BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 19 November 2013

முட்டாள் தனமாக பேசுகிறார் முத்தையா முரளிதரன் - மனோகணேசன் விமர்சனம்

முட்டாள் தனமாக பேசுகிறார் முத்தையா முரளிதரன் - மனோகணேசன் விமர்சனம்



முட்டாள் தனமாக பிரதமர் டேவிட் கமரூனிடம் கருத்துக்  கூறிய முத்தையா முரளிதரன் தனது அரசாங்கத்தை வானளாவ புகழ்ந்து பேசலாம். ஆனால் பெற்ற பிள்ளைகளை இழந்து தவிக்கும் தாய்மார்களை கொச்சைபடுத்தி, முரளிதரன் பேசியுள்ளதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் இலங்கையில் மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் வாழ்வதாகவும் இருபது முப்பது தாய்மார்கள் தங்களது பிள்ளைகளைக் காணவில்லை என அழுது புலம்பி போராட்டம் நடத்துவதனால் குற்றச்சாட்டுகள் உண்மையாகிவிடாது என்றும் பிரிட்டிஷ் பிரதமர்  டேவிட் கேமரூனை சிலரை தவறாக வழிநடத்தியதாகவும் முத்தையா முரளிதரன் கூறியிருந்தார். இதற்கு மனோ கணேசன் உட்பட பல்வேறு தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

# பாவம் முரளிதரன், ராஜபக்சேவிடம் உள்ள அவரால் வேறு என்ன தான் சொல்ல முடியும்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media