BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 16 October 2013

முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சு ஆமைகளுக்கு கடல் எந்த பக்கம் இருக்கிறது என எப்படி தெரியும்?

உயிரினங்களில் உள்ள எல்லா அம்மாக்களும் தங்கள் குஞ்சுகளை அவைகளை பாதுகாத்து பாலூட்டி ஒரு சில காலம் வரை வளர்க்கும், ஆனால் உயிரினங்களிலேயே டுபாக்கூர் அம்மா என்றால் அது கடல் ஆமைகள் தான், கடல் ஆமைகள் இரவில் கரைக்கு வந்து முட்டையிட்டுவிட்டு செல்லும், அதோடு அதன் கடமை முடிந்தது என்று சென்று விடும்.

முட்டை பொறித்து குஞ்சாக வெளிவரும் ஆமையோ கடலை நோக்கி ஒரு ரன்னிங் ரேஸ் ஓடும், இந்த குஞ்சுகளை சாப்பிடவென்றே பறவைகள் கூட்டம் கூட்டமாக பறக்கும், பெரும் அளவில் முட்டையிலிருந்து வெளிவரும் ஆமைக்குஞ்சுகள் இந்த பறவைகளுக்கு இரையாகிவிடும், சில நொடிகளில் முடிந்து போய்விடும் வாழ்க்கை, ஆனால் அதையும் தாண்டி அந்த ஆமைக்குஞ்சுகள் கடலினுள் வந்து சேர்ந்து விட்டால் அதன் பிறகு அதன் வாழ்க்கை நூறாண்டுகளையும் தாண்டி இருக்கும். சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதப்பட்டது இது.

மணலில் முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுக்கு கடல் எந்த பக்கம் என எப்படி தெரியும்? ஆனால் மிகச்சரியாக அனைத்து குஞ்சுகளும் கடலை நோக்கி ஓடுவது எப்படியென்றால் கடல் ஆமை முட்டையிடும் போதே முட்டையில் தலைவெளிவரும் பக்கத்தை கடலை நோக்கி இருக்குமாறு முட்டையிட்டுவிட்டு சென்று விடும். இது தான் அந்த கடல் ஆமை குஞ்சுகள் முட்டையை உடைத்து வெளியே வந்த உடன் சரியாக கடலை நோக்கி ஓடுவதன் காரணம்.

# சிறிது நேர துன்பங்களை எதிர்கொண்டு கடந்துவிட்டால் பல கால மகிழ்ச்சியான வாழ்வு காத்திருக்கின்றது.

24 X 7 தமிழில் சற்றுமுன் செய்திகள். உண்மைகளை உடனுக்குடன் அறிய சற்றுமுன் செய்திகள் பக்கத்தை லைக் செய்யுங்கள்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media