BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 12 July 2013

இந்தியா மீண்டும் சாம்பியன்.

மினி உலக கோப்பை போட்டிக்கு பின் நடந்த செல்கான் முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள், இலங்கை மற்றும் இந்தியா கலந்து கொண்டது

மினி உலககோப்பை போட்டியில் ஒரு லீக் ஆட்டத்தில் கூட தோற்காத இந்தியா, இந்த முத்தரப்பு ஒருநாள் போட்டில் மேற்கிந்திய தீவுகளிடம் தோற்று ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

ஆனாலும் இந்திய வீரர்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாத வகையில் இந்த முத்தரப்பு ஒருநாள் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று உலகின் தலை சிறந்த கிரிக்கெட் அணி என்பதை நிரூபித்துள்ளது.

202 ஓட்டங்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, ஒரு பக்கம் விக்கெட் இழப்பை நிறுத்த முடியாமல் இறுதிநிலையில் வெற்றி இலங்கைக்கு சென்றுவிடுமோ என்ற நிலை ஏற்பட்டது.

தோனியின் அதரடி சிக்ஸர்களால் கடைசியா இரண்டு பந்துகள் இருக்க, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது

ஆட்ட நாயகனாக தோனியும், தொடர் நாயகனாக பந்து வீச்சாளர் புவனேஷ்குமாரும் தேர்தெடுக்கப்பட்டார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media