BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 30 June 2014

தனி மனிதனாக 70 இந்தியர்களை ஈராக்கில் இருந்து மீட்ட பஞ்சாப் எம்.பி !!



பஞ்சாபில் பிரபல காமெடியனாக இருப்பவர் பக்வாண்ட் மண் . இவர் ஆம் ஆத்மி கட்சி சார்பாக போட்டியிட்டு சங்க்ரூர்  தொகுதியில் வெற்றி பெற்றார் .

ஈராக்கில் உள்ள இந்தியர்களை காப்பாற்ற மத்திய அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் இந்நிலையில் , இவர் தன்னால் என்ன செய்ய முடியும் அவர்களுக்கு என யோசித்து கொண்டு இருந்தார் . இதனால் அங்குள்ள சில இந்தியர்களிடம் இவரால் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொள்ள முடிந்தது . அவர்கள் இவருக்கு அந்த இடத்தில் இருந்து சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பினர் . அந்த வீடியோவில் அவர்கள் ஆபத்தில் இருப்பதாகவும் , அவர்கள் வீட்டிற்கு வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர் .

இது குறித்து பக்வாண்ட் கூறுகையில் , " இளைஞர்கள் பலர் தங்கள் நிலம் , நகைகள் ஆகியவற்றை அடகு வைத்து ஈராக் சென்றுள்ளனர் . அங்குள்ளவர்களில் பாதி பேர் இங்கு வர முடியாத சூழ்நிலையில் உள்ளனர் . ஏனென்றால் அவர்களிடம் கடனை அடைக்க பணம் இல்லை .

பல இளைஞர்கள் காண்ட்ராக்டர்களிடம் சிக்கி உள்ளனர் . அந்த காண்ட்ராக்டர்கள் அவர்களுக்கு சம்பள்த்தை வாங்கி வைத்து கொள்வது மட்டுமில்லாமல் அவர்களின் பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துள்ளார் . பாஸ்போர்ட்டை திருப்பி கொடுக்க பணம் செலுத்த வேண்டும் என மிரட்டி வருகிறார் " என்றார்

இவர் இரண்டு நிறுவனங்களின் உதவியுடன் அந்த காண்ட்ராக்டர்களின் பணத் தேவையை அடைத்துள்ளார் . மேலும் அங்கே உள்ள 70 இந்தியர்களுக்கு இந்தியா வர டிக்கெட் அனுப்பி வைத்துள்ளார் .

இவரின் முயற்சியால் இதுவரை 10 பேர் இந்தியா வந்துள்ளனர் . மற்றவர்களும் கூடிய விரைவில் வந்து சேருவர் என நம்பிக்கை தெரிவித்தார் .

எங்கள் பையன்களை அனுப்பி சி.பி.எம் பெண்களை கற்பழிப்போம் - நாடாளுமன்ற உறுப்பினரின் திமிர் பேச்சு !!


மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் டபாஸ் பால் . இவர் ஒரு பிரபல பெங்காலி நடிகர் .

லோக்கல் சேனல் ஒன்றில் வெளியிட்ட வீடியோவில் இவர் , " தேவைப்பட்டால்  எங்கள் பையன்களை அனுப்பி சி.பி.எம் கட்சி பெண்களை கற்பழிப்போம் " என்று கூறியது பதிவு செய்யப்பட்டுள்ளது . மேலும் கட்சி தொண்டர்களிடம் மற்ற கட்சியை மிரட்டியும் கூறியுள்ளார் .

இவரின் இந்த கருத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக வெளியிட்ட அறிக்கையில் அவரின் கருத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று அவரிடம் இருந்து தூரப்படுத்தி கொண்டது .  ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதைப் பற்றி கட்சி தரப்பில் இருந்து எந்த தகவலும் இல்லை .

இவர் மேற்கு வங்களத்தின் கிரிஷ்ணா நாகர் தொகுதியில் இருந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இவரின் பேச்சு மிகவும் கண்டனத்துக்குரியது ..

வருகிறது முதல் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி !!


கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வரும் பகலிரவு டெஸ்ட் போட்டி வர காத்து இருக்கிறது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவுக்கும் நியுஸிலாந்துக்கும் இடையே நடக்க வாய்ப்பு இருக்கிறது . சமீபத்தில் ஐசிசி கூட்டம் நடந்தது ,இதில் கலந்த கொண்ட ஆஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்து அணிகளின் கிரிக்கெட் வாரிய தலைவர்கள் இது குறித்து ஆலோசித்தார்கள். அவர்கள் இந்த போட்டியை அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தும் முடிவில் இருக்கிறார்கள். இந்த போட்டிகளில் 'பிங்க்' நிற பந்தை பயன் படுத்த உள்ளார்கள்.




பகலிரவு போட்டிகளை நடத்த ஐசிசி அமைப்பு 2012 ஆம் ஆண்டே அனுமதி அளித்து விட்டது. இந்த போட்டியை காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள்.

சென்னையில் 3 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் : அக்டோபரில் வருகிறது !!


சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. சுமார் 45 கிமீ ற்கு இந்த சேவையை தர இருக்கிறார்கள். முதல் கட்டமாக கோயம்பேடு ஆலந்துர் இடையே 10 கிமீ தூரத்திற்கு இதனை அறிமுக படுத்துகிறார்கள். இது அக்டோபர் இறுதியில் வர இருக்கிறது. இதற்கான தண்டவாளங்கள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. கூட்ட நெரிசல் நேரத்தில் மூன்று நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்க திட்டமிட்டு உள்ளதால் , அதன் தண்டவாளங்கள் தரமானவையாக இருக்க வேண்டும். இதனை செய்யும் பணி பிரேசிலில் நடைபெற்று வருகிறது. இவை 1.435 இடைவேளி கொண்ட தண்டவாளங்கள். 



ஒரு மீட்டர் தூரத்திற்கான தணடவாளத்தின் எடை 52 கிலோ இருக்கும் ,ஆனால் இவை 60 கிலோ ஆகும். இரட்டை பாதையில் 230 கிமீ நீளத்திற்கு தண்டவாளங்கள் அமைக்கபட உள்ளது .60 கிமீ நீளத்திற்கு தேவையான தண்டவாளங்கள் வந்து விட்டது.மற்றதை விட இதன் விலை 20 சதவீதம் அதிகம் ஆகும் , ஆயுள் காலமும் இரு மடங்கு அதிகம் ஆகும்.

மெட்ரோ வந்த பிறகாவது டிராபிக் குறைகிறதா என்று பார்ப்போம்.

மோடியிடம் மன்னிப்பு கேட்டாரா ஆமிர் கான் ??


மோடியை கடந்த 23 ஆம் தேதி அன்று சந்தித்தார் பாலிவுட் நடிகர், அது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார்கள். ஆனால் மோடியை சந்தித்த போது அவரிடம் ஆமிர் கான் மன்னிப்பு கேட்டாரா என்று விஷ்வ ஹிந்து பரிஷித் கேள்வி கேட்டுள்ளது.இதனை அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான அசோக் சவுக்லே கேட்டு உள்ளார்.



குஜராத்தில் நடந்த சம்பவத்திற்கு மோடி தான் காரணம் என்று ஆமிர் கான் வெளிபடையாக கூறி இருந்தார். இதனை மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு கூறி இருந்தார் . ஆனால் மோடி இப்போது பிரதமர் ஆகி விட்டதால் தனது கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டாரா இல்லையா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.


காதலிக்காக 24 இலட்சம் ரூபாய்க்கு சினிமா டிக்கெட் வாங்கிய வாலிபர் : காதல் வெறியால் வாழ்வில் உயர்ந்தார் !!


சீன நாட்டில் இருவர் 2007 இல் காதலித்து  வந்தனர், எல்லா காதலையும் போல அவர்கள் காதலிலும் சிறு பிரச்சனை வந்தது அதனால் அவர்கள் இருவரும்  பிரிந்து விட்டார்கள். ஒரு நாள் காதலி தன்னை சினிமாவுக்கு அழைத்து செல்லுமாறு கூறினாள் . ஆனால் அந்த காதலனிடம் அதற்கான பணம் இல்லாததால் அவன் முடியாது என்று கூறி விட்டான். இதனால்  அவர்கள் காதல் பிரிந்து விட்டது. இதில் அந்த வாலிபர் மிகவும் மனமுடைந்து விட்டார். வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற வெறியில் இருந்தார்.




 அதற்காக கடந்த 7 ஆண்டுகளாக உழைத்து வந்தார். அதற்கான பலனும் கிடைத்தது. இப்போது வாழ்வில் நல்ல நிலைமைக்கு வந்து விட்டார். அதனும் அரின் காதலிக்கு தீரிவிக்கும் விதமாக இப்போது வந்து உள்ள டிரான்ஸ்பார்மர்ஸ் திரைபடத்தின் ஒரு காட்சிக்கான அனைது டிக்கெட்டுகளையும் ஐமேக்ஸ் திரையரங்கில் வாங்கி விட்டார் . இதன் மதிப்பு 24 இலட்சம் ஆகும் . இது அவரது மாத சம்பளத்தில் பாதி ஆகும். இவரின் காதல் உண்மையானது ஆகும், ஆனால் அவரது காதலியுடையது உண்மையான இல்லை, என்வே அவரை மறந்து விடுவதே நல்லது ஆகும்.

பேஸ்புக் டிவிட்டரை அதிகம் பயன்படுத்துங்கள் எம்பிகளே : பாஜக அறிவுரை !!


பாஜக எம்பி களுக்கு அறிவுரை வழங்கும் கூட்டம் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று வருகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது. அதில் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி கூறப்பட்டது. முதல் நாள் மோடி பங்கேற்று அறிவுரை வழங்கினார். அடுத்த பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்று அறிவுரை வழங்கினர். இதில் அவர்கள் பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதலங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்னும் அறிவுரை வழங்கப்பட்டது.



மக்களிடம் தங்கள் கருத்துகளை கொண்டு செல்ல சமூக வலைதலங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கும் என்றார்கள். நமது திட்டங்களை அதன் மூலம் தெளிவுபடுத்துங்கள் என்றார் ஆ.எஸ்.எஸ் பொது செயலாளர் சுரெஷ் சோனி. ஆனால் கட்சிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை அதில் பதிவு செய்ய கூடாது என்றார். இறுதியாக மூத்த தலைவர் அத்வானி நிரைவுரையாற்றினார்.

சுதந்திர தினத்தன்று வருகிறது அஞ்சான் படம் : விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் டீசர் வெளியீடு !!


சூர்யா தற்போது நடித்து வரும் படம் அஞ்சான். இதில் சமந்தா ,வித்யூத் உள்ளிட்ட பலர் நடிகிறார்கள். இந்த படத்தை லிங்குசாமி இயக்குகிறார்.
இந்த படம் எப்போது வரும் என்று பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள். இப்போது இது குறித்து தகவல்கள் வந்து உள்ளன. இந்த படத்தின் டீசர் ஜுலை 5 ஆம் தேதி நடக்கும் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் வெளியிடுகிறார்கள். ஜுலை 17 ஆம் தேதி படத்தின் இசை வெளியிட்டு விழா பிராமாண்டமாக நடக்க இருக்கிறது. படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வர இருக்கிறது. அன்று சுதந்திர தினம் என்பதால் விடுமுறை ஆகும் .



இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் அனைத்தும் அனைவரையும் கவரும்படி இருந்தது. பல ரசிகர்கள் இதனை பாராட்டினார்கள். இந்த படத்தின் டிரெய்லரை பார்த்த ஆர்யா அதனை வெகுவாக பாராட்டினார். சூர்யாவுக்கு இந்த படம் மீண்டும் ஒரு திருப்புமுனையாக மாறலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.




கீழே விழுந்தது போல நடித்ததற்கு மன்னிப்பு கேட்ட நெதர்லாந்து அணி வீரர் !!


உலக கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்றில் நெதர்லாந்து மெக்ஃஸிகோ அணிகள் மோதினர் . தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மெக்சிகோ அணி முதல் கோலை அடித்தது . இதனால் மெக்சிகோ அணி அடுத்த சுற்றிற்கு தகுதி பெறும் என்று அனைவரும் நினைத்த நிலையில் 87 வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி கோல் போட்டது . அடுத்து சிறிது நேரத்தில் நெதர்லாந்து அணி வீரர் ராபன் பந்தை எடுத்துக் கொண்டு ஓடும் போது , மெக்சிகோ அணி வீரர் ராபேல் மார்க்யுஸ் காலை நீட்ட ராபன் பறந்து விழுந்தார்  ( நடித்தார் ) . இதையடுத்து நெதர்லாந்து அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது . அதை கோலாக மாற்றினார் ஹண்டிலார் . இதன் மூலம் மெக்சிகோ அணி உலக கோப்பையில் இருந்து விலகியது .

நடுவரின் இந்த முடிவு பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது . அனைவரும் ராபனின் நடிப்பை சுட்டிக்காட்டி குறை கூறுகின்றனர் .


இதுகுறித்து ராபன் கூறுகையில் , " அம்பயரின் அந்த பெனால்டி முடிவு சரியானதே . அவர் என்னை தட்டிவிட்டார் . அந்த பெனால்டியை நடுவர் சரியாக தான் கொடுத்தார் . ஆனால் போட்டியின் முதல் பாதியில் நான் பெனால்டி வாங்க வேண்டும் என்று வேண்டுமென்றே நடித்தேன் , அதற்காக நான் இப்போது மனம் வருந்துகிறேன் . நான் அவ்வாறு செய்து இருக்க கூடாது " என்றார் .

இடிந்து விழுந்த கட்டிடத்தை பற்றி நீங்கள் அறியாத செய்திகள் : வீடு வாங்கியோர் நிலை என்ன ??




நேற்று  முன்தினம் போரூரில் உள்ள ஒரு 11 மாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது. இதனால் அந்த இடம் முழுவதும் சேதமானது. அந்த குடியிருப்பின் பெயர் டிரஸ்ட் ஹைட் ஆகும். இங்கு கடந்த ஆண்டே அனைத்து வீடுகளும் விற்று தீர்ந்து விட்டன. புது வீட்டில் குடி போகலாம் என வீடு வாங்கியோர் காத்து கொண்டு இருந்தனர் ,ஆனால் எதிர்ப்பாராதவிதமாக இவ்வாறு நடந்து விட்டது. அங்கு ஒவ்வொரு மாடியிலும் நான்கு வீடுகள் உள்ளன .அவை 2 படுக்கையறை வசதி கொண்டது. சுமார் 975 முதல் 1115 சதுர அடிகள் வரை இருக்கும் ஒவ்வொரு வீடுகளின் அளவும் .அதன் மதிப்பு ரூபாய் 51 இலட்சம் முதல் 59 இலட்சம் வரை இருக்கும்.



வீடு வாங்கியோர் தங்களது பணத்தை திரும்ப தர வேண்டும் என்கிற கோரிக்கை வைத்து உள்ளனர். கட்டுமான நிறுவனம் தரப்பில் விரைவில் இந்த பிரச்சனை தீர்க்க படும் என்றனர். அந்த கட்டுமான நிறுவனங்கள் கட்டிடம் கட்ட ஆரம்பித்த நாள் முதல் முடியும் வரை இயற்கை சீற்றம், விபத்து ஆகியவற்றுக்காக காப்பீடு செய்து இருக்க வேண்டும் . ஆனால் அது பற்றிய தகவல் எதும் தரவில்லை.

சென்னை போரூர் அடுக்கு மாடி விபத்து , ஆந்திரா முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டார் !!


சென்னை போரூரில் அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததை அடுத்து , சம்பவம் நடந்த இடத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று நேரில் பார்த்தார் . இந்த விபத்தில் பலியானவர்களில் சிலர் ஆந்திராவை சேர்ந்தவர்கள் .

இதனையடுத்து ஏற்கனவே நெல்லூர் இணை ஆட்சியர் தலைமையில் ஒரு குழு இங்கே வந்து மீட்பு பணியை வந்து கண்காணித்தனர் . இப்போது முதல்வரே நேராக இடத்துக்கு வந்துள்ளார் .

விபத்தில் பலியான ஆந்திர தொழிலாளிகளின் குடும்பத்துக்கு 5 லட்சமும் , காயம் அடைந்தவர்களின் குடும்பத்துக்கு 50 ஆயிரமும் உதவித்தொகையாக கொடுக்க உள்ளதாக முதல்வர் சந்திர பாபு நாயுடு தெரிவித்தார் .

கால்பந்து உலக கோப்பையில் இனி 30 வது நிமிடத்திற்கு பிறகு ஒரு இடைவேளி : புதிய விதிமுறை !!



கால்பந்து போட்டிகளிள் எப்போதும் ஒரு இடைவேளி தான் இருக்கும் . அது முதல் 45 நிமிடங்கள் முடிந்த பிறகு இருக்கும் . ஆனால் இந்த உலக கோப்பையில் புதிய விதிமுறை வந்து உள்ளது. அதாவது போட்டியின் போது 32 டிகிரி வெப்பம் இருந்தால், ஆட்டத்தின் முதல் பாதியிலும் இரண்டாவது பாதியிலும் 30 வது நிமிடத்திற்கு பிறகு ஒரு இடைவேளி விட வேண்டும். அது வீரர்கள் நீர் அருந்துவதற்கு விடப்படும் இடைவேளி ஆகும்.



இந்த இடைவேளி கட்டாயம் இருக்க வேண்டும் என்று பிரேசில் நீதிமன்றம் பிபா அமைப்பிற்கு கட்டளையிட்டு உள்ளது. இதனை மீறினால் தண்டனை கடுமையாக இருக்கும் என்றார்கள். அவ்வாறு விடவில்லை என்றால் 90910 $ அபராதமாக கட்ட வேண்டும்.

முஸ்லிம்களுக்கு ரமலான் வாழ்த்து சொன்னார் பிரதமர் மோடி !!



முஸ்லிம்கள் சிறப்பாக கொண்டாடும் ரமலான் நோன்பு இன்று முதல் தொடங்குகிறது . அதற்கு வாழ்த்து தெரிவித்து மோடி தனது டிவிட்டர் இணையதளத்தில் ஒரு பதிவு செய்தார். ரமலான் நோன்பை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் . இந்த புனிதமான வேளையில் அனைவரின்  வாழ்கையில் இன்பமும் ,சந்தோஷமும் வரட்டும் என்றார்.


விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி - 23 !!



இந்தியாவின் இஸ்ரோ வெற்றிகரமாக தன்னுடைய பி.எஸ்.எல்.வி சி - 23 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது . இந்த ராக்கெட்டில் 5 வின்களங்கள் உள்ளது .

இன்று காலை 9:52 மணிக்கு ராக்கெட் விண்ணை நோக்கி பாய்ந்தது . இந்த ராக்கெட் 44.44 மீட்டர் உயரும் 230 டன் எடையும் கொண்டதாக இருக்கிறது . ராக்கெட் ஏவுதளம் சென்னையில் இருந்து 80 கீமீ தூரத்தில் உள்ளது .

இந்த ராக்கெட்டில் உள்ள முக்கிய விண்களம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்பாட் - 7 என்னும் விண்களம் . இது 714 கிலோ எடை கொண்டது . மேலும் ஜெர்மணியின் ஐசாட் (14 கிலோ) , கனடாவின் என்எல்எஸ்7.1 மற்றும் என்எல்எஸ்7.2 , சிங்கப்பூரின் 7 கிலோ எடை கொண்ட வெளாஸ் ஆகிய விண்களங்களை தூக்கிச் சென்றுள்ளது .

இது புதிதாக அரசு பொறுப்பேற்ற பின் இந்தியா அனுப்பும் முதல் ராக்கெட் . ராக்கெட் விண்ணில் பாய்வதை நேரில் பார்த்து விஞ்ஞானிகளுக்கு பாராட்டை தெரிவித்தார் .

இதுவரை  பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் 35 வெளிநாட்டு விண்கள
ங்களை விண்ணில் செலுத்தியுள்ளது .

நைஜீரியாவில் போக்கோ ஹாரம் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் !!



மேற்கத்திய கல்வி முறைகளை நைஜீரியாவில் அமல்படுத்துவதை எதிர்த்து போக்கோ ஹாரம் அமைப்பினர் போராடி வருகின்றனர் . அவர்கள் 200 சிறுமியரை கடத்திச் சென்றுள்ளனர் .

இப்போது இந்த தீவிரவாத அமைப்பினர் மேலும் ஒரு தாக்குதலை நடத்தினர் . அவர்கள் கிறிஸ்தவ மத கோவில்களை குறி வைத்து தாக்குதல் நடத்தினர் . இது போன்று மூன்று கிராமங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் .

வாகனத்தில் வந்த தீவிரவாதிகள் , கோவிலை குறி வைத்து குண்டு வீசினர் . மேலும் பல கட்டிடங்களை தீயிட்டு கொழுத்தினர் . கோவிலில் இருந்து வெளி வந்து கொண்டு இருந்த மக்களை துப்பாக்கியினால் சுட்டனர் .

இந்த தாக்குதலில் 12 பேர் இறந்துள்ளனர் . 

மீண்டும் டில்லியில் கவனம் செலுத்த போகிறார் அரவிந் கெஜ்ரிவால் !!


மக்களவர் தேர்தலில் நாடு முழுவதும் பல தொகுதிகளில் நின்று பலத்த அடி வாங்கியது ஆம் ஆத்மி கட்சி , இப்போது சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி ஹரியானா மற்றும் மஹாரஷ்ட்ராவில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது .

ஆனால் இதை அந்த கட்சியின் தலைவர் மறுத்தார் . நேற்று டில்லியில் தொண்டர்களுடன் நடந்த கூட்டத்தில் இதை தெரிவித்தார் . மேலும் அவர் கூறுகையில் நம்முடைய பலம் அனைத்தையும் டில்லியில் பயன்படுத்த வேண்டும் என்றார் .

இந்த முடிவு குறித்து தொண்டர்களின் கருத்தை கேட்ட பின் தனது இறுதி முடிவை கட்சி தெரிவிக்கும் என தெரிகிறது .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media