BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 12 July 2013

சாதி கூட்டங்களின் பேரணிகளுக்கு தடை - கருத்து சுதந்திரத்துக்கான தடையா?

சாதி அடிப்படையிலான பேரணிகள் மற்றும் கூட்டங்களுக்கு உத்திரபிரதேச நீதி மன்றத்தின் தடை விதித்த‌து - கருத்து சுதந்திரத்துக்கான தடையா? அல்லது தடை சரியா?

சாதி அடிப்படையிலான பேரணிகள் மற்றும் கூட்டங்க மாநிலத்தில் சமூக ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்துகிறது அதனால் அதற்கு தடைவிதிக்க வேண்டும்  என்று கோரி உத்திரபிரதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது, இதை விசாரித்த நீதிபதிகள் சாதி அடிப்படையிலான பேரணிகள் மற்றும் கூட்டங்களுக்கு தடை விதித்தனர். இதைத்தொடர்ந்து இதே போன்ற தடை தமிழகத்திலும் விதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சாதி என்பது இந்திய சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள நிலையில் சாதி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த சமுதாயத்தில் தங்களுக்கான உரிமைகள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தவும் உள்ள ஒரு அடிப்படையான கருத்து சுதந்திரத்தை இது பாதிக்கின்றது, மேலும் பாராளுமன்றத்தில் சட்டதிருத்தம் செய்து தான் இதை மாற்ற வேண்டுமேயொழிய நீதிமன்றம் இம்மாதிரியான ஒற்றை தீர்ப்புகளில் அரசியல் அமைப்பு சட்டத்தினை திருத்துவதற்கான இணையானவை என்றும் இது நீதிமன்றத்தின் அதிகார எல்லையை மீறும் செயல் என்றும் சிலர் கூறுகின்றனர், அதே சமயம் இம்மாதிரியான சாதி ரீதியான கூடல்கள் வன்முறையாக வெடிப்பதால் இது சரியே என்கிறார்கள்.

இதில் எது சரி? இந்த தீர்ப்பு கருத்து சுதந்திரத்துக்கு எதிரானதா? அல்லது தடை சரிதானா? உங்கள் கருத்துகளை கமெண்ட்டில் தெரிவியுங்கள்



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media