ஆதார் அட்டை விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. இந்த அட்டைக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம், இது பயனாளிகளுக்கு எந்த நேரத்திலும், எங்கும், எப்போதும் அங்கீகாரத்தை எளிதாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் ஆதார் எண் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த அட்டையானது ஒருவரின் அடையாளத்தை சர்வதேச அளவில் சரிபார்க்க அனுமதிக்கிறது. ஆதார் அட்டை பின்தங்கிய மக்கள், வங்கி வசதி தேவைப்படுவோருக்கு வங்கி வசதி உள்ளிட்ட உரிய சேவைகளை வழங்க உதவியாக இருக்கும். என்று குறிப்பிட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.