.64 மீட்டர்கள் எறிந்து இந்தியாவுக்கு தடகள பிரிவில் இருந்து 2014 காமென்வெல்த்தில் முதல் பதக்கத்தை பெற்று தந்தார். இவர் தங்கப்பதக்கம் வென்றார். இவருக்கு இப்போது 31 வயது ஆகிறது. இவர் இதற்கு முன்பு 2010 காமென்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இருந்தார்.

2012 ஒலிம்பிக் போட்டியில் எந்த பதக்கமும் பெறாவிட்டாலும் 8 வது இடத்தை பிடித்தார். அந்த ஒலிம்பிக்கில் இவரும் கிருஷ்னா பூனியாவும் தான் தடகளத்தில் இந்தியாவின் பெயர் இருக்க செய்தார்கள். இல்லையெனில் தடகள போட்டிகளில் இந்தியாவின் பெயர் இல்லாமலே இருந்திருக்கும். பதக்கம் வெல்வதற்கு முன்பு அவரது டிவிட்டர் கணக்கில் இந்தியாவின் டெஸ்ட் தோல்விக்கு வருத்தம் தெரிவித்து இருந்தார். அந்த சோகத்தை போக்க அவர் பதக்கம் வெல்வதாக கூறினார். சொன்னது போலவே செய்தார்.

ஒட்டுமொத்தமாக தடகளத்தில் இந்தியாவுக்கு இது 2 வது பதக்கம் ஆகும். இதற்கு முன்பு 1958 ஆம் ஆண்டு காமென்வெல்த் போட்டியில் 440 யார்டு போட்டியில் இந்தியாவின் தடகள தெய்வமாக பார்க்கப்படும் மில்கா சிங் தங்கப்பதக்கம் வென்றார். அதன் பின்பு இந்தியர்கள் யாரும் தடகளத்தில் பதக்கம் வெல்லவில்லை. அந்த குறையை 56 ஆண்டுகள் கழித்து இந்த சாதனையை செய்து உள்ளார்.

இவரது சாதனையால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கு பெருமை வந்து உள்ளது. தடகளத்திலும் இந்தியர்களால் பதக்கம் வெல்ல முடியும் என்பதை நிருபித்து உள்ளார். 

சரவண பவன் பற்றி முதல்வர் ஜெயலலிதாவிடம் புகார் வந்து உள்ளது




சென்னையில் மிக சிறந்த சைவ உணவகம் எது என்றால் பலரின் பதில் சரவண பவனாக தான் இருக்கும். அப்படிப்பட்ட சரவண பவன் ஹோட்டலின் மீது சென்னையை சேர்ந்த ஜானகிராமன் என்பவர் முதல்வரின் தனிப்பிரிவில் புகார் செய்து உள்ளார். ஜானகிராமன் சென்னையில் ஒரு டிராவல்ஸ் அன்ட் சர்வீஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை சட்டப்படி அனுப்பி வருகிறார்.

சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலின் மகன் சிவக்குமார், வெளிநாட்டில் உள்ள சரவண பவன் கிளைகளுக்கு ஆட்களை அனுப்ப விசா மற்றும் அரசாங்க அனுமதிகளைப் பெற்றுத் தர வேண்டும் என்று ஜானகிராமனை  அணுகினார்.  அவரும் கடந்த 4 வருடங்களாக ஆட்களை அனுப்பி வருகிறார்கள். ஆரம்பத்தில் இதற்கான தொகையை சரியாக கொடுத்து வந்தார்கள், பின்பு இழுத்தடிக்க தொடங்கி உள்ளார்கள். இதுவரை 19 மாதங்களுக்கு ஆட்கள் அனுப்பியதற்கான தொகை ரூ,3,73,500 தர வேண்டி உள்ளது. இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக சிவகுமாரிடம் கேட்ட போது அவர், இது ஒரு சுத்த பொய் என்றார். தங்கள் ஊழியர்கள் 12 பேரின் பாஸ்போட்டை அந்த நிறுவனம் முடக்கி வைத்துள்ளதாக கூறுகிறார். யார் சொல்வது உண்மை என கூடிய விரைவில் தெரிய வரும்.

பேஸ்புக்கில் புதிய சாதனை படைத்தார் இளைய தளபதி விஜய்




பேஸ்புக்கில் உள்ள விஜய் பக்கத்திற்கு இன்று 2 மில்லியன் லைக்குகள் வந்தன. இது நடிகர் விஜய்யின் சொந்த பக்கம் ஆகும். தமிழ் நடிகர்களில் இதற்கு முன் இந்த சாதனையை பெற்றவர் உலக நாயகன் கமலஹாசன். இவரது பக்கத்திற்கு 2.7 மில்லியன் லைக்குகள் உள்ளன. ரஜினி, அஜித்தின் சொந்த பக்கங்கள் பேஸ்புக்கில் இல்லை. அவர்கள் பெயரில் இருக்கும் பக்கங்களுக்கு 1.5 மில்லியன் லைக்குகளூக்கு மேல் உள்ளன. விஜய்யின் பேஸ்புக் பக்கத்தின் முகவரி  https://www.facebook.com/ActorVijay.

பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா காதல் கடிதம் எழுதியதாக வெளிவந்த கட்டுரை






இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணையதளமான www.defence.lk என்ற இணையதளத்தில் இந்திய இலங்கை மீனவர் இடையேயான பிரச்னை குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.. குறிப்பாக தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் அத்துமீறி நுழைந்து தாக்கப்படுவது குறித்தும், கைது செய்யப்படுவது குறித்தும் இந்திய பிரதமருக்கு தமிழக முதல் அமைச்சர் கடிதம் எழுதுவது தொடர்பாக மிகவும் இழிவுபடுத்தும் வகையில் விமர்சனங்கள் அந்த கட்டுரையின் முகப்பு பகுதியில் இடம்பெற்றிருந்தது.

நமது பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா எழுதுவது காதல் கடிதங்கள் என அந்த கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தது. இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது , இதனால் அந்த கட்டுரை அந்த இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்த கட்டுரை இலங்கை அரசின் அனுமதி இல்லாமல் வெளியிடப்பட்டு இருந்தது என அவர்கள் தெரிவித்து இருந்தார்கள். இந்த விவகாரத்திற்காக அவர்கள் மோடியிடமும் ஜெயலலிதாவிடமும் மன்னிப்பு கேட்டார்கள்.

இதில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் , பழ. நெடுமாறன் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்து இருந்தார்கள். திமுக சார்பில் பேசிய திருச்சி சிவா , இது போன்ற கட்டுரைகள் வெளியாவதை இலங்கை அரசு தடுக்க வேண்டும் என்றார். 

முதல் முறையாக நிர்வாணமாக போஸ் தந்து உள்ளார் ஆமீர் கான்




பாலிவுட்டில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்து உள்ளவர் நடிகர் ஆமீர் கான். இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். இவர் நடித்த 3 இடியட்ஸ் மிக பெரிய வெற்றியை தந்தது. அதன் பின்பு  இவர் செய்த சத்யமேவ் ஜெயதே என்னும் நிகழ்ச்சி இவருக்கு நல்ல பெயரை எடுத்து தந்தது.

இப்போது இவர் பிகே என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். இந்த படத்தின் முதல் போட்டோவை ஆமீர் கான் தனது டிவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டார். அதில் அவர் எந்த ஆடையும் அணியாமல் உள்ளார். ரயில்வே டிராக்கில் தனிமையில் நின்று கொண்டு தனது ஆண் உறுப்புகளை மறைத்து கொண்டு நிற்கிறார். இது குறித்து தங்கள் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கவும் என்றும் குறிப்பிட்டு உள்ளார். இந்த படம் டிசம்பர் 14 ஆம் தேதி வெளிவருகிறது. 


இந்த படத்தில் இப்படி நடிப்பதற்கு ஆமீர் கானின் துணிச்சலையும் பலர் பாராட்டி உள்ளார்கள் 

இந்தியா பதக்கம் வெல்லாவிட்டால் மைதானத்தில் ஜட்டியோடு 10 ரவுன்டு ஒடுவதாக கூறிய ஸ்குவாஷ் வீரர்





இந்திய அணி ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் பதக்கம் வெல்லாவிட்டால் ஸ்குவாஷ் கோர்டில் 10 ரவுன்டு ஜட்டியோடு ஒடுவதாக இந்திய ஸ்குவாஷ் வீரர் மகேஷ் மங்கன்கர் தெரிவித்து உள்ளார். அவர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்து உள்ளதாக தெரிவித்தார். ஸ்குவாஷில் பதக்கம் வெல்கிறதா இல்லையா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

தனது அழகால் அனைத்து ரசிகர்களையும் தன் பக்கம் திருப்பிய வாலிபால் வீரங்கனைக்கு ஏற்பட்ட புதிய பிரச்சனை !!

சபினா அல்டின்பெகொவா , தற்போது இணையம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு பெயர் . இவர் 17 வயதான ஒரு விளையாட்டு வீராங்கனை . தற்போது ஆசிய 19 வயதுக்கு உட்பட்டோருக்கான நடந்த வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் கஸகஸ்தான் அணிக்காக கலந்து கொண்டார் . இவர் மிகவும் அழகாக இருந்ததால் ரசிகர்கள் அனைவரும் இவரை விளையாட்டை பாராட்டாமல் , இவரி அழகை புகழ தொடங்கி விட்டனர் .


                                                                                                                                                                                                                                                                                                                                       இவருக்காக தொடங்கப்பட்ட பேஸ்புக் பக்கம் அதிவேகமாக 2 லட்சத்தை தொட்டது . ஒரு செய்தி நாளிதழ் இவருக்கு என 10 பக்கத்தை ஒதுக்கியது . ரசிகர்கள் ஒரு கட்டத்தில் சாம்பியன்ஷிப்பை தொடராமல் இவரை டிவிட்டரில் பின் தொடர ஆரம்பித்தனர் . ஆனால் இவர் தன்னுடைய பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்கள் பொய்யானாவை என்றும் தான் இன்ஸ்டாகிராமில் மற்றும் இருப்பதாக தெரிவித்தார் .                                    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                இவருடைய பயிற்சியாளரும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்படுவதால் , போட்டியில் அணியால் கவனம் செலுத்த இயலவில்லை என்று தெரிவித்தார் .





     























முடிவு எடுக்க முடியாமல் திணறி வரும் மோடி





மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பணித் தேர்வின் முதல்நிலைத் தேர்வு எழுதும் நடைமுறையில் மாற்றம் வேண்டும் என்று இந்திய அளவில் யு.பி.எஸ்.சி. தேர்வுக்காக பயிற்சி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல்நிலைத் தேர்வுக்கான வினாத்தாள்களும் மாநில மொழியில் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் மாணவர்கள் வைத்துள்ளனர். இந்தப் பிரச்சினை கடந்த சில நாட்களாக,  நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதும் தடியடி நடத்தப்பட்டது. இவர்களுக்கு நாடாளுமன்றத்தில் பல கட்சிகள் வாதம் செய்கின்றன. ஆனால் இது குறித்த தங்கள் நிலையை மோடி அரசு இன்னும் சொல்லவில்லை. இதற்கு வெங்கய்யா நாயுடு பதில் அளித்தார். மோடி இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதில் மோடி நடுநிலையான முடிவை ஈடுப்பார் என்று கூறப்படுகிறது. 
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media