BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 8 July 2014

காங்கிரசின் மற்றுமொரு ஊழல் , 99 இரயில்வே திட்டங்களில் இதுவரை ஒரே ஒரு திட்டம் தான் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது !!


இன்று இரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்த இரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா , இதற்கு முந்தைய அரசு அறிவித்த 99 திட்டங்களில் இதுவரை ஒரே ஒரு திட்டம் தான் முடிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார் .

அவர் கூறுகையில் , கடந்த 10 ஆண்டுகளாக 60,000 கோடி செலவில் 99 திட்டங்களை இதற்கு முந்தைய அரசு அறிவித்தது . ஆனால் அந்த திட்டங்களில் இதுவரை ஒரே ஒரு திட்டம் தான் முடிக்கப்பட்டுள்ளது . மேலும் கடந்த 30 வருடங்களாக 676 திட்டங்கள் 1,57,883 கோடி செலவில் திட்டமிடப்பட்டு இருந்ததாகவும் அந்த திட்டங்களில் இதுவரை 317 மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன . மற்றவை கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது . அவர்கள் திட்டங்கள் அறீவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி இருந்தனர் . திட்டத்தை நடத்தி முடிப்பதில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று குற்றஞ்சாட்டினார் .

அந்த திட்டங்கள் முடிக்கப்படவில்லை என்றால் , அந்த திட்ட்ங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணம் எங்கே போனது . கூட்டத் தொடரின் போது , திட்ட்ங்களை அறிவித்து விட்டு , பின்னர் நாம் யாரும் கண்டு கொள்ளாததால் அப்படியே திட்டங்களை கிடப்பில் போட்டு விடுகின்றனர் . இனிமேல் நாம் ஏமாற கூடாது . இந்த பட்ஜெட்டின் அனைத்து திட்டங்கள் நிறைவேறும் வரை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்போம் .

இப்போது தெரிகிறதா நமது டிக்கெட் கட்டணங்களின் விலை ஏறுகிறது என்று ??  

ரயில்வே பட்ஜெட் பற்றி நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை !!



மோடி அரசின் முதல் இரயில்வே பட்ஜெட் இன்று இரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா தாக்கல் செய்தார் .

பட்ஜெட்டை முழுமையாக படியுங்கள் !!

 இந்த பட்ஜெட்டில் உள்ள நன்மைகளையும் , தீமைகளையும் அந்த பட்ஜெட்டைப் பற்றி  நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களைக் காணலாம் .

1 ) மோடி அரசின் முதல் தேர்வு !!

இந்த பட்ஜெட்டை பலர் மோடி அரசின் முதல் தேர்வாகவே பார்க்கின்றனர் . இதன் மூலம் அவர்களின் ஆளுமைத் திறனை கணித்து விடலாம் என்று இருந்தனர் . இதனால் இரயில்வே அமைச்சருக்கு கூடுதல் சுமை இருந்தது . ஆனாலும் எந்தவொரு பதற்றமும் இல்லாமல் , ஒரு தொலைநோக்கு பார்வையுடன் ஒரு வலுவான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் .

2 ) இரயில்வேயும் ஒரு சேவைத் துறை தான் !!

இதுவரை அனைத்து பட்ஜெட்டுகளும் இரயில்வே கட்டமைப்பை வலுபடுத்துவதில் கருத்தாக இருக்கும் . ஆனால் அந்த பட்ஜெட்டில் இரயில்வே ஒரு சேவைத் துறை என்பதை மறந்து ஒரு லாபம் பார்க்கும் இயந்திரமாகவே பார்த்தனர் . அதனை சதானந்த கவுடா அவர்கள் அழகாக இந்த பட்ஜெட்டில் செய்துள்ளார் . மக்களுக்கு அதிக சேவை வழங்கும் விதமாக இரயில்வேயில் வைபி வசதி , பயணிகளுக்கு உணவு வழங்குவதை மேம்படுத்துதல் , சிசி டிவி கேமரா பொருத்துதல் , பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் ஆகியவற்றை இந்த பட்ஜெட்டில் இடம் பெற வைத்து இரயிவே துறையை சேவைத் துறையாகவும் மாற்ற முயற்சித்து இருக்கிறார் .

3 ) பல நாள் கனவு நினைவேறியது !!

இந்தியாவில் பல ஆண்டுகளாக புல்லட் ரயிலை செலுத்த முயற்சிகள் நடை பெற்று வந்தது . ஆனால் இறுதியாக இந்த பட்ஜெட்டில் தான் புல்லட் ரயில் பற்றிய அறிவிப்பு வந்துள்ளது . இப்போது இந்த அறிவிப்பினால் பல இந்தியர்களின் கனவு நனவாக இருக்கிறது . மேலும் 54 புதிய ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளனர் .

4 ) ரயில்வேயில் அந்நிய முதலீட்டை அனுமதித்து கொடுத்த வாக்கை மீறியது!

இந்த ரயில்வே பட்ஜெட்டில் பெரிய பெரிய திட்டங்களில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க இருக்கிறோம் என்று கூறினார் . மேலும் பெரிய பெரிய திட்டங்களில் முதலீடு செய்யும் அளவுக்கு நிதி அந்நிய முதலீட்டில் தான் கிடைக்கும் என்றும் . மக்களிடம் ரயில் டிக்கெட்டின் விலை ஏற்றத்தை வைத்து மட்டும் இந்த நிதியை திரட்டி விட முடியாது . வேறு வழியில் தான் செல்ல வேண்டும் . எனவே தான் அந்நிய முதலீட்டை  இரயில்வே துறையில் , ஆதரிக்கிறோம் என்று அவர் கூறி உள்ளார் . ஆனால் இதற்கு முன்னால்  மத்திய அமைச்சகம் , ரயில்வேத் துறை போன்ற அதிக முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் அந்நிய முதலீட்டை அனுமதிக்காது என்று கூறி இருந்தனர் . ஆனால் இப்போது இவரின் இந்த அறிவிப்பால் பெரும் சர்ச்சைக் கிளம்பியுள்ளது . இரட்டை வேடம் போடுவதாக கூறுகின்றனர் .

5 ) விலை ஏற்றத்தை மறைக்க புதிய திட்டங்களா ??

எப்பவும் ஒரு சேவைக்கேற்ற விலையை நாம் கொடுத்தாக வேண்டும் . இந்த பட்ஜெட்டில் பல சேவைகளை அறிவித்த அமைச்சர் , விலை ஏற்றத்தைக் கட்டுபடுத்த முடியவில்லை என்றும் , எரிவாயு விலை உயர்விற்கேற்ப ரயில் கட்டணமும் உயரும் என்று அறிவித்தார் . இதனால் விலை ஏற்றத்தை மறைக்க தான் இத்தனை திட்டங்கள் என்று கூறுகின்றனர் .


இன்று முதல் அரையிறுதி போட்டி : ஜெயிக்கபோவது யாரு ??




கால்பந்து உலக கோப்பை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் மூன்று ஆட்டங்களில் கோப்பையை வெல்ல போவது யார் என்று தெரிந்து விடும். இன்று முதல் அரையிறுதி தொடங்க இருக்கிறது. இதில் பிரேசில் அணியும், ஜெர்மனி அணிகளும் மோத உள்ளன. இருவருமே பலமான அணிகள் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த ஆட்டத்தில் யார் ஜெயிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று பார்ப்போம்.

கடந்த ஆட்டம் வரை இரு அணிகளுமே சமபலத்துடன் இருந்து வந்தன. ஆனால் கடந்த ஆட்டத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் காயம் காரணமாக விலகி விட்டார். அந்த அணியின் கேப்டன் தியாகோ சில்வா 2 மஞ்சள் அட்டைகளை வாங்கி விட்டதால் இந்த ஆட்டத்தால் பங்கேற்க முடியாது. இது அந்த அணியின் முன்களம் பின்களம் என இரண்டிலும் ஒட்டை விழ வைத்து விட்டது. ஜெர்மனியின் டீம் வொர்க் எல்லா ஆட்டங்களிளும் சிறப்பாக இருந்ததால் இந்த போட்டியில் ஜெர்மனி அணி வெல்வதற்கே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறபடுகிறது. இருந்தாலும் பிரேசில் வெல்வதற்கு சில காரணங்கள் அமைந்து உள்ளது. அவை,

*  பிரேசில்  அணியின் பயிற்சியாளர் ஸ்காலரி தலைமையில் அந்த அணி இதுவரை உலக கோப்பையில் தோற்றது இல்லை.

* இந்த ஆட்டம் பிரேசிலின் சொந்த மண்ணில் நடக்கிறது.

* இதுவரை பிரேசில் அணியின் டீம் வொர்க் நன்றாக வந்து உள்ளது.

* கடந்த 2 உலக கோப்பையிலும் ஜெர்மனி அணி அரையிறுதியில் தோற்று வெளியேறி வருகிறது.


24 ஆண்டுகள் கழித்து உலக கோப்பை வென்று விட வேண்டும் என்று ஜெர்மனி அணியும், கோப்பையை வென்று நெய்மருக்கு தர வேண்டும் என்ற வெறியில் பிரேசில் அணியும் இன்று களமிறங்க உள்ளன.

இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை காலை 1.30 மணிக்கு தொடங்க உள்ளது.

நிஜ ஜோடியான சீரியல் ஜோடிகள் சரவணன் - மீனாட்சி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்


சரவணன் மீனாட்சி  என்ற தொடர் விஜய் டிவியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது, இந்த தொடரில் நடித்த செந்தில், ஸ்ரீஜா இருவரும் சிறந்த ஜோடிகளாக டிவிகளில் வலம் வந்தனர், இந்நிலையில் நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

சரவணன் செந்தில் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர், இவர்கள் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக வதந்திகள் பரவின. ஆனால் இருவருமே வழக்கம்போல மறுத்து வந்தார்கள்.

இந்நிலையில் திருப்பதியில் செந்தில், ஸ்ரீஜா இருவரும் ரகசியமாக சில நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த திருமணமான செய்தியினை நடிகர் பாலாஜி முதன்முதலில் தனது ஃபேஸ்புக் பக்கம் மூலம் வெளியிட்டு உறுதி செய்திருக்கிறார்.

கால்பந்து உலக கோப்பையை வெல்ல போவது யாரு ?? பிறந்த நாளில் கங்குலியின் மனம் திறந்த பேட்டி


ரசிகர்களால் அன்போடு தாதா என அழைக்கப்படும் முன்னால் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு இன்று பிறந்த நாள்.இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை தொடங்க இருப்பதால் அந்த போட்டியை வர்ணனைசெய்வதற்காக அவர் இங்கிலாந்து சென்று விட்டார். அதனால் அவரது பிறந்த நாளை அவரது குடும்பத்தினருடன் கொண்டாட முடியவில்லை.



 அவர் இன்று ஒரு பேட்டி தந்தார். கங்குலி ஒரு கால்பந்து ரசிகர் என்பது அனைவரும் தெரிந்தது தான். அந்த பேட்டியில் இந்த உலக கோப்பையை வெல்ல போவது யாரு என்ற கேள்விக்கு ,இறுதி போட்டி ஜெர்மனி - நெதர்லாந்து அணிகளுக்கிடையே நடக்கும் என்றார். ஆனால் ஒரு கால்பந்து ரசிகனாக அவர் எதிர்பார்ப்பது அர்ஜெண்டினாவும் - பிரேசிலும் இறுதி போட்டியில் மோத வேண்டும் என்று. இப்போது இருக்கும் ஃபார்மை வைத்து பார்க்கும் போது அது ஜெர்மனி - நெதர்லாந்து இடையே தான் என்றார்.


பொருத்து இருந்து பார்ப்போம் தாதாவின் கணிப்பு மெய்யாகிறதா அல்லது பொய்யாகிறதா என்று.

அஹிம்சைக்கு கிடைத்த வெற்றி !! பிரிட்டன் பாராளுமன்றத்தில் காந்தி சிலை !!!



இந்தியாவில் தேச தந்தை என்று அழைக்கப்படும் காந்தி அவர்கள் இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளுக்கு அமைதி வழியைக் காட்டியுள்ளார் . இவரை கவுரவிக்கும் விதமாக பிரிட்டென் பாராளுமன்றத்தில்  காந்தியின் சிலையை நிறுவ உள்ளனர் . 2015 ஆம் ஆண்டு தொடக்கத்திற்குள் சிலையை நிறுவ திட்டமிட்டுள்ளனர் ..

அமைதி வழியின் சக்தியை பார்த்தீர்களா ?? தான் சுதந்திரம் பெற்று தந்த நாட்டில் மட்டுமில்லாமல் தான் எதிர்த்து போராடிய நாட்டிலும் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார் .

இன்றைய சிறப்பு செய்திகள் - today special tamil news

பெண்கள் பற்றிய 10 அதிரடி செக்ஸ் உண்மைகள்!

செக்ஸ் உறவு கொள்ளும் போது பெண்கள் தங்கள் உடல் அழகை பற்றி மிகவும் கவலைப்படுவார்களாம்
http://www.satrumun.net/2014/07/10-s-facts-about-woment.html

நிஜ ஜோடியான சீரியல் ஜோடிகள் சரவணன் - மீனாட்சி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்
http://www.satrumun.net/2014/07/blog-post_3201.html


தனது 'பிராவை' ரசிகருக்கு பரிசாக தர உள்ளார் பூனம் பாண்டே
http://www.satrumun.net/2014/07/blog-post_595.html

கட்டிட விபத்து : தன் உயிரை கொடுத்து மகனை காப்பாற்றிய தந்தை, உருக்கமான சம்பவம்
http://www.satrumun.net/2014/07/blog-post_7150.html

உலக கோப்பைக்காக ஒரு நாளுக்கு 40 லட்சம் காண்டம்களை தயாரித்து அனுப்பும் கேரள கம்பெனி !!
http://www.satrumun.net/2014/07/40.html

வெற்றியை எப்படி கொண்டாட வேண்டும் என்று சொல்லி தந்த கேப்டன் கங்குலி
http://www.satrumun.net/2014/07/blog-post_5809.html

இவர்கள் எல்லாம் ஏழை இல்லையாம், ஏழைகள் யார் என ரங்கராஜன் கமிட்டயின் புதிய அளவுகோல் என்னும் அநியாயம்
http://www.satrumun.net/2014/07/blog-post_1997.html

தமிழகத்தை ஏமாற்றிய மோடி ரயில்வே பட்ஜெட்,
பட்ஜெட்டின் பிற சிறப்பம்சங்கள் என்ன?
http://www.satrumun.net/2014/07/blog-post_7510.html

முன்னாள் குடியரசு தலைவரின் தம்பி கொலை வழக்கில் குற்றவாளி!
 http://www.satrumun.net/2014/07/blog-post_5318.html


அம்மா மெஸ் போல அம்மா ஆட்டோ வேண்டுமென்று கோரிக்கை
http://www.satrumun.net/2014/07/blog-post_8323.html

பெண்கள் பற்றிய 10 அதிரடி செக்ஸ் உண்மைகள்


1) மற்ற நேரங்களை விட செக்ஸ் உறவு கொள்ளும் போது பெண்கள் தங்கள் உடல் அழகை பற்றி மிகவும் கவலைப்படுவார்களாம்

2) 30 சதவீத பெண்களுக்கு ஆர்கசம் எனப்படும் செக்ஸ் உறவின் உச்சகட்டத்தை அனுபவித்ததில்லையாம்

3) ஹை ஹீல்ஸ் போடும் பெண்களுக்கு பின்புறம் 25 சதவீதம் கூடுதலாக எடுப்பாக காண்பிக்குமாம்

4) ஹை ஹீல்ஸ் போடுவதால் பெண்களுக்கு உடலுறவின் உச்சகட்டமான ஆர்கசம் ஏற்படுவது குறையுமாம், எடுப்புக்கு ஆசைப்பட்டு உச்சத்தை இழந்துவிடாதீர்கள்.

5) 80 வயதான பெண்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் தங்கள் ஆண் துணையுடன் செக்ஸ் உறவு கொள்கிறார்களாம்.

6) பெண்கள் உடலுறவு கொண்டு எட்டு நாட்கள் வரை கர்ப்பம் தரிக்க வாய்ப்புள்ளதாம், பெரும்பாலும் 24-48 மணி நேரங்களில் கர்ப்பம் அடைவார்கள், ஆனால் சில நேரம் விந்தணு பெண்ணின் உடலில் 8 நாட்கள் வரை உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாம்.

7) செக்ஸ் உறவில் உச்சகட்டமானா ஆர்கசத்தை அடையும் பெண்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடனும், அழகாகவும், கற்பனை திறனுடன் கிரியேட்டிவாகவும் சிறப்பாக வேலை செய்யக்கூடியவராகவும் உள்ளார்களாம். உடலுறவில் உச்சகட்டம் அடையும் பெண் அடுத்த நாள் முழுவதும் சிரித்த முகத்துடன் அனைவருடனும் பழகி வேலை செய்வாராம்.

8) செக்ஸ் உறவின் போது காண்டம் பயன்படுத்துவது பெண்களுக்கு உச்சகட்டம் ஏற்படுத்துவதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை

9) பெண்களின் உள்ளாடை செட்டான பாண்டீஸ் பிராவின் சராசரி விலை 75 டாலர்கள்

10) கணவர் / பாய் பிரண்டுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களில் ஐந்தில் ஒரு பெண் ஒரே நேரத்தில் வேறு ஒரு செக்ஸ் பார்ட்னரையும் கொண்டுள்ளார் என சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன‌

நாங்கள் விலை உயர்வை பற்றி விவாதிக்க தயாராக இருக்கிறோம் , ஆனால் எதிர் கட்சியினர் தான் இதை கெடுக்கின்றனர் - வெங்கையா நாயுடு !!



நேற்று முதல் பாரளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது . தொடங்கிய முதல் நாளிலே விலை ஏற்றத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினே அமலியில் ஈடுபட்டனர் .

இதுகுறித்து பாஜகவின் பாராளுமன்ற விவகார அமைச்சர் , வெங்கையா நாயுடு , " நாங்கள் அனைத்து பிரச்சனைகளையும் பேச தயாராக உள்ளோம் . ஆனால் எதிர் கட்சியினர் தான் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர் " என்றார் .

நேற்று காங்கிரஸ் கட்சியினர் கேள்வி நேரத்தை தள்ளி வைத்து விட்டு , விலை ஏற்றம் குறித்த விவாதத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினர் . ஆனால் சபாநாயகர் இதை மறுத்து விட்டார் .


மோடி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட்டில் உள்ள சிறப்பு அம்சங்கள்





மோடி அரசு பதவி ஏற்று தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. அதனை மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் உள்ள சிறப்பு அம்சங்களை பார்ப்போம்.

* 58 புதிய ரயில்கள் வருகின்றன.

* 3700 கிமீ புதிய ரயில் பாதை அமைக்கப்படும்.

* அதிவேக ரயில்களுக்கு என வைர நாற்கர திட்டம் வருகிறது.

* 30 வருடங்களாக முடிக்கபடாமல் உள்ள திட்டங்களில் 4 திட்டங்கள் விரைந்து முடிக்க படும்.

* நமது பல ஆண்டு கனவான புல்லட் ரயில் அஹமதாபாத் - மும்பை வழித்தடத்தில் வருகிறது. இது மணிக்கு 160 முதல் 200 கிமீ வேகத்தில் செல்லும்.

* ரயில்வே துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* ரயில்வேக்கு என தனி பல்கலைகழகம்.

* வடகிழக்கு மாநிலங்களில் ரயில் சேவை அதிகரிக்கப்படும்.

* இனி சரக்கு ரயில்களின் காய், பழங்களை அனுப்பி வைக்கலாம்.

* மக்கள் விரும்பும் நிறுவனங்களின் உணவு பொருட்களை ரயிலில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* ரயில் நிலையங்களில் சூரிய சக்தி பயன்பாடு அதிகரிக்க படுகிறது.

* ரயில்வே துறையை உயர்த்துவதற்கு , தனியாரும் அரசும் சேர்ந்து உழைப்பது.

* தூங்கி கொண்டு இருக்கும் பயணிகளை எழுப்பும் வசதி.

* ஏ1 மற்றும் ஏ தரம் கொண்ட ரயில் நிலயங்களில் வைஃபை வசதி வருகிறது. சில முக்கியமான ரயில்களிளும் இந்த வசதி வர உள்ளது.

* ரயில்வே இணையதளத்தில் ஒரு நிமிடத்தில் 7200 டிக்கெட்டுகள் புக் செய்யலாம். 1.2 இலட்சம் பயணிகள் ஒரே நேரத்தில் இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம்.

* கூட்டம் கூடுவதை தவிர்க்க தானியங்கி டிக்கெட் கொடுக்கும் இயந்திரம் ரயில் நிலையங்களில் வைக்கபடும்.

* இனி முன்பதிவு செய்யாத கோச்களுக்கும் இணையத்திலே டிக்கெட் வாங்கி கொள்ளலாம்.

* நடைமேடை டிக்கெட்டும் இணையம் மூலம் வழங்கப்படும்.

* ரயிலின் வருகை குறித்து பயணியின் மொபைலுக்கு குறுஞ்செய்தி அனுப்ப படும்.

* ரயிலில் மற்றும் ரயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.

* ரயில்களில் பெண்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.

* மகளிருக்கு என தனியாக உள்ள ரயில் பெட்டியில் உள்ள பெண் காவலருக்கு செல்போன் வழங்கப்படும்.

* ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களை சுத்தமாக வைத்து இருக்க தனியாரின் உதவி வாங்கப்படுகிறது.

* ரயில்களில் உள்ள கழிவறைகளை சுத்தமாக வைத்து இருக்க நடவடிக்கை எடுக்கபடும்.

* ரயில்களில் உள்ள பயோ டாய்லெட்டுகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும்,

* தூய்மைபடுத்தபடும் பணி சரியாக நடக்கிறதா என்று கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.

* ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் சேவை உயர்த்தபடும்.

* இனி தபால் நிலையங்களிலும் டிக்கெட் புக் பண்ணலாம்.

* ரயில்வேயில் 1 ரூபாய் வருவாய் என்றால் செலவு 94 காசுகள் ஆகிறது.

* எரிபொருள் விலைக்கு ஏற்ப ரயில் கட்டணம் மாற்றி அமைக்க படும்.

* பயணிகள் கட்டணம் உயர்வு என்பது தவிர்க்க முடியாதது.

* இனி வரும் காலங்களில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் , ரயில்வே துறையை நல்ல நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்படும்.


தமிழகத்தை பொருத்த வரை இந்த பட்ஜெட் ஏமாற்றம் தான். நாம் அதிகம் எதிர்பார்த்த புதிய ரயில்களுக்கான அறிவுப்புகள் எதுவும் இல்லை. ரயில்வே பட்ஜெட்டில் எல்லா மாநிலங்களையும் கவர்வது என்பது முடியாத செயல் ஆகும். ஆனால் மொத்தத்தில் பார்க்கும் போது இது தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் ஆகும்.

நாங்க என்ன பிச்சைக் காரர்களா ?? ரயில்வே பட்ஜெட் மம்தா பானர்ஜி கடும் அதிருப்தி !!



இன்று மோடி அமைச்சரவையின் முதல் ரயில்வே பட்ஜெட் மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா அவர்களால் இன்று தாக்கல் செய்யப்பட்டது . இந்த பட்ஜெட்டில் அந்நிய முதலீட்டை அனுமதித்துள்ளதால் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார் .

இன்று கூட்டம் ஒன்றில் மம்தா அளித்த பேட்டியில் , " முதலில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டைக் கொண்டுவந்தனர் , பின்னர் பாதுகாப்பில் கொண்டு வந்தனர் , இப்போது ரயில்வே துறையிலும் அந்நிய முதலீட்டைக் கொண்டு வந்துள்ளனர் . நாட்டை அவர்கள் விற்க ஆரம்பித்துவிட்டனர் . உங்களுக்கு உணவு சரியாக கிடைக்கவில்லை என்றால் உங்கள் மகளை வித்து விடுவீர்களா ?? இவ்வாறு செய்வதற்கு எதற்காக அந்நிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று வாக்கு கொடுத்தீர்கள் . இதை அவர்கள் தேர்தல் முன்னரே நாங்கள் நாட்டை வெளிநாட்டினரிடம் விற்று விடுவோம் என்று கூறியிருக்க வேண்டும் . இதனால் சிறு வியாபாரிகளின் நிலமை என்னவாகும் ?? மேலும் இந்த பட்ஜெட்டில் மேற்கு வங்கத்திற்கு எந்த வசதியும் கிடைக்கவில்லை . நாங்கள் என்ன பிச்சைக் காரர்களா ??

மக்கள் காங்கிரஸ் ஆட்சியில் அடைந்த அதிருப்தியினால் , வேறு வழி இல்லாமல் பாஜக விற்கு வாக்களித்தனர் . ஆனால் மேற்கு வங்களம் , ஓடிசா , மற்றும் தமிழகத்தில் இந்த நிலமை இல்லை . அவர்களிடம் மாற்று கட்சி ஒன்று இருக்கிறது . இதனால் தான் மூன்றாம் அணி அமைய வேண்டும் என்று நான் விரும்பினேன் . என்றார் .

கட்டிட விபத்து : உயிரை கொடுத்து மகனை காப்பாற்றிய தந்தை




திருவள்ளுர் மாவட்டம் உப்பரபாளயத்தில் கடந்த 6 ஆம் தேதி அன்று கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகினர். இதில் நாகராஜ் என்கிற 19 வயது வாலிபர் மட்டும் உயிர் பிழைத்தார். இவர் தான் உயிர் பிழைத்த சோக கதையை சொன்றார். இவரது தந்தை கொத்தனாராக வேலை செய்பவர், இவர் சித்தாளாக வேலை செய்கிறார். விபத்து நடந்த அன்று இவர்கள் தூங்கி கொண்டு இருந்தார்கள் . சுவர் இடிந்து விழுவதை பார்த்த தந்தை அவரது மகனை காப்பாற்ற அவனை கட்டிபிடித்து கொண்டார். சுவர் தந்தையின் மீது விழுந்தது. சிறிது நேரத்தில் நாகராஜ் மயங்கி விட்டார். காலை வந்த மீட்பு குழுவினர் , நாகராஜின் குரலை கேட்டு அவரை மீட்டனர். ஆனால் தந்தை இறந்து விட்டார்.

நாகராஜ் மருத்துவமனையில் சேர்க்கபட்டார், ஆனால் அவரது உடலில் சிறு காயங்கள் கூட ஏற்படவில்லை. அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து விட்டார்.


அந்த பாசமிகு தந்தையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

மோடியா ?? உலக கோப்பையா ?? குழப்பத்தில் ஏஞ்சலா மெர்கெல் !!

மோடி மற்றும் ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் இடையேயான கூட்டம் வருகின்ற 13 ஆம் தேதி நடக்க உள்ளது . உலக கோப்பையின் இறுதி போட்டியும் அன்று தான் நடக்க உள்ளது . ஒருவேளை ஜெர்மணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் அந்த போட்டியைக் காண பிரேசில் செல்வார் ஏஞ்சலா மெர்கெல் . இதனால் மோடியுடன் நடக்க உள்ள சந்திப்பு பாதிக்கப்படும் என தெரிகிறது .

மோடி பிரேசிலில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் செல்ல இருக்கிறார் . பிரேசில் செல்லும் வழியில் ஜெர்மணியின் பிராங்க்பிரட் நகரில் ஓய்வு எடுப்பது வழக்கம் . இந்நிலையில் ஏஞ்சலா மெர்கெல் இரவு உணவிற்கு அழைப்பு கொடுத்ததால் பெர்லின் நகரத்திற்கு செல்ல தன் திட்டங்களை மாற்றி அமைத்தார் மோடி .

ஆனால் இன்று இரவு நடைபெறும் போட்டியில்  ஜெர்மணி பிரேசில் அணியை வென்றால் ஏஞ்சலா மெர்கெல் இறுதிப் போட்டியைக் காண பிரேசில் சென்று விடுவார் . இதனால் மோடியுடன்  திட்டமிடப்பட்ட சந்திப்பு நடைபெறாது .

பிரேசில் அணிக்கு இன்று நெய்மர் மற்றும் சில்வா இல்லாததால் அனேகமாக ஜெர்மணி அணிதான் வெற்றி பெறும் என்று பலர் கூறுகின்றனர் .

ஒரு ரசிகருக்கு தனது 'பிராவை' பரிசாக தர இருக்கிறார் பூனம் பாண்டே


ஆபாசமான கருத்துகளை மாதம் மாதம் சொல்லி தன்னை பிரபலபடுத்தி கொள்பவர் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே ஆவார். கடந்த 2011 உலக கோப்பையின் போது இந்திய அணி வெற்றி பெற்றால் நிர்வாணமாக ஒடுவது என்று . இந்தியாவும் வெற்றி பெற்றது ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.



இப்போது கால்பந்து உலக கோப்பை நடந்து வரும் வேளையில் புதிதாக ஒன்றை சொல்லி உள்ளார். அதாவது, இந்த் கால்பந்து உலக கோப்பையில் பிரேசில் அணி வெற்றி பெற்றால் அவர் தனது பிராவை கழட்டி விடுவதாக கூறி உள்ளார். அந்த பிராவை இவர் தெரிவித்து உள்ள கருத்தை டிவிட்டரில் ரீடிவிட் செய்யும் ஒருவருக்கு பரிசாக தர உள்ளார்.இதனை இதுவரை 425 பேர் ரீடிவிட் செய்து உள்ளார்கள்.

ஒரு கூட்டம் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது இன்னொரு கூட்டமோ அவரது பிராவை பரிசாக பெரும் முயற்சியில் இறங்கி விட்டது.

உலக கோப்பைக்காக ஒரு நாளுக்கு 40 லட்சம் காண்டம்களை தயாரித்து அனுப்பும் கேரள கம்பெனி !!


கால்பந்து தான் இப்போது பிரேசிலையும் கேரளவையும் இணைக்கும் என்று நாம் நினைத்து கொண்டு இருப்போம் . அதையும் தாண்டி இப்போது "காண்டம்" தயாரிப்பதால் இருவரும் இணைந்துள்ளனர் .

உலக கோப்பை தொடங்கும் முன்னர் பிரேசிலில் உள்ள அதிகாரிகள் உலக கோப்பையின் போது கண்டம்களின் தேவை அதிகரிக்கும் என்பதை உணர்ந்தனர் . இதனால் கேரளாவில் உள்ள ஹிந்துஸ்தான் லேடஸ் லிமிடெட் என்னும் கம்பெனியில் ஆர்டர் கொடுத்தனர் . இவர்கள் ஒரு நாளுக்கு 40 லட்சம் காண்டம்களை தயாரித்து பிரேசிலுக்கு அனுப்புகின்றனர் .

இதற்கு முந்தை வருடங்களிலும் பிரேசில் இவர்களிடமே காண்டம்களை வாங்கி வருகின்றனர் . கடந்த இரண்டு வருடங்களாக 62 கோடி காண்டம்களை வாங்கியுள்ளனர் .

ஆனால் இந்த வருடம் மட்டும் கூடுதலாக 40 கோடி காண்டம்களை ஆர்டர் செய்துள்ளது பிரேசில் .

இன்று ரயில்வே பட்ஜெட் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் ரயில்வே துறையின் புதிய பக்கத்தில் பெறுங்கள்




இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யபடுகிறது. இதனை ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்ய உள்ளார். இதில் என்னென்ன அறிவுப்புகள் இருக்கும் என அனைவரும் எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறார்கள். அதை உடனுக்குடன் எப்படி தெரிந்து கொள்வது என கவலை வேண்டாம் . ரயில்வே துறையே அதற்கு வழி செய்து விட்டது. அவர்களும் பேஸ்புக் , டிவிட்டருக்கு வந்து விட்டார்கள்.



அவர்களின் புதிய பக்கத்தின் முகவரிகள் கீழே உள்ளன,

பேஸ்புக்கில் - https://www.facebook.com/RailMinIndia

டிவிட்டரில் - https://twitter.com/RailMinIndia

இந்திய ரயிவேயின் நிலைமையை எவ்வாறு மாற்றுவது ??


இன்று பாஜக அரசு போறுப்பேற்ற பின் முதல் ரயிவே பட்ஜெட் வரப் போகிறது . பல மக்கள் பட்ஜெட்டை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர் . எவ்வளவு முறை விலையை ஏற்றினாலும் , குறைத்தாலும் நாம் எதிர்பார்க்கின்ற சேவைகள் ரயில்வேயில் கிடைப்பதில்லை . இப்போது உள்ள ரயில்வேயின் நிலைமையை மாற்ற என்ன தான் வழி ?? வாருங்கள் பார்ப்போம் !!


1 ) ரயில்வே உள்கட்டமைப்பை சீரமைப்பதில் அதிகம் முதலீடு செய்ய வேண்டும் !!!

ரயில்வே உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலம் அதிக ரயில்கள் , வசதிகளுடன் கூடிய ரயில் நிலையங்கள் , அதிக ரயில் பாதைகள் ஆகியவை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது . இதுவரை அரசு தான் உள்கட்டமைப்புகளை அமைத்து கொண்டு இருந்தது . தனியார் நிறுவனங்களுக்கு முதலீடு செய்ய அழைப்பு கொடுக்கலாம் . ஆனால் முழு உரிமம் அரசிடம் தான் இருக்க வேண்டும் .

2 ) ரயில்வே துறையும் ஒரு சேவை துறை தான் !! வெறும் லாபத்தை மட்டும் பார்க்கும் துறை அல்ல !!

இதை இந்த அரசு கவனத்துடன் பார்க்க வேண்டும் . மேலும் தனது ஊழியர்களுக்கும் இதை தெரிவு படுத்த வேண்டும் . ரயில்வே நிலையங்களில் கிடைக்கும் சேவையை கூட்டுவதன் மூலம் , கிடைக்கும் லாபம் பெருகவும் செய்யும் , மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளும் அதிகரிக்கும் .

3 ) விலைகள் நியாமானதாக இருந்து பண வீக்கத்தை கட்டுபடுத்த வேண்டும் !!

விலை ஏறியவுடன் நாம் உடனே ரயில்வே நிர்வாகத்தை குறை கூறிவிட முடியாது . ஆனால் அந்த விலை ஏற்றம் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த வல்லதாக இருக்க வேண்டும் . இதுவரை பணவீக்கம் 6 சதவீதத்தைக் குறையவில்லை . விலை ஏறினால் மக்களுக்கு கிடைக்கும் சேவைகளும் நன்றாக இருக்க வேண்டும் .

வெற்றியை எப்படி கொண்டாட வேண்டும் என்று சொல்லி தந்த முன்னாள் கேப்டன் கங்குலிக்கு இன்று பிறந்த நாள்


இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்கள் என்றால் உடனே நம் நினைவிற்கு வருவது கங்குலியும் தோனியும் தான். இவர்களில் கங்குலியின் பங்கு மிக அதிகம் . சோர்ந்து கிடந்த இந்திய அணியை தான் ஒருவராக முன் இருந்து  நல்ல நிலைக்கு கொண்டு வந்தார். அந்த கங்குலிக்கு இன்று 42 வது பிறந்த நாள். இவரை அனைவரும் செல்லமாக தாதா என்று அழைப்பார்கள். அந்த பேருக்கு ஏத்தது போல இவரும் உண்மையான தாதா. யாருக்கு அஞ்சியது இல்லை. எப்போதும் சரியான் முடிவுகளை பயப்படாமல் எடுப்பார்.



இவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். வங்கத்து புலி என அந்த ஊர் ரசிகர்களால் அழைக்கப்படுவார். தனது சொந்த ஊர் மக்களிடம் இவருக்கு இருக்கும் ஆதரவு இந்தியாவில் வேறு எந்த வீரருக்கும் கிடையாது. ஒருமுறை ஐபிஎல் போட்டியின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் புனே வாரியர்ஸ் அணியும் விளையாடின. அதில் கங்குலி புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார். ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது ,ஆனால் ரசிகர்கள் அனைவரும் கங்குலிக்கு தான் ஆதரவாக இருந்தார்கள். ஒரு ரசிகர் மைதனத்துக்கள் நுழைந்து இவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி விட்டு சென்றார்.


பேட்டிங்கிலும் பல சாதனைகள் செய்து உள்ளார். 311 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 11363 ரன்களையும் குவித்து உள்ளார். 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7212 ரன்களையும் குவித்து உள்ளார். ஒரு முறை இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற போது அங்கேயே தனது சட்டையை கழற்றி சுற்றினார். இது அனைவரையும் கவர்ந்தது. எப்படி வெற்றியை கொண்டாட வேண்டும் என்றும் ரசிகர்களுக்கு சொல்லி தந்து உள்ளார்.



இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தாதா !!!

பாராளுமன்றத்தில் கோஷமிட்டார் ராகுல் காந்தி !! காங்கிரஸ் உட்பட அனைவரும் ஷாக் !!


நேற்று முதல் பாராளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பித்தது . நேற்று முதல் நாளே காங்கிரஸ் கட்சியினர் விலை உயர்வை எதிர்த்து கோஷமிட்டனர் . ஆனால் இந்த விவாதத்தில் ராகுல் காந்தியும் கலந்து கொண்டார் . இதற்கு முன்னாடி நடக்கும் விவாதங்களில் அவர் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டமாட்டார் .

ஆனால் நேற்றைய கூட்டத்தில் எப்போதும் பின் இருக்கையில் அமர்ந்து இருக்கும் ராகுல் காந்தி , தனது கட்சியினருடன் சேர்ந்து கோஷ்மிட ஆரம்பித்தார் .

இதற்கு முன்னால் கடைசியாக லோக்பால் விவாதத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார் .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media