ஜெயலலிதா இருக்கும் இடமே கோவில் , அதனால் சட்டசபையில் இனி செருப்பு அணிய மாட்டேன் என்றார் ஒரு அமைச்சர். அதன் பிறகு ஜெயலலிதா அழைத்து கண்டித்தவுடன் அவர் செருப்பு அணிந்து வந்தார். அந்த அளவுக்கு ஜெயலலிதா மீது அதிமுகவினர் மதிப்பு வைத்து உள்ளார்கள். அவரை ஒரு கடவுளாகவே நினைக்கிறார்கள். அதனை நிருபிக்கும் ஒரு சம்பவம் பெங்களூர் அக்ரஹார சிறையில் நடந்து உள்ளது.
பெங்களூர் அக்ரஹார சிறையில் ஜெயலலிதா உள்ளார். அங்கு குவிந்த அதிமுக தொண்டர்களில் சிலர் சிறை முன்பே மொட்டை அடித்து கொண்டார்கள்,. அம்மாவுக்கு முடி காணிக்கை செலுத்துவதாக கூறினார்கள். அதன் பிறகு குளித்து விட்டு வந்து சிறையின் முன் தேங்காய்களை உடைக்க தொடங்கி விட்டார்கள். இதனை தடுக்க வந்த போலீஸாரையும் மிரட்டி உள்ளார்கள். கடைசி வரை இருந்து 101 தேங்காய்களையும் உடைத்து விட்டு தான் சென்று உள்ளார்கள்.
கொஞ்சம் ஒவராய் தான் யா போறானுங்க !!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.