BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 2 July 2013

மீண்டும் மின்தடை அபாயம், சூர்யா நிதி உதவி, கெமிக்கல் ஆயுதங்களை ஊனமுற்ற குழந்தைகளின் மேல் சோதனை

மீண்டும் மின்தடை அபாயம்

நாளை நல்லரவு முதல் வேலை நிறுத்தம் செய்வதாக நெய்வேலி நிலக்கரி சுரங்க பணியாளர்கள் அறிவித்திருந்தனர்.

5% பங்கை விற்பதை குறித்து மத்திய அரசு எந்த மாற்றமும் தெரிவிக்காததால் வேலை நிறுத்தம் நடைபெறும் என்றே தெரிகிறது.

அனல் மின்நிலையத்தின் மூலாதாரம் நிலக்கரி தான் என்பதால் மீண்டும் மின்தடை ஏற்படலாம் என மக்களிடயே பீதி கிளம்பியுள்ளது.

# தயிரை வித்து வெண்ணைய் வாங்குற கதை இந்தியாவில் மட்டும் தான்.


நடிகர் சூர்யா நிதி

அகரம் என்ற அமைப்பின் மூலம் ஏழை குழந்தைகளுக்கு படிப்பளித்து வரும் நடிகர் சூர்யா உத்ராகான்ட் பேரிடர் நிகழ்வுக்கு 10 லச்சம் நிவாரண நிதி வழங்கினார்.

# ரசிகனால் சம்பாரிக்கிறவன் எல்லாத்துக்கும் சவுக்கடி.


கெமிக்கல் ஆயுதங்களை ஊனமுற்ற குழந்தைகளின் மேல் சோதனை செய்வதாக கொரிய மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு.

வடகொரியாவிலிருந்து எந்த தகவலும் கசியாதவாறு உலகின் பார்வையை இரும்புத்திரை கொண்டு மறைத்து வைத்துள்ளது. உயிரியல் மற்றும் வேதியல் ஆயுதங்களை ஊனமுற்ற குழந்தைகளின் மேல் சோதனை செய்வதாக தென் கொரியாவின் பிரிட்டிஷ் தூதரகத்திலிருந்து ஜோவான்னா ஹாசினிக், டெபுடி டைரக்டர் ஜெனரல் Citizens Alliance for North Korean Human Rights குற்றம் சாட்டியுள்ளார்கள்.

# நம்ம ஊர் கார்ப்பரேட் கம்யூனிஸ்ட்கள் இதுவும் அமெரிக்க சதி என்பார்களோ? 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media