தில்லியின் கிழக்குப் பகுதியான திரிலோக்புரியில் இருதரப்பினர் இடையே மதக்கலவரம் மூண்ட இடங்களில், ஆளில்லா விமானங்களில் கேமராக்களை பொருத்தி செவ்வாய்க்கிழமை கண்காணிப்பு மேற்கொண்டனர். அதில், பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, வீடுகளில் சோதனை நடத்தி, மோதலின்போது தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஏராளமான ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த மோதல் சம்பவம் தொடர்பாக கௌரவ், ராகேஷ், பல்ராஜ் குமார், திலக் ராஜ், முகேஷ் ஆகிய 5 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து கத்திகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். திரிலோக்புரியில் மோதல் மூண்ட இடங்களில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை 3 மணி நேரம் தளர்த்தப்பட்டது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.