BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 14 November 2013

நெடுமாறனை கை கழுவிய சசிகலா நடராஜன்

முள்ளிவாய்க்கால் முற்றம் சுற்றுச்சுவர் மற்றும் பூங்கா இடிப்பே சசிகலா நடராஜன் மீதான எரிச்சலினால் தான் என்று சில கருத்து தெரிவித்துகொண்டிருக்கும் வேளையில் திறப்பு
விழாவில் மையத்தில் வந்து உட்கார்ந்து கலந்து கொண்ட நடராஜன் தற்போது தெரிவித்துள்ளதாவது "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றேன். விழாவை ஏற்பாடு செய்திருந்த உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளைக்கும், விழா ஏற்பாட்டாளர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை."

இது முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை அதனால் என் மீதான எரிச்சலை அதில் காண்பிக்காதீர்கள் என்று மேல்மட்டத்துக்கு செய்தி அனுப்புகிறாரா? அல்லது தனக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை ஆளை விடுங்கடா என்று கை கழுவுகிறாரா என்று தமிழ் ஆர்வலர்கள் குழம்பியுள்ளனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media