கேரள மாநிலத்தை சேர்ந்த அபிலாஷ்(32) என்கிறவர் முகநூலில் வினோதமான விஷயங்களை படம் பிடித்து காட்டுவதில் அலாதி விருப்பம் கொண்டவர். நேற்று முன் தினம், வீட்டில் தூக்கு மாட்டுவது போல் செல்போனில் வீடியோ எடுத்து அதை முகநூலில் பதிவிட முயற்சி செய்தார்.
இதற்காக தன் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டவர் செல்போனில் வீடியோவை ஆன் செய்து விட்டு, தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டினார். அப்போது, எதிர்பாராதவிதமாக சேர் நகர்ந்தது. கயிறு இறுக்கி அபிலாஷ் மூர்ச்சையடங்கிபோனார்.
அவரது செல்போன் பழுதாகி இருப்பதால் அதை சீர் செய்யும் பணி நடைபெறுகிறது. அதன் பின்னர் தான் நடந்தவற்றின் முழு விவரங்களும் தெரிய வரும். அபிலாஷ் ஏற்கெனவே இதே போல் ஒருமுறை முகநூலில் பதிவிட்டிருந்தார். அதீத ஆர்வத்துக்கு தற்போது தன்னையே பலியாக்கியுள்ளார்.
இதே போல், திருச்சூரில், எட்வின் என்கிற 10ம் வகுப்பு மாணவர் முகநூலில் பதிவு செய்ய தண்டவாளத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது, மின்னல் வேகத்தில் வந்த ரயிலில் அடிபட்டு எட்வின் தலை துண்டானது. இதுகுறித்து, திருச்சூர் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.