தமிழகத்திற்கு தண்ணீர் தர தயார் என கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் கருத்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுடன் சுமூகமான போக்கை கடைபிடிக்கவே கேரள அரசு விரும்புகிறது கேரள மக்களின் உணர்வுகளை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். என்று கூறினார். .
மேலும் தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு தண்ணீர் திறப்பதில் எந்த மாற்று கருத்தும் கேரள அரசுக்கு இல்லை. பழமையான முல்லை பெரியாறு அணையின் பலமும், கேரள மக்களின் பாதுகாப்பும் அவசியம். என்பதையே நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.