அன்பின் வெளிப்பாடு :
அன்பின் வெளிப்பாடாக ஏதாவது கொண்டுவாருங்கள் என்று நான்கு மாணவர்களை அனுப்பினார் ஆசிரியர். ஒரு மாணவர் கையில் மலருடன் வந்தார். இரண்டாவது மாணவர் ஒரு வண்ணத்துப் பூச்சியுடன் வந்தார். மூன்றாவது மாணவர் சிறு பறவையின் குஞ்சுடன் வந்தார். நான்காவது மாணவர் வெறுங்கையுடன் வந்தார். ஏன் நீ மட்டும் எதுவும் கொண்டு வரவில்லை என்று கேட்டார் ஆசிரியர். அந்த மாணவர் சொன்னார். நானும் மலரைப் பார்த்தேன் பறிக்கவேண்டும் என்றுதான் தோன்றியது ஆனால் மலர் செடியில் இருப்பதுதான் அழகு என்றும் தோன்றியது அதனால் விட்டுவிட்டேன். வண்ணத்து பூச்சியையும் பார்த்தேன். அதன் சுதந்திரமான வாழ்க்கையைப் பறித்துவிடக்கூடாது என்று விட்டுவிட்டேன். பறவையின் சிறுகுஞ்சையும் பார்த்தேன். அந்தக் குஞ்சை எடுத்து அதற்கு என்ன கொடுத்தாலும் அதற்கான தாயன்பை யாராலும் கொடுக்கமுடியாது என்று விட்டுவிட்டேன் என்றார். ஆசிரியர் மற்ற மூன்று மாணவர்களிடமும் சொன்னார் இதுதான் அன்பின் வெளிப்பாடு என்று.
பற்று தோற்றுவிக்கும் சுயநலம் :
அன்பின் வெளிப்பாடாக ஏதாவது கொண்டுவாருங்கள் என்று நான்கு மாணவர்களை அனுப்பினார் ஆசிரியர். ஒரு மாணவர் கையில் மலருடன் வந்தார். இரண்டாவது மாணவர் ஒரு வண்ணத்துப் பூச்சியுடன் வந்தார். மூன்றாவது மாணவர் சிறு பறவையின் குஞ்சுடன் வந்தார். நான்காவது மாணவர் வெறுங்கையுடன் வந்தார். ஏன் நீ மட்டும் எதுவும் கொண்டு வரவில்லை என்று கேட்டார் ஆசிரியர். அந்த மாணவர் சொன்னார். நானும் மலரைப் பார்த்தேன் பறிக்கவேண்டும் என்றுதான் தோன்றியது ஆனால் மலர் செடியில் இருப்பதுதான் அழகு என்றும் தோன்றியது அதனால் விட்டுவிட்டேன். வண்ணத்து பூச்சியையும் பார்த்தேன். அதன் சுதந்திரமான வாழ்க்கையைப் பறித்துவிடக்கூடாது என்று விட்டுவிட்டேன். பறவையின் சிறுகுஞ்சையும் பார்த்தேன். அந்தக் குஞ்சை எடுத்து அதற்கு என்ன கொடுத்தாலும் அதற்கான தாயன்பை யாராலும் கொடுக்கமுடியாது என்று விட்டுவிட்டேன் என்றார். ஆசிரியர் மற்ற மூன்று மாணவர்களிடமும் சொன்னார் இதுதான் அன்பின் வெளிப்பாடு என்று.
பற்று தோற்றுவிக்கும் சுயநலம் :
ஒரு பொருள் மீது பற்று வரும்போதே சுயநலமும் சேர்ந்து வந்துவிடுகிறது. ஒரு ஞானி ஒரு பெரிய கடைக்கு அடிக்கடி செல்வாராம் எல்லாவற்றையும் சுற்றிப்பார்பாராம் எதையும் வாங்குவதில்லையாம். இதை தொடர்ந்து உற்றுநோக்கிவந்த கடைக்காரர் அந்த ஞானியிடம் . நாள்தோறும் வருகிறீர்கள் எல்லா பொருள்களையும் பார்க்கிறீர்கள் எதையும் வாங்குவதே இல்லையே ஏன்? என்று கேட்டாராம். அதற்கு அந்த ஞானி.. இல்லை இந்த மக்களுக்கு இவையெல்லாம் அடிப்படைத் தேவையாகிறது. இந்தப் பொருட்கள் இன்றி அவர்களால் வாழமுடியவில்லை. ஆனால் இவை எதுவுமே எனக்குத் தேவைப்படுவதில்லை. நானும் நிறைவாகத் தான் வாழ்கிறேன். எவை எவை இன்றி என்னால் நிறைவாக வாழமுடிகிறது என்று பார்க்கத்தான் நாள்தோறும் வருகிறேன் என்றாராம்.
பற்றுதல் இன்றி இருந்தால் சுயநலமின்றி வாழலாம்! அன்பிலாதவர்களுக்கு எல்லாமே சொந்தம்! அன்புடையவர்கள் உலகத்துக்கே சொந்தம்! என்பதைப் புரிந்து கொள்ள நிறைய அனுபவம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறது.
பற்றுதல் இன்றி இருந்தால் சுயநலமின்றி வாழலாம்! அன்பிலாதவர்களுக்கு எல்லாமே சொந்தம்! அன்புடையவர்கள் உலகத்துக்கே சொந்தம்! என்பதைப் புரிந்து கொள்ள நிறைய அனுபவம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.