மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே அழைக்கப்பட்டுள்ள விவகாரத்தில், அவரை அழைக்காமல் பாஜக தவிர்த்திருக்கலாம் என திமுக செய்தித் தொடர்பாளரும், திமுக ஒருங்கிணைப்புக் குழு தலைவருமானடி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: "தமிழக மக்கள் உணர்வுகளை பாஜக புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையால் தமிழக மக்கள் இலங்கை மீது கோபத்தில் இருக்கின்றனர்.
சார்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாட்டின் தலைவர் என்ற முறையில் ராஜபக்சேவுக்கு இந்தியா அழைப்பு விடுத்திருக்கலாம். இந்தியப் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி தமிழர்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.