BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 16 September 2013

விடுதலை புலிகள் மீதான சிவகாமி ஐ.ஏ.எஸ்சின் அவதூறு பேச்சு, எழுத்தாளர் ஷோபா சக்தி காரணமா?

புதியதலைமுறை தொலைக்காட்சியில் விடுதலை புலிகள் பெண் போராளிகளை பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக்கொண்டார்கள் என்று அவதூறாக பேசினார் சிவகாமி ஐ.ஏ.எஸ்.


மேலும் இதற்காக ஆதாரங்கள் உள்ளதென்றும் இது பத்திரிக்கையில் வந்துள்ளது என்றும் பாரீசில் ஒருவர் தன்னிடம் இது குறித்து தெரிவித்ததற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளதென்றும் குறிப்பிட்டார்,  தற்போது அவ்வாறு பேசியதற்கு சிவகாமி ஐ.ஏ.எஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் ஷோபா சக்தி இலங்கையிலிருந்து பாரீஸ்க்கு புலம்பெயர்ந்து வாழ்பவர், இவர் தீவிர புலியெதிர்ப்பு நடவடிக்கைக‌ளில்  ஈடுபட்டுள்ளவர்,  மேலும் இவருடன் இணைந்து கூட்டங்களில் கலந்து கொள்ளும் தமிழகத்தின் முற்போக்கு சிந்தனையாளர்கள் அ.மார்க்ஸ் போன்றோர் உட்பட பலரும் புலிகள் மீது கடுமையான விமர்சனங்களை வைப்பவர்கள், இலக்கிய கூட்டங்கள் என்ற பெயரில் இவர்கள் நடத்தும் கூட்டங்களில் கலந்து கொண்டால் புலி எதிர்ப்பு மனநிலைக்கு கொண்டு செல்லும் அளவுக்கு பேசுபவர்கள் என்றும் பலர் குறிப்பிடுகின்றனர், எழுத்தாளர் ஷோபா சக்தி இந்திய உளவு நிறுவனமான "ரா" அமைப்புடன் இணைந்து செயல்படுபவர் என்ற கிசு கிசு பல ஆண்டுகளாக உலவி வருகிறது.

இந்நிலையில் சிவகாமி குறிப்பிட்ட அந்த பாரீஸ் மனிதர் ஷோபா சக்தி தான் என்று சந்தேகத்தை பலரும் ஃபேஸ்புக்கில் கிளப்பியுள்ளனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media