BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 20 May 2013

சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும். - 15 நாள் புகழ் நாசா கோரிக்கை

சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும். - 15 நாள் புகழ் நாசா கோரிக்கை

சீமானையும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனையும் கடுமையாக விமர்சித்து பேசிய 15 நாள் புகழ் அமைச்சர் நாராயணசாமி சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சீமான் கூட்டத்தில் காஷ்மீர் தீவிரவாதி யாஸ்மின் மாலிக்கை அழைத்து வந்து பேச செய்துள்ளார். தீவிரவாதத்தையும், பிரிவனை வாதத்தையும்தூண்டுபவர்கள் தேச துரோகிகள். சீமானை பொறுத்த வரையில் பல முறை அவர் சிறைக்கு சென்றுள்ளார். தற்போது அவர் சிறைக்கு செல்லவே விரும்புகிறார். தமிழக அரசின் வழக்குக்கு பிறகு அவர் தலைமறைவாக உள்ளார்.

அவரை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும். நக்சலைட்டு தீவிரவாதத்தையும், அசாம் தீவிரதத்தையும் அடக்கி உள்ளோம். எங்களை பொறுத்தவரை சீமான் போன்றவர்கள் சுண்டை காய்கள். இந்தியாவில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக செயல்படுபவர்களை மக்கள தூக்கி எறிய வேண்டும். இவ்வாறு நாசா பேசினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media