சிரியாவில் அரசுப் பள்ளி ஒன்றில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில் 41 குழந்தைகள் உயிரிழந்ததாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
சிரியாவின் கோம்ஸ் நகரில் நேற்று அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பயங்கரவாதிகள் இரண்டு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். இதில் அப்பள்ளியில் பயின்று கொண்டிருந்த 41 குழந்தைகள் பலியாகியுள்ளனர். காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பல மாணவர்களைக் காணவில்லை என்று புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தக் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.