BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 5 October 2013

பல மணி நேர துப்பாக்கி சண்டைக்குபின் பிலால் மாணிக் மற்றும் பண்ணா இஸ்மாயில் சரணடைந்தனர்.

பாஜக செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை உட்பட பல கொலை வழக்குகளில் தொடர்புடைய போலிஸ் பக்ருதீன் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து பல கொலை மற்றும் அத்வானியை பைப் வெடிகுண்டு வைத்து கொல்ல முயற்சித்த பிலால் மாணிக் ஆந்திராவில் புத்தூர் அருகே பதுங்கியிருந்தது தெரியவந்தது.

அதிகாலை 3 மணிக்கு பிலால் மாணிக் வீட்டை தமிழக போலிசார் சுற்றி வளைத்த போது தீவிரவாதிகள் போலிசை நோக்கி சுட்டனர், இதில் ஒரு போலிஸ் கொல்லப்பட்டார், மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்து சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

பல மணிநேர துப்பாக்கி சண்டைக்கு பின்   பிலால் மாணிக், பண்ணா இஸ்மாயில் என்ற இரண்டு தீவிரவாதிகள் மற்றும் 3 குழந்தைகள் ஒரு பெண் உட்பட 6 பேர் சரணடைந்துள்ளனர்,காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டுள்ளது. பிலால் மாணிக் 17 வயதிலிருந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறான். பிலால் மாணிக், போலிஸ் பக்ருதீன் கைதுகள் தமிழக போலிசின் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media