இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாட முயன்றவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். இதுகுறித்து இலங்கை காவல் துறை செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹானா கூறியதாவது:
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து, பிரபாகரனின் பிறந்தநாள் வாழ்த்துகள் அடங்கிய சுவரொட்டிகள், மடிக்கணினி, தகவல் சேகரிப்பு கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன. தீவிரவாதத் தலைவரின் பிறந்த நாளை பொது இடங்களில் கொண்டாட அனுமதிக்கமாட்டோம் என்று அவர் கூறினார். உலகின் பல்வேறு பகுதிகளில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 60-வது பிறந்த நாளை அவரது ஆதரவாளர்கள் புதன்கிழமை கொண்டாடினர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.