BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 19 July 2013

தமிழில் வாதாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவு

உயர்நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன் ஒரு  வழக்கில் வழக்கறிஞர் தமிழில் வாதாடியதை அனுமதிக்காமல் தள்ளுபடி செய்தார் நீதிபதி, உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாடுவதை அனுமதிக்க மறுத்தது கடும் சர்ச்சையை உருவாக்கியது, பல மாநிலங்களில் இந்தியில் உயர்நீதிமன்றத்தில் வாதாடலாம் என்று இருக்கும் நிலையில் தமிழில் வாதாடலாம் என தமிழக சட்டமன்றம் ஏற்கனவே சட்டம் நிறைவேற்றிய நிலையில் தமிழுக்கு அனுமதி மறுத்தது கடும் கண்டனத்துக்கு உள்ளானது.

விஜயன் போன்ற சில வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடாமல் ஆங்கிலத்தில் வாதிடுவதுவே சரியென்றும் அதுவே உச்ச நீதிமன்றத்துக்கு வழக்கில் அப்பீல் போகும்போது உயர்நீதிமன்றத்தில் நடந்த வாதங்கள் ஆதாரங்களை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்க தேவை இல்லை என்றும் சப்பை கட்டு கட்டினர், ஆனால் 1% வழக்குகள் கூட உச்ச நீதிமன்றம் போவதில்லை என்றும் தமிழில் வாதங்கள் நடந்தால் தான் வழக்கில் தொடர்புடையவர்கள் வழக்கின் போக்கை அறிந்து கொள்ள முடியும் என்றும் தியாகு உள்ளிட்ட சிலர் விஜயன் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  தமிழில் வாதாட அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

# உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே தமிழராக இருந்தாலும் தமிழுக்கு கெட் அவுட்டு, ஆங்கிலத்துக்கு கட் அவுட்டா?



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media