BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 14 May 2013

சுயமரியாதை கொள்கையால் காதலியை இழந்தேன் - தி.மு.க. தலைவர் கருணாநிதி

சுயமரியாதை கொள்கையால் காதலியை இழந்தேன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்தார். 

சென்னை ராயபுரம் பகுதி கட்சி பிரதிநிதி வை.நான்குட்டி இல்ல திருமண விழா வில் பேசிய கருணாநிதி ஒரு காலத்தில் சுயமரியாதை திருமணங்களை நடத்திக்கொள்ள யாரும் முன்வர மாட்டார்கள். தற்போது சுயமரியாதை திருமணங்களை நடத்த முன் வருகிறவர்களின் எண்ணிக்கை பெருகி கொண்டே வருகிறது.

நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, நான் காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியாமல் சுயமரியாதை திருமணம் தான் செய்துகொள்ள வேண்டும் என்று நான் பிடிவாதமாக இருந்த காரணத்தால், நான் காதலித்த பெண் எனக்கு கிடைக்காமலே போய்விட்டாள். ஆக சுயமரியாதை கொள்கைக்காக 1944ஆம் ஆண்டிலேயே காதலித்த பெண்ணை இழந்தவன் தான் நான்" என்றார்.

#தலைவரே மூன்றுக்கே தமிழ்நாடு மட்டுமல்ல மொத்த இந்தியாவுமே தாங்கலை, இதிலே நான்காவது வேறு என்றால் அய்யோ இந்த உலகமே தாங்காதே.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media