தமிழகம், புதுவை உள்பட ஆறு மாநிலங்களில் 1.5 லட்சம் வங்கி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை (டிச.2) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 9 வங்கிகளின் ஊழியர் சங்கங்களை உள்ளடக்கிய வங்கி ஊழியர் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில், கடந்த 12-ஆம் தேதி நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களின் கோரிக்கைகளை இந்திய வங்கிகள் நிர்வாக அமைப்பின் உயர் அதிகாரிகள் ஏற்காத நிலையில், மாநிலங்கள் வாரியாக டிசம்பர் 2, 3, 4, 5 ஆகிய தேதிகளில் ஒருநாள் வேலைநிறுத்தம் நடைபெறும் என அப்போது அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழகம், புதுவை, ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கர்நாடகம் ஆகிய ஆறு மாநிலங்களைச் சேர்ந்த 1.5 லட்சம் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்தார்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.